Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழ் இனமும், ஆட்சி உரிமையும்!

இலங்கை – பெருங்கடலில் அமிழ்ந்துவிட்ட லெமூரியா (குமரி) கண்டத்தின் எஞ்சிய நிலத்தீவு ஆகும். ஏறத்தாழ முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அந்த கண்டத்தில் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்த காலம் தொட்டு தமிழர்கள் அங்கே வாழ்ந்துவந்ததற்கான சரித்திர சான்றுகள் பல உண்டு.

 அதேவேளை சிங்கள இனத்தவரின் மூதாதையர் கி.மு. நான்காம் நூற்றாண்டில்தான் வங்காள தேசத்திலிருந்து இலங்கைக்கு வந்ததாக சிங்கள இனத்தவரின் வரலாற்று நூல்களில் அவர்களே கூறுகின்றனர். கி.மு. 161இல் சிங்கள இனத்தின் துட்ட காமினி என்பவன் தமிழ் அரசனான எல்லாளனுடன் மோதி மத்திய மாகாணத்தைக் கைப்பற்றியதாகவும் அவர்களது வரலாறுகளில் பெருமையாகக் கூறுகின்றனர். ஆயினும் மீண்டும் தமிழர்கள் மத்திய மாகாணத்தையும் அனுராதபுரத்தையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தனர்.

இந்தக் காலம் தொட்டு போத்துகீசியர் இலங்கைக்கு வரும்வரை தமிழர்களும் சிங்களவரும் மாறி மாறிப் போரிட்டுக் கொண்டுதான் இருந்தனர். யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு இராட்சியங்களைத் தமிழர்கள் என்றும் யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை.

சிங்கள இனத்தவர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலங்கையைச் சுற்றி ஐந்து சிவ ஆலயங்கள் தமிழர்களால் கட்டப்பட்டன. அவைகள், (01) வடக்கில் நகுலேஸ்வரம் சிவன்கோவில் (யாழ்ப்பாணம்), (02) கிழக்கில் கோணேஸ்வரம் சிவன்கோவில் (திருகோணமலை), (03) மேற்கே முன்னேஸ்வரம் சிவன்கோவில் (சிலாபம்), (04) வடமேற்க  ிருக்கேதீஸ்வரம் சிவன்கோவில் (மன்னார்), (05) தெற்கே தொண்டீஸ்வரம் சிவன்கோவில் தெய்வேந்திரமுனை – (சிங்களத்தில் பெயர்மாற்றம் செய்யப்பட்ட தெவனுவற). இப்படி இலங்கையின் நாற்புறமும் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்ததற்கான அழியாச் சின்னங்களை ஏற்படுத்தியிருந்தனர்.

போர்த்துக்கீசியர் இலங்கைக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலைப் பகுதிகளைக் கைப்பற்ற முடியாமல் திணறினர். கொழும்பு, மன்னார் பகுதிகளை மட்டும் கைப்பற்றி ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.

மன்னார் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை போர்த்துக்கீசியர் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினர், இதனைக் கண்டு ஆத்திரமடைந்த யாழ்ப்பாண தமிழ் அரசன் மன்னாருக்குப் படை எடுத்துச் சென்று போர்த்துக்கீசியரை அடித்து விரட்டி விட்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து அவர்களது தலையை வெட்டிவிட்டார். இப்படி அறுநூறு பேர் கொல்லப்பட்டனர்.

 இதனைக் கண்டு கோபமுற்ற போர்த்துகீசியர் கோவாவிலிருந்தும், போர்த்துகீசியத்திலிருந்தும், கொழும்பிலிருந்தும் தங்களது படைகளைத் திரட்டி, யாழ்ப்பாணத்தின் மீது படை எடுத்தனர். இந்தப் படை எடுப்பில் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. தமிழர்களின் அனைத்து நினைவுச் சின்னங்களும் அழிக்கப்பட்டன. ஐந்து சிவ ஆலயங்களும் தரைமட்டம் ஆக்கப்பட்டன. அரச மாளிகை உள்பட தமிழரது எந்த நினைவுச் சின்னங்களையும் போர்த்துக்கீசியர் விட்டுவைக்கவில்லை. 1560ஆம் ஆண்டு இந்த அழிவை தமிழர்களுக்கு ஏற்படுத்தினர் போர்த்துக்கீசியர்.

