Contact us at: sooddram@gmail.com

 

தேசிய நிறைவேற்றுக் குழுவினால் மக்களுக்கு நிறைந்த பயன்

தகவல் அறி யும் சட்டம், மருந் துகள் சட்டமூலம் ஊழல் மோசடிகளில் ஈடுபடு வோருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை முக்கியமாகக் கொண்டே தேசிய நிறைவேற்றுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விடயங்கள் உண்மையிலேயே திருப்தி அடைய முடியும். இவ்வாறு சகோதரப் பத்திரிகையான தினமின வில் (23) மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவின் நேர்காணலின் தமிழாக்கம்,

கேள்வி : தேசிய நிறைவேற்றுக் குழுவினால் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதா?

பதில் : நாம் அமைச்சரவையினதோ அரசாங்கத்தரப்பினரோ பங்காளிகல்ல. அதனால் அரசாங்கத்தின் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பொறுப்போ, உடன்பாடோ எமக்கில்லை. எனினும் இந்த நிறைவேற்றுக்குழு என்பது எங்களது ஒரு யோசனையே. இந்த குழுவை ஏற்படுத்துவதற்கான முக்கிய நோக்கம் ஏற்படுத்திக்கொள்வதற்கான இணக்கப்பாட்டை அடைந்து கொள்வதே.

நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்கி, சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கி, தகவல் அறிந்து கொள்ளும் சட்டம், மருந்துகள் சட்டமூலம், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம், நாட்டின் கணக்காய்வு நடைமுறையினை உறுதிப்படுத்துவது, ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது போன்ற முக்கிய விடயங்களை ஏற்படுத்துவதை முக்கிய நோக்காகக் கொண்டே இந்த நிறைவேற்றுக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே திருப்தி அடைய முடியும். இந்த சகல சட்டங்களும் மார்ச் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அவற்றைச் சட்டமாக அங்கீகரித்துக் கொள்ள முடியும் என நாம் நம்புகிறோம்.

கேள்வி : ஆணைக்குழுக்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது தொடர்பிலான நடவடிக்கைகள் சரியான முறையில் நடப்பதாகத் தெரியவில்லையே?

பதில் : எமது அரச சேவை, பொலிஸ், நீதிமன்ற கட்டமைப்பு கணக்காய்வு, தேர்தல்கள் போன்றவற்றை சுயாதீனமான நடைமுறைக்குட்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதனை 18வது யாப்புத் திருத்தத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுமையாகத் தனது அதிகாரத்தினுள் எடுத்துக் கொண்டிருந்தார். மீண்டும் இந்த ஆணைக்குழுக்களை ஏற்படுத்துவது நாட்டில் நல்லாட்சிக்கு மிக அவசியமானதாகும். இதனை யாப்பினுள் உள்ளடக்கி 19வது திருத்தமாக மீண்டும் திருத்திக் கொள்ள முடியும் என நம்புகிறோம்.

கேள்வி : சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்திக் கொண்டால் மாத்திரம் நல்லாட்சியை ஏற்படுத்திக் கொள்ள முடியுமா?

பதில் : இல்லை எவ்வாறும் முடியாது. அவ்வாறு நினைத்தால் அது கட்டுக்கதையேயாகும்.

கேள்வி : நீங்கள் கூறும் திருத்தங்களைச் செய்து கொள்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையல்லவா?

பதில் : தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே பெரும்பான்மை பலம் உள்ளது. எனினும் இன்று நாட்டில் மிக முக்கியமானதொரு அரசியல் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர். அவர் ஐக்கிய தேசியக் கட்சியினாலும் ஏனைய கட்சிகளினாலுமே ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ஐக்கிய தேசிய கட்சிக்காரர். அவருடைய பிரதமர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் உதவியின் ஊடாகவே தங்கியுள்ளது. இந்நிலையில் யாப்புத் திருத்தம் ஒன்றினை ஏற்படுத்திக் கொள்வது முடியுமான விடயமே. ஜனாதிபதியும், பிரதமரும், பாராளுமன்ற பெரும்பன்மையும் ஒரு பிரிவினரே எடுத்துக் கொள்ளும் எந்த ஒரு சந்தர்ப்ப த்திலும் இந்த யாப்புத் திருத்தத்தை ஏற்படுத்திக் கொள்வது சிரமமான விடயமாக இருக்கும்.

எனினும் அவர்கள் சும்மாவே இவ்விடயத்திற்குக் கையை உயர்த்தமாட்டார்கள். ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் ஒரு சுற்றிநிருபத்தை வெளியிட்டு இருந்ததை நான் கண்டேன். முன்னாள் அமைச்சர்களுக்கும் பிரதி அமைச்சர்களுக்கும் ஜீப் வண்டி ஒன்றும், கெப் வாகனம் ஒன்றும், சாரதி மற்றும் எரிபொருளும் வழங்குவதே அந்த சுற்று நிருபமாகும். நான் நினைக்கிறேன் இவர்கள் இவ்விடயத்திற்கு கையை உயர்த்துவதற்காக வழங்கப்படும் கப்பமே இவைகளாகும்.

