Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் மக்கள் ஜனாதிபதியுடன்

தட்டிக் கழிக்க முடியாத நிலையில் தவிக்கும் தமிழ் கூட்டமைப்பும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும்

ஜனாதிபதித் தேர்தலில் தங்களது கட்சியின் நிலைப்பாடு அதாவது எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று கூற முடியுமா?

எமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே ஆதரிக்கும். நாம் அவரது தலைமையிலான ஆட்சியில் கடந்த பத்து வருடங்களாக பங்காளியாக இருந்து வருகின்றோம். இக்காலப் பகுதியில் எமது மக்களுக்குத் தேவையான பலவற்றை அவர் மூலமாக இலகுவாகப் பெற்று அம்மக்களுக்குச் சேவையாற்ற முடிந்துள்ளது. அது மீண்டும் தொடர்வதையே நாம் விரும்புகின்றோம். எமது மக்களும் விரும்புகின்றனர். அதனால் அவருக்கே எமது ஆதரவு.

குறிப்பாக வட பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உங்களால் வடக்கில் தமிழ் மக்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக நீங்கள் கருதுகிaர்கள்?

நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்தவுக்கே. இந்த ஜனாதிபதிக்கு எதிரான கருத்தினைத் தமிழ் மக்கள் கொண்டுள்ளதாக ஒருவிதமான மாயை சிலரால் உருவாக்கப்பட்டுள்ளது. அது தவறு. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒரு தவறான பிரசாரம், ஆரம்பத்தில் ஒருசில தமிழ் மக்கள் அத்தகைய மனநிலையில் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அனைவருமே ஜனாதிபதி அவர்களது வடபகுதிக்கான உயரிய பல சேவைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

தமிழ்க் கூட்டமைப்பினர் கை காட்டும் வேட்பாளருக்கே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பர் என்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதில் உண்மை உள்ளதா?

அதுதான் கூறினேன். அப்படியொரு காலம் இருந்திருக்கலாம். அது புலிகளின் காலமாகவும், இருக்கலாம். அதுவும் முழுமையான தமிழ்ச் சமூகமும் இல்லை. அவர்களது அதாவது புலிகளின் கட்டுப்பாட்டில் அல்லது பயமுறுத்தலில் வாழ்ந்த ஒருசிறு மக்கள் கூட்டம் அவ்வாறு நடந்து கொண்டது. ஆனால் இப்போது அதுவெல்லாம் மலையேறிவிட்டது. தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. இப்போது அம்மக்கள் உண்மை என்ன என்பதை நன்கு உணர்ந்து விட்டனர்.

எந்த உண்மையை உணர்ந்து விட்டனர் என்று கூறுகிaர்கள்?

அதாவது இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பலரும் தமது சொந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே தம்மை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்துள்ளனர். தமது குடும்பங்களையும், தமது உறவினர்களையும் வெளிநாடுகளில் வீடு வாங்கி, உயர் கல்வி கொடுத்து சொகுசாக வாழ வைப்பதற்காக தம்மைப் பாவிப்பதாக அம்மக்கள் நன்கு உணர்ந்து விட்டனர்.

இல்லையே, வடமாகாண சபைத் தேர்தலில் அவர்களுக்குத்தானே வெற்றி கிடைத்தது?

உண்மைதான். அதன் பின்னர்தான் அவர்களது சுயரூபத்தினை தமிழ் மக்கள் முழுமையாக தெரிந்து கொண்டார்கள். அத்தேர்தல் அம்மக்களுக்குத் தமது தலைவர்கள் பற்றி உணர வைத்தது. அவர்களது கைகளில் மக்கள் அதிகாரத்தை வழங்கியதன் பின்னர்தான் அவர்களைப் பற்றிய உண்மைகளை உணர்ந்தனர். வடமாகாண சபையைக் கலைத்துவிட்டு இன்னொரு தேர்தலை நடத்தினால் இந்த உண்மையை அனைவரும் உணரலாம். அத்துடன் அத்தேர்தலில் எமது ஆளுங்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட எமது கட்சி ஓர் ஆசனத்தையும், சுதந்திரக் கட்சி ஓர் ஆசனத்தையும் பெற்றுக் கொண்டன.

நீங்கள் கூறுவது போல ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டும் என்ற தமிழ் மக்களது இந்த மன மாற்றத்திற்கு பிரதான காரணம் என்ன?

