Contact us at: sooddram@gmail.com

 

யாழ். பல்கலைக்கழக துர்ப்பாக்கிய சம்பவம், தமிழ் எம்.பி ஒருவரே காரணம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான

டக்ளஸ் தேவானந்தா வழங்கிய விசேட செவ்வி

கேள்வி: 13ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக அரசாங்க தரப்பிலேயே பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஆளுங்கட்சிக்கு பிரச்சினையை ஏற்படுத்தாதா?

பதில்: 12ஆம் யாப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இது ஒரு கூட்டணி அரசாங்கம். பல்வேறு கட்சி உறுப்பினர்கள் இவ்வரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். ஜனநாயக அரசாங்கம் என்பதால் கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைக்கலாம். 13ஆவது திருத்தம் தொடர்பாகவும் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு தத்தமது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

வரவு - செலவுத்திட்ட உரையின் போது ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே எமது நிலைப்பாடும் உள்ளது. மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் 13ஆவது யாப்புத் திருத்தத்தை பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி கருதுகின்றார். தற்போது பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளோரையும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு இணங்கச் செய்ய முடியும். விமர்சனங்களை முன்வைப்பதால் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பும் எற்படாது.

கேள்வி: 13இற்கு அப்பாற்பட்ட தீர்வு தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அது என்ன?

பதில்: அது ஜனாதிபதி தெரிவித்த கருத்து. அவர் தெரிவித்த கருத்தில் எவ்வித தவறுமில்லை. இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கேள்வி: 13 ஆவது யாப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக அதிகாரங்களை கேட்கின்றதல்லவா?

பதில்: நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொருட்படுத்துவதில்லை. நான் ஜனாதிபதியை மதிக்கின்றேன். அவர் அதை நிறைவேற்றுவார். வட, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றது. 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது சமாதானமும் நிம்மதியுமே தேவையாக உள்ளது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் அபசகுனமாகவே பேசுகின்றது.

இவர்களது செயற்பாடுகள் மக்கள் மத்தியில் மீண்டும் வன்முறையையும் அமைதியின்மையையும் ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் 13ஆவது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ள உறுப்பினர்களுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்று அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

கேள்வி: வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை காணப்படுகின்றதா?

பதில்: எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அங்கு பிரச்சினைகள் எதுவுமில்லை. தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை காணப்படுகின்றது.

கேள்வி: ஆனால், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னர் காணப்படும் சூழ்நிலைகள் சிறப்பானதாக இல்லையே?

பதில்: யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் பின்னணியுடன் அவதானிக்கும் தன்மையுடன் இப்பிரச்சினை தொடர்பாகவும் அவதானிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகள் பல வருடங்களாக காணப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரச்சினை வடக்கில் இருக்க வேண்டுமென விரும்புகின்றது. அவர்கள் அதை வைத்து கொண்டு அரசியலை முன்னெடுக்கலாம். சவப்பெட்டி விற்பனை செய்பவர் ஒருவர் மற்றவர் எப்போது மரணம் அடைவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்லலாம். ஆகவே, அவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதை விரும்புவதில்லை. பிரச்சினைகள் மேலும் முற்றிப் போவதையே அவர்கள் விரும்புகின்றனர். காலாகாலம் புதிய பிரச்சினைகளை அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒருசில தமிழ் பத்திரிகைகள் இதற்கு துணைபுரிகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் நாம் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

கேள்வி: நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒருசில தமிழ் உறுப்பினர்கள் நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க முற்படுகின்றனர் என்று நீங்கள் கருதுகின்aர்களா?

பதில்: ஆம். ஒரு எம்.பி, நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது மஹாவம்சத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டுமென்று தெரிவித்திருந்தார். இதுபோன்ற கருத்துக்கள் மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே வழிவகுக்கும். தென்பகுதி சிங்கள மக்கள் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறந்த புரிந்துணர்வைக் கொண்டுள்ளனர். தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிங்கள மக்கள் உள்ளனர். அதேபோன்று குழப்பங்களை ஏற்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தும் சக்திகளும் நாட்டில் காணப்படுகின்றன.

கேள்வி: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியிருக்குமல்லவா?

பதில்: யாழ். பல்கலைக்ககைத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு ஒரு தமிழ் எம்.பியே காரணம். மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அவர் விரும்பினால் தமது வீட்டிலேயோ அல்லது வர்த்தக நிலையத்திலோ தீபம் ஏற்றியிருக்கலாம். அதில் பல்கலைக்கழக மாணவர்களை தொடர்புபடுத்தக்கூடாது. அமைதியாக படிக்கும் மாணவர்களை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதே அந்நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியாகும். அரசியல் ஆதாயத்தை பெற்றுக்கொள்வதற்காக தேவையற்ற குழப்பங்களை அவர் ஏற்படுத்தினார். அதற்கு பல்கலைக்கழக மாணவர்களை அவர் கேடயமாக பயன்படுத்தினார். பொது இடங்களில் தீபம் ஏற்றி மோதல்களை ஏற்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது.

