Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 29வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் 29-02-2011 ஞாயிறு அன்று காலை 05:30 மணியளவில் புறப்பட்டது. மதிய உணவிற்காக குடியாத்தனூர் என்ற இடத்தில் இடைநிறுத்தப்பட்டது. மதிய உணவை முடித்துக்கொண்டு வீரர்கள் நடைபயணத்தைத் தொடர்ந்தனர். இறுதியாக அனைத்துப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு லொறியும் புறப்பட்டுச் சென்றது. கடைசியாக உயர்திரு. ஞா.ஞானசேகரன் அவர்களின் புதல்வாரன திரு. ஞா. சுபேசன் அவர்களும், புதுக்கோட்டை முகாமைச் சேர்ந்த திரு. குலரூபன் அவர்களும் கனணி மற்றும் அவை சார்ந்த பொருட்களை எடுத்துவைத்துக்கொண்டிருந்த போது, ஒரு பெண் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்து இந்தியில் பேசி ஒரு கிணற்றைக் காட்டி அழுதார்.

திரு. சுபேசன் அவர்களுக்கும் குலருபன் அவர்களுக்கும் இந்தி மொழி தெரியாது, ஆங்கிலத்தில் கேட்டால் அந்தப் பெண்ணிற்கு ஆங்கிலம் தெரியாது. அந்தப் பெண் கிணற்றைக் காட்டி அழுததால், கிணறு இருக்கும் பக்கம் பார்த்தால், கிணற்றை சுற்றி சிலர் நின்றுகொண்டிருந்தனர். ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்ற அறிந்து கொண்ட சுபேசன் அவர்கள் கிணற்றின் அருகில் சென்று பார்த்தார். அங்கே ஒரு தலை தெரிந்தது, ஏதோ குழந்தை ஒன்று விழுந்து விட்டது என்று நினைத்தார். கிணற்றை சுற்றி நின்றவர்களிடம் நீச்சல் தெரியுமா என்று கேட்க யாரும் பதில் சொல்லவில்லை. அதனால் சுபேசன் அவர்கள் கிணற்றில் குதித்தனர். அந்தக் கிணற்றிற்கு படிகள் எதுவும் இல்லை.

கிணற்றின் பாதிதூரம் சென்று பார்த்தால் அது குழந்தை இல்லை, 20 வயது இளம் பெண். சுபேசன் அவர்களால் தனியாக அந்தப் பெண்ணை தூக்க முடியவில்லை, ஏனென்றால் கிணற்றில் படிகள் இல்லை. அதனால் அந்தப் பெண்ணின் தலையை தண்ணீருக்கு மேல் தூக்கி உயிரை காப்பாற்றி வைத்திருந்தார். அதன் பிறகு இந்தி பேசும் ஒரு நபரும் கிணற்றில் குதித்தார் இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை வெளியில் அனுப்பினர்.

வெளியில் எடுத்ததும் கிணற்றில் இருந்து கொண்டு அந்தப் பெண்ணிற்கு முதலுதவி செய்யும்படி கத்தினார். ஆனால் யாரும் அந்தப் பெண்ணிற்கு முதலுதவி அளிக்கவில்லை. திரு. சுபேசன் அவர்கள் பேசியது அவர்களுக்குப் புரியவில்லை. குலருபன் அவர்கள் அவசர மருத்துவ ஊர்திக்கு தகவல் கொடுத்தார். அவசர ஊர்தி வந்ததும் எந்தவித முதலுதவி அளிக்காமலேயே அந்தப் பெண்ணை ஏற்றி அடிலாபாத் இராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வரை அந்தப் பெண்ணிற்கு உயிர் இருந்தது.

கிணற்றில் படி இல்லாத காரணத்தினால் திரு. சுபேசன் அவர்களும் அந்த இந்தி பேசும் நபரும் 20 நிமிடங்கள் கிணற்றின் உள்ளே இருந்தனர். அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டுதான் மற்றவர்கள் கிணற்றின் அருகில் வந்து கயிறு எறிந்தனர். எங்களது நடைபயண வீரர்கள் யாரும் அங்கு இருக்கவில்லை.

அந்தப் பெண் விழுந்த கிணறு தரைமட்டமாக இருந்ததினால் அறியாமல் தடுக்குப்பட்டு கிணற்றில் விழுந்துள்ளார். அப்படி விழும்போது முகத்திலும் தலையிலும் பலமாக அடிபட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்று எமது வீரர்கள் இருவரும் நம்பியிருந்தனர். மற்ற நடைபயண வீரர்களும் திரு. சுபேசன் அவர்களுக்கு ஒரு உயிரைக் காப்பாற்றி விட்டதற்காக பாராட்டுத் தெரிவித்தனர்.

இருந்தாலும் சுபேசன் அவர்களுக்கு மனம் கேட்கவில்லை மாலை ஆறு மணியளவில் நலமறிய அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றார் அங்க  அவருக்கு அவரது உறவினர்கள் ஒரு சோகச் செய்தியைச் சொன்னார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை எங்களது மகள் உயிருடன்தான் இருந்தாள். அதன் பிறகுதான் இறந்துவிட்டார். மருத்துவர்கள் வெளியில் எடுத்ததும் முதலுதவி செய்திருந்தால் அந்தப் பெண்ணை காப்பாற்றியிருக்கலாம் என்று சொன்னார்கள். நீங்கள் கிணற்றில் இருந்து ஆங்கிலத்தில் சொன்னது இங்குள்ள யாருக்கும் புரியவில்லை. பெண்ணை வெளியில் எடுத்ததும் உங்களையும் வெளியில் வர உதவி செய்திருந்தால் நீங்கள் எங்கள்; பெண்ணிற்கு முதலுதவி செய்து காப்பாற்றியிருப்பீர்கள் என்று தெரிவித்தனர்.

