Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 27வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் 11-02-2011 வெள்ளிக்கிழமை காலை 05:30 மணியளவில் சோனபேட் என்ற இடத்திலிருந்து புறப்பட்டது. மலைகள் மற்றும் காடுகள் வழியே உள்ள நெடுஞ்சாலை மிகுந்த ஏற்றமும் இறக்கமும் நிறைந்ததாகக் காணப்பட்டது. நடைபயண வீரர்கள் எந்தவிதத்திலும் சோர்வடையாமல் அந்த சாலையில் நடந்து வந்தனர். உயர்ந்த மேடுகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னயினரால் உருவாக்கப்பட்ட போராட்டப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே நடைபயண வீரர்கள் விறுநடை போட்டு நடந்தனர்.

எனினும் நடைபயண வீரர்களில் புழல் முகாமைச் சேர்ந்த திரு. தங்கராசா சிறிகந்தராசா அவர்கள் மட்டும் தனக்கு தொலை பேசி அழைப்பு வரும் போது மட்டும் மிகவும் சோகமாகக் காணப்பட்டார்.  இருந்தாலும் அதை யாரிடமும் வெளிக்காட்டாமல் மற்ற வீரர்களுக்கு இணையாக நடந்து வந்தார்.

அவரது சோகத்திற்கு என்ன காரணம் என்று கேட்டபொழுது, எனது இரண்டாவது மகன் நிரோசன், (வயது 10) கழுத்தில் இரத்தக் கட்டி இருந்ததினால் வலியால் மிகவும் அவதிபட்டு வந்தார். அதனால் அவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனை 158 வது வார்டில் அனுமதித்திருந்தோம்.

நிரோசனுக்கு கடந்த 09-02-2011 புதன் கிழமை அன்று அறுவை சிகிச்சை செய்து கழுத்தில் இருந்த கட்டி மற்றும் இரத்தக் கட்டி ஆகியவற்றை மருத்துவர்கள் அகற்றினர். அப்படி அகற்றும் போது எச்சில் ஊறும் கு ழாயின் ஒரு பாகமும் அகற்றப்பட்டது.

எனது மகனோடு எனது மனைவி (கௌரி) இருக்கிறார். அவர்கள் வெளியில் செல்லும் போது மகன் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அப்பா எனக்கு அதிகமாக வலிக்கிறது, நீங்கள் எப்போது வருவீர்கள்? என்று கேட்கிறான். சரி, அப்பா வரட்டுமா என்று கேட்டால், அப்பா நீங்கள் இங்கு வரவேண்டாம் அம்மா கோவிப்பா, அப்பா நாட்டுக்காக நடக்கிறார் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி தொலைபேசியில் தொடர்புகொள்ளக் கூடாது என்று சொன்னதாக சொன்னார். அதனால்தான் எனக்கு கண்கலங்கிவிட்டது என்று சிறிகந்தராசா (குட்டி) தெரிவித்தார்.

இவ்வாறு ஒவ்வொரு நடைபயண வீரர்களின் வாழ்விலும் ஒருவகை பிரச்சினைகள் காணப்படுகிறது. அதை எதனையும் பொருட்படுத்தாமல்தான் பல சிரமங்களுக்கு மத்தியில் இந்தியாவின் ஆதரவு ஈழத் தமிழர் பக்கம் திரும்பாதா? சுதந்திர வாழ்வு கிடைக்காதா? ஏன்ற ஏக்கத்துடன்தான் தங்களை வருத்தி இந்த நடைபயணத்தை மேற்கொள்கின்றனர்.

இன்றும் கூட ஏற்றம் இறக்கம் மிகுந்த கடினமான சாலையில் 42 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்துள்ளனர். இன்றுடன் மொத்தமாக 912 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்துள்ளனர். இன்று இரவு முகாம் அமைத்த இடம் காடுகள் நிறைந்த ஒரு மலை அடிவாரத்தில்தான். எந்வித வசதியும் கிடையாது. குறிப்பாக தண்ணீர் வசதி கிடையாது, நெடுந்தூரத்திலிருந்து தண்ணீர் வண்டியில் கொண்டு வந்திருந்த தண்ணீரைத்தான் பாவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்று தங்கியிருக்கும் சோனகுடா என்ற இடதிலிருந்து எந்தப்பக்கத்திலிருந்தும் 50 கிலோ மீற்றர் தூரத்தில் எதுவுமே இல்லை. ஜெனரெட்டரில் எண்ணெய் முடிந்துவிட்டதால் நடைபயண வீரர்கள் அரிக்கன் வெளிச்சத்தில்தான் இருக்கிறார்கள். எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக சென்றவர்கள் வநதுகொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவும் உலகநாடுகளும் ஈழத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டு ஈழத் தமிழர்கள் சார்பாக நாங்கள் வைத்திருக்கும் நடைமுறை சாத்தியமான எங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள நாங்கள் எங்களை வருத்தி மேற்கொள்ளும் இந்த நடைபயணத்தை வெற்றிபெற ஆதரவு வழங்குமாறு உலகநாடுகளையும், உலகில் வாழும் தமிழர்களையும், இந்திய மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

இவ்வண்ணம்,

ஞா.ஞானராஜா

நடைபயண தலைமைக் குழு

27-02-2011

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com