Contact us at: sooddram@gmail.com

 

ஈ.பி.டி.பி யை அழிப்பதற்காக பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அக்கட்சியுடன் நாம் கூட்டுச் சேர்வதா?

அரசுடன் மட்டுமல்ல மாகாண சபைகளுடனும் இணக்கப்பாட்டு அரசியலுக்கு நாம் தயார் எனக் கூறியிருக்கின்றீர்கள். அதன் அர்த்தம் என்ன?

உண்மைதான். வடக்கு மாகாண சபை என்ற அமைப்பு எங்கள் கட்சியின் கனவுக் குழந்தையாகும். மாவட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகளை நாம் கைவிடாமல் இணக்கப்பாட்டு அரசியலுடன் வட மாகாண சபையின் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க விரும்புகிறோம். எமது கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகவே இருந்து வந்தாலும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதாகவே எமது கொள்கை இருந்து வருகிறது. அதற்கமைய வடக்கைக் கைப்பற்றி ஆட்சி நடத்தும் மாகாண சபை நிர்வாகத்திற்கு தமிழ்பேசும் மக்களது நன்மை கருதி பூரண ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராகவே உள்ளோம்.

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் மூலம் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

நிச்சயமாக, நாம் இவ்விடயத்தை ஜனாதிபதிக்குத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறோம். பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தற்போது அங்கத்துவம் வகிக்காத சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் இத்தெரிவுக்குழுவுக்கு சேர்க்கப்பட வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் விருப்பம். அதுமட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை புறக்கணிக்காமல் அதில் கலந்துகொண்டு தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பதன் மூலம் நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கு உதவ முடியும்.

அண்மையில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முகம்காட்ட ஈ.பி.டி.பி விரும்புகிறது என்று தெரிவித்திருந்தார். அவ்வாறு கூட்டமைப்புடன் சேரும் எண்ணம் ஏதாவது உங்களது கட்சிக்கு உள்ளதா?

ஒருபோதும் அத்தகையதொரு எண்ணம் எமக்கில்லை. ஈ.பி.டி.பி யை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்க் கூட்டமைப்பு. ஆனால் அவர்களால் எமது கட்சியினை ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் பார்த்த வரையில் மூன்று கூட்டமைப்புக்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் மாவை சேனாதிராசா தலைமையில் ஒரு கூட்டமைப்பு, பின்னர் இரண்டாவது வரதராஜப்பெருமாள் - சுரேஷ் பிரேமச்சந்திரன் இணைந்த கூட்டமைப்பு, மூன்றாவது ஈ.பி.டி.பி யை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் செய்து வரும் செயற்பாடுகள் தொடர்பில் ஓர் ஊடகம் எம்மை விமர்சித்து வருகின்றது. அந்த நிறுவனத்தினூடாக நிதி நிறுவனம் நடத்திய போது அதில் நிதிகளை முதலிட்ட பலர் தற்கொலை செய்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்களின் விமர்சனங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது, மக்களும் நம்பமாட்டார்கள்.

யாழ். வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சுகாதார தொண்டர்களால் பத்து நாட்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் உங்களால் இலகுவாகவே முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது எவ்வாறு சாத்தியமாயிற்று?

அவர்களுடன் உண்மையைப் பேசினேன். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். இதனை விடுத்துச் சிலர் இவ்விடயத்தில் அரசியல் ரீதியாக நடந்து கொள்ள முயற்சித்தனர். நான் தலையிட்டதால் அவர்களது எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்களுடன் மட்டுமல்லாது வைத்தியசாலை நிர்வாகத்துடனும், பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுடனும், சுகாதார அமைச்சுடனும் கலந்துரையாடி நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக சகலதரப்பிற்கும் எடுத்து விளக்கினேன்.

அந்த உண்மை என்ன என்பதை எங்களுக்கும் தெரிவிப்பீர்களா?

வைத்தியசாலையில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முதற்கட்டமாக 168 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட உடனடி ஏற்பாடு செய்தேன். ஏனையோரது நியமனங்கள் தொடர்பாக ஜனவரி 2ஆம் திகதி அமைச்சரவையில் கலந்துரையாடி சாதகமாக பரிசீலிக்கவுள்ளதாக சுட்டிக்காட்டி அதுவரையில் போராட்டத்தை கைவிட்டு வைத்தியசாலையினதும் நோயாளர்களினதும் நலன்களை கருத்தில் கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டேன். அவர்களும் சம்மதித்தார்கள்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் யாழ்ப்பாணத்திற்கு எதிர்பாராத விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவருடன் பேசியது என்னவாக இருந்திருக்கும்?

