Contact us at: sooddram@gmail.com

 

காலங்கள் இனங்கள் மறக்கமுடியாத கனிவுடைய அன்னை நாகம்மா . . . . . !

புத்தபிரானின் வருகை மணிமேகலையின் வருகை என்ற ஒப்பற்ற சந்தர்ப்பங்களினால் புவிப் பந்தில் மதிப்புயர்ந்து நிற்கின்ற நயினை! நயினாதீவு, மேகலாதூபம், மேகலைத்தீவு, மணித்தீபம், நயினையம்பதி எனும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. என்றாவது ஒரு கால் நீரில் மூழ்கினாலும் வரலாற்றில் என்றும் மிதந்தே நிற்கவல்ல நயினாதீவு இந்துகள், பௌத்தர், இஸ்லாமியர்களுகாகனப் பிரபலமிக்க தரிசனக் குவியமாக அமைந்தது போல் நயினாதீவில் எம்தோழர்களின் அன்னை நாகம்மா அவர்களின் வாழ் நவீனமும்அமையப்பெற்றிருந்தது. பக்தியாளர்களான பெற்றவர்கள் ஸ்ரீ நாகபூசனியம்மன் அளவுக்கு மதிப்பு வைத்துப் நாகம்மா எனப்பெயர் சூட்டியிருப்பார்கள் போலும் அதற்கேற்ப நாகம்மாதன் நாமத்தின் மதிப்பை இன்றுவரை பேணிக்கொண்டே இருப்பவர். இவரது பிறந்தநாள் இன்று (21.12) வாழ்த்தத் தகுந்தவர்களை வாழும் பொழுதே வாழ்த்துவது வாஸ்தவமானது என்பதே வாஸ்தவம்.

நன்னீர் அகழும் தீவின் நடுவுள்ள முருகன் வீதியில் நல்லதம்பியரின் இல்லம் அமைந்து இருந்தது.
இல்லத்திற்குள் நாம் நுழைந்துவிட்டால் கிடைப்பதே பாரியஅதிசயம்தான். உடும்பு பிரட்டும் வயதில் ஒரு பிள்ளை நிமிர்ந்து பார்த்தாலும் நேதாஜியின் உருவப்படத்தில் தான் கண்பதிக்கும். அந்த அளவுக்கு நேதாஜியை நேசித்தார் திரு நல்லதம்பி. இலங்கை அரசியலின் பக்கம் என்று பார்த்தால் அப்போ அல்பிறெட் தம்பி ஐயா அவரது உற்ற நண்பர். அந்தக்
காலத்திலிருந்தே அரசியற் தலமைகள் மதத் தலைவர்கள் என்று தினசரி நயினை நல்லதம்பியர் இல்லம் திருக்கோலம் தான்.

பிள்ளைகளும் பின்பற்றலோடு எம் தோழர்களானார்கள். என்ற போதும் காற்றுவெளிக் கிராமங்களில் காத்திரமான அன்னையர்கள் வாழ்ந்ததும் கணவரையும் மக்களையும் பாதுகாத்ததும் என்று பல பண்புகள் அன்னையரோடு நிலைத்திருக்கின்றன.

இந்த வகையில் திருமதி நல்லதம்பி நாகம்மா நயினை தந்த நல்ல பதிப்பு. பிள்ளைகள் எம் தோழர்களாகிப் உலகப் பாட்டாளி வர்க்கத்தை உயரத்தூக்கி மனிதகுலத்தின் துயர்களைப் பங்கிடும் அளவுக்கு உறவுகளை ஏற்படுத்தியிருந்தார்கள்.

நாம் வியக்க வல்ல விடயங்கள் என்றுஅன்னை நாகம்மாவிடம் தேட முடிந்தது பல பலவெனினும் ஞாபகமும் பார்வையும் அவரிடம் இதுவரை நலிந்ததே கிடையாது.

1950 களில் குன்றக்குடி அடிகளாரை அறிமுகப்படுத்தி அவரது உரைகளை ஆர்வத்தோடு பதிவு செய்தவர். கணவரும், மக்களும் அரசியல் ஈடுபாடு காட்டியதால் மட்டுமல்ல தனக்கெனத் தெளிவான அரசியல் ஞானத்தைத் தன்னோடு கொண்டிருக்கும் நாகம்மா அவர்கள்!

வாழ் காலத்தில் என்றுமே சுயநல, அராஜக அரசியலை நேசித்ததோ புலிகள் போன்ற அமைப்புகளுக்கு பணம் கொடுத்ததோ கிடையாது.