உண்மையில் அவர்கள் போராட்டத்தின் மூலமாகத் தமது வாழ்க்கையில் நல்லதொரு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் பல போராட்டக் குழுக்கள் ஒன்றாகப் புறப்பட்ட பயணத்தில் என்று புலிகள் சகோதர இயக்கங்களை அழித்தொழிக்கத் தொடங்கினார்களோ அன்றே படித்த பல தமிழ் மக்கள் பலரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். பின்னர் சில பாமர மக்களைத் தமது பிடிக்குள் வைத்துக் கொண்டு புலிகள் போராடுவதாகக் கூறிக் கொண்டு இருந்தார்கள். இறுதியில் பிரபாகரனின் பிடிவாதம், தன்னிச்சையான செயற்பாடு, தான் என்ற அகங்காரம் போராட்டத்தை முற்றுமுழுதாக இல்லாமற் செய்துவிட்டது. இன்னும் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடாது தமது எதிர்காலத்தை மாற்றியமைக்க தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். அதனாலேயே மாறிவிட்டார்கள்.

அந்த மாற்றத்திற்காகத்தான் தமிழ்க் கூட்டமைப்பின் பின்னால் செல்கிறார்கள் என்றும் கூறலாம்தானே?

ஆம். அவ்வாறு நம்பித்தான் சில காலம் சென்றார்கள். ஆனால் ஐந்து வருடங்களாக கண்ட பலன் எதுவும் இல்லை. அம்மக்கள் வெறுப்புற்று சலித்து விட்டார்கள். அதனால் அம்மக்கள் நிச்சயமாக இப்போது தமிழ்க் கூட்டமைப்புடன் இல்லை. அன்று புலிகள் ஆயுதம் மூலமாகப் போராடி எதுவுமே இல்லாமற் போனது போன்று இவர்கள் அதாவது தமிழ்க் கூட்டமைப்பு சொல்லாயுதத்தால் இல்லாமற் செய்து வருவதை அம்மக்கள் விரும்பவில்லை. ஆனால் எமது கட்சி அப்படியல்ல. போராட்ட காலத்திலும் சரி எப்போதுமே மக்களுடன் மக்களாக இருந்த உதவிகளைச் செய்து வருகிறோம்.

தமிழ்க் கூட்டமைப்பை வெறுக்கும் அம்மக்களது தெரிவு என்னவாக உள்ளது?

ஆரம்பத்திலிருந்தே அம்மக்களில் விடயம் தெரிந்தவர்கள் எம்முடன் அதாவது எமது கட்சியுடன் இணைந்து செயற்படுகிறார்கள். இப்போது அது பன்மடங்காகியுள்ளது. எம்மைத் தேடி கல்விச் சமூகம், புத்திஜீவிகள், சமூகத் தலைவர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் வருகிறார்கள். அதிலும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இது முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது. உண்மையான மனச் சுத்தியுடன் இவர்கள் எம்மை அணுகுகிறார்கள். இதுவே எமக்குப் பெரு வெற்றி. ஜனாதிபதியின் வெற்றியில் அம்மக்களும் கலந்து கொள்கிறார்கள்.

தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது எனத் தமிழ்க் கூட்டமைப்பு இன்னமும் அறிவிக்கவில்லை. அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

இவர்கள் ஆரம்பத்திலிருந்தே பொது வேட்பாளர் வேண்டும், மாற்றம் வேண்டும், அவர் எவராக இருந்தாலும் ஆதரிப்போம் என எத்தனையோ அறிக்கைகளை விட்டு வந்தனர். ஆனால் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடக்க இன்னமும் பதினெட்டு நாட்களே உள்ளன. ஆனால் இன்னமும் ஆராய்கிறார்களாம், மக்களிடம் கருத்தறிகிறார்களாம். இவர்கள் உண்மையானவர்களாக இருந்திருந்தால பொது வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே தமது ஆதரவை துணிந்து அறிவித்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்கள் ஜனாதிபதியுடன் இருக்கையில் தாம் எப்படி அவ்வாறு அறிவிப்பது என்பதனாலேயே காலத்தைக் கடத்தி வருகின்றனர். இதுவே உண்மை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் தமிழ் மக்களது முடிவை, விருப்பத்தை ஏற்று தமிழ்க் கூட்டமைப்பு பகிரங்கமாக ஜனாதிபதியை ஆதரிக்குமாறு அழைப்பு விடுவார்களா?

