Contact us at: sooddram@gmail.com

 

தோழர். குமார் குணரத்தினத்தின் ஜனநாயக, அரசியல், குடியியல் உரிமையைகளை அங்கீகரிக்குமாறு கோருகிறோம் !

தமிழர்கள் அதிகாரங்களில் அமர்த்தப்படுகின்றனர். கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். இராணுவம் தமிழ் மக்களின் காணிகளில் இருந்து வெளியேறும். இவைபோன்ற பல பத்து விடயங்களை தமிழ் மக்களின் நலனுக்காக மைத்திரியின் அரசு செய்வதாகவும்- செய்யும் என்ற நம்பிக்கையிலும், நம்மில் பலர் மகிழ்ச்சியில்திளைத்துள்ளோம். அதேவேளை, இந்த அரசாட்சியின் கீழ் நமது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் மிக விரைவில் வெற்றி வாகைசூடும் எனக் கூறும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வார்த்தைகளை நம்பிப் புளகாங்கிதம் அடைந்த வண்ணமுள்ளோம். மறுபக்கத்தில், மக்களின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்திசெய்யும்வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதால் 'ரொபின் ஹூட்' அரசு என மைத்திரி அரசு பாராட்டப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரியை இந்தியா உட்பட பல மேற்குநாடுகள் தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தவண்ணமுள்ளன. கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசரைத்தொடர்ந்து, இங்கிலாந்தின் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் என சர்வதேச ராஜதந்திரிகளும் பிரபலங்களும் இலங்கைக்குவிஜயம் செய்ய வரிசையில் நிற்கின்றனர்.

இலங்கை அரசின் பேச்சாளர்களும் மற்றும் அமைச்சர்களும் மஹிந்த அரசினால் பாதிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களையும்,ஏனையோரையும் நாட்டுக்குத் திரும்புமாறு அடிக்கொரு தடவை அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர். புலம்பெயர்ந்த அனைத்து மக்களையும், இந்தியாவில் அகதியாகஇருப்போரையும் நாடு திரும்புமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐந்து லட்சம் கொடுத்தால் இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகவும் அது அறிவித்துள்ளது. இன்று இலங்கை ஒரு ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் பூமியென மைத்திரி அரசால் பிரச்சாரப் படுத்தப்பட்டு, மக்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியபடி உள்ளது.

ஆனால், இந்த ஜனநாயகம் இன்று தேர்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும் என்பதே உண்மை! இலங்கையின் இடதுசாரியக் கட்சிகளில் ஒன்றானமுன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் நாடு திரும்பியுள்ள நிலையில், அவரை மறுபடியும் நாடுகடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதுமைத்திரி அரசு. உல்லாசப்பயண விசாவில் நாட்டுக்கு வந்து அரசியலில் ஈடுபட்டார் என்பதே அவர் மீது சுமத்தப்படும் குற்றமாகும். தேர்தல் அறிவித்த பின், எல்லாக்கட்சிகளையும் சேர்ந்த இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இலங்கைக்கு உல்லாசப் பயண விசாவில் வந்து, அரசியல் வேலைகளில் ஈடுபட்டனர். இவர்களில்முன்னாள் புலிகளின் பிரமுகர்கள் தொடக்கம், மஹிந்த ஆட்சியில் வெளியேறிய தமிழ் -சிங்கள ஊடகவியலாளர்களும் உள்ளடக்கம். இவர்களின் பெரும்பான்மையினர்,மைத்திரியையோ அல்லது மகிந்தவையோ ஆதரித்துப் பிரச்சாரம் செய்தனர். மைத்திரிக்கும் - மகிந்தவுக்கும் சார்பாகப் பிரச்சாரம் செய்தவர்கள் எவரும்நாடுகடத்தப்படவுமில்லை, விசாரணை செய்யப்படவுமில்லை. மாறாக அவர்களின் விசாக்கள் நீடிக்கப்பட்டுள்ளது. அல்லது அவர்களுக்கு அரசியலில் ஈடுபடும் உரிமைஅங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு புலம்பெயர முன்பு அவர்கள் வேலை செய்த அரசநிறுவனங்களில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதத் தவறும்இல்லை. இலங்கையச் சேர்த்த எல்லோருக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமை அவர்களின் பிறப்புரிமை !

அதேபோன்றே, தனது கட்சி பங்கெடுத்த இடதுசாரிய முன்னணியின் வேட்பாளர் துமிந்த நாகமுவவை ஆதரித்து குமார் குணரத்தினம் பிரச்சாரம் செய்தார். ஆனால்குமார் குணரத்தினத்திற்கு அவரது பிறப்புரிமையான இலங்கையில் அரசியல் செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அவர் மறுபடியும் இலங்கையில் தனதுவாழ்க்கையைத் தொடர்வது மைத்திரி அரசாலும், அதனைத் தாங்கிப் பிடித்திருக்கும் ஆதிக்க சக்திகளாலும், கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு விசாரணைசெய்யப்படுகிறது.