திரு. சுபேசன் அவர்கள் மனம் உடைந்துவிட்டார். மிகவும் மனவேதனை அடைந்தார். இறந்த பெண்ணின் உறவினர்கள் தங்களது சோகத்திலும் சுபேசன் அவர்களுக்கு ஆறுதலும் நன்றியும் தெரிவித்தனர். நடைபயணத்தின் நோக்கத்தையும் ஈழத் தமிழர்களின் பிரச்சினையையும் தங்களது சோகத்தை மறைத்துக் கேட்டு தெரிந்துகொண்டனர். தங்களது பிள்ளை இறந்த துக்கத்திலும், ஈழத் தமிழர்கள் மீது அன்பும் அனுதாபமும் கொண்டு நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக்கூறி கண்ணீருடன் சுபேசன் அவர்களை அனுப்பிவைத்துள்ளனர் அந்தப் பெண்ணின் உறவினர்கள். முகாம் திரும்பியும் சுபேசன் அவர்கள் தனது துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. கிணற்றில் படிகள் அல்லது கயிறு அல்லது மேலே ஏறுவதற்கு ஏதாவது வழியிருந்திருந்தால் நான் அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருப்பேன் என்று வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

திரு. சுபேசன் அவர்களுக்கு நடைபயணக்குழுவினராகிய நாங்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். திரு. சுபேசன் அவர்கள் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் உயர்திரு. ஞா.ஞானசேகரன் அவர்களின் இரண்டாவது புதல்வர் ஆவார். இந்த ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்திற்காக தனது படிப்பினை இடையில் நிறுத்திவிட்டு நடைபயணத்திற்காக உழைத்துக்கொண்டிருப்பவர்.

இந்த நடைபயணம் ஆரம்பித்த நாளிற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இதற்காக இரவு நித்திரை இல்லாமல் இரவு பகல் என்று பார்க்காமல் கடிணமாக உழைத்தவர், இந்த நடைபயணத்திற்காக முதல் நான்கு நாட்கள் வீடியோ மற்றும் கனணி வேலைக்காக கேமராமேன் ஒருவரை நியமித்திருந்தனர். அவரின் ஒருநாள் சம்பளமாக ரூ.2000 மற்றும் வீடியோ தரப்படுத்துதல் வேலைக்காகவும் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 5000 பேசி அமர்த்தப்பட்டார். நடைபயணக் குழுவினருக்கிருந்த பொருளாதாரப் பிரச்சினை காரணமாக தினமும் அவருக்கு அந்த சம்பளததைக் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர் நின்றுவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில், சுபேசன் அவர்கள் தனக்கு அனுபவம் இல்லாத வீடியோவை கையில் எடுத்தார். பகல் முழுவதும் வீடியோ எடுப்பதும், இரவு முழுவதும் அதை கணணியில் தரப்படுத்தி இணையதளத்தில் புகுத்தும் வேளையை செய்வார். அதனால் அவர் இரவு இரண்டு மணிநேரம் அல்லது மூன்று மணி நேரம் மட்டும்தான் நித்திரை கொள்வார். பகலில் அவருக்கு ஓய்வே கிடையாது. அதிலும் நேரம் கிடைக்கும் போது நடைபயண வீரர்களுக்கு தங்கும் முகாம் அமைக்கவும் மற்றும் அனைத்து வேலைகளிலும் உதவிகள் செய்துகொண்டே இருப்பார்.

தனது கடின உழைப்பால் நடைபயண வீரர்களுக்கும் நடைபயண தலைமைக் குழுவிற்கும் பேருதவி செய்து வருகிறார். தனது கடின உழைப்பினால் நடைபயணக் குழுவிற்கு இருக்கும் பொருளாதாரப் பிரச்சினையில் அவர் பல லட்சம் ருபாய் மிச்சம்பிடித்தத் தந்துள்ளார். எங்களது நடைபயணக் குழுவின் சார்பிலும், நடைபயண வீரர்கள் சார்பிலும், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் மட்டுமல்லாது அவரது இளைய சகோதரரும் பெங்களுரில் இருந்து பின்தள வேலைகளை செய்துகொண்டிருக்கிறார் அவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நடைபயண வீரர்கள் இன்ற  நடந்த சம்பவத்தினால் சோர்வடைந்திருந்ததினால் 35 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்தவுடன் அடிலாபாத் என்ற இடத்தில் இரவு முகாம் அமைத்துக்கொண்டனர். நடைபயணம் டெல்லியை சென்றடைய இன்னும் 1205 கில  ீற்றர் தூரம்தான் உள்ளது. ஈழத் தமிழர்களுக்கான நடைபயணம் வெற்றிபெற அனைவரும் ஆதரவு தருமாறு வேண்டுகிறேன்.

நன்றி!

இவ்வண்ணம்,

மங்களராஜா

நடைபயண தலைமைக்குழு தலைவர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com