Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் இனத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் மீனவர்கள்!

இலங்கையின் எண்பத்தைந்து சதவீத கடல்பகுதிகள் தமிழ் இனத்துக்குச் சொந்தமானது. இன்று இலங்கையின் கடற்பகுதி 100 சதவீதமும் சிங்கள இனத்துக்கானதாகிவிட்டது. ஓர் சிறிய பகுதியான யாழ்ப்பாணமும் மன்னாரும்தான் தமிழர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதிகளாக இருக்கிறது. ஆழ்கடல் மீன்பிடி உரிமை தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. ஈழத் தமிழ் மீனவர்கள் முன்னொரு காலத்தில் இலங்கையின் தேவையில் பாதிக்கும் அதிகமான மீன்களை கொழும்புக்கு அனுப்பி வந்தனர். இனப்பிரச்சினை தலைதூக்கியதும் தமிழர்களின் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்காக மீன்பிடித் தொழிலையும் முடக்கினர் சிங்கள ஆட்சியாளர்.

இன்று பிற்பகலில் கடலுக்குச் சென்றால் மறுநாள் காலையில் பணத்தைப் பார்க்கும் தொழில் இந்த மீன்பிடித் தொழிலாகும். உயிரைப் பணயம் வைத்துச் செய்யும் இந்தத் தொழில் பயனும் அவ்விதம் அமையும். ஓர் விவசாயி இன்று விதையை விதைத்தால் மூன்று மாதங்கள் கழித்துத்தான் பயன் அல்லது பணத்தைப் பார்க்க முடியும். அதிலும் இயற்கை ஒத்துழைக்க வேண்டும். மீன்பிடித் தொழில் இன்று பயன் இல்லை என்றால் மறுநாள் பயன் உண்டு.

இனப்பிரச்சினை ஆரம்பித்தப் பின்னர் வடக்கின் மீன்வரத்து கொழும்பில் குறைந்தது. இதனைத் தொடர்ந்து மீன்பிடித் தொழில் சிங்கள இனத்தவர் சிங்கள அரசினால் ஊக்குவிக்கப்பட்டனர். அந்த ஊக்குவிப்பு இப்போது பெரும் வளர்ச்சிக்கண்டு ஆழ்கடலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

தென்பகுதி சிங்கள மீனவர்கள் இந்தியப் பெருங்கடலிலும் வங்காள விரிகுடாவிலும் இன்று அதிநவீன கருவிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டு ஆட்சி செய்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் மீன்பிடி மூலம் சிங்கள மீனவர்கள் அதீத வளர்ச்சிக் கண்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து தொலைத் தொடர்பு சாதனங்கள் படகுகளின் இயந்திரங்கள், உயிர்ப் பாதுகாப்பு உபகரணங்கள் என்று சிங்கள மீனவர்கள் நவீன மீன் பிடியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழர்களது மீன்பிடி முடக்கப்பட்டு ஆதிகாலத்தில் வள்ளங்களில் சென்று வலையுடன் மல்லு;கட்டி கரையேற வேண்டிய தேவைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள அரசியல்வாதிகள் இந்தியாவுக்குத் தப்பி வருவார்கள். அப்போது தமிழ் மீனவர்கள்தான் இவர்களை அழைத்து வந்து தமிழகத்தில் பதுங்கியிருந்து மீண்டும் இலங்கை செல்ல உதவிகள் வழங்குவார்கள். 

கொழும்பில் இருந்தும் படகுகள் மூலம் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிங்கள அரசியல் தலைவர்கள் இருந்தனர். என்.எம். பெரேரா, கொல்வின், ஆர்.டி.சில்வா போன்ற சிங்களத் தலைவர்கள் தமிழ் மீனவர்களின் உதவியால் இந்தியாவில் தங்கியிருந்துள்ளனர். அந்த அளவு சிங்கள மீனவர்கள் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை ஆள்கடத்திலில் பயணம் செய்வதற்கு. இன்றோ அனைத்தும் தலைகீழாகிவிட்டது. தமிழர்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு மீன்பிடி தொழிலில் இருந்த வளர்ச்சி முற்றிலுமாக நசுக்கப்பட்டுவிட்டது.

சிங்கள இனத்தவர் வடபகுதி கடற்பகுதியில் கிடைத்துவரும் நல்லவகை மீன்களை அள்ளிச் செல்லும் விதத்தில் வலைகளும் இழுவைப்படகுகளும் அரசினால் வழங்கப்பட்டு பெரும் வருவாயை ஈட்டி வருகின்றனர். நவீன வலைகள், நவீன படகுகள், நவீனத் தொலைத் தொடர்பு சாதனங்கள், பதப்படுத்தி வைக்கப்படும் குளிர் சாதன வசதிகள் என்ற எதுவுமே தமிழ் மீனவர்களுக்குக் கிடையாது. இவை அனைத்தும் தடைசெய்யப்பட்டு இரண்டு சதாப்தங்கள் முடிந்துவிட்டன.

