Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 37வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 37வது நாளான 21-02-2011 திங்கள் கிழமை அகால மரணமடைந்த சந்திரதாஸ் சுதர்சன் அவர்களின் இறுதி கிரியைகள் புதுக்கோட்டை லேனாவிளக்கு அகதி முகாமில் நடந்து கொண்டிருக்கும் வேளையில், நெடுந்தூர நடைபயண வீரர்கள் சுதர்சன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, அவரது இலட்சியக் கணவை நிறைவேற்ற நெடுந்தூர நடைபயணத்தினை வெற்றியுடன் முடிக்க உறுதி எடுத்துக்கொண்டு, சுதர்சன் அகால மரணமடைந்த இடத்திலிருந்து சுதர்சன் அவர்களின் நினைவுகளுடன் மீண்டும் நடைபயணத்தை ஆரம்பித்தனர்.

நடைபயண வீரர்கள் மகாராஸ்ர மாநிலம் நாக்பூர் மாநகருக்குள் நுளையும் போது, பொதுமக்கள் அனைவரும் அன்புடன் வரவேற்றனர். சுதர்சன் அவர்களுக்கு தங்களது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் தங்களது புகைப்படக் கருவியால் நடைபயண வீரர்களையும், நடைபயணத்தில் கொண்டு செல்கின்ற, ஈழத் தமிழர்கள் மீது சிங்கள இராணுவத்தின் வெறித்தனமான தாக்குதல் கோரங்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களையும் புகைப்படம் எடுத்தனர்.

இந்தப் படங்களையும் பேனர்களையும் திரு. கனடா பாலன் அவர்கள் ஒருவாரகாலமாக இரவு பகல் என்று பாராமல் உழைத்துத் தயாரித்திருந்தார். இந்தப் பேனர்களையும் பேனர்களில் பதிவு செய்யப்பட்டப் படங்களையும் எந்த மொழியைப் பேசுபவர்கள் பார்த்தாலும் ஈழத் தமிழரின் இன்றைய நிலையைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு படங்களையும் அதற்கான வசனங்களையும் பதிவு செய்திருந்தார். பொதுமக்கள் இந்தப் படங்களைப் பார்த்து ஈழத்தமிழர்களின் நிலையைப் புரிந்துகொண்டு ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைப்பதற்காக மேற்கொள்ளும் நடைபயணத்திற்கு வாழ்த்துக் கூறிச் சென்றவண்ணம் இருந்தனர்.

நாக்பூர் மக்களின் பாசத்துடன் கொடுத்த வரவேற்பினை ஏற்றுக்கொண்ட நெடுந்தூர நடைபயண வீரர்கள் 37வது நாளான 21-02-2011 திங்கள்கிழமையன்று 41கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர். நடைபயண வீரர்கள் இன்னும் கடக்க வேண்டிய தூரம் 974கிலோ மீற்றர் தூரம் மட்டுமே!

இதேவேளை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ச.சுதர்சன் அவர்களின் உடல் இரவு 11:45 மணிக்கு சென்னை உள்ளுர் விமானநிலையத்திற்கு வந்தடைந்தது. திரு. சுதர்சன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு சென்னையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள், ஈ.என்.டி.எல்.எப் ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் ஈ.என்.டி.எல்.எப். உறுப்பினர்கள் வந்து சர்வதேச சரக்கத்தில் காத்திருந்தனர்.

திரு. சுதர்சன் அவர்களின் உடல் சர்வதேச சரக்கத்துக்கு வந்ததும், சுதர்சன் அவர்களின் உடலுக்கு ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் கொடி போர்த்தி ஈ.என்.டி.எல்.எப். இன் முக்கிய உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் ஈ.என்.டி.எல்.எப்.  உறுப்பினர்களால் மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்பு பொதுமக்களும் ஆதரவாளர்களும் இறுதி மரியாதை செலுத்துவதற்காக சிறிது நேரம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. நள்ளிரவு 12:15 மணிக்கு சுதர்சன் அவர்களின் உடல் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு, 7 வாக னங்களில் ஈ.என்.டி.எல்.எப். உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்பட 50பேருடன் புதுக்கோட்டை நோக்கி பயணித்தனர்.

முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததினால் இங்குள்ள அனைத்து வேலைகளையும் திரு. சோபன் அவர்களும், திரு. உமாபதி அவர்களும் ஏற்றுக்கொண்டனர். திரு. சோபன் அவர்கள் சென்னையிலிருந்து புதுக்கோட்டையில் சுதர்சன் அவர்களின் நல்லடக்கம் வரை னைத்துப் பொறுப்புகளையும் மற்றும் செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டார். ஏறக்குறைய ஐம்தாயிரம் வரை செலவு செய்துள்ளார். அவர்மட்டுமல்லாது திரு.உமாபதி, திரு.சோபன் அவர்களின் நண்பர் திரு. மோகன் அவர்கள், சம்பவம் நடந்தவுடனேயே ஆரம்ப செலவிற்காக, தனது உறவினரின் இருதய அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த ஐம்பதாயிரம் பணத்தைக்கொடுத்து உதவியிருந்தார். மேலும் திரு.சிறி அவர்களும் ஆரம்ப செலவிற்காக பத்தாயிரம் கொடுத்திருந்தார். நடைபயணம் வெற்றிபெறவேண்டும் என்பதில் உறுதியாக உள்ள நண்பர்கள், எந்தவகையிலும் நாங்கள் உதவிகள் செய்வோம் என்று தெரிவித்தனர். உதவியாளர்கள் அனைவருக்கும் நடைபயணத்தின் தலைமைக் குழு சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதேவேளை சுதர்சன் அவர்களின் ஆருயிர் நண்பரும், ஒரே முகாமில் வசிப்பவரும், நடைபயணத்தில் ஒன்றாக கலந்துகொண்டவருமான திரு. குலரூபன் அவர்கள் நடந்த சம்பவங்களையும், அவரையும் அருகில் இருந்து பார்த்தாலும், இறுதியாக ஒருமுறை எனது நண்பன் சுதர்சனின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பியதால், நடைபயண வீரர்களுக்கு தலைமைத் தாங்கி நடத்தி வரும் உயர்திரு. ஞா.ஞானராஜா அவர்கள், நடைபயணக் குழுவின் கடின உழைப்பாளி திரு. கனடா பாலன் அவர்களுடன் குலரூபன் அவர்களைக் கூட்டிக்கொண்டு புதுக்கோட்டை நோக்கி வாக னத்தில் வந்து கொண்டிருந்தனர்.

புதுக்கோட்டை நோக்கி நகர்ந்த அமரர் ஊர்தி காலை 10:00 மணியளவில் லேனாவிளக்கு அகதிகள் முகாமில் உள்ள சுதர்சன் அவர்களின் தாயார் திருமதி. பாக்கியம் அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அன்னை. பாக்கியம் அவர்களுக்கு 4 ஆண் பிள்ளைகளும் 3 பெண் பிள்ளைகளும் உண்டு. அதில் ஏற்கனவே இரண்டு ஆண் பிள்ளைகளை ஈழ விடுதலைக்காக அர்ப்பணித்தவர். மூன்றாவதாக தனது கடைசி மகனான சுதர்சன் அவர்களையும் ஈழத் தமிழர்கள  ிடுதலை பெறுவதற்காக அர்ப்பணித்துள்ளார் ஈழத்தின் வீரத்தாய் பாக்கியம் அவர்கள்.

