Contact us at: sooddram@gmail.com

 

முதல் அமைச்சர் பதவி தமிழர் ஒருவருக்கு வழங்கவில்லை என்பது

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் அறியாமையே

கிழக்கு மாகாண சபையில் முதல் அமைச்சர் பதவி தமிழர் ஒருவருக்கு வழங்கவில்லை என்று அரசாங்கத்தை குற்றம் சுமத்துவது அதிலும் ஐக்கிய தேசிய கட்சி ஏமாற்றி விட்டது என்று கூறுவது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன் சீ. யோகேஸ்வரன் ஆகியோர்களின் அரசியல் அறியாமையே ஆகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆ.ஜெகன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் விடயம் தொடர்பாக விடுத்துள்ள ஊடாக அறிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

இவரின் அறிக்கை வருமாறு:-

“ தற்போது கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு -14 ஆசனங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு -11 ஆசனங்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு - 07 ஆசனங்களும், ஐக்கிய தேசிய கட்சிக்கு - 04 ஆசனங்களும், தேசிய சுதந்திர முன்னணிக்கு - 01 ஆசனமும் ஆக மொத்தமாக 37 ஆசனங்கள் உள்ளன.

தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குவதாக தீர்மானம் எடுத்து விட்டது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 04 ஆசனங்கள் மாத்திரமே உள்ளபோது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைகின்றபோது 15 ஆசனங்கள் ஆகின்றன.

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு 19 ஆசனங்கள் தேவையாக இருக்கின்றபோதுபோது ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க முடியும்?

ஆட்சி அமைக்க முடியாமல் உள்ள ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்க முடியும்?

இது இவர்களுக்க தெரியாதா. தெரியாதவர்கள் போல் நடிக்கின்றனரா?

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சிங்கள இனவாத கட்சிகள்தான். அப்படி இருக்கையில் 07 ஆசனங்களைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள முடியுமானால் 11 ஆசனங்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து முதலமைச்சர் பதவியை பெற முடியாமல் போனது?

அவ்வாறு பெற முடியாது என்றால் இப்போது ஏன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துள்ளீர்கள்?

இப்போது நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பா?. அல்லது தமிழ் முஸ்லிம் சிங்கள கூட்டமைப்பா?. நீங்கள் யார் என்றும் அல்லது உங்களது கொள்கைதான் என்னவென்றும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

2008 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலின் போது நீங்கள் என்ன கூறினீர்கள்? எங்கு இருந்தீர்கள்? வட- கிழக்கு இணைந்த மாகாண சபைத் தேர்தலில்தான் போட்டியிடுவதாக கூறியிருந்தீர்கள். தனித்தனி மாகாணத்தை பிரித்து போட்டியிடுவதற்கு ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என்று கூறியிருந்தீர்கள்.

2012 ஆம் ஆண்டு ஏன் கிழக்கு மாகாண சபையில் போட்டியிட்டிர்கள்? அன்று கூறியது என்ன?. தமிழ், தமிழ் என்று பேசும் நீங்கள் 2010 ஆம் ஆண்டு அம்பாறையில் பாராளுமன்ற தேர்தலில் பியசேன கமகே என்னும் சிங்களவர் ஒருவரை தமிழ் தேசி கூட்டமைப்பில் இணைத்து வெற்றி பெறச் செய்தீர்கள்.

அவர் பின்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொண்டார். 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் எங்களுக்கு வாக்களியுங்கள், முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வந்து விடுவார், வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களிடம் கூறி வாக்குகளை பெற்றீர்கள். நீங்கள் தேர்தலை முடித்த பிறகு நீங்களாகவே ஹக்கிமிடம் என்ன கூறினீர்கள்? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியும், வட மாகாண சபையில் ஒரு போனஸ் ஆசனமும் தருகின்றோம் என்று உறுதியளித்தீர்கள். இதுதான் உங்களின் கொள்கையும் சாணக்கியமும்.

இதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். தற்போது நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் 02 அமைச்சர் பதவிகளை கேட்டு கெஞ்சி நிற்கின்றீர்கள். 07 ஆசனங்களை கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து முதல் அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்கின்றபோது 11 ஆசனங்களைப் பெற்ற உங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஏன் முதல் அமைச்சு பதவியைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை?