கேள்வி : இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் முன்னால் மக்கள் விடுதலை முன்னணி நாடகம் ஒன்றினை நடிப்பதாக உறுப்பினர் ஒருவர் குற்றம் சுமத்தியிருந்தார்?

பதில் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு பகிரங்கமாகவே கோவைகளைக் பாரம் கொடுத்தமைக்கு நாம் எதிர்பார்க்கும் இரண்டு விடயங்கள் உள்ளன. இந்த ஆணைக்குழு தொடர்பில் எமக்கு எந்த நம்பிக்கையுமில்லை.

இது முழுமையாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் தேவைக்காக மற்றவர்களை வேட்டையாடுவதற்கு அல்லது பழக்கப்பட்ட கைப்பூனையாகப் பயன்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். பகிரங்கமாகவே ஊழல் மோசடி தொடர்பிலான கோவைகளை பாரம் கொடுத்ததன் ஊடாக அந்த குறித்த நிறுவனங்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதும் எமது ஒரு நோக்கமாகும்.

அவ்வாறு பகிரங்கமாக பாரம் கொடுக்கும் போது மக்களும் அவ்வாறானவர்களுக்கு எதிராகத் தமக்குத் தெரிந்த விடயங்களையும் எமக்கு வழங்க முன்வருவார்கள். எவ்வாறாயினும் நாம் இரகசியமான முறையில் இவ்வாறான ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் ஊடகங்களில் வெளிப்படுத்திய பிரசாரங்களை விட மிகவும் அதிகம். எமக்கு ஊடகங்களில கண்காட்சி நடத்துவதற்கு எவ்விதத் தேவையுமில்லை.

கேள்வி : 94 ஆம் ஆண்டில் இடம்பெற்றதைப் போல இம்முறையும் மோசடிக்காரர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துச் சென்று விடுவார்கள் என்று மக்களிடத்தில் பெரியதொரு சந்தேகம் நிலவுகின்றதே?

பதில் : மோசடிக்காரர்க்ள, கொலைகாரர்கள், திருடர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் கொண்டுவரப்பட வேண்டும் என இந்நாட்டில் பெரியதொரு குரல் ஒலித்த இரண்டு சந்தர்ப்பங்கள் இந்நாட்டில் உள்ளது. ஒன்று ஐ.தே.கட்சியின் 17 வருடகால ஆட்சிக்கு எதிராக சந்திரிக்கா பண்டாரநாயக்க பதவிக்கு வந்த போது. இரண்டாவது 2015 ஆம் ஆண்டின் தேர்தல். 1994 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததைப் போல மோசடிக்காரர்களால், திருடர்களால் இம்முறை தப்பித்துக்கொள்ள எப்படியுமே சந்தர்ப்பம் கிட்டாது என்ற நம்பிக்கை இருக்கின்றது.

சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்ச ஊழல் திணைக்களங்களை நிருவகிப்பது நாங்களல்ல. அவை அனைத்தும் அவர்களிடமே உள்ளது. இதன் ஊடாக தவறு செய்தவர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் உயர்ந்த பட்ச அழுத்தங்களை வழங்குவோம். அவ்வாறு தண்டனை வழங்க தவறின் அதற்கு இடையூறு விளைவித்தவர்கள் யார் என்பதையும் நாம் வெளிப்படுத்துவோம்.

கேள்வி : தேர்தல் முறை திருத்தத்தினை மேற்கொள்வதற்கான யோசனை அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதல்லவா?

பதில் : நூறுநாள் வேலைத்திட்டத்தில் தேர்தல் முறைகள் பற்றி பேசப்பட்டுள்ளது. எனினும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் திருத்தங்களைச் செய்வதில் பிரச்சினைகள் உள்ளது. அவை நடைமுறைப் பிரச்சினைகளே. எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் சில காலங்கள் எடுக்கும். இவ்வாறான ஒரு விடயத்தைச் சரியாக மேற்கொள்வதற்கு ஒன்றரை வருட காலமாவது தேவைப்படும் என நாம் நினைக்கிறேன். நூறு நாள் வேலைத்திட்டத்தில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டிந்தாலும் அதற்கு குறித்த காலப்பகுதி போதுமானதல்ல.

கேள்வி : இவ்வாறான விடயங்களினால் மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படுகிறதில்லையா?