இன்று வரை தொண்டு நிறுவனங்களுக்கு அன்பளிப்புகள் செய்தவண்ணமே இருக்கிறார். 1968 களில் நயினை விட்டு இடம் பெயர்ந்து கொக்குவில் வந்திருந்த போது ஆ.பு .சுப்பிரமணியம், டொமினிக் ஜீவா இவர்களை வரவேற்று விருந்து வைத்து சூழலில் சிலரைப் பகைத்துக்கொண்டவர் என்ற போதும் பகையாளிகளின் பண்பற்ற தன்மையை நன்கு விளக்கமாக வெளிப்படுத்தியவர்.

ஆரசியற் கட்சிகள் தொழிற் சங்கங்கள் செயற்பாட்டிலிருந்த காலங்களில் தெற்கிருந்து வடக்கு வரும் அத்தனை இடது அரசியற் செயற்பாட்டாளர்களும் சந்தித்த அன்னை முற்றம் தோழி நாகம்மாவின் இல்லம் தான். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ஜெயத்திலகா, றுனு சில்வா செங்கொடிச் சங்கத்தினர் இன்னும் பலர் எங்கள் அன்னை நாகம்மா கையிட்ட அன்ன முண்டவர்களே.

ஸ்ரீ மாவோ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைத் திறந்து வைக்க வந்தபோது தமிழுணர்வாளர்களின் எதிர்ப்iப சந்திக்க நேர்ந்தது. அதையும் எதிர்கொண்டு அந்த உர்வலத்திலும் கலந்துகொண்டும் ஆதரவைக் கொடுத்து உதவியவர்.

மகன்மார்கள் மாக்ஸிய சித்தாந்தத்தைக் தழுவிக்கொண்டதை வரவேற்ற ஒரு உதாரண அன்னையாக இருந்த நாகம்மா அவர்கள்.

இடதுசாரிகளின் புகலிடம் என்ற வகையில் தங்கள் இல்லத்தையே மாற்றிக்கொண்டார். தோழர் வைத்திலிங்கம் மாஸ்டரின் தேர்தல் பணிகளில் உதவியது. அப்போதைய இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் எனும் பிரபலங்கள் பீற்றர்கெனமன், விக்கிரமசிங்க உட்பட்ட பலரும் அன்னை நாகம்மா கைப்பக்குவ சாப்பாட்டில் கிறங்கிப்பொனவர்கள். இது தவிர சில முக்கிய விடயங்களும் அன்னை நாகம்மா அவர்களின் கண்காணிப்பில் வீட்டில் அரங்கேறியிருந்தன.

வடக்கில் ரஸ்சியன் கொன்சலாட் ஆரம்பித்தது. வீ. பொன்னம்பலத்தார் தலமையில் செந்தமிழர் இயக்கத்தின் ஆரம்பம். அதன் அரசியலமைப்பின் முதல் வாசிப்பு இவைகள் அவரது இல்லத்திலேயே நிறை வேறின என்பது ஒரு வரலாற்றுத் தகவல்.

இந்த அளவுக்கு தோழர் வி.பி இவர்கள் குடும்பத்தோடு தோழமையுடன் இருந்தார். காரணம் இவரது மைந்தர்கள். தோழர் திரணகம யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளராக இருந்த வேளை அவரது முன்னெடுப்பில் கூட்டப்பட்ட பல்கலைக்கழக மாணவரமைப்புக்காக சிங்கள அமைப்புக்கு கிங்ஸிலி, தமிழமைப்புக்காக வ.ஐ.ச.ஜெயபாலன் இவர்களின் தேர்வும் இந்த அன்னையின் முன்றலிலேயே நடந்தது என்பது வரலாற்றில் ஓர் பதிவு.

இன்றுள்ள சிங்களத் தமிழ் இடது சாரித் தோழர்களையும் வரவேற்று உபசரித்த வாய்ப்புக் கிடைக்கப் பெற்றவர் ஒருவர் வாழ்கிறார் என்றால் எம் அன்னை நாகம்மாத் தோழி ஒருவரே தான். ஒரு தடவை அரசியல் சார் ரஸ்ய படமொன்றை வீட்டில் திரையிட்ட போது விசமிகளின் கல் வீச்சுக்கு இலக்காகிக் காயமுற்றவர்.

இவ்வாறு பல் வகையில் . . . . . . .அவர பாராட்டப்பட வேண்டியவர் இன்னும் பல்லாண்டுகள் வாழவேண்டியவர் வாழவேண்டும் என வாழ்த்த இந்த வாய்ப்புக் கிடைத்த வரத்தோடு விடைபெறுவது!

தோழமையோடு
நெடுந்தீவு
வை.லோகநாதன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com