சம்பந்தன் ஐயா ஆதங்கத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் தனிப்பட்ட முடிவு என்றும் கட்சி தலைமைப் பீடம் எடுத்த முடிவு இல்லை என்றும் கூறுகிறார்.

அப்படியானால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் கட்சி தலைமைப் பீடத்துக்கு கட்டுப்படவில்லையா? இது ஆச்சரியமாக இருக்கிறது. மத்திய அரசாங்கத்தில் ஒரு தலைமைத்துவம் மாகாண சபையில் ஒரு தலைமைத்துவமா? மாகாண சபையில் இப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்த உங்களுக்கு ஏன் மத்திய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்று மக்களுக்கு உதவி செய்ய முடியாது.

ஏன் என்றால் பதவி போட்டி உங்களுக்கிடையே தற்போது நிலவுகிறது. தமிழ் மக்களுக்கு உதவி செய்வதற்காக விருப்பமும் இல்லையென்றே எண்ணத் தோன்றுகிறது.

எமது மக்கள் எதிர்காலம் தொடர்பாக நன்கு சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. பிள்ளையானுக்கு விவசாய அமைச்சுப் பதவி கிடைக்கவுள்ளதை அறிந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அப்பதவியை தடுப்பதுதான் நோக்கமாகும். இதற்க்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் அமைச்சுப் பதவிக்காக பிச்சை கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மக்கள் ஒன்றை மட்டும் உணர வேண்டும் பிள்ளையான் துரோகி என்றால் தமிழ் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஜனா, பிரசன்னா, துரைரட்ணம் போன்றவர்கள் யார்?. இவர்கள் தற்போது எந்த கட்சியை சேர்ந்தவர்கள்? இவர்கள் ஆரம்ப காலத்தில் என்ன செய்தார்கள்? வட மாகாணத்தில் மட்டும் எல்லா கட்சிகளிலும் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் மட்டக்களப்பில் மட்டும் ஒரு கட்சி மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது சரியா?.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை மட்டக்களப்பை புறக்கணிக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிழக்கு மாகாண சபையில் அதிக ஆசனங்களை பெற்றுக் கொடுத்தது மட்டக்களப்பு மாவட்டமாகும். விருப்பு வாக்குகள் அதிகம் பெற்றுக் கொடுத்ததும் இப்பிரதேசத்தையே சாரும். அப்படி இருக்கையில் திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் தண்டாயுதபாணிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி ஏன் வழங்க வேண்டும்?இதைப் பற்றி புத்திஜீவிகள், பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயாகமகேயின் உதவியுடன் மாகாண சபையில் ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தது.

அதாவது தயாகமகேக்கு முதலமைச்சர் பதவி வழங்கினால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து 04 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வருவதாக இணக்கம் தெரிவித்தார்கள்.

19 ஆசனங்களைக் கொண்டு ஆட்சி அமைத்திருக்க முடியும். தமிழ் தேசிய கூட்டமைபுக்கு 03 அமைச்சு பதவியும், 01 தவிசாளர் பதவியும், 03 மாதங்களுக்கு பின் முதலமைச்சர் பதவியும் கிடைத்திருக்கும்.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள 11 மாகாண சபை உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர். சம்பந்தன் ஜயா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசியிருந்தால் நிலைமை சுமுகமாக தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் சம்பந்தன் ஐயா இது சம்பந்தமாக பேச மாட்டேன் என்று கூறி விட்டார்.

ஏன் என்றால் அவரை யாரும் மிஞ்சி விடக் கூடாது என்பதே ஆகும். எனவே மக்களாகிய நீங்கள் நன்றாக சிந்தியுங்கள். பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். எங்களுடைய மட்டக்களப்பு மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதை நாங்கள் உணர வேண்டும். மக்களுக்காக சேவை செய்பவர்களை மக்கள் இனம் காண வேண்டும். எமது மாவட்டத்தை கட்டியெழுப்ப வேண்டும். ”

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com