அதேவேளை சிங்கள இனத்தவரின் தலைமையையோ அல்லது பௌத்த விகாரைகளையோ போர்த்துக்கீசியர் சேதப்படுத்தப்படவில்லை. சிங்கள இனத்தவர்கள் போர்த்துக்கீசியருடன் இணைந்து செயற்பட்டனர். தமிழ் இனத்தின் அழிவு போர்த்துக்கீசியரால் ஏற்படுத்தப்பட்டது. இது சிங்கள இனத்தவருக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. போர்த்துக்கீசியர் தமிழர்களை அழித்த போது சிங்கள அரசன் தனது படைகளுடன் தமிழர் பகுதிக்குள் நுழைந்து சிங்கள இனத்தவரைக் குடியமர்த்தினான். இவ்வாறு மத்திய மாகாணம், மேற்கு மாகாணம் இவைகளைக் கைப்பற்றிக் கொண்டனர் சிங்கள இனத்தவர்.

போர்த்துக்கீசியர், இவர்களின் பின்னர் ஒல்லாந்தர் (ஆலந்து நாட்டினர்), இவர்களின் பின்னர் பிரித்தானியர் இப்படியாக மூன்று ஐரோப்பிய நாட்டவர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். சிங்கள நாடும், தமிழர்களது நாடும் தனித்தனியாகத்தான் நிருவகிக்கப்பட்டன. 1833ஆம் ஆண்டு மார்ச் 10ம் திகதி பிரித்தானியா ஓர் சட்டத்தை இயற்றி தமிழர் பகுதிகளையும், சிங்களவர் பகுதிகளையும் ஒரே நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்தது. இரண்டு நாடுகளும் ஒன்றாவதற்குப் பிரித்தானியர் தங்கள் ஆதிக்கத்தைப் பயன்படுத்தினர். அதேவேளை இந்தியாவின் ஒரு மாகாணமாக இணைத்து இலங்கையை அவர்கள் ஆண்டனர். பிற்காலத்தில்தான் இலங்கையை தனி நிர்வாகமாக்கினர்.

கொழும்பு இலங்கையின் தலைநகர் ஆக்கப்பட்டதால் அதனைச் சுற்றியிருந்த சிங்கள இனத்தவர்; பிரித்தானியரிடத்திலும், ஆங்கில நிருவாகத்திலும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர். இந்து சமுத்திரத்தைக் கடக்கும் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்குப் பகுதிக்கு வந்து எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்ல வசதியாகக்   கொழும்புப் பகுதி அமைந்திருந்ததால் மூன்று ஐரோப்பிய நாட்டினருக்கும,; கொழும்பு தலைநகரானது.

பிரித்தானியர் 1948 பிப்பிரவரியில் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிவிட்டுச் செல்லும் போது ஈழத்தின் தமிழரைப் புறக்கணித்துவிட்டு சிங்களவரிடத்து மட்டுமே அதிகாரத்தை வழங்கிவிட்டுச் சென்றுவிட்டனர். சிங்களவரோ தங்களது எதிரியெனப் போதிக்கப்பட்ட தமிழர்களுடன் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகாலம் மோதியதில் கிடைக்காத வெற்றி பிரித்தானியரால் இலவசமாக கிடைத்ததாக எண்ணி முதலில் இராணுவத்தைப் பலப்படுத்தினர். சிங்க ரெஜிமென்ட், கமுனு ரெஜிமென்ட். கஜபாகு ரெஜிமென்ட் என்று தங்களின் சிங்கள இனத் தலைவர்களின் பெயரில் இராணுவத்தைக் கட்டியமைத்தனர். சுதந்திரம் தங்கள் இனத்துக்கு மட்டும் கிடைத்ததாக சிங்கள ஆட்சியாளர்கள் கருதினர்.

