Contact us at: sooddram@gmail.com

 

சரணடைந்த நிலையில் அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையவில்லை

நேர்காணல்:  சுஐப் எம். காசிம்

கேள்வி:- தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு தேர்தலுக்கு முகம் கொடுக்கப் போகின்றது?

பதில்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களுக்கான ஒரு தனித்துவமான அரசியல் வழிகாட்டியாகத் தோற்றுவிக்கப்பட்ட கட்சி.

அந்தக் கட்சி அண்மையில் 18வது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தொடங் கியிருக்கின்றது.

இந்த ஆரம்ப காலகட்டத்திலே நாம் தேர்தல் ஒன்றை எதிர்நோக்க வேண்டியிருப்பது ஒரு புதிய அக, புறச் சூழ்நிலைகளில் விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு மு. கா. கிட்டத்தட்ட 120 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதாகத் தீர்மானித்துள்ளது.

120 சபைகளில் அரசுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிடுவதென மு. கா. அதியுயர் பீடம் முடிவெடுத்துள்ளது. அரசுடன் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் இது தொடர்பாக இடம்பெற்றுள்ளன.

இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடல்களில் அம்பாறை மாவட்டத்தில் பல சபைகளில் தனியாகவும் சில சபைகளில் அரசுடன் இணைந்தும் போட்டியிடுவதென ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான இரண்டு குழுக்கள் தேர்தல் நியமனம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ளன.

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் அரசாங்கத்து டன் இணைந்தமை தொடர் பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?

பதில்:- அரசியலில் எந்த ஒரு கட்சியும் எந்த ஒரு முடிவையும் எடுக்கின்றபோது விமர்சனங்கள் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று.

ஒட்டு மொத்தமாக ஓர் அரசியல் முடிவென்பது 100 சதவீதம் சரியானதாகவோ 100 சதவீதம் பிழையானதாகவோ இருப்பதில்லை. சரிகளில் சில பிழைகளும் பிழைகளில் சில சரிகளும் ஒட்டிக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாது.

அந்த அடிப்படையில் விமர்சனம் எழுவதும் தவிர்க்க முடியாதது. ஓர் அரசியல் கட்சியைப் பொறுத்தவரையில் விமர்சனம் என்பது முடிவென்னும் விடயமல்ல.

விமர்சனங்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸ¤க்குள் இருக்கும் விமர்சனம் அக விமர்சனமாகவும், முஸ்லிம் காங்கிரஸ¤க்கு வெளியே அதாவது கட்சியின் ஆதரவாளர்கள் இல்லாத அல்லது எதிராளிகளால் மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் புற விமர்சனங்களாகவும் கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறான புற விமர்சனங்கள் ஒரு பிரசார நெடி கலந்தவை என்பதே என் அபிப்பிராயம்.

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்னர் முஸ்லிம்களுக்கென்று இருந்த ஒரு தனித்துவக் குரல் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்ற கருத்து நிலவுகின்றதே?

பதில்:- அப்படியென்றில்லை. முகாவுக்கு அரசாங்களுடன் இணைந்து செயல்படுவதென்பது இது முதலாவது தடவையல்ல.

அது மாத்திரமின்றி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவதென்பதும் இது முதலாவது முறையல்ல.

முஸ்லிம் காங்கிரஸ் எமது ஸ்தாபகத்தலைவர் மர்ஹும் அஷ்ரப்பின் காலத்திலே 1994ம் ஆண்டு ஐ. தே. க. ஆட்சியை மாற்றியமைத்து சந்திரிகா பண்டாரநாயக்க அரசுடன் இணைந்து செயற்பட்டது. அந்த நேரமும் பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன.

சந்திரிகா அரசு காலத்திலே சில சந்தர்ப்பங்களில் அவரது அரசு எடுத்த முடிவுகளில் முஸ்லிம்களுக்கு சில பாதிப்புக்கள் இருந்த போது இரு புறங்களிலும் ஏற்பட்ட விட்டுக்கொடுப்புகள் மூலமாக சரி செய்யப்பட்டன.