கேள்வி: இறந்தோரை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றுவது தவறா?

பதில்: தீபம் ஏற்றி மரணித்தோரை நினைவு கூருவதில் எவ்வித தவறுமில்லை. ஆனால், அதனை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவது தவறு. பொது இடங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதும் தவறு. மரணமடைந்த புலிகள் தொடர்பாக அவருக்கு அனுதாபமோ ஆதங்கமோ இருந்தால் அதனை தனது வீட்டில் அல் லது வர்த்தக நிலையத்தில் விளக்கேற்றுவதில் எவ்வித தவறுமில்லை. ஆனால், பல்கலைக்கழக மாணவர்களை பலிக்கடாக்கள் ஆக்கி அரசியல் ஆதாயம் பெற்றுக்கொள்வது தவறு. ஹிட்லரை நினைவு கூர்ந்து எங்காவது தீபம் ஏற்றுவது உண்டா?

கேள்வி: தீபம் ஏற்றியமைக்காக பொலிஸார் தாக்குதல் நடத்தியமை தவறல்லவா?

பதில்: இது பிழையான கருத்து. தீபம் ஏற்றியதால்தான் பொலிஸார் தாக்கினார்கள் என்று சொல்ல முடியாது. ஊர்வலம் ஒன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுமதியின்றி கூட்டம் நடத்த வேண்டாமென்ற பொலிஸாரின் அறிவுறுத்தல் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்கச் சென்றபோதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தென்பகுதி பல்கலைக்கழக மாணவர்களும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறியபோது தடுக்கப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட இயக்கமாகும். மக்கள் விடுதலை முன்னணி தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருந்தபோது கார்த்திகை வீரர்கள் தினத்தை கொண்டாட சட்டம் அனுமதிக்கவில்லை. புலிகளின் அமைப்பு அவ்வாறுதான்.

கேள்வி: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளபோதும் வடக்கில் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றதா?

பதில்: அமுல்படுத்தப்படவில்லை என்று சொல்ல முடியாது. அரசாங்கம் தன்னால் இயன்றவரை பரிந்துரைகளை அமுல்படுத்துகின்றது. வெளிநாடுகள் திருப்தியடையும் வகையில் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்.

கேள்வி: எல்.ரி.ரி.ஈ. அமைப்பு மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளதா?

பதில்: அவ்வாறான எவ்வித அபாயமுமில்லை. ஆனால், தமது தனிப்பட்ட நலனுக்காக பல்வேறு பிரச்சினைகளை கிளப்பும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பிரச்சினைகள் உள்ளவரை தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என கருதும் சிலர் உள்ளனர் என்பதை மறக்கக்கூடாது. மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காது.

கேள்வி: உங்களுக்கு தற்போது இந்தியாவிற்கு போக முடியாதா?

பதில்: சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பாக நானும் நீதிமன்றத்தில் ஆஜரானேன். அதில் எனக்கு நேரடித் தொடர்பில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் செயற்பட்டனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இச்சம்பவத்திற்காக நீதிமன்றம் மன்னிப்பு வழங்கியது. நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை எனவும் தெரிவித்தது.

இலங்கை இந்திய ஒப்பந்ம் உருவாக்கப்பட்டதன் பின்னரும் அடிக்கடி இந்தியாவிற்கு சென்று வந்தேன். நான், ஜனாதிபதியுடன் இந்தியாவிற்கு விஜயம் செய்வதை ஒருசில தமிழக அரசியல்வாதிகள் எதிர்த்தனர். ஆகவே, அவர்கள் மீண்டும் வழக்கு தொடுத்துள்ளனர். குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஒருசில ஊடகங்களும் நபர்களும் என்மீது சேற்றை வாரியிறைப்பதற்காக கொலை வழக்கு தொடர்பில் நீதிமன்றம் என்னை தேடுவதாக தகவல்களைப் பரப்பினர். அதில் உண்மையில்லை. சட்டரீதியாக நான் இதனை எதிர்கொள்வேன். இந்தியாவில் ஒருசில அரசியல்வாதிகள் நான் அங்கு விஜயம் மேற்கொள்வதை விரும்பவில்லை. புலிகள் தொடர்பாக யதார்த்த நிலையை நான் பகிரங்கப்படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை.

தற்போதும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய முடியும்.அதில் எவ்வித தடையுமில்லை. தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக செய்மதி ஊடாக சாட்சியம் அளிக்க முன்வந்த போதும் அது நிராகரிக்கப்பட்டது. தற்போது இவ்விடயம் தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டது.

கேள்வி: புலம்பெயர் தமிழர்கள் மிகவும் வீரியத்துடன் செயற்படுகின்றனர். அது எமது நாட்டிற்கு பாதகமானதல்லவா?

பதில்: தற்காலிக நலன்கருதி அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்த முயன்றாலும் அது வெற்றியளிக்கப்போவதில்லை. நாம் சரியாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு பொருட்டல்ல.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com