Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - மகாராஸ்ரா எல்லையை நோக்கி...

ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திரமான வாழ்வுக்கு ஆதரவும் அங்கீகாரமும் உத்தரவாதமும் தேடி நாம் மேற்கொள்ளும் இந்த நெடுந்தூர நடைபயணம் இன்று 28வது நாளாக (12-02-2011) ஆந்திர பிரதேசத்தின் எல்லையை வந்தடைந்துள்ளோம். இன்னும் 1240 கி.மீற்றர் தூர எமது நடைபயணத்தின் மூலம் நாம் எமது இனத்தின் பாதுகாப்புக்கு வழி தேடிச் செல்கிறோம். உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகரை நாம் சென்றடைந்து ஈழத்தில் எம் இனத்தின் உரிமைக்கு உத்தரவாதம் வழங்கும்படி கோரவுள்ளோம்.

தீபெத்திய மக்களுக்கு இந்திய தேசத்தில் கிடைத்த அங்கீகாரத்துக்கும் ஆதரவுக்கும் இணையாக இன்று எமது ஈழ விடுதலைக்கு இந்திய தேசத்தில் கிடைக்கும் அங்கீகாரத்துக்கும் ஆதரவுக்கும் எமது இந்த நெடுந்தூர நடைபயணம் வழி அமைத்துக் கொடுத்ததையிட்டு நாம் பெருமைக் கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் எமது விடுதலக்கு இந்திய தேசம் வழங்கிய ஆதரவும் அங்கீகாரமும் எம்மவர் சிலரின் பொறுப்பற்ற செயல்களால் இல்லாதொழிக்கப்பட்டதன் தாக்கம்தான் கடந்த 2009ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் அரங்கேற்றிய இன அழிப்பை இந்திய தேசத்தின் எல்லையிலிருந்து 38கிலோ மீற்றர் தூரத்தில் எம் இனத்தவர்கள் எறிpகணைகளால் சின்னப்பின்னாக்கப்பட்ட போது எம்மால் தடுக்க முடியாமல் போனது. எம் இனத்தவர்கள் சிங்களப் பேரினவாதிகளால் சிதைக்கப்படும் போது, எம்மவர் எழுப்பிய மரண ஓலம் இன்றுவரை எமது தேசத்தில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அந்த மரண ஓலத்தில் பிழைப்பு நடத்திய தலைவர்களும் இன்றுவரை தமது செயல்களில் திறமைக்காட்டி நிற்கின்றனர். தமிழ் மக்களின் தலைவர்களாக காட்டிக் கொள்ளும் இந்தத் தலைவர்கள் தமிழ் இனத்தைக் கொடூரமாக அழித்த சிங்களப் பேரினவாதிகளுடன் சமரசம் பேசிக் கொண்டிருப்பது தமிழர்களின் தலைவிதியாகி விட்டது. தண்டிக்கப்பட வேண்டிய சிங்களப் பேரினவாதிகள் இன்று தமிழர்களைக் கொன்று தான் செய்த கொடுமைகளை மறைத்துக் கொண்டுள்ளனர். அதற்கு எம் இனத்தவரும் துணை போகின்றனர்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் இன்றுவரை மேளதாளங்களுடன் ஊர்வலம் வரும் பொய்யுரைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவது ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் சிறைவைக்கப்பட்டிருக்கும் எம் இனத்தவரை விடுதலை செய்ய வழி அமைக்காது. முhறாக எம் இனத்தை இல்லாதொழிக்க சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு வழி அமைத்துக் கொடுத்துவிடும்.

கடந்த காலங்களில் எப்படியெல்லாம் எமது விடுதலைப் போராட்டம் வழி நடத்திச் செல்லப்பட்தென்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சுயநல சக்திகள் எமது விடுதலைப் போராட்டத்திற்குள் நுழைந்து எமது போராட்டத்தை அழிக்க சிங்களப் பேரினவாதிகளுக்கு வழி அமைத்துக் கொடுத்தனர். அவர்கள் இன்றும் அதே செயலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். அதை எம்மவர்களும் வரவேற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஈழத் தமிழர்களால் இயக்கப்படும் ஊடகங்களும் இணையதளங்களும் வானொலிகளும் தொலைக்காட்சிகளும் சுய நல சக்திகளுக்கு வழங்கும் ஆதரவு அவர்களுக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுப்பது மட்டுமல்லாமல் மேலும் மேலும் எம் இனத்தவரை தவறான வழிகளில் வழிநடத்திச் செல்வதற்கு வழியமைத்துக் கொடுக்கின்றது.