இந்த இராணுவக் கட்டமைப்பு பிறநாடுகளுடன் மோதுவதற்காக அல்ல. தங்கள் நாட்டின் குடிமக்களான தமிழர்களுடன் மோதுவதற்காக இராணுவத்தைக் கட்டியமைத்தனர். உலகத்தில் தனது நாட்டு மக்களுடன் மோதுவதற்காக இராணுவம் ஒன்றை கட்டியெழுப்பிய அரசு சிங்கள அரசாகத்தான் இருக்கும்.

 சுதந்திரம் கிடைத்ததும் சிங்கள ஆட்சியாளர் இலங்கை நாட்டுக்கென தேசியக் கொடியை அமைத்தனர், அதில் சிங்கத்தை மட்டும் பொறித்தனர். சிங்கள இனத்தவர் சிங்கத்திலிருந்து தோன்றியவர்கள் என்று பௌத்தத்தைப் போதிக்க வந்த பௌத்தப் பிக்குகள் இவர்களுக்குப் போதித்துவிட்டனர். தமிழ் இனத்தை எதிர்ப்பதற்காகவும் சிங்கள இனத்தவருக்கு வரலாறு போதிப்பதற்காகவும  ௌத்த பிக்குகள் எழுதிய “மகாவம்சம்” என்னும் வரலாற்று நூலில் இப்படி அவர்களுக்கு வீரத்தைப் போதிக்க, “நீங்கள் எல்லாரும் சிங்கத்துக்குப் பிறந்தவர்கள்” என்று இயற்கைக்குப் புறம்பானதை எழுத, இன்றுவரை அதை நம்பிக்கொண்டு வாழ்கின்றனர் சிங்கள இனத்தவர்.

உலகில் மனித இனம் குரங்கிலிருந்து பரிணாமித்ததாக ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் சிங்கத்திலிருந்துதான் தாங்கள் தோன்றியதாக சிங்களவர் நம்பி மிருகங்கள் போன்று ஆட்சி செய்கின்றனர். “மகாவம்சம்” புத்தகத்தின் கூற்றை நம்பிய இந்த இனத்தவர் பிரித்தானியர் விட்டுச் சென்ற இலங்கையின் கொடியில் சிங்கத்தைப் பதித்தனர்.

ஈழத்தினுடைய பெயரை இவர்கள் ‘சிறிலங்கா” என்று அழைக்கின்றனர். இலங்கை நாட்டின் உண்மையான பெயர் “ஈழம்” என்பதுதான். இலங்கையிலும் தென்னிந்தியாவிலும், இதிகாசங்களிலும் ஆதி காலம் தொட்டும் “ஈழம்” என்றுதான் அழைத்து வந்தனர். இது தமிழ்ப் பெயராகும். “லங்கா” என்பது “பாலி” மொழியில் அழைக்கப்பட்டதாகும். “லங்கா” என்றால் தீவு என்பது பொருள். புத்தமதத்தைப் போதிக்கச் சென்ற பிற நாட்டுத் துறவிகள் ஈழத்தை “லங்கா” என்று அழைத்தார்கள். சிங்கள மொழியில் ஈழத்துக்கு பெயர் எதுவும் இல்லாததால் அவர்கள் பாலி மொழியில் சொல்லப்பட்ட லங்காவைத் தங்களது மொழிக்குச் சொந்தமானது என்று மாற்றிக்கொண்டனர்.

1972ஆம் ஆண்டு திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்து அரசு அமைப்புச் சட்டத்தை மாற்றிக் குடியரசு என ஆக்கியபோது லங்காவுக்கு முன் “சிறி” யையும் சேர்த்து “சிறிலங்கா” எனப் பெயர் சூட்டிவிட்டார். ஈழம் அதனுடன் மறைக்கப்பட்டுவிட்டது. “ஈழம்” என்னும் பெயர்தான் இன்றைய சிறிலங்காவினுடையது. பலரும் பல கதைகள் சொல்கின்றனர், உண்மையான பெயர் ‘ஈழம்”தான். ஈழம் என்பது “ஏழ்கடல் நாடு” என்பதன் சுருக்கமாகும்.

