Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்

பல கொலைகளைப் பரிந்து தப்பியோடியவர்கள் - சந்திரகாந்தன்

உள்ளுராட்சி மன்றங்களை அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களே பலமானதாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அதனது முழுமையான பயனையும் மக்களே அனுபவிக்க முடியும். எனது உயிர் இருக்கும்வரை நான் மக்களுக்காவே சேவை செய்வேன் சந்தார்ப்பவாத அரசியல் செய்யமாட்டேன்.  என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின(கொக்கட்டிச்சோலை) புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கழந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதேச சபையின் தவிசாளர் ரி.பேரின்பராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டு மாநகர சபை உட்பட 8 தமிழ் உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியது. அதன் பின்னர்தான் உள்ளுராட்சி மன்றங்கள் என்றால் என்ன? அதன் பயன்பாடு மக்களுக்கான உறவு என்ன? என்பதை எல்லாம் மக்கள் புரிந்து கொண்டார்கள்.

அதற்கு முன்னர் இந்த மன்றங்களை ஆட்சி செய்த 'தமிழ் கட்சி' என்று சொல்லப்படுகின்ற கட்சியினரால் அச் சபைகளை சரியாக நிருவகிகக் முடியவும் இல்லை அதனை அவர்கள் சரிவர செயற்படுத்தவும் இல்லை. ஏன் நான் இதனை குறிப்பிடுகின்றேன் என்றால், பெரும்பாலான சபைகள் சாதாரண கட்டிடங்களில்தான் இயங்கிவந்திருக்கின்றன. அலுவலக செயற்பாடுகளை சரிவர அவர்கள் செய்யவில்லை என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமளிதுமளி என்ன காரணம்

மக்களுக்கான சரியான சேவைகளை வழங்க வேண்டும் என்றால் தானே அவர்கள் அலுவலகக் கட்டிடங்களை புதிதாக அமைத்திருப்பார்கள்.
அவர்களுக்கு அது எல்லாம் தேவையில்லை. ஏன் இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை எடுத்துப் பாருங்கள்,ஆலயடிவேம்பு பிரதேச சபையில் இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோற்;கடிக்கப்பட்டிருக்கிறது.

நாவிதன்வெளி பிரதேச சபையில் தற்போது அமளிதுமளி என்ன காரணம் என்றால் பொருத்தமற்ற பதவி நியமனம் என்கின்றார்கள்.

திருகோணமலை நகராட்சி சபையில் ஊழல் இப்படியே வெருகல் பிரதேச சபையில் சாதாரண குடிநீர் வழங்கக்கூட தவிசாளர் எரிபொருள் செலவு கேட்கின்றாராம். எப்படி நிலைமை என்று பாருங்கள். முழுக்க முழுக்க மக்களுக்காகவே உருவாக்கப்பட்டது தான் உள்ளுராட்சி மன்றங்கள். அதனை ஆட்சி செய்பவர்கள் சரியாக வழிநடாத்தாவிட்டால் அதனை மக்கள் தட்டிக் கேட்க வேண்டும். ஏன் எனில் உங்களது வரிப்பணத்திலே அவர்கள் நிருவாகம் செய்கிறார்கள்.

 உங்களுக்கு சிறப்பான சேவையை அவர்கள் ஆற்ற வேண்டும். இல்லையாயில் நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும். அதுதான் நான் சொல்கின்றேன் உள்ளுராட்சி மன்றங்களை வலுவுள்ள ஆழுமை மிக்க சிறப்பான சபையாக மாற்ற வேண்டிய பொறுப்பு அப் பிரதேசத்தைச் சார்ந்த மக்களேயே சார்ந்ததாகும .

பிள்ளையான் என்ன செய்கின்றான்

பழம்பெருங்கட்சி என்று தங்களை பறைசாற்றுகின்றவர்கள் பிள்ளையானுக்கு என்ன தெரியும் அவர் அரசியலுக்கு குழந்தை என்கிறார்கள்.
அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன் நான் அரசியலுக்கு புதியவன்தான் ஆனால் மக்களுக்கு அல்ல. அதாவது மக்களுக்குத் தெரியும் பிள்ளையான் என்ன செய்கின்றான். அரசியல் எப்படி பேசுகின்றான் என்று எனது மக்களுக்குத் தெரியும்.

கடந்த மாகாண சபை அமர்விலே நான் பேசியிருந்தேன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 பேரால் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் நான் ஒருவன் தனியே இருந்து கொண்டு கிழக்கு மகாண தமிழ் பேசும் மக்களுக்காக எல்லாமே செய்வேன் என்று அவர்களுக்கு சொல்லி வைத்தேன். நான் இப்பவும் சொல்கின்றேன் எனது உயிர் இருக்கும்வரை நான் மக்களுக்காவே சேவை செய்வேன் இவர்களைப் போல் சந்தார்ப்பவாத அரசியல் செய்யமாட்டேன்.