எமது விடுதலைக்கு சரியான வழிகளை தெரிவு செய்யும் பொறுப்பும் கடமையும் உங்களுக்கு உண்டு என்பதை இத்தருணத்தில் நினைவுப் படுத்திக் கொள்கிறோம். ஆகவே அவர்களுக்கு எமது விடுதலையின் உண்மை நிலையை எடுத்துச் சொல்லுங்கள். எமது இனம் விடுதலை அடைய வழி அமைத்துக் கொடுங்கள் மாறாக பொய்யுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்களேயானால் எம் இனம் அகதிகளாக வாழ்வதை தடுக்க முடியாது. சிங்களப் பேரினவாதிகளால் அழிக்கப்படுவதையும் தடுக்க முடியாது.

குறிப்பாக ஒரு விடயத்தைக் கூற விரும்புகின்றோம்:-

கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் யூன் மாதம் வரை சிங்களப் பேரினவாதம் அரங்கேற்றிய கொடூர இன அழிப்பு இந்திய அரசின் பழிவாங்கும் செயல் என்று சில சுயநல சக்திகள் கூறும் பொய்யுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இந்திய அரசு ஏன் ஈழத் தமிழினத்தை பழிவாங்க வேண்டும், விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக எம் இனத்தை ஏன் தண்டிக்க வேண்டும், உண்மையில் இந்திய அரசு எமது விடுதலைக்கு கொடுத்த ஆதரவிலிருந்து விலகி இருந்ததே தவிர பழிவாங்க என்றும் முயற்சித்ததில்லை.

 

சிங்களப் பேரினவாதிகள்தான் எம் இனத்தவரை இல்லாதொழிப்பதற்கு சதிச்செயல் செய்து முழு உலகையும் ஏமாற்றினரே தவிர இந்திய அரசு அல்ல. சிங்களப் பேரினவாதிகளின் இன அழிப்பு நடவடிக்கையில் இருந்து எம் இனத்தவர்களை பாதுகாக்க எமக்கு ;ந்திய தேசத்தின் ஆதரவு தேவை. அந்த ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை விடுத்து சதிச் செயல்கள் செய்து எமது விடுதலைப் போராட்டத்தை முள்ளியவாய்க்கால் வரை இழுத்துச் சென்றவர்கள் சொல்லும் கட்டுக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஏற்கனவே எம் இனத்தவருக்கும் இந்திய தேசத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளியை பெரிதாக்கமல் இந்திய தேசத்தின் ஆதரவையும் அன்பையும் பெற முயற்சி செய்ய வேண்டும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப் பெறுவதற்காக விடுதலைப் புலிகளை தவறான பாதையில் வழிநடத்திச் சென்று எம் இனத்தவர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை பலி கொடுத்தவர்கள் இந்தக் கைக்கூலிகள். இன்று ஒட்டுமொத்த எம் இனத்தவர்களை சிங்களப் பேரினவாதிகளிடம் அடிமைகளாக்க வழி அமைத்துக் கொடுத்தவர்களும் இந்தக் கைக்கூலிகள்தான்.

நாம் கடந்த 16-01-2011 அன்று தொடங்கியசென்னை முதல் டெல்லிவரையிலான நெடுந்தூர நடைப்பயணத்தில் 28வது நாளில் ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் கடந்து ஆந்திர பிரதேசத்தின் முடிவு எல்லையை கடந்து மகாராஸ்ரா மாநிலத்திற்குள் நுழையும் இவ்வேளையில் நாம் கடந்து வந்த இந்த 1100 கிலோ மீற்றர் தூரத்தில் எமக்கு ஆந்திரப் பிரதேச மக்களும் பத்திரிகை துறையினரும் தொலைக்காட்சித் துறையினரும் வழங்கிய ஆதரவு எம்மை சோர்வடைய விடாமல் மிகவும் உற்சாகமாக வழி நடத்திச் செல்கின்றது.

எனவே ஆந்திரப் பிரதேச மக்கள் வழங்கிய ஆதரவு போல் எம் இனத்தவர்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். நீங்கள் வழங்கும் ஆதரவு எம் இனத்துக்கும் இந்தியத் தேசத்திற்கும் உள்ள இடைவெளியை நிரப்பும். எம் இனத்துக்கு ஈழத்தில் விடுதலை கிடைக்க வழி அமைக்கும் என்று கூறிக் கொண்டு பொய்களைப் புறம்தள்ளி உண்மைகளை ஏற்றுக்கொண்டு ஆதரவு தரும்படி ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியினராகிய நாம் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!

இவ்வண்ணம்,

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

ஈ.என்.டி.எல்.எப்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com