ஆங்கிலேயர் காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின்னரும் ஈழத் தமிழ் இனமும் எங்களது நாடும் புறக்கணிக்கப்பட்டன. விடுதலை கிடைத்ததும் (1948) இன வேறுபாடு கடுமையாகத் தலை தூக்கியது. தமிழர்கள் இச்செயலை எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு அகிம்சையும், பேச்சுவார்த்தையும், ஒப்பந்தங்களுமாக இருந்தன.! வன்செயல் இல்லாத காந்தீயக் கொள்கையைத் தமிழர் பெரிதும் நம்பினர். அந்தக் கொள்கை சமத்துவத்தையும், உரிமையையும் தமிழர்களுக்குப் பெற்றுத் தரும் என்று நீண்டகாலம் அவ் வழியைப் பின்பற்றினர். சிங்கள இனத்தவருக்கு இந்தக் காந்தீயக் கொள்கை மிகவும் சாதகமாக அமைந்தது.

இதனால் சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டில் தமிழர்களது பூர்விகப் பகுதிகளில் சிங்கள இனத்தை அத்துமீறிக் குடியமர்த்த ஆரம்பித்தனர். சிங்கள அரசு மொத்த மக்களது வரிப்பணத்தில் சிங்களவரை தமிழர் பகுதிகளில் ஊடுருவிக் குடியமர்த்தினர்.

அம்பாறை மாவட்டத்தைக் கைப்பற்றி முற்றிலுமாக வட்டவடிவில் சிங்களக் குடியேற்றங்களை நடத்தினர். அம்பாறை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், மன்னார் மாவட்டம், வவுனியா மாவட்டம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இரகசியமாகச் சிங்களக் குடியேற்றங்களை புகுத்தினர்.

தமிழ் இனத்தவரை ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளாது தடுக்கும் முயற்சியாக அம்பாறைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் சிங்களக் குடியேற்றம் - திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் சிங்களக் குடியேற்றம் - திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்குமிடையில் சிங்களக் குடியேற்றம் - வவுனியாவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் சிங்களக் குடியேற்றம் - மன்னார் கரையோரங்களிலும். எல்லைபுறங்களிலும் என்று சிங்கள அரசின் முக்கிய வேலைத்திட்டமே தமிழர் பகுதியை ஆக்கிரமித்து சிங்கள இனத்தவரை அரசாங்கத்தின் செலவில் குடியமர்த்துவதாகத்தான் இருந்தது. இதனை முழுநேரக் கடமையாகச் செய்தனர் ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைவர்கள் அனைவரும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ட கனவைப் பிரித்தானியரது நன்கொடையால் (சுதந்திரம்) நிறைவேற்றினர் சிங்கள இனத்தவர்.

தமிழ் இனத்தின் தலைமை, போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்டப் பின்னர் அவர்களுக்கென்று தலைமை எதுவும் இருக்கவில்லை. சிங்கள இனத்தவருக்குத் தலைமையும் இருந்தது, அவர்களை வழி நடத்த பௌத்த மதமும் இருந்தது. தமிழ் இனத்துக்கு நிருவாக அமைப்பைக் கொண்ட மதம் எதுவும் இருந்ததில்லை, அவை அழிக்கப்பட்டுவிட்டன. ஐரோப்பியரது ஆட்சிகள் சிங்கள மக்களுக்குச் சாதகமாக இருந்ததால்தான் சுதந்திரமும் முழுவதுமாக சிங்கள இனத்தவரது கைக்குச் சென்றது.