நிச்சயம் விடத்தான் வேண்டும். ஆனால் எப்படி விடுவார்கள்? அவர்கள் இதுவரை காலமும் இந்த அரசாங்கம் பற்றியும், ஜனாதிபதி பற்றியும் எத்தகைய வார்த்தைகளையெல்லாம் பிரயோகித்து விமர்சனங்களைச் செய்தார்கள் என்று எல்லோருக்குமே தெரியும். அதனால்தான் காலத்தைக் கடத்தி மெளனமாக இருந்து தமிழ் மக்களை ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கக் கோரியுள்ளனர். மெளனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே.

தமிழ்க் கூட்டமைப்பின் இந்நிலைப்பாடு குறித்துத் தங்களது கருத்து என்ன?

உண்மையில் இவர்கள் எப்பவோ இதனைச் செய்திருக்க வேண்டும். இப்போதும் அவர்கள் தமது மக்களுக்காக உணர்ந்து இவ்வாறு செய்யவில்லை. மக்கள் அவர்களை மாற்றியமைத் துள்ளார்கள். இனி அவர்களால் தப்பித்துக் கொள்ள முடியாது. இனியும் அவர்கள் அரசியலில் ஏதோ தாக்குப் பிடித்து நிற்க வேண்டுமாயின் அவர்கள் தமிழ் மக்களுடன் அவர்களது விருப்பத்திற்கு இணங்கிச் சென்றே ஆக வேண்டும்.

அவ்வாறாயின் தமிழ்க் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்த ஆட்சியில் பங்குதாரர்களாக இருப்பார்களா?

ஆம். மக்கள் அவர்களை பங்குதாரர்களாக இருந்து தமக்கு அரசின் மூலமாக சேவைகளைப் பெற்றுத் தருமாறு கோருகிறார்கள். இவர்கள் செய்யாது விட்டால் மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுவிடுவார்கள்.

அத்தகையதொரு நிலை வந்தால் ஜனாதிபதி இவர்களை ஏற்றுக் கொள்வாரா?

அத்தகையதொரு நிலை வந்தால் அல்ல, அதுதான் உண்மை நிலை. அது தான் நடக்கும். அப்போது ஜனாதிபதி அவர்கள் நிச்சயம் அவர்களை ஏற்றுக்கொள்வார். ஜனாதிபதி ஒருபோதுமே எவரையும் பழி வாங்கியது கிடையாது. அதனால் நிச்சயம் இவர்களையும் மன்னித்து ஏற்று தமிழ் மக்களுக்குச் சேவை செய்யுமாறு உதவிகளை வழங்குவார். இவர்களைத் தன்னுடன் அதாவது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட அவர் எத்தனை தடவைகள் அழைப்பு விடுத்திருப்பார்.

தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சந்தர்ப்பத்தில் தங்களது நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

எம்மைப் பொறுத்தவரையில் நான் தமிழ்க் கூட்டமைப்பை பல தடவைகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட அழைப்பு விடுத்துள்ளேன். அதனால் எனக்கு இவ்விடயத்ல் மகிழ்ச்சி. இப்போதும் அவர்களது ஜனாதிபதியை ஆதரிக்கும் அவர்களது மெளனமான முடிவை வரவேற்கிறேன். இனியும் அவர்கள இரட்டை வேடம் போடாது தமிழ் மக்களுக்கு எம்மைப் போலச் சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

கடந்த வாரம் வடக்கில் நடைபெற்ற மாகாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தங்களது கட்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்பிற்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு குறித்து...

உண்மையில் அதுவொரு துரதிர்ஷ்டமான செயலாகவே நான் கருதுகின்றேன். அதற்காக அவர்கள் போலல்லாது நான் இரு தரப்பினரையுமே குறை கூறுவேன். பொறுமையாகப் பேசியிருக்கலாம். அச்சம்பவத்தினால் அவர்களில் சிலரும் எம்மில் ஐயவரும் சிறு காயமடைந்தமை வருத்தத்திற்குரியது. அவர்களை நான் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயற்பாடுகளைத் தவிர்க்க இருதரப்பும் முயற்சிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

எஸ். சுரேஷ்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com