Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைப் பயணம் இரண்டாவது நாள் நிகழ்வு!

17-01-2001 (திங்கள்) காலை உணவை முடித்துக் கொண்டு 9: 00 மணியளவில் நடைப் பயண வீரர்கள் பயணத்தை தொடங்கினர். சப்பாத்து போட்டு நடக்க முடியாத வீரர்களுக்கு செருப்புகள் வாங்கிக் கொடுக்கப்பட்டது. நடைப்பயணம் சத்தியவேடு நோக்கி பயணித்தது. சரியாக 01:30 மணிக்கு நடைபயணம் சத்தியவேடு சென்றடைந்தது. அங்கேயே மதிய உணவை எடுத்துக்கொண்டார்கள். அங்கே வெப்பம் அதிகமாக இருந்ததால் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு, மாலை 04:00மணியளவில் மீண்டும் நடைபயணம் ராசபாளையம் என்ற இடத்தை நோக்கிப் பயணித்தது.

ரச்சலோ என்ற இடத்தை இரவு 08:30 மணியளவில் நடைப்பயண வீரர்கள் சென்றடைந்தனர். அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டு, தங்கி ஓய்வெடுத்துக்கொண்டார்கள். நேற்று இரவு 08:30 மணிவரை மொத்தமாக 78 கிலோ மீற்றர் தூத்தைக் கடந்துள்ளனர்.

தங்கும் இடவசதிற்காகவும், உடல்நிலை சரியில்லாதவர்களும் இந்த நடைபயணத்தில் இடம்பெற்றுள்ளதால் சற்று மெதுவாக செல்லும்படி ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்கள் அறிவித்தபடியினால் நடைபயணம் சற்று மெதுவாகவே சென்றது. அதனால் நேற்று இரவு வரை 30 கிலோ மீற்றர் தூரத்தையே கடந்தார்கள்.

குறிப்பாக, கடந்த 09-01-2011 அன்று நடைபயணம் மேற்கொள்பவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் சேலம் அகதிமுகாமிலிருந்து திரு. புஸ்பன் அவர்களும் கலந்து கொண்டார்கள். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது உடல்நிலை சரியில்லை, ஆதலால் நடைபயணத்தை மேற்கொள்ள முடியாது, நல்ல மருத்துவரை அணுகவும் என்று சான்றிதழ் கொடுத்து திருப்பி அனுப்பி விட்டார்கள்.

திரு. புஸ்பன் அவர்கள் 14-01-20011 அன்று மீண்டும் சென்னைக்கு வந்து குழுத் தலைவர் திரு. மங்களராஜா அவர்களை சந்தித்து, நான் இந்த நடைபயணத்தில் எப்படியாவது கலந்துகொள்ள வேண்டும், எனக்கு தந்த மருத்துவ சான்றிதழ் சரியானது அல்ல, எனது உடல்நிலை நல்ல ஆரோக்கியத்துடன்தான் உள்ளது. ஆகையால் நான் கண்டிப்பாக இந்த நடைபயணத்தில் கலந்துகொள்வேன் என்று உறுதியாக நின்றார்.

 

என்னசெய்வதென்று தெரியாத நிலையில் இருந்த மங்களராஜா அவர்கள், உயர்திரு. ஞானசேகரன் அவர்களை அணுகினார். அவர்கள் திரு. புஸ்பன் அவர்களை சென்னையில் பிரசித்திப்பெற்ற மருத்துவமனையான விஜயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் அதன்பிறகு முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றார்.

புஸ்பன் அவர்களை மங்களராஜா அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள மருத்துவர், உடல்நிலை சரியில்லைதான், ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும் என்று கூறினார். உடனே புஸ்பன் அவர்கள் மருத்துவரைப் பார்த்து, ஐயா, நான் டெல்லிவரை நடந்து போக வேண்டும் போய் சேருகிறவரை உயிருடன் இருக்க வேண்டும், அதற்கு மருந்து தாருங்கள், மற்றவைகளை திரும்பி வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றார். திகைத்து நின்றார் மருத்துவர்!

அதன் பிறகுதான் மருத்துவர் நடைபயணத்தின் விபரத்தை கேட்டு தெரிந்துகொண்டார். பிறகு புஸ்பன் அவர்களைப் பார்த்து, நீங்கள் நன்றாக நடந்து செல்வீர்கள், உங்களுக்கு ஒன்றும் ஆகாது, உங்களுக்கு மருந்து தேவையில்லை, உங்களது மன உறுதி ஒன்றே போதுமானது என்று வாழ்த்துச் சொல்லி அனுப்பிவைத்தார்.

இருப்பினும் அவருக்கான மருத்துவ முறையையும், மருந்துகளையும் எழுதிக்கொடுத்தார். புஸ்பன் அவர்களின் மன உறுதியைக் கண்டு ஆச்சரியமடைந்த மருத்துவர், தனது பரிசோதனைக்கான பணத்தையும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அப்படியான நிலையில் உள்ள புஸ்பன் அவர்களும் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளார். இவரைப் போல் பல பிரச்சினைகள் உள்ளவர்களும் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் உயர்திரு.ஞா.ஞானசேகரன் அவர்கள் மெதுவாக நடந்து செல்லுமாறு அறிவித்தார்கள்.

ஓவ்வொரு நாளும் தங்கும் ஒவ்வொரு இடத்திலேயும் மருத்துவ நடைபயண வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

ஆந்திரா காவல்துறையினரும் தங்களது எல்லைவரை முறையான பாதுகாப்பை வழங்குகிறார்கள். உயர் அதிகாரிகளும் அவ்வபோது வந்து சந்தித்துச் செல்கிறார்கள். வழி நெடுகிலும் உள்ள கிராமத்தில் உள்ள மக்கள் வீரர்களது நடைபயணத்தின் விபரங்களைத் தெரிந்து கொண்டு தங்களது கிராமங்கள் முடியும் வரை சென்று வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பிவைக்கிறார்கள். பொதுமக்களுக்கு தெலுங்கில் நடைபயண விபரங்களை அச்சு செய்யப்பட்ட பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்துகின்றனர்.

இன்று (18-01-2011, செவ்வாய்) ஓய்வை முடித்துக் கொண்ட நடைபயண வீரர்கள் காலை 07:00 மணிக்கே காலை கடன்களை முடித்து, உற்சாகமாகக் காணப்பட்டார்கள். சரியாக 07:40 மணிக்குதடாஎன்ற இடத்தை நோக்கி வேகமாக நடைபயண வீரர்கள் புறப்பட்டனர்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

(ஈ.என்.டி.எல்.எப்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com