Contact us at: sooddram@gmail.com

 

என்றும் எதற்கும் விலை போகாத மக்கள் தொண்டன் தோழர் சண்முகலிங்கம  - கனேடிய ஜனநாயக தமிழர் கலாச்சார பேரவை (CDTCA)

சண், சண் அண்ணா என அழைக்கப்படும் தோழர் பொன்னம்பலம்  சண்முகலிங்கம் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பின்னர் 22-02-2013 அன்று கனடாவில் காலமானார். அவரது  மரணம அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது அவரது உறவினர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரையும் சொல்லணாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் இளம் பராயத்திலிருந்தே அரசியல ,சமூக விடயங்களில் ஆர்வமுள்ளவராக  இருந்தார் .இடதுசாரி இயக்கம் அவரை இளம் பராயத்தில் ஈர்த்துக்கொண்டது .மலையகத்தில் தொழில் பார்த்தபோது  தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டதனால் அரசினால் கைதுசெய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்தார் .பின்னர் இவர்  வவுனியாவில் இயங்கிய காந்தீயம் அமைப்பில்  இணைந்து  அப்பகுதியிலுள்ள மிகவும் வசதி குறைந்த   மக்களுக்கு அளப்பரிய சேவை செய்தார் .

கனடாவிற்கு புலம்பெயர்ந்த தோழர் சண் அவர்கள ,தானும் தன்பாடும் என்றிருக்காமல் தன்னலமற்ற தனது சமூக அரசியல் செயற்பாடுகளை  பற்றுறுதியுடன் தொடர்ந்தார்  .இவ்வகையில் ரொறன்ரோ தேடக அமைப்பு  தமிழ் சமூகத்தில் ஜனநாயகம், சமத்துவம், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் மற்றும் பன்முகத்தன்மை போன்ற நோக்கங்களுக்காக செயற்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்  தோழர் சண் அவர்கள் மிகுந்த அர்ப்பணத்துடன்     அவ்வமைப்பில் செயற்பட்டார் . கனேடிய  தமிழ் சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கான இடைவெளியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார் . சகல விதமான சமூக அநீதிகளுக்கெதிராக தர்மாவேசத்துடன் போராடிய சண்  ில சமயங்களில் தாக்குதல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி இருந்தது . இப்படிப்பட்ட தாக்குதல்களை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் எவ்வித குரோதமோ, சலனமோ, பயமோ இன்றி தனது பணியை தொடர்ந்தார .

இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டமானது தவறான முறையில் வழிநடத்தப்பட்டதனால் விளைந்த பாரிய அவலத்தை கண்டு தோழர் சண்  மனமுடைந்தார். யுத்தத்தை அறவே வெறுத்த சண்  சமாதான பாசறைகளை சிறுவர்கள் மத்தியில் நடாத்தியதன் மூலம் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சித்தார் . சுயநல அரசியல்வாதிகளின் வெற்றுக்கோசங்களும் வீராப்பு அறிக்கைகளும் சாதாரண  தமிழ் மக்களுக்கு அழிவைத்தவிர வேறெதையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பதை அனுபவரீதியாக உணர்ந்திருந்தார்.இலங்கையில் சகல இன மக்களும் சமத்துவத்தின் அடிப்படையில் ஐக்கியம் அடைந்து உருவாக்கும் ஒரு ஜனநாயக சூழலில்   தான் தமிழ் மக்களின் பிரச்சினை தீரும் என்பதை உணர்ந்து  கனேடிய ஜனநாயக தமிழர் கலாச்சார பேரவை (CDTCA) என்ற அமைப்பை உருவாக்குவதற்கு முன்னின்று உழைத்தார் .இந்த அமைப்பின் செயற்பாடுகளை சாத்தியப்படுத்துவதற்காக ரொறன்ரோ  வாழ் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களை ஒன்று கூட்டுவதில் தனது ஆளுமை கவர்ச்சியினால் பெரும் வெற்றிகண்டார் . புலம்பெயர்ந்த நாடுகளில் முதன் முதலாக  சகல இலங்கையரையும் ஒன்று சேர்த்து தமிழ் சிங்கள புத்தாண்டு   விழாவை  நடாத்திய பெருமை தோழர் சண்ணையே சாரும் .

