Contact us at: sooddram@gmail.com

 

மகேஸ்வரி நிதியம் மீதான அவதூறுகளும்அதற்கான உண்மை விளக்கமும்!

கடந்த சில நாட்களாக எமது மகேஸ்வரி நிதியம் மீதான அவதூறுகளும் அரசியல் அழுத்தங்களும் அர்த்தமற்ற வகையில் புனைகதைகளாக பரப்பப்பட்டு வருகின்றன. ஆகவே இது குறித்த உண்மை நிலை எது என்பதை நாம் சகலருக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.  கடந்த 5 வருடங்களாக புவிச்சரிதவியல் அளவைகள் சுரங்க பணியகத்தின் அனுமதியுடன் மகேஸ்வரி நிதியத்தினால் மணல் விநியோகம் சட்டரீதியாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 16.01.2014 அன்று காலை வடமராட்சி கிழக்கு நாகர் கோவிலில் உள்ள எமது மணல் விநியோக நிலையத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உழவு இயந்திர உரிமையாளர்களை பலவந்தமாக தடுத்து நிறுத்தி மணல் சேவையினை இடைநிறுத்தி இருந்தனர்.

உதயன் பத்திரிகை உரிமையாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவான் தலைமையில் வந்த கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், ஆனோல்ட், கஜதீபன், சிவாஐpலிங்கம், மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் சஞ்சீவன் , வலிவடக்கு பிரதேச சபை தலைவர் சுகிர்தன், வலிதெற்கு பிரதேச சபை தலைவர் பிரகாஸ் மற்றும் முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், இன்றைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினருமான கNஐந்திரன், அவரின் சிறியதகப்பனும் பாரவூர்திச் சங்க உறுப்பினருமாக nஐயகுமார், உதயன் பத்திரிகை முகாமையாளர் ரகுநாதன் அவருடன் அவர் பணிபுரியும் ஐனசக்தி காப்புறுதி வடமராட்சி முகாமையாளர் சந்திரலிங்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் அம்பன் பிரதேச வாசியுமான காண்டீபன் ஆகியோரும் அவர்களது உதவியாட்களுமே அங்கு வருகை தந்திருந்தனர்.

இக்குழுவினர் மகேஸ்வரி நிதியத்தினை வெளியேற்றவேண்டும் என்றும், தாம் நியமிப்பவர்களின் ஊடாகவே இனிமேல் மணல் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் கூறி உழவு இயந்திரங்களை பலாத்காரமாக தடுத்து நிறுத்தினர், ஆனால் மகேஸ்வரி நிதியத்திற்கு அனுமதிப்பத்திரம் உள்ளது என நாம் அனுமதிப்பத்திரத்தினை காட்டியபோதும் அதனை பார்க்க மறுத்து மகேஸ்வரி நிதிய ஊழியர்களையும் சாரதிகளையும் தாக்க முற்பட்டனர். ஆனாலும் அங்கு மணல் ஏற்றும் தொழிலாளர்களும் பொதுமக்களும் திரண்டதினால் தாக்குதல் முயற்சியை கைவிட்டு எம்முடன் வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடத்தொடங்கினர்.
இதனை அடுத்து நாம் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் இங்கு வன்முறை இடம் பெறக்கூடிய சாத்தியமுள்ளதால் தற்காலிகமாக மணல் சேவையினை நிறுத்திக் கொள்ளுமாறும் அரசாங்க அதிபருடன் கதைத்து சாதகமான முறையில் பரிசீலித்து மணல் அகழ்வினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதற்கு அமைய நாம் தற்காலிகமாக மணல் விநியோகத்தினை நிறுத்தி வைத்து மணல் அனுமதிக்கு பொறுப்பான புவிச்சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம்.  இதேவேளை மகேஸ்வரி நிதியத்தால் நடத்தப்பட்டு வரும் மணல் விநியோகத்தை இவர்கள் தடுத்து நிறுத்தியிருப்பதன் நோக்கமும் சம்பவ இடத்தில் கூடி நின்றிருந்த தொழிலாளர்கள் மத்தியில் அம்பலத்திற்கு வந்திருந்தது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன் இந்த மண்வியாபாரத்தை தங்களது கட்சி உறுப்பினர் காண்டீபன் செயலாளராக இருக்கும் ப.நோ.கூ. சங்கத்திடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும், ஏற்கனவே குறித்த ப.நோ.கூ. சங்கம் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டு அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இக்கோரிக்கையை முன்வைத்த பொழுது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் நிராகரித்தனர். இதே வேளை நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணபவான் அவர்கள் தனது நேரடி கண்காணிப்பில் மணல் விநியோகத்தை நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு அங்கிருந்த தொழிலாளர்களிடம் கேட்ட போது அதற்கும் மக்களும் தொழிலாளர்களும் இணைந்து மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

பல்வேறு பொது அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களிடம் உங்களுக்கு மணல் அனுமதி பெற்று தருவதாகவும் அதில் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியுமெனவும் ஆசை வார்த்தைகள் கூறி இவர்கள் செய்யும் இந்த அரசியல் தம்மை ஏமாற்றும் செயல் என்பதை மக்கள் தெளிவாக புரிந்திருந்தனர். இந்நிலையிலேயே மணல் விநியோகத்தை தம்மால் அபகரிக்க முடியாமல் போன நிலையில் வேறு பல போலிக்காரணங்களை கூறி மணல் விநியோகத்தை முழுமையாக தடுத்து நிறுத்த பல்வேறு குழப்பங்கனையும் சூழ்ச்சிகளையும் உருவாக்கி வருகின்றார்கள்.
இதனால் 500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது அன்றாட உணவுத் தேவைக்காக அவலப்பட வேண்டிய நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். யாழ் மாவட்ட அபிவிருத்திக்கு மண் பிரதானமானது. தங்களது சுயலாப அரசியலிற்காக இந்த மணலைத் தடுப்பதன் மூலம், இந்த இரண்டு கட்சிகளின் கூட்டு வியாபாரிகளும் இந்தத் தொழிலாளர்களின் வயிற்றில் மட்டுமல்ல யாழ் மாவட்ட அபிவிருத்திக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கும் முட்டுக்கட்டை இடுகின்றார்கள் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

சட்டரீதியாக எமக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியினை அரசியல் காழ்ப்புணர்சியினாலோ அன்றி பணம் பறிக்கும் வியாபார நோக்கத்தினாலோ யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, எம்மை தடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தாம் இச்சேவையினை மேற்கொள்ளுவதாக கூறுவது முற்றிலும் சுயநலம் உள்ளதாகவே காணப்படுகின்றது. இவர்கள் மணல் அகழும் போதும் இவர்கள் போலியாக கூறுவது போல் சுற்று சூழல் பாதிப்படையாதா என்ற கேள்வியே ஏற்படுகின்றது. ஆகவே எமது சட்ட ரீதியான மண்விநியோகத்திற்கு எதிராக மக்களின் பெயரால் குழப்பங்களை விளைவிப்போர் இரண்டு அரசியல் கட்சியினரே அன்றி வேறு யாரும் அல்ல என்பதையும், இவ்வாறு குழப்பங்களும் சூழ்ச்சிகளும் திட்டமிட்டு உருவாக்கப்படுவது சொந்த வியாபார நோக்கத்திற்காகவும், அரசியல் காழ்ப்புணச்சியின் காரணமாகவுமே அன்றி மக்கள் நலன் சார்ந்த விடயம் அல்ல என்பைதையும் சகலரும் புரிந்து கொள்வீர்கள் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.

நேசமுடன்
த.றஜீவ்
இணைப்பாளர்
மகேஸ்வரிநிதியம்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com