Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - ஐந்தாவது நாள் நிகழ்வுகள்!

(நெடுந்தூர நடைபயணத்தில் கலந்து கொள்பவர்களை ஊக்குவிக்க, வாழ்த்துச் சொல்ல, மற்றும் அவர்களது கஸ்ரங்களை அறிந்துகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்: 00919490826037. இந்த கைபேசி எண் நெடுந்தூர நடைபயணத்தின் தலைமைக்குழுவில் நிதி மற்றும் கட்டுப்பாட்டிற்குப் பொறுப்பு வகிக்கும் உயர்திரு. தயாபரன் (டேவிட்) அவர்களிடம் இருக்கும்)

ஐந்தாவது நாள் பயணம் 45 கிலோ மீற்றர்களைக் கொண்டதாக இருந்தது. சூலூர் பேட்டை (ஆந்திரா) தாண்டி நான்காவது கிலோ மீற்றரில் புறப்பட்ட நடைபயண வீரர்கள், நாயுடு பேட்டை தாண்டி 15 கிலோ மீற்றரில் ஓர் வயல்வெளியில் இரவு தங்கினர்.

பகல்வேளை தண்ணீர் ஏற்றி வந்த ட்றக்ரரின் பின்பகுதி ரயரில் பெயரின் உடைந்ததால் தண்ணீர் இன்றி தவித்தனர் நடைபயண வீரர்கள். ஆறுமணித்தியாலத்தின் பின்னர் சக்கரம் சரிசெய்யப்பட்டு இரவு உணவுக்கு முகாமை அடைந்தது தண்ணீர் வாகனம்.

நெடுஞ்சாலையில் பயணித்த போது பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சிக் குழுவினரும் வழிமறித்து பேட்டி எடுத்து ஒலிபரப்புச் செய்ததுடன் அனைத்துத் தெலுங்கு பத்திரிகைகளிலும் மறுநாள் பிரசுரித்திருந்தனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துச் சொன்னார்கள் பத்திரிகைகள்.

தெலுங்கில் அச்சிடப்பட்ட பிரசுரங்களை வினியோகித்தோம்.

சென்னையிலிருந்து எங்களைப் பார்ப்பதற்கென திரு. அழகுராஜா உமாபதி அவர்களும் அவர்களது நண்பர்களான திரு. சோபன் அவர்கள், திரு. விஜி அவர்கள், திரு. ரூபன் அவர்கள், திரு. மோகன் அவர்கள் மற்றும் சில நண்பர்களும் வந்திருந்தனர். இன்றைய மதிய மற்றும் இரவு உணவுகளை சென்னையிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவை சூட்டை தாங்கும் பாத்திரத்தில் எடுத்து வந்து வழங்கினர். உணவு தயாரிக்கும் இடத்தில் எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

திரு. அழகுராஜா உமாபதி அவர்களும் அவர்களது நண்பர்களும் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து வந்து எங்களைப் பார்த்து பல உதவிகளும் செய்து நடைபயண வீரர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து தங்களால் ஆன உதவிகளை செய்வோம் என்று உறுதியளித்துள்ளனர்.

அதே போன்று திரு. பாலன் (கனடா)அவர்களும், அவர்களது நண்பர்களும் தினமும் எங்களை வந்து பார்த்து பல உதவிகளும் செய்து வருகிறார்கள். குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்திற்குமான அந்தந்த மொழிகளில் மொழிமாற்றம் செய்த பேனர்களையும் பிரசுரங்களையும் ஒரு குழுவாக இணைந்து தயாரித்து எங்களுக்குக் கொடுத்து வினியோகிக்கிறார்கள். மேலும் இந்தியிலான பிரசுரங்களையும் பேனர்களையும் அவரே தயாரித்துத் தருவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

இவர்கள் மட்டுமல்லாது பலபேர் பல வழிகளில் எங்களுக்கு உதவிகள் செய்துள்ளனர், செய்து வருகின்றனர் அவர்களையும் நாங்கள் ஒவ்வொருவராக நினைவுபடுத்துவோம். அவர்களும் தொடர்ந்து உதவிகள் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

உதவியாளர்கள் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியினரின் இந்த உயரிய நோக்கமுடைய நடைபயணமும் கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற வேண்டும், அதற்கான உயர்திரு. ஞா.ஞானசேகரன் அவர்கள் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதியளித்துள்ளனர்.

மேலும் இலண்டன் ரி.பி.சி. ஒலிபரப்புச் சேவைக்கும் அதன் படைப்பாளர் உயர்திரு. வீ. இராமராஜ் அவர்களுக்கும் நாங்கள் மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். எங்களையும் எங்களது கோரிக்கைகளையும் இருட்டடிப்புச் செய்ய வேண்டும் என்று எதிரிகள் நினைத்திருந்த வேளைகளில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் கொள்கைகளையும் கோரிக்கைகளையும் உலகறியச் செய்தவர். நாங்கள் மேற்கொள்ளும் இந்த நெடுந்தூர நடைபயணத்தின் ஆரம்பநாள் முதல் எங்களுக்கு மிகுந்த ஆதரவு வழங்கி வருகிறார். தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் சி.என்.என். தமிழ்ச் சேவையும்உங்களுடைய கோரிக்கை நியாயமானதே, நாங்களும் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவு தருவோம்என்று உறுதியளித்துள்ளார்கள் அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

முதல் இரண்டு நாட்களும் கால்வலியால் அவதிப்பட்டவர்கள் அவர்களது மனவலிமையால் கால்வலியை மறந்துவிட்டனர். நாங்கள் திட்டமிட்டபடி 35 கிலோமீற்றர் வரைதான் சராசரியாக நடக்க முடியும் என்றிருந்ததை எங்களது நடைபயண வீரர்கள் மாற்றி 45 முதல் 48 கிலோ மீற்றர்களைக் கடந்துள்ளனர். ஆயினும் நாற்பது கிலோ மீற்றர் தூரத்தைத் தாண்டக்கூடாது என்று இப்போது தீர்மானித்துள்ளோம். காரணம் ஒரே வீரர்கள்தான் இந்த 2500 கிலோ மீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது. இவர்களது கணுக்கால், முழங்கால், இடுப்புப் பகுதிகள் தேய்வடைந்துவிடக் கூடாது. வேகமாக நடந்தால் தேய்மானம் அதிகமாக இருக்கும். எனவே வேகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளோம்.

தொடர்ந்து தினமும் நடைபயணம் பற்றிய விபரங்களை தெரியப்படுத்துகிறோம்.

இவ்வண்ணம்,

மங்களராஜ(viji)

தலைவர்,

நெடுந்தூர நடைபயணக் குழு

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com