காந்தீய வழியைப் பின்பற்றியதால் பிரித்தானியர் தமிழர் மீது வெறுப்புக் கொண்டிருந்தனர். 1927ஆம் ஆண்டு காந்தியடிகள் இலங்கைக்கு வந்தபோது தமிழர்கள்தான் முன் நின்று வரவேற்பும் கொடுத்து, “இளைஞர் காங்கிரஸ்” என்று யாழ்ப்பாணத்தில் இயக்கம் ஆரம்பித்தனர். இச் செயல் பிரித்தானியரை ஆத்திரமடையச் செய்தது. இதனைச் சிங்களத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.

ஆங்கிலேயரின் அரசியல் சீர்திருத்த கொமிசனாக (ஆணைக்குழு) நியமிக்கப்பட்ட சோல்பரி, மற்றும் டொனமூர் கொமிசன்கள் தமிழர்களின் நியாயங்களைக் கேட்காமல் சிங்கள இனத்தின் விருப்புக்கு ஏற்ப செயற்பட்டனர். சுதந்திரம் வழங்கும் போது கூட சிங்கள இனத்தவர் தவிர தமிழ் இனத்துக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் தராமல், பாதுகாப்பு ஏற்படுத்தாமல் அனைத்தையும் சிங்கள இனத்தவரிடம் கையளித்துவிட்டுத் ஓடிச்சென்றனர் பிரித்தானியர்.

நாடும் தமிழ் இனமும் எதிரிகளான சிங்கள இனத்தவரின் கைகளில் சிக்கிக் கொண்டன. அவர்களிடமிருந்து விடுபடத்தான் நாம் இந்த 62 ஆண்டுகாலமாக அழிவைச் சந்தித்து வருகிறோம்.

பேச்சுவார்த்தை, ஒப்பந்தம், சமாதானம் எதுவுமே சிங்கள இனத்தவரைக் கட்டுப்படுத்தவில்லை. தமிழ் இனத்தின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பதுதான் அவர்களது (சிங்கள அரசாங்கத்தின்) முக்கிய கடமையாக இருந்து வருகிறது இன்றுவரை. அமைதி வழியில் எதுவும் சாத்தியம் இல்லை என்று தெரிந்த பின்புதான் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர் ஈழத் தமிழ் இளைஞர்கள்.

இதுவரை சிங்கள இராணுவத்தினரால் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் (ஒரு வயது குழந்தைகள் உள்பட) மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். பதினைந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சொந்தங்களையும், பூர்விக நிலங்களையும், செல்வங்களையும் இழந்து அல்லது பிரிந்து அகதிகளாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் குடும்பத் தலைவரை இழந்து விதவைகளாக நிர்க்கதியாகி நிற்கின்றனர். ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் (குழந்தைகள். பெரியவர்கள் உள்பட) ஊனமுற்றவர்களாக வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றனர், பல ஆயிரம் குழந்தைகள் தாய் தந்தையரை இழந்து அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைதிகளாகச் சிறைக்கூடங்களில் சித்திரவதைப்படுகின்றனர். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கின்றனர்.

“மீள் குடியேற்றம்” என்ற பெயரில் அகதிகளாக்கப்பட்ட தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றாமல் அவர்களது நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து, தமிழர்களை நெருக்கமான குடியிருப்புகளில் திணிக்கின்றனர். விளைநிலங்களையும், வளமான பகுதிகளையும் ஆக்கிரமித்து சிங்களக் குடியேற்றங்களைச் செய்து வருகின்றனர். இப்படி அநீதியான செயலைச் செய்வதற்கு அவர்கள் எந்தக் காலத்திலும் தயங்கியதே கிடையாது.