திரு. சுதர்சன் அவர்களின் உடலைக் கண்டதும் அவரது தாயும், சகோதரரும், சகோதரிகளும் மற்றும் உறவினர்களும் துக்கம் தாளாமல் அழுது புரண்டனர். முகாம் மக்களும், லேனா விளக்கு பொதுமக்களும் சுதர்சன் அவர்களின் குடும்பத்தாரின் நிலைகண்டு கண்கலங்கினர். மேலும் சுதர்சன் அவர்களின் சகோதரி ஒருவர் ஐயோ, இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால். தம்பியை நிறுத்திவிட்டு நாங்களாவது நடைபயணத்திற்குச் சென்றிருப்போமே என்று அழுதனர். சகோதரிகளது பாசமும், விடுதலை உணர்வும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

திரு. சுதர்சன் அவர்களுக்கு, இறுதிச் சடங்காக தேவாலய குருக்களால் இறைவணக்கம் செலுத்தப்பட்டது. சுதர்சன் அவர்களின் இறுதி ஊர்வலத்திற்காக அவரின் ஆரூயிர் நண்பர் குலரூபன் அவர்களுக்காக அனைவரும் காத்திருந்தனர். அவரின் வருகை தாமதமாகிக் கொண்டிருந்தது. உடலை அதிகநேரம் வைக்கமுடியாத காரணத்தினால், இறுதி ஊர்வலத்தைத் தொடங்கினர். ஊர்வலத்தில் முன்னால் ஈ.என்.டி.எல்.எப். இன் கொடியை இருவர் உயரே பிடித்துக்கொண்டு நடந்துவர ஈ.என்.டி.எல்.எப். உறுப்பினர்கள் சுதர்சன் அவர்களை சுமந்துகொண்டு வந்தனர். எங்களது உறுப்பினரை நாங்களே சுமந்துகொண்டு செல்ல சுதர்சன் அவர்களின் உறவினர்களும் முகாம் மக்களும் அனுமதிகொடுத்திருந்தனர். ஊர்வலத்தில் ஈ.என்.டி.எல்.எப். உறுப்பினர்களும், ஆதரவாளர்களும , நண்பர்களும், மற்றும் முகாம் மக்களும் உறவினர்களும் நடந்துவந்தனர்.

மையானத்தில் குலரூபன் அவர்களுக்காக 30நிமிடங்கள் காத்திருக்கலாம் என்று முக்கியமானவர்களால் முடிவெடுக்கப்பட்டு, சுதர்சன் அவர்களின் இறுதி ஊர்வலம் மதியம் 01:30 மணியளவில் தொடங்கியது. மையானத்தில் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு சிறிது நேரம் குலரூபன் அவர்களுக்காக காத்திருந்தார்கள். வெயிலின் உடல் பழுதாகிக்கொண்டு இருந்ததினால் 2:15 மணியளவில் சுதர்சன் அவர்களது உடல் புதைக்கப்பட்டது.

அரைமணித்தியாலம் சென்று வந்த குலரூபன் அவர்கள் இறுதியாக முகத்தைப் பார்க்க முடியாமல், புதைத்த இடத்தில் குலரூபன் அவர்களும், உயர்திரு. ஞா.ஞானராஜா அவர்களும், திரு. கனடா பாலன் அவர்களும் மற்றும் திரு. ரமணி அவர்களும் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இறுதி மரியாதை செலுத்தினர். குலரூபன் அவர்கள் 1500 கிலோ மீற்றர் தூரம் கடந்து வந்தும் இறுதியாக பார்க்கமுடியவில்லையே என்று மனம்கசந்து அழுதுகொண்டிருந்தார். அவரை அவரது நண்பர்கள் ஆறுதல் கூறி முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

நடைபயணத்தின் தலைமைக்குழு தலைவர் திரு. மங்களராஜா அவர்களும், நடைபயண வீரர்களின் தலைவர் உயர்திரு. ஞா.ஞானராஜா அவர்களும் மற்றும் திரு. உமாபதி அவர்களும் சுதர்சன் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லி விடைபெற்றனர். முகாம் மக்கள் அனைவரும் நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறி அனுப்பிவைத்தனர்.

இவ்வண்ணம்,

மங்களராஜா

நடைபயண தலைமைக்குழுத் தலைவர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com