இப்போது தமிழக மீனவர்கள் விடயத்தில் சிங்கள அரசு பின்வாங்கி யாழ்ப்பாண மீனவர்களைக் களமிறக்கிவிட்டுள்ளது. யாழ்ப்பாண மீனவர்கள் நீண்டகாலமாக மீன்பிடிக்க முடியாத நிலையில் கரையிலிருந்து சில மைல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்ததுடன் அவர்களுக்கு ஏற்ற மீன்விடி வைலையைக்கூட வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது இதுவரை காலத்தில்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்குச் சேகரிக்கவென சில இலவசங்கள் வழங்கப்படுவது வழக்கமான இந்தக் கலகட்டத்தில் தமிழ் மீனவர்களுக்கு படகுகளும், சில குறுகிய வலைகளும் கடனாக வழங்கி வாக்குப் பெற முயற்சித்தனர் சிங்கள அரசின் ஏஜெண்டுகள். இதில் அவர்களுக்கு சிறிதளவு வெற்றியும் கிடைத்தது. தமிழ் அரசியல் கட்சிகளையும் இயக்கங்களையும் விலைக்கு வாங்கிய சிங்கள அரசுக்கு சாதாரணமீனவர்களை வாஙகுவதா பெரிய விடயம்! அப்படி வாங்கப்பட்டவர்களை சிங்கள அரசு இந்தியாவுக்கு எதிராச் செயற்பட தூண்டிவிட்டு தமிழரது பிரச்சினைகளைத் திசைதிருப்புவதை விட்டுள்ளது.

(01)    160 இந்திய மீனவர்களைக் கைது செய்து சிறையிலடைக்கும் அதிகாரமும்,

(02)    இந்திய துணைத் தூதராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யும் அதிகாரமும் அண்மையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட விசேச அதிகாரமும் சலுகைகளும் ஆகும்.

தமிழக மீனவர்களைக் கைது செய்தது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். கடன் வாங்கிய படகுக்காரரின் நன்றியுணர்வினால் கடத்தலுக்குத் துணைபோனதைத் தெளிவுப்படுத்தியிருந்தோம்.

இப்போது இந்தியத் துணைத்தூதராலாயத்தின் முன்னர் ஆர்ப்பாட்டம்தமிழக மீனவர்களுக்காகச் சென்னையில் நடத்தப்படும் வழக்கமான ஆர்ப்பாட்டம் போன்றே ராஜபக்சேயும் இந்தியாவுக்கு எதிராகப் பாடம் புறட்ட முற்பட்டுள்ளார்.

சிங்கள இராணுவம் மீனவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் குழுமுமாறு வேண்டிக்கொண்டனர். பாசையூர், குருநகர் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள்தான் இப்படி அழைக்கப்பட்டவர்கள். இராணுவமும் சில தமிழ் இளைஞர்களும் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்து சேர்ந்ததும், சில கிழிந்த வலைகளைக் கையில் கொடுத்து கோசங்களையும் வெள்ளைத்தாளில் எழுதிக்கொடுத்து பாடமாகும்படி கூறியுள்ளனர்.

கூட்டம் குறைவாக இருந்ததைக் கண்ட இராணுவத்துக்கும் இயக்க உறுப்பினர்களுக்கும் கடுமையான கோபம் வந்துள்ளது. 3000 மீனவர்கள் இந்த இரண்டு பகுதிகளிலும் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இவர் வெறும் 500 பேர்தான் வந்தனரா என்று கோபம் கொண்டுள்ளனர் சிப்பாய்களும் ஏஜெண்ட் தமிழர்களும்.

பாதிரியார் ஒருவரும், சங்கத் தலைவர் ஒருவரும் கோரிக்கை மனுவைக் கொடுத்து கோசம  ோட்டுவிட்டுத் திரும்பினர் தூதராலயம் முன்பாக. முhலையில் மீனவர்களுக்குப் பழைய மாதிரியான தொல்லைகள் கொடுக்கப்பட்டன. அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்று மிரட்டப்பட்டுள்ளனர் நேற்று மாலையில்.

குருநகர் பகுதியில் டக்கிளஸ் தேவானந்தேவுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. அங்குதான் முற்பணம் இல்லாமல் அதிக படகுகள் வாக்குப் பெறுவதற்காக வழங்கப்பட்டது. அத்துடன் போராட்டம் நடந்த காலங்களில் வட பகுதியின் மீனுக்கும் கருவாட்டுக்கும் ஏமாத்த ஏஜெண்டே டக்கிளஸ் தேவானந்தேதான். எனவே மீனுக்கும் அவருக்குமான தொடர்பு நீண்டகாலமானது. ஆதலால் அவரது கைதான் இந்தச் செயற்பாடுகளுக்குப் பின்னர் இருக்கிறது என்பது உண்மைதான்.

இந்தியாவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும், அதே நோரத்தில் அதில் தனது கை இருப்பது தெரியக்கூடாது என்று ராஜபக்சேயும் நினைக்கிறார். டக்கிளசும் நினைக்கிறார். இதனால் பலி கொடுக்கப்படுவது மீனவர்கள் என்று நாம் விடைகாண வேண்டும்.

நன்றி!

இவ்வண்ணம்,

சி. தேவராஜா

மத்தியக்கிளை உறுப்பினர்

ஈ.என்.டி.எல்.எப்.ள

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com