பொறுப்பும் பக்குவமும் அற்ற புலிகளின் (எல்.ரி.ரி.ஈ.)தலைமை ஒன்றினால் எங்கள் தமிழ் இனம் விவரிக்க முடியாத பேரழிவைச் சந்தித்து இன்று ஆதரவற்று நிற்கிறது. விடுதலைப் புலிகளைப் பற்றியோ வேறு விடுதலை இயக்கங்களைப் பற்றியோ இனியும் விவாதிப்பதில் பயன் இல்லை. அந்நிய சக்திகளின் தவறான வழி நடத்துதலினால் பாதை மாறிய எங்கள  இனத்தின் விடுதலையை, அதன் உரிமையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பும் உரிமையும் இந்தியாவுக்கு உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமானது தமிழ் இனத்துக்காகவும் அதன் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும். அந்நிய சக்திக்கும், பேரினவாதத்துக்கும் இடையில் நின்று இந்தியா தமிழினத்தைக் காப்பாற்ற முற்பட்டது. இதனைப் புரிந்து கொள்ளாத பல அரசியல்வாதிகள் அந்த ஒப்பந்தத்தினைச் சிதைத்து அதில் வெற்றிகண்டனர்.

அந்நிய சக்திகளினதும், பேரினவாதிகளினதும் கைக்கூலிகளாகச் செயற்பட்டவர்கள் எங்கள் இனத்தை இன்று நிரந்தர அடிமைகள் ஆக்கிவிட்டனர் சிங்கள இனத்தவரிடம். ஆனால் நாம் இதனை முறியடிப்போம். எங்கள் இனத்துக்கு உரிமையுடன் கூடிய வாழ்வினை ஏற்படுத்திக் கொடுப்போம். இந்த நற்பணிக்கு இந்தியா எங்களுக்கு என்றும் துணை நிற்கும் என்று நம்புகிறோம். எனவேதான்,

01) எங்கள் இனத்துக்காக 1987இல் உயர்திரு. இராஜீவ்காந்தி அவர்கள் ஏற்படுத்திய “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(02) 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கள அரசினால் தமிழர்களின் பூர்விகப் பகுதிகளில் அத்துமீறிக் குடியமர்த்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை முற்றாக அகற்ற வேண்டும்

- என்ற இந்த இரண்டு கோரிக்கைகளை மட்டும் முன்வைத்து டெல்லிவரை நடைப்பயணம் மேற்கொள்கிறோம். எங்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி இந்திய அரசையும், இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

ஈழத் தமிழர்கள் ஆகிய நாங்கள் தனிநாட்டில், தனி அரசுடன் வாழ்ந்தவர்கள். ஐரோப்பியரின் பிடியில் சிக்கியும், இனவெறிச் சிங்கள அரசின்பிடியில் சிக்கியும் எங்கள் இனம் அழிவைச் சந்தித்து நிற்கிறது. சிங்கள இனத்தவரை வாழவேண்டாம் என்று நாம் கோரவில்லை, எங்களையும் வாழவிடுங்கள் என்றுதான் கேட்கிறோம். எங்கள் இனத்தை அழிக்காதீர்கள் என்றுதான் கேட்கிறோம்.

1958, 1961, 1977, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் ஐந்து தடவைகள் உலகம் பார்த்துக் கொண்டிருக்கையில் எங்கள் இனத்தை சிங்கள அரசு அழித்தது. இறுதியில் 2009 ஆம் ஆண்டு உலக நாடுகளுக்குப் படம் போட்டுக் காட்டி எங்கள் இனத்தை அழித்தது சிங்கள அரசு. இவ்வளவு அழிவுகளையும், இழப்புகளையும் சுமந்த பின்பும் சிங்களவர்களுடன் ஈழத் தமிழர் இணைந்து வாழ்வது மடமையானதே!

எனவே இந்தியா நேரடியாக எங்கள் பிரச்சினையில் தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று ஈழத் தமிழ் மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். இந்திய நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எங்கள் இனத்துக்கான உரிமைகளைப் பெற ஆதரவு வழங்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இந்தக் கோரிக்கையை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும், எங்களது நியாயமான கோரிக்கையை இந்தியா நிறைவேற்றிக் கொடுக்க உலக நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வண்ணம்,

ஈழத்தமிழர் சார்பாக,

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

(ஈ.என்.டி.எல்.எப்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com