பதில் : நூறு நாட்களினுள் மேற்கொள்ளப்பட முடியுமான நியாயமான வேலைத்திட்டங்கள் உள்ளன. அவை தொடர்பில் கவனத்தைச் செலுத்துவது முக்கியம். எவ்வாறாயினும் இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் எமக்குப் பங்கில்லை. இதன் ஊடாக நாட்டின் எதிர்கால நல்ல விடயங்கள் தொடர்பில் செய்ய வேண்டிய விடயங்க ளுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

கேள்வி : நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படுமா? திருத்தங்கள் செய்யப்படுமா? எவ்வாறாயினும் இவைகள் நூறு நாளினுள் செய்யப்படாது என்ற நிலையே காணப்படுகின்றது?

பதில் : நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையினை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தனி ஒருவரிடம் எல்லையற்ற அதிகாரங்கள் குவிந்திருப்பது மோசமான முறையாகும்.

கேள்வி : திருத்தம் செய்யப்படப்போவது முறையினை நீக்குவதற்கேயன்றி அதிகாரங்கள் தொடர்பிலேயே என்றே குறிப்பிடப்பட்டுள்ளது?

பதில் : இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் யோசனைகள் இடம்பெறலாம். எனினும் கட்சி என்ற வகையில் எமது கருத்து இந்த நிறைவேற்று அதிகார முறை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே. தற்போதைய ஜனாதிபதி தொடர்பில் எமது எதிர்பார்ப்பு வேறானது. தற்போது அவருக்கு மக்கள் வரம் கிடைத்துள்ளது. விசேடமான அவரது பதவிக்காலம் முடிவடையும் வரை பதவியில் இருப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

கேள்வி : மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் உங்களுக்கு இருக்கும் நெருக்கம் காரணமாக நீங்கள் இவ்வாறு கூறுவதாக யாராவது கூறினால்?

பதில் : எமக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால அல்லது வேறு யாருமா என்பது தொடர்பில் பிரச்சினையில்லை. எனினும் தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் வரம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த வரம் பாராளுமன்றத்தை ஏற்படுத்துவதற்கு வழங்கப்படும் மக்கள் வரத்திற்கு இரண்டாவதாகப் போவதில்லை. எனவே மக்கள் ஆணையின் மூலம் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி அவரது பதவிக் காலம் முடியும் வரையில் பதவியில் இருக்க வேண்டும்.

கேள்வி : சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கையுடன் கோபமேற்படும் வகையில் உங்கள் கட்சி செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதே?

பதில் : எமக்கு இந்தியாவா, சீனாவா, அமெரிக்காவா, ரஷ்யாவா என்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை. எமக்கு நல்லதொரு வெளிநாட்டுக்கொள்கை ஒன்று இருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் இருந்த கப்பம் பெறும் வெளிநாட்டுக் கொள்கையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவுக்கு கொடுத்ததோடு மனஸ்தாபம் ஏற்படும் என எண்ணி இந்தியாவுக்கு சாம்பூரை வழங்கினார். சீனாவுக்கு மாத்தறை பெலியத்தை வீதியைச் செய்யக்ககொடுத்துவிட்டு இந்தியாவுக்கு காங்கேசன்துறை புகையிரதப் பாதையைக் செய்ய வழங்கினார். இவைகளே கப்பம் வெளிநாட்டுக் கொள்கை ஆனால் எமது வெளிநாட்டுக் கொள்கை இதனை விட விரிவான முறையில் அமைய வேண்டும்.

நாங்கள் சீனாவுக்கு எதிராகச் செயற்படவில்லை. எனினும் முறையற்ற பாரிய விலைவுகளை ஏற்படுத்தும் மோசமான முறையில் மேற்கொள்ளப்படும் துறைமுக நகரத்திற்கு நாம் என்றுமே எதிரானவர்கள். வயல் நிலத்தை தரையாக்குவதற்கு கூட சட்டம் உள்ள நாட்டில் கடலினை நூர்ப்பதற்குச் சட்டங்களில்லை. இங்கு அமைக்கப்படும் துறைமுக நகரம் பாரிய அச்சுறுத்தலாகும். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் படி இதன் மூலம் பாரிய லாபம் சீனாவுக்கு கிடைக்கவுள்ளது.

இதற்காக நாம் சீன அரசுடன் முரண்படவில்லை. சீன கொம்மியுனிஸ்ட் கட்சியுடன் எமது கட்சி நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. எனினும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம்.

தூதுவர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள காணி தொடர்பில் சிலர் எம்மிடம் வந்து தெரிவித்த கண்ணீர்க்கதையின் காரணமாகவே நாம் ரஷ்யாவுடன் பிரச்சினை பட்டுக்கொண்டோம். நாம் ரஷ்யாவுக்கோ அதன் தூதுவராலயத்திற்கோ எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.

அந்தக் காணி அங்கு வசித்தவர்களிடமிருந்து பலாத்காரமான முறையில் பெறப்பட்டிருக்கின்றது. நாம் அவ்வாறு பலாத்காரமான முறையில் அக்காணியினைப் பெற்றுக்கொண்டதற்கே நாம் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

தமிழ் : எம்.எஸ். முஸப்பிர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com