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னான வரலாற்றில், ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய சக்திகள் மூன்று தடவைகள் ஈவு இரக்கமின்றி அழிக்கப்பட்டனர். அப்போராட்டங்களினால் பாதிக்கப்பட்டோர் பல இலட்சக்கணக்கில் புலம்பெயர்ந்தனர். அவ்வாறு புலம்பெயர்தவர்களின் பெரும்பான்மையினர், எவரும் சட்ட ரீதியானமுறையில் தமது உண்மையான அடையாளங்களையோ அல்லது அரசியல் வரலாற்றையோ கூறி தஞ்சம் கோரவில்லை. இது யாவரும் அறிந்த உண்மை.அதேபோன்றே, குமார் குணரத்தினம் அவர்களும்வேறு பெயரில் புலம்பெயர்ந்து வாழ்ந்தார். அன்றிருந்த இலங்கை அரசியற் சூழலால் ஏற்பட்ட உயிர் ஆபத்தும், ஆதிக்கசக்திகளின் ஒடுக்குமுறையுமே அவர் புலம்பெயரக் காரணங்களாகும். குமார் குணரத்தினம் பொருளாதார வளம் தேடி நாட்டை விட்டுப் புலம்பெயரவில்லை. இதன்அடிப்படையில், அவர் புலம்பெயர்ந்து வேறு அடையாளத்துடன் வாழ்ந்தார் என்ற காரணத்தைக் கூறி இலங்கையில் அவர் வாழும் உரிமையையும், அரசியல் செய்யும்உரிமையையும் மறுப்பதற்கு எந்தவித தார்மீக காரணங்களும் கிடையாது! அவர் புலம் பெயர்ந்ததுகான காரணம், இலங்கையை ஆளுபவர்களும்- ஆண்டவர்க்களுமேஒழிய, சுய விருப்பில் அவர் புலம்பெயரவில்லை.

போர்க் குற்றவாளிகள், போதை வஸ்துக் கடத்தல்காரர்கள், அரசாங்கத்தையும் மக்களையும் கொள்ளை அடித்தவர்கள் எனப் பல்லாயிரம் சமூக -அரசியற் குற்றவாளிகள்சுதந்திரமாக இலங்கையில் நடமாடுகின்றனர் . அவர்கள் மீது இதுவரை எந்த நீதி விசாரணையும் நடக்கவில்லை. உளவுத் துறையோ, அன்றி குற்றவியல் பிரிவோஅக்குற்றவாளிகளை பின் தொடர்ந்து கண்காணிக்கவில்லை. ஆனால், மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் ஒருவரை அரச இயந்திரம் குற்றவாளியைப் போலநடத்துகிறது. நாடு கடத்த முயற்சிக்கிறது.  தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மக்கள் நலனுக்காகப் போராடியே செலவிட்ட தோழர். குமார் குணரத்தினம், மீதமாகவுள்ள தனது வாழ்வையும் தனது சொந்தகுடிமக்களுடனேயே - மக்களுக்காவே கழிக்க விரும்புகிறார்.

துவரம் பருப்புக்கும், மண்ணெண்ணைக்கும் விலை குறைப்பது மட்டுந்தான் நல்லாட்சி ஆகிவிடாது. இவற்றை விட நல்லாட்சியில் அதி முக்கியமானது, மக்களின்அரசியல் உரிமையை- ஜனநாயக உரிமையை அங்கீகரிப்பதும், நாட்டில் மாற்றுக் கருத்துக்களையும்- மாற்று அரசியல் செயற்பாட்டையும் முன்னெடுக்க, அனைத்துஜனநாயக வெளிகளையும் உருவாக்கிக் கொடுப்பதுவுமாகும்.

இந்த வகையில், மைத்திரி அரசு தோழர். குமார் குணரத்தினத்தின் பிறப்புரிமையை அங்கீகரிக்க வேண்டும்! அவரை நாடுகடத்த எடுக்கும் முயற்சியை உடனே கைவிடவேண்டும்! என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரான நாம் கோருகின்றோம். அத்துடன் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைத்து ஜனநாயக சக்திகளையும்,தோழர். குமார் குணரத்தினத்தின் அரசியல், ஜனநாயக, குடியியல் உரிமைகளுக்காக குரல் கொடுக்குமாறும் தோழமையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம் !

30.01.2015

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com