அவ்வாறே 2001 தொடக்கம் 2004ம் ஆண்டு வரையிலான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ. தே. க. அட்சிக்காலத்திலே முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இணைந்து செயற்பட்டோம்.

அது ஒரு யுத்தம் நடைபெற்ற காலம். அப்போது திருமலையில் பிரச்சினைகள் ஏற்பட்டபோது மு. கா. தலைவர் மூதூரில் போய் தங்கியிருந்து பிரதமர் ரணில் திருமலைக்கு வந்து பேச்சுநடத்த வேண்டுமென்று அழுத்தமான கோரிக்கைகள் விடுத்த காலகட்டங்கள் இருந்தன.

முரண்பாடுகள் எழுந்தன. எனவே உடன்பாடுகளும் முரண்பாடுகளும் கலந்து செயல்படுவதுதான் பலகட்சிக்கூட்டு அரசாங்கத்தின் தன்மை.

இந்த வகையில் தொடர்ச்சியாக பல அரசாங்கத்துடன் பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன. வாழைச்சேனையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலில் நாம் அரசாங்கத்துடன் முரண்பட்டோம். அது அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த காலம்.

இவ்வாறு பல்வேறு தடைகளை மு. கா. தாண்டி வந்துள்ளது. இவ்வாறான விடயங்களை மிகவும் கண்ணியமாக அணுகி முஸ்லிம்க ளின் நன் மையை நோக்கி, அனைத்து சமூகங் களின் ஒற்று மையை நோக்கி செயல்பட்டுள்ளது. அதேபோன்று 2007ம் ஆண்டு இன்றைய ஜனாதி பதி மஹிந்த ராஜ பக்ஷவின் அர சிலே பாராளு மன்றத்தில் பெரும் பான்மையற்ற ஒரு சூழ்நிலையில் ஆதரவு வழங்கியிருந்தது.

அந்தத் தருணங்களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மு. கா. அன்றைய அரசுடன் முரண்பட்டு வெளியேறியது. இவ்வாறு வரலாறு நீண்டு கொண்டே போகின்றது.

அவ்வாறே இன்றும் பிரச்சினைகள் வரும்போது மு. கா. அரசுடன் பேசுகின்றது. ஜனாதிபதியுடன் மு. கா. தலைவர் பேசுகின்றார்.

பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கின்றார். சம்பந்தப்பட்ட அமைப்புக்கள், அதிகாரிகளுடன் மு. கா. பேச்சு நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்றது. இதை விடுத்து முஸ்லிம்கள் எதிர்ப்பு அரசியலைக் கட்டியெழுப்பி அரசுக்கெதிரான முரட்டுத்தனமான பிடி வாதங்களோடு அரசியலை முன்னெ டுப்பதென்பது பொருத்தமற்றது.

சுதந்திரத்துக்குப் பின்னர் எந்த ஒரு காலகட்டத்திலும் அவ்வாறான ஓர் அரசியலைச் செய்ததில்லை. ஆனால் முஸ்லிம்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்கின்ற செயல்பாடுகளைத்தான் மு. கா. மேற்கொண்டு வருகின்றது.

கேள்வி:- மர்ஹும் அஷ்ரப்பின் தலைமைத்துவத்தின் கீழ் அரசியலில் பேரம் பேசும் சக்தியாக விளங்கிய மு. கா. இன்று அந்தச் சக்தியை இழந்து சரணாகதி அரசியலை நடத்துவதாகக் கூறப்படுகின்றதே!

பதில்:- நான் முன்பு கூறியது போல இது ஒரு புற விமர்சனம். முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் பேரம் பேசும் சக்தியில்லாமல் இணையவில்லை.