பிள்ளையான் அரசாங்கத்து ஆள்தானே
!

அரசுடன் இணைந்திருந்தாலும் மக்களின் அதிகாரப் பகிர்வு விடத்திலும் அவர்களது உரிமை விடத்திலும் எப்படியான போக்கை நான் கடைப்பிடித்தேன். என்று கடந்த கால மாகாண சபை ஆட்சி சான்று பகரும். ஏன் இதனை நான் சொல்கின்றேன். என்றால் அவர்கள் ஒருவரியில் சொல்வார்கள் பிள்ளையான் அரசாங்கத்து ஆள்தானே! என்பார்கள். அரசுடன் இணைந்திருந்தாலும் மக்கள் நலனே எனது குறிக்கோள். இன்று யார்யாரெல்லாம் கிழக்கில் ஜனநாயகம் இல்லை அபிவிருத்தி இல்லை என்கின்றார்கள்.

நான் கேட்கின்றேன் இப்படிச் சொல்பவர்களுக்கு மட்டக்களப்பில் நடப்பதை பார்க்க கண் இல்லையா? அல்லது மட்டக்களப்பைத் தெரியாதா? என எண்ணத் தோன்றுகிறது. கிழக்கு மக்களுக்கு தெரியும் கிழக்கில் எவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அம் மக்களுக்கத் தெரிந்தால் போதும்.

கொலைகளைப் பரிந்து தப்பியோடியவர்கள்


ஜனநாயகம் ஜனநாயம் என்று நிமிடத்திற்கு ஒரு முறை உச்சரிக்கும் எனது அன்பான தமிழ் தேசியக் கூட்டமைப்ப உறுப்பினர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கிழக்கின் ஜனநாயகத்தின் திறவு கோல் ரி.எம்.வி.பி. என்பதனை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு நன்றாக தெரியும். இல்லாவிட்டால் பல கொலைகளைப் பரிந்து தப்பியோடியவர்கள் எல்லாம் மக்களிடம் வாக்கு கேட்கின்ற நிலைமை கிழக்கில் இருக்கு என்றால் அங்கே எந்தளவுக்கு ஜனநாயகம் இருக்கு என்பதனை அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள்.

எங்கையா உங்கட ஜனநாயகம்?


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகம் எங்கே? கடந்த மாகாண சபைத் தோர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். இரா. துரைரெட்ணம் பெற்ற வாக்குகள் 29131 ஆகும். அடுத்தபடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணி மற்றும் மட்டக்களப்பு தமிழ் அரசுக் கட்சியின் இணைத் தலைவருமான துரைராஜசிங்கம்; இவர் பெற்ற மொத்த வாக்குகள் 27,717 ஆகும். திருகோணமலை மாவட்டத்தில் தண்டாயுதபாணி பெற்ற வாக்குகள் வெறும் 20,190 ஆகும். ஆனால் இவருக்கு எந்தவொரு அரசியல் அனுபவமும் இல்லை பின்னணியும் இல்லை. ஆனால் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கப்பட்டது. வெறும் 20,000 வாக்குகளைப் பெற்ற தண்டாயுதபாணிக்கே வழங்கப்பட்டது. அப்ப எங்கையா உங்கட ஜனநாயகம்?

நீ உன்னிடம் இருந்தே தொடங்கு

உண்மையில் இதனடிப்படையில் பார்த்தால் முதலாவதாக துரைரட்ணத்திற்கு கொடுத்திருக்க வேண்டும்.
சரி அவர் பிற கட்சிக்காரர் என்ற படியால் அவருக்கு கொடுக்கவில்லை. ஓரளவு நியாயம் என்றாலும், முழுக்க முழுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூண் என்று சொல்லப்படுகின்ற அனைத்து திறமைகளும் உள்ள துரைராஜசிங்கத்திற்காவது வழங்கி இருக்க வேண்டும்.

அதனையும் செய்யாமல் வெறும் 20190 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற தண்டாயுதபாணிக்கு கொடுத்தது. நியாயமா? அல்லது ஜனநாயகமா? இதைக் கேட்டால் அது கட்சி முடிவாம். அப்படி என்றால் அந்தக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பில்லையா? அதாவது மக்களின் வீரப்புக்கு அங்கே இடம் இல்லையா? தங்களது கட்சிக்குள்ளே ஜனநாயகத்தைப் பேணமுடியாதவர்கள்  ஜனநாயகம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என தாங்களே சிந்தித்தால் போதும்.
'பிறருக்கு உபதேசம் செய்யும் போது அதனை நீ உன்னிடம் இருந்தே தொடங்கு' என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com