Contact us at: sooddram@gmail.com

 

 

21-02-2013

மேதகு ஜனாதிபதி அவர்கள்

அலரி மாளிகை

கொழும்பு

ஐயா

ஜெனீவாவில் வரவிருக்கும் அமெரிக்கத் தீர்மானம்

எனது அபிப்பிராயப்படி பொறுப்புள்ள சிலரின் பொறுப்பற்ற கூற்றுக்களால் மகிந்த சிந்தனை தனது மதிப்பை இழந்து வருகிறதென மீண்டுமொருமுறை தங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன் இந்த துக்ககரமான நிலைமைக்கு பொறுப்பானவர்கள் உங்களுக்கு சங்கடமான நிலையை வேண்டுமென்றே தோற்றுவிப்பதோடு தெரிந்தோ தெரியாமலோ உங்களுடைய மதிப்பை குறைக்கின்றனர். இந்த போக்கை உடன் தடுத்து நிறுத்தவும். வரைமுறையற்ற சிலரின் கூற்றுக்கள் அடிக்கடி வெளிவருவதால் நாட்டின் நன்மைகருதி இதனை உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எமது மக்கள் ஞாபக சக்தி குறைந்தவர்கள். ஆனால் அரசாங்கத்தையோ தங்களின் ஆலோசகர்களையோ அப்படிச் சொல்ல முடியாது. பல தகவல்கள் உங்களின் வழிநடத்தலுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் தங்களை வழிநடத்த ஊடகங்களும் உண்டு.

ஒரு சில நாடுகளைத் தவிர விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு சகல நாடுகளும் முழு ஆதரவு வழங்கின. அவை தத்தம் நாடுகளில் விடுதலைப்புலிகளை தடைசெய்தும் இலக்கை அடைய பலவித உதவிகளும் புரிந்துள்ளன என்பதை தங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். அத்தகைய நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் இன்றும் தடைவிதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இப்போது சில நாடுகள் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானங்களை ஆதரித்தும், ஆதரிக்கவும் உள்ளமையால் அந்த நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை என குற்றஞ்சாட்டுவது நீதி  நியாயமற்ற செயலாகும். இலங்கையில் தூதரகங்களை வைத்துள்ள சகல நாடுகளுக்கும் தகவல்கள் சேகரிப்பதற்குரிய சகல ஏற்பாடுகளும் உண்டு. அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்களை அவர்கள் தமக்குள் பரிமாறிக்கொள்வர். இந்த விடயத்தில் ஒரு நாடும் இன்னொரு நாட்டை தனிப்பட்ட விசேட காரணங்கள் ஏதும் இருந்தால் அன்றி கட்டுப்படுத்த முடியாது. அரச சார்பற்ற நிறுவனங்கள் எதையும் பெயர் குறிப்பிடாது அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு கூலிப்படைகளை அனுப்பி உள்ளனர் என பல்வேறு அறிக்கைகள் பொறுப்பற்ற முறையில் வெளிவருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பாரதூரமான இக்குற்றச்சாட்டு, அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றை இயங்க விடாமல் செய்துள்ளது. இன்றும்கூட வடக்கு பிரதேசத்தில் இத்தகைய அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்க விடாது தடுக்கப்பட்டுள்ளமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வறுமையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தமக்கு உணவுப் பண்டங்கள் பிள்ளைகளுக்கு பால்மா போன்றவை பெறும் வாய்ப்பை இச் செயலால் இழந்துள்ளனர்.

யுத்தத்துக்கு முன்பும், யுத்தத்துக்கு பின்பும் இந்தியா முக்கிய பங்கு வகித்தும் வகிக்கவும் உள்ளது. தமிழ்நாட்டு பொலிசார் எச்சரிக்கையாக இருந்தமையால் பல்லாயிரக்கணக்கான தொன் எடையுள்ள குண்டுகள் தயாரிப்புக்கு பாவிக்கப்படுகின்ற இரும்பு சன்னங்கள், வெடி மருந்துகள் வடக்கே பல பகுதிகளுக்கும், வடக்கிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய விளைவுகள் எமது கற்பனைக்கு அப்பாற்பட்டதாகும். இலங்கை இராணுவமே யுத்தத்தை வென்றதில் எதுவித சந்தேகமும் இல்லை. ஆனால் பொது மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தமையினாலேயே  முன்னேற முடிந்தது. தமிழ் நாட்டு பொலிசாரின் உதவியின்றேல் இந்த யுத்தத்தை வென்றிருக்க முடியாது.

பல ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மாகாந்தி அவர்கள் இந்தியாவும், இலங்கையும் தமக்குள் சண்டையிட முடியாது எனக் கூறியுள்ளார். இலங்கையில் எல்லாம் நன்றாக இருப்பதாக நான் கூற வரவில்லை. இலங்கை தமிழர்களுக்கு பல ஆதங்கங்கள் உண்டு. உயர் மட்டத் தலையீடு தேவைப்படும் அளவுக்கு இவற்றில் சில கட்டுமீறி போகும் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. நாம் விரும்பியா விரும்பாமலோ இவ்விரு அயல் நாடுகளுக்கிடையில் இருந்த உறவு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் மிக விரைவில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடுமாகையால் இரு நாடுகளும் இந்த போக்கை உடன் நிறுத்தி அவற்றின் நன்மையை மனதிற் கொண்டு தமக்குள் ஏற்பட்டுள்ள தப்பான அபிப்பிராயங்களை போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட கருத்து தங்களால் மிக ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டியதாகும். இலங்கை இந்தியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நல்லெண்ணமும் ஒற்றுமையும் நிலவுவதற்காக தமக்கிடையில் உள்ள குரோதங்களை இல்லாமல் செய்ய தீவிரமாக செயற்பட வேண்டும். அமெரிக்க தீர்மானங்கள் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள்  சபையின் மனித உரிமை ஆணையத்தில் எடுக்கப்படும் போது இந்தியாவுக்கு ஒரு சங்கடமான நிலைமை ஏற்படாத வகையில் முதல் படியாக அதற்குரிய நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கை 22 மைல் நீளம் கொண்ட பாக்குத் தொடுவாயினாலேயே  பிரிக்கின்றது. ஆகவே நம்மிரு நாடுகளும் மோதிக்கொள்ள  முடியாதுதென்று மீண்டும் வற்புறுத்தி கூறுகின்றேன்.

ஜனாதிபதி அவர்களே! இந்தச் சந்தர்ப்பத்தில் வரவிருக்கும் அமெரிக்கத் தீர்மானமத்திற்கமைய நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இராணுவத்தினருருக்குரிய சட்டரீதியான பாதுகாப்பையும் வழங்குவது தங்களுக்குரிய பாரிய கடமையாகும்.

வீ. ஆனந்தசங்கரி

செயலாளர் நாயகம்- த.வி.கூ

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com