Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் நான்காம் நாள் நிகழ்வு!

19-01-2011 புதன் கிழமை காலை தேனீர் அருந்திவிட்டு 07:15 மணியளவில் நாயுடு பேட்டை நோக்கி புறப்பட்ட ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் 09:00 மணிக்கு காலை உணவிற்காக இடைநிறுத்தப்பட்டது.

நேற்று உறுதியளித்துச் சென்ற ஆந்திர பத்திரிகைகள் அனைத்தும் படத்துடன் நடைபயணத்தின் நோக்கத்தை விபரமாக பிரசுரித்திருந்தன. அத்தனை செய்திகளையும் நடைபயண வீரர்கள் அனைவருக்கும் தெலுங்கு மொழி தெரிந்த நபர் மூலம் வாசித்துக் காட்டப்பட்டது. நடைபயண வீரர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகமடைந்தார்கள்.

10:00 மணிக்கு மீண்டும் தொடர்ந்த நடைபயணம்துருவார சத்திரம்என்ற இடத்தை நோக்கி நகர்ந்தது. நடைபயணம் நகர்ந்துகொண்டிருக்கும் போதே ஆந்திராவில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிச் சேனல்களும் நடைபயணத்தை வீடியோ எடுத்து தலைமை தாங்குபவர்களிடம் பேட்டியும் எடுத்துவிட்டுச் சென்றன. இதனால் நடைபயண வீரர்கள் மிக உற்சாகமாக நேர்த்தியாக நடந்து சென்றார்கள். காவல்துறையினரே மிகவும் ஆச்சரியப்படுகிற அளவுக்கு, காவல்துறையினருக்கு எந்தவித சிரமமும் கொடுக்காமல் மிக நேர்த்தியாக நடந்து சென்றார்கள்.

நெடுந்தூர நடைபயணம் மதியம் ஒரு மணிக்குதுருவார சத்திரம்என்ற இடத்தை சென்றடைந்தது. அங்கு அனைவருக்கும் மதிய உணவு பரிமாரப்பட்டது. மதிய உணவை எடுத்துக்கொண்ட வீரர்கள் சற்று ஓய்வெடுக்கும் நிலையில் இருந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் பொதுமக்கள் வந்து நடைபயண வீரர்களை பார்த்து வாழ்த்துக்கூறிச் சென்றனர். வீரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

காலையில் படம்பிடித்த தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் அதை (ஜெமினி தொலைக்காட்சி உள்பட அனைத்துத் தொலைக்காட்சிகளும்) ஒரு மணியளவில் ஒலிப்பரப்புச் செய்துள்ளது. அதைப் பார்த்த அந்த மக்கள் நமது இடத்தில்தான் கடந்து செல்கிறார்கள் என்றுதான் அனைவரும் பார்ப்பதற்காக வந்துள்ளார்கள் என்பது அவர்கள் கூறிய பிறகுதான் தெரிய வந்தது.

தொலைக்காட்சி செய்திகள் வந்ததைக் கேள்விப்பட்டதாலும், பொதுமக்கள் வந்து வாழ்த்து கூறியதாலும் உற்சாகமடைந்த வீரர்கள் மாலை 4.00 மணிக்கு மிக சந்தோசமாகபெத்தப்பரிஎன்ற இடத்தை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

ஆந்திராவில்ஈநாடு”, “சாக்சிபோன்ற பிரபல பத்திரிகைகள் உள்பட அனைத்துப் பத்திரிகைகளும் மற்றும்ஜெமினிடிவி போன்ற பிரபலமான அனைத்துத் தொலைக்காட்சிகளும் ஈழ தேசிய ஜனநாக விடுதலை முன்னணியினர் மேற்கொள்ளும் நடைபயணத்தின் நோக்கத்தை விரபரமாக உலகறியச் செய்துள்ளமைக்கும் பொதுமக்கள் தொடந்து வழங்கி வரும் ஆதரவுக்கும், தேசிய நெடுஞ்சாலையில் நகரும் நடைபயணத்திற்கு மிக சிரமங்களுடன் பாதுகாப்பை வழங்கி வரும் ஆந்திர காவல்துறையினருக்கும் ஈழ தேசிய ஜனநாய விடுதலை முன்ணியின் தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்கள் நன்றினை தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆதரவு வழங்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேப் போன்று இலங்கையில், “வீரகேசரி” “உதயன்போன்ற பத்திரிகைகள் உள்பட முதல் பக்கத்தில் இந்த நடைபயணத்தின் நோக்கத்தைப் பிரசுரித்து சோர்வடைந்திருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு இன்னும் ஈழப் போர் வீரர்கள் சோர்வடையவில்லை என்பதைத் தெரியப்படுத்தி வரும் பத்திரிகைத் துறையினருக்கும் ஞா.ஞானசேகரன் அவர்கள் நடைபயண வீரர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆதரவு வழங்கும்படியும் ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று நடைபயண வீரர்கள் வெப்பத்தின் கடுமையாலும், கால்கள் சோர்வடைந்திருந்ததாலும் நடைபயண தலைமைக் குழுவினர் 30 கிலோ மீற்றர் தூரமே பயணம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்திருந்தனர். ஆனால் மீடியாக்களும், பொதுமக்களும் கொடுத்த உற்சாகத்தின் மிகுதியால் கடும் வெப்பத்தையும் கால்களின் சோர்வையும் பொருட்படுத்தாமல் 42 கிலோ மீற்றர் தூரத்தை நடைபயண வீரர்கள் கடந்துள்ளனர். நேற்றுடன் மொத்தமாக 160 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்துள்ளனர்.

பெத்பப்பரிஎன்ற இடத்தை நோக்கி நகர்ந்த நெடுந்தூர நடைபயணம் சரியாக 06:30 மணிக்கு தேனீர் இடைவேளையை முடித்துக்கொண்டு தொடர்ந்தது. இரவு 09:00 மணியளவில்பெத்தப்பரியை நடைபயணம் சென்றடைந்தது. அங்கு இரவு உணவையும் ஓய்வையும் எடுத்துக்கொண்டார்கள்.

 

இன்று காலை (20-01-2011 வியாழன ) 06:55 மணியளவில் ஈழத்தின் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துpவிட்டு (ஒவ்வொரு நாளும் பயணம் தொடங்கும் போதும், முடிவின் போதும் தேசிய கீதம் ஒலிக்கப்படுகிறது) நெல்லூரை நோக்கி நடைபயணத்தை மேற்கொண்டனர்.

ஈழ தேசிய ஜனநாய விடுதலை முன்னணி

(ஈ.என்.டி.எல்.எப்.)

குறிப்பு: ( இந்த நடைபயணத்தின் வீடியோ காட்சிகள் 19-01-2011 புதன் முதல் http://www.liberationmarch.com/videos.php    என்ற தொடர்பில் காணலாம்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com