Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 31வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயண வீரர்கள் நேற்று இந்தியாவின் இரண்டு மாநிலங்களைக் (தமிழ்நாடு, ஆந்திரா) கடந்து மூன்றாவது மாநிலத்திற்குள் (மகாராஸ்ரா) நுழைந்தனர். மகாராஸ்ரா எல்லையிலிருந்து ஏழு கிலோ மீற்றர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை (7) யின் ஓரத்தில் முகாம் அமைத்திருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் நேற்று நடைபயண வீரர்கள் 32 கிலோ மீற்றர் தூரமே கடந்திருந்தனர்.

நடைபயணத்தின் 31வது நாளான இன்று அங்கிருந்து (15-02-2011 செவ்வாய்) காலை 06:00 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை நடைபயணம் தொடர்ந்தது. வழி நெடுகிலும் இந்தி மொழியில் அச்சு செய்யப்பட்ட பிரசுரஙகளை மக்களிடம் கொடுத்து வந்தனர். அனைவரும் அதை விரும்பி வாங்கி படித்து வாழ்த்துக் கூறி, கையசைத்து அனுப்பினர்.

இன்று நடைபயண வீரர்கள் 39 கிலோ மீற்றர் தூரம் கடந்து கிராஞ்சி என்ற இடத்தில் இரவு முகாம் அமைத்துக் கொண்டனர். வீரர்கள் இன்னும் கடக்க வேண்டிய தூரம் 1134 கிலோ மீற்றர் தூரம் மட்டுமே!

தமிழ்நாட்டில் சில அரசியல் பிரச்சினைகளால் பத்திரிகைகளுக்கு, நடைபயணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று செய்திகள் சேகரித்த நிருபர்கள் மனவேதனையடையும் அளவுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் மறைக்கப்பட்ட நடைபயணம் இன்று முதன் முறையாக இந்தியாவின் முக்கிய ஆங்கில நாளேடான இந்து நாளிதழ் அரசியல் அழுத்தங்களையும் மீறி செய்தி வெளியிட்டுள்ளது. நாளை மற்றுமொரு முக்கிய ஆங்கில நாளிதளான “த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்படத்துடன் செய்தி வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குவாலியரிலிருந்து டெல்லிவரை 350 கிலோ மீற்றர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என அகதிகள் முகாம்களில் இருக்கும் பெண்கள் முடிவெடுத்துள்ளனர். அதனால் இன்று புழல் அகதிகள் முகாமில் உள்ள பெண்கள் சிலர் அகதி முகாமிற்கு பொறுப்பாக உள்ள வருவாய்த்துறையைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளரிடம் சென்று அனுமதி கேட்டுள்ளனர். அதற்கு அவர்யாராவது சென்றீர்கள் என்றால் பதிவை வெட்டி றோட்டில் விட்;டுவிடுவேன்.” என்று மிரட்டியுள்ளார்.

இந்தியாவிலேயே மிக அதிக அளவு லஞ்சமும், ஊழலும் நிறைந்த துறை வருவாய்த்துறைதான். இந்திய மக்கள் ஓர் சாதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்காமல் சான்றிதழ் பெற முடியாது. அப்படியான ஒரு மோசமான துறையின் நிருவாகத்தின் கீழ்தான் ஈழத் தமிழர்கள் முகாம்களில் அடிமையாக்கப்பட்டுள்ளனர். அப்படியென்றால் ஈழத் தமிழர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம். ஈழத் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதற்கு இது ஓர் உதாரணமே போதுமானது.

ஈழத் தமிழர்கள் தங்களை வருத்தி நடந்து டெல்லி செல்வதினால் இந்த வருவாய்த்துறையினருக்கு என்ன நட்டம் வந்துவிட்டது? நடைபயணத்தில் மேற்கொண்டுள்ள உறுப்பினர்களுக்கு அரசினால் கொடுக்கப்படும் கொடுப்பணவைக் கூட இவாகள் நிறுத்திவிட்டார்கள். இந்த நூறு பேருக்குக் கொடுப்பனவு நிறுத்தியதால் அரசாங்கத்துக்கு லாபம் ஈட்டி கொடுத்துவிட்டார்கள் இந்த வருவாய்த்துறையினர் என்று எண்ண வேண்டாம். இவர்களுக்கு அதில் லாபம் கிடைக்கவில்லை என்பதனால்தான் இந்தச் சிறிய கொடுப்பனவைக்கூட வெட்டி விடுவதாக மிரட்டி வருகின்றனர்.

 நாங்கள் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு எதிராக ஊர்வலம் நடத்துகிறோமா? அல்லது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறோமா? எங்களது சொந்தப் பிரச்சினையைத் தீர்க்கத்தானே நாங்கள் எஙகளை வருத்தி நடந்து செல்கிறோம். நல்லவிடயம்தானே, ஒருவேளை இந்தியா எங்களது பிரச்சினையை தீர்த்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஈழம் சென்றுவிடுவோம்தானே, அதன்பிறகு இவர்களுக்குப் பிரச்சினை இல்லையே! இப்படியிருக்கiயில் இவர்கள் ஏன் இவ்வாறு கடுமையாக நடந்துகொள்கிறார்கள்? ஒருவேளை எங்களால் இவர்களுக்கு ஏதோ வருவாய் இழப்பு ஏற்பட்டுவிடும் என்ற ஒரு காரணத்தைத் தவிர வேறு காரணம் எதுவும் இல்லை.

கடந்த 28 ஆண்டுகளாக எங்கள் அகதிகளைச் சுறண்டியவர்கள் இந்த வருவாய்த்துறையினர். எப்படி இந்த வருவாயை இழக்க மனது வரும்? அதனால்தான் இந்த வருவாய்த்துறையினர் எங்களது பிரச்சினை தீரக் கூடாது என்று நினைக்கிறார்கள். இவர்கள் சிங்களவரை விட மோசமானவர்கள், காலம் முழுவதும் ஈழத் தமிழர்களை அடிமைகளாக வைத்திருக்க விரும்புகிறார்கள்

இப்படியான சூழ்நிலையில்தான் ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையிலிருந்து எங்கள் இனம் விடுதலை அடைய வேண்டும். இந்த உண்மை நிலையையும் எங்களது நியாயமான கோரிக்கைகளையும் அரசியல் அழுத்தங்களையும் மீறி பத்திரிகை துறையினர் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம்.

நன்றி!

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

ஈ.என்.டி.எல்.எப்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com