அது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. பிரிட்டிஷ் பிரதமரை அங்கு தமிழ் மக்கள் சந்திப்பதற்கு இடமளிக்காமல் கூட்டமைப்பின் தலைவர்கள் கோட்டும் சூட்டும் அணிந்து அவரை சந்தித்து உரையாடியுள்ளனர். எதுவிடயமாக அவருடன் பேசினோம் என்பதை அவர்கள் மக்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டனர். மக்களிடம் வாக்கு கேட்கும் போது வேட்டி சால்வை அணிந்து செல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரிட்டிஷ் பிரதமரை எமது தேசிய உடையில் சென்று சந்திக்க விரும்பவில்லையோ தெரியவில்லை.

வட மாகாண சபை முதலமைச்சருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் இடையில் நடைமுறை சிக்கல்கள் ஏதும் உள்ளதா?

உண்மையில் எதுவும் இல்லை. அவ்விதம் இருந்தாலும் அவற்றை இலகுவில் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிய வில்லை. ஆளுநர் மீது வேண்டுமென்றே குற்றச்சாட் டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. யுத்தம் முடிவுற்று கடந்த நான்கு வருடங்களில் ஆளுநர் வடபகுதிக்கு அளப்பரிய சேவைகளைச் செய்துள்ளார். இது மக்களுக்கு நன்கு தெரியும். தமிழ்க் கூட்டமைப்பினர் ஆரம்பம் முதல் ஆளுநரை அகற்றுவதில் குறியாக உள்ளனர். இது ஏனென்று தெரியவில்லை.

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரும் தங்களது கட்சி உறுப்பினருமான கமலேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைத் தாங்கள் கட்சியிலிருந்து விலக்கியுள்Zர்கள். இதன் உண்மைத்தன்மை என்ன?

தவறுகள் யார் புரிந்தாலும் திருத்தப்பட வேண்டியவையே. அந்தத் தவறுகள் எமது மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை, அவலங்களை அல்லது கலாசார சீரழிவுகளை உருவாக்குவதாக இருந்தால் தவறு செய்பவர்கள் எமது கட்சி உறுப்பினர்களாக இருப்பினும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அந்த வகையிலேயே கமலேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். குற்றவாளியாக இனம் காணப்பட்டால் அவர் தண்டனையை அனுபவிப்பார். இல்லாவிடின் விடுவிக்கப்படுவார். எமது கட்சி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் எமது கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயற்பட்டால் அதை நேரடியாகவே எனது கவனத்திற்கு எமது மக்கள் அறியத் தரவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். கட்சி உறுப்பினர்களோ, கட்சி ஆதரவாளர்களோ, அன்றி கட்சியின் பெயரால் வெளியாரோ தவறான செயல்களில் ஈடுபட்டால் அது குறித்து பொலிஸாரிடம் மக்கள் முறைப்பாடு செய்வதோடு, எனது கவனத்திற்கும் அதை கொண்டுவர வேண்டும் எனவும் நான் விரும்புகின்றேன்.

அண்மையில் யாழ். பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியிருந்தீர்கள். அதன் நோக்கம் என்ன?

உள்நோக்கம் எதுவும் கிடையாது. வழமையாக நான் சகல தரப்பினருடனும் மாதாந்தம் சந்திப்புக்களை நடத்துவதுண்டு. அந்த வகையிலேயே இதுவுமொரு சந்திப்பு. அந்த வகையில் பல்கலைக்கழகத்தினதும், சமூகத்தினதும் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டதாக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். உங்களது வளமான எதிர்காலத்தை ஸ்திரப்படுத்தி வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும் என நான் அவர்களிடம் தெரிவித்தேன். இன்றுள்ள ஜனநாயக சூழலை பாதுகாப்பது மட்டுமன்றி அதனூடாக மென்மேலும் முன்னேற்றம் காண வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் சரியான திசை வழி பயணிக்க வேண்டும். குறிப்பாக, துஷ்பிரயோகங்களுக்கும், வன்முறைகளுக்கும் ஒருபோதும் இடமளிக்காது பல்கலைக்கழகத்தினதும் நீங்கள் சார்ந்து வாழும் சமூகத்தினதும் மேம்பாட்டைக் கருதி நீங்கள் யாவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டேன்.

வடக்கில் பிரதான மாநகர சபையான யாழ்ப்பாண மாநகர சபை தங்களது கட்சியின் ஆட்சியிலேயே உள்ளது. அதன் சேவைகளை மேலும் விஸ்தரிக்கும் எண்ணங்கள் உள்ளதா?

தற்போது மக்களது தேவையறிந்து மாநகர நிர்வாகம் திறம்பட இயங்கிவருகிறது. தொடர்ந்தும் புதிய பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம். எதிர்காலங்களில் மக்களுடைய தேவைகளை சரியான முறையில் இனங் கண்டு கருத்தில் கொள்ளப்படும். அத்துடன் 2015 ஆம் ஆண்டு யாழ். மாநகர சபை ஆட்சியினை மீண்டும் நாம் பொறுப்பெடுப்போம் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

(செவ்வி : வாயுபுத்திரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com