இந்த அரசியல் செயற்பாடுகளின்  மத்தியிலும் தனது நேரம் ,சிரமம் ,செலவு பாராது வயோதிபர்கள் ,நோயாளிகள் ,புது குடிவரவாளர்கள்  போன்றோர்க்கு பல உதவிகளை  எந்தவித ஆரவாரமுமின்றி செய்தார் .தனது அரசியல் சமூக செயற்பாடுகளில்  ஈடுபட்ட அனைவரும் நெருங்கிய உறவை பேணவேண்டும் என்பதற்காக பல ஒன்றுகூடல்களை சகலருக்கும் தோழராக இருந்த சண்  ஒழுங்கு படுத்துவதில் வெற்றி கண்டார் . பாசாங்கு இல்லாமல் பழகும் தன் அருமையான குணத்தால்  ுழந்தைகள் முதியோர் உட்பட சகலரையும் அவர்  கவர்ந்தார்.

தனது மனதில் சரியென படுவதை யார் எவரென்று பார்க்காமல்  ெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்  தோழர் சண். பிழையான பாதை எமது மக்களை அழிவிற்கிட்டுச்செல்லும் என்பது அப்பட்டமாக  ெரிந்திருந்தும் தங்களது பிழைப்புக்காக, புகழுக்காக போலிவேஷம் போட்டிருக்கும் சந்தர்ப்பவாதிகள் மத்தியில் சண் அவர்கள் வித்தியாசமானவராக வாழ்ந்திருக்கிறார் . எப்படியாவது வாழ்ந்து பணமும் புகழும் கிடைத்தால் போதும் என்று எண்ணாது இப்படித்தான் வாழவேண்டும் என இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர் தோழர் சண . காற்றடிக்கும் பக்கம் அள்ளுப்பட்டுச்செல்லும் சருகாக அவர் என்றும் இருந்ததில்லை .தமிழ் மக்களின் அவலத்தில் பிழைப்பு நடத்தும் போலிகளை போலல்லாது தமிழ் மக்கள் தொடர்பாக, குறிப்பாக விளிம்பு நிலை தமிழ் மக்கள்  ொடர்பாக மிகுந்த அக்கறையுள்ளவராக இருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அவர் மிகவும் தெளிவான பார்வையை கொண்டிருந்தார். புலிகளின் பாதை தமிழ் மக்களை அழிவிற்கிட்டு செல்லும் என்பதை நன்குணர்ந்திருந்த தோழர் சண், பல மேடைகளில் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். அவர் எதை கூறினாரோ, அதுவே இன்று துரதிஷ்டவசமாக நடந்து முடிந்திருக்கிறது. அவரிடம் இனவெறி, மதவெறி, சாதிவெறி போன்றன இல்லாதது மட்டுமல்ல, அவற்றை  அவர மூர்க்கத்தனமாக எதிர்த்தார். அவரது சிந்தனையும் செயற்பாடும் எப்பொழுதும் மக்கள் நலன் சார்ந்தே இருந்தத  .

மறைந்த சண்  அவர்கள் சிறந்த கலா ரசிகனாகவும் விமர்சகனாகவும் விளங்கினார் . இசை ,ுண்கலை கள் ,நாடகம் ,இலக்கியம், சினிமா  போன்ற துறைகளில் நிறைந்த ஈடுபாடு காட்டினார். கனடாவில் நடைபெற்ற முதலாவது தமிழ் குறுந்திரைப்பட விழாவை ஒழுங்கு செய்த பெருமை சண்ணையே சாரும்.

தோழர் சண் சுகவீனமுற்று படுக்கையில் படுக்கும் வரை ஒவ்வொரு வருடமும் சகல பண்டிகைகளுக்கும் தனது சகல நண்பர்களையும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கூற தவறுவதில்ல  . தனது குடும்பத்தினர் ,உறவினர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த தோழர் சண் அதேபோல் தன்னுடைய சமூக அரசியல் வாழ்வில் இணைந்து செயற்பட்டவர்கள் மீதும் அன்பு செலுத்தினார். இனிவரும் பண்டிகை காலங்களில் நாங்கள் தோழர் சண்ணின் தொலைபேசி அழைப்பை  ேட்க முடியாது .ஆனால் பண்டிகைகள் வரும்பொது அவரின் நினைவு எம்மை அழைத்துக்கொண்டே இருக்கும் .

கனேடிய ஜனநாயக தமிழர் கலாச்சார பேரவை (CDTCA)

ரொறன்ரோ கனடா  25-02-2013

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com