Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 30வது நாள் ஆந்திராவை கடந்து மகாராஸ்ராவினுள்.....

நாம் கடந்த 30 நாட்களாக ஆந்திரப் பிரதேச மக்களின் ஆதரவினால் களைப்பில்லாமல் நடந்து நேற்று (14-02-2011 திங்கள் கிழமை) ஆந்திரப் பிரதேச எல்லையைக் கடந்து மகாராஸ்ர மாநிலத்தில் எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம். மகாராஸ்ர மக்களும், செய்தியாளர்களும், காவல்துறையினரும் எங்களை வரவேற்றனர். நாம் இன்னும் 1173 கிலோ மீற்றர் தூரத்தை 35 நாட்களில் நடந்து, வருகின்ற மார்ச் மாதம் 21ம் திகதி (2011) உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகர் சென்றடைந்து எமது இனத்தின் இன்றைய நிலையையும், எங்கள் இனம் காக்கப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கவுள்ளோம்.

நாம் இழந்து நிற்கும் எமது உரிமை எம்மிடம் மீண்டும் வந்து சேரும். நாம் நாடற்றவர்களாக ஆக்கப்பட முடியாது. அகதிகளாக வாழ நாம் பிறக்கவில்லை. சகல உரிமைகளுடன் எமது மண்ணில் நாம் வாழ வேண்டும். எமது மக்களை வாழ வைக்க வேண்டும்.

கண்ணியமாக வாழ கற்றுக்கொள்வோமானால் கட்டுப்பாட்டுடன் எமது கடமையை நிறைவேற்றி எமது உரிமையைத் தட்டிச் சென்ற சிங்கள வந்தேறு குடிகளிடமிருந்து மீட்டுவிடலாம்.

மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு. நாகரீகமான ஆட்சியாளர் எவரும் அந்த உரிமையை மறுக்கமாட்டார்கள். நாகரீகமற்ற, காட்டுமிராண்டிவாசிகள் மட்டும் தமக்கே எல்லாம் என்று நினைத்து பிறரை அழிப்பர். அப்படிப்பட்ட ஓர் கூட்டத்திடம்தான் எங்கள் இனம் அகப்பட்டுக்கொண்டுள்ளது. பௌத்தத்தைப் பின்பற்றுபவர்கள் என்று வெளியுலகுக்கு காண்பித்தாலும்,  அவர்களது செயல்கள் நாகரீகத்துக்கும், மனிதப் பண்புகளுக்கும், மனித உரிமைகளுக்கும் அப்பாற்பட்டதாகவே இன்றுவரை இருந்து வருகிறது.

தமிழ் இனத்தை எப்படி எப்படி எல்லாம் அழிக்கலாமோ அதனை மட்டுமே இன்றுவரை செய்து வருகிறது அந்த இனம். விடுதலைப் புலிகள் என்று அழைக்கப்பட்டவர்களில் சரி பாதிக்கும் மேல் இன்று சிங்கள அரசின் சேவகர்களாக மாற்றப்பட்டு அவர்களை தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்தி வருகிறது சிங்கள இனத்தின் தலைமை.

தமிழர்களின் தலைமையை தமிழர்களே அழித்தனர். இன்று தமிழர்களைச் சிங்கள இனத்தவர் அழித்து அடக்கி ஆள ஆரம்பித்துவிட்டனர்.

இவ்வுலகம் நிச்சயம் எம் இனத்துக்கு விடுதலையைப் பெற்றுத் தரும். உண்மைகள் வெளியில் வரும் போது நியாயம் நிச்சயம் வெற்றிப்பெறும்.

எம் இனத்தவர்களில் பலர் விடுதலையை வென்றெடுக்கும் முயற்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர், பலர் ஒதுக்கப்பட்டனர். குறிப்பாக, மேற்குலக நாடுகளில் வாழும் எம் இனத்தவர்களில் பலர் இப்படிப் பதுங்கிக்கொண்டனர். ஆனால் ஈழத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளின் நிலையை அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ஏன் சொந்த மண்ணில் கிடைத்த சந்தோசமான வாழ்க்கை இன்று அவர்களிடத்தில் உள்ளதா என்று எண்ணிப்பாருங்கள். பாசத்தைத் தொலைத்த பண்பாட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஈழத்தில் எமது உரிமையானது இந்தியத் திருநாட்டின் புவிசார் நலன்களுடன் பின்னிபிணைக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டிற்கு எதிராக எம் இனத்தவர்கள் அன்னிய சக்திகளால் பயன்படுத்தப்படும்வரை எம் இனம் விடுதலை அடையாது. இதை எம் இனத்தவர்கள் உணர வேண்டும்.

கலை, பண்பாடு பழக்கவழக்கங்களுடன் நாம் எப்படி இந்தியத் திருநாட்டுடன் பின்னிப் பிணைந்துள்ளோமோ அதைப் போன்றுதான் புவிசார் நலன்களுடனும் நாம் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளோம். இந்திய திருநாட்டின் ஆதரவு இல்லாமல் எங்கள் விடுதலையை நாம் வென்றெடுக்க முடியாது.

சிங்கள இனத்தவர் தங்களின் தேவைக்கு இந்தியாவைப் பயன்படுத்தி நம்பவைத்து ஏமாற்றி இன்று சீன நாட்டுடன் உறவை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழர்களாகிய எங்கள் இனத்தவரை இந்தியாவுக் எதிராகத் தூண்டிவிட்டு பகையை உண்டுபண்ணி எங்கள் இனம் வீழ்வதற்கு வழி வகுத்தனர் தமிழ் நாட்டின் வைகோ போன்ற சில தலைவர்கள்.

இந்தியாவை பகைக்க வேண்டும் என்று இவர் போன்ற சில தலைவர்கள் திட்டமிட அதனை நடைமுறைப்படுத்தினர் வன்னியிலிருந்த இயக்கமும் பிற நாடுகளில் வாழும் தமிழர்களும்.

உண்மை உறைக்கத்தான் செய்யும், தயவு செய்து இனியாவது இந்த நபர்களது வாய்வெடிகளுக்குப் பின்னால் ஈழத் தமிழர்கள் அணிதிரள வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய நாட்டின் துணையைப் பெறுவதற்காக நாம் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எமது நடைபயணம் புதுடெல்லி நோக்கித் தொடர்கிறது.

நன்றி!

இவ்வண்ணம்.

அரசியல்துறை

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

E.N.D.L.F

15-02-2011

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com