ஆனால் ஒப்பந்தம் இல்லாமல் இணைந்துள்ளது. இலங்கை அரசியலில் பேரம் பேசும் அரசியலை ஒரு தனிஸ்தாபனமாக நின்று அறிமுகப்படுத்தியது மு. கா. வே. இந்தப் பேரம் பேசும் வார்த்தை இலங்கை அரசியலில் வந்ததே. மு. காவினால்தான்.

அதனுடைய வழிகாட்டியும் தோற்றுவாயும் உற்பத்தியும் முஸ்லிம் காங்கிரஸ்தான். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் பேரம் பேசும் சக்தி ஒவ்வொரு கட்டம் கட்டமாக வேறுபடுகின்றது.

பாராளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கான பேரம் பேசுதலாக, தேர்தல் காலங்களில் தேர்தல் கேட்பதற்கான பேரம் பேசுதலாக, அது அமைகின்றது. தற்போதைய அரசுடனான இணை என்பது மூன்றிலிரண்டு பெரும்பான் மைக்குரிய பேரம் பேசும் சக்தியைப் பெற்றதாகவே இருந்ததேயொழிய சரணடைந்த அடிப்படையில் மு. கா. இணையவில்லை.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலிலும் மு. கா. வின் பேரம் பேசும் சக்தியுள்ளது. அதனால்தான் எமது கட்சியின் தனித்துவத்தைப் பேணும் வகையில் தனித்துத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியும் அரசாங்கத்திடம் பெற்றுள்ளது.

இது பேரம் பேசும் சக்தியின் ஒரு வகிபாகம். இணை ந்தும் தனித்தும் கேட்பதற்கான மு. கா. வின் பேரம் பேசும் சக்தியின் உரிமை இன்றும் நிலை நாட்டப்படுகின்றது.

கேள்வி:- மு. கா. வின் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் இன்று தமக்கென கட்சிகளை அமைத்து அரசியல் நடத்துகின்றனர். அமைச்சர்களாகவும் விளங்குகின்றனர். இவர்களை இணைத்து பொதுவான ஓர் அணியில் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி?

பதில்:- இந்த விடயம் தொடர்பாக தமிழ் மக்களின் அரசியலில் நமக்கு நல்ல அனுபவம் இருக்கின்றது. அவர்கள் பிரிந்தும் செயல்பட்டுள்ளனர்.

இணைந்தும் செயல்பட்டுள்ளனர். புலிகளின் ஆதிக்கம் கோலோச்சிய காலகட்டத்தில் யுத்தத்தில் பங்குபெறாத மற்றும் யுத்தத்தில் பங்கேற்று ஜனநாயக நீரோட்டத்தில் பங்கேற்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து தமிழ்க் கூட்டமைப்பு உருவாகியது.

அதற்கு வெளியே வேறுபாடான கட்சிகளும் செயற்பட்டன. யுத்தத்துக்கு முந்திய காலகட்டத்தில் தமிழரசுக் கட்சி, தமிழ்க்காங்கிரஸ் என்று கட்சிகள் அரசியல் நடத்தின. பின்னர் மலையகத்திலுள்ள கட்சிகள் உட்பட தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகியது. இந்த அனுபவத்தை நாமும் கொண்டுள்ளோம்.

இவ்வாறான ஓர் அனுபவத்தை பரீட்சித்துப் பார்ப்பதென்பது பிழையான விடயமல்ல. அதற்கான காலம் கனிந்து வருகின்றபோது அல்லது பேச்சுவார்த்தை என்று முன்னெடுக்கும் போது மு. கா. வும் சேர்ந்து செயல்படத் தயாராயுள்ளது.

யாருடைய முதுகிலும் யாரும் சவாரி செய்யாத ஓர் அரசியல் பயணத்திலே முஸ்லிம்களின் ஒட்டுமொத்தமான நன்மை கருதியும் இந்த நாட்டின் நன்மை கருதியும் சகல இனங்களும் சமத்துவ மாக வாழும் ஒர பயணத்திலே மு. கா. பங்களிப்புச் செய்ய விரும்பு கின்றது.

கேள்வி:- மு.காவிலிரு ந்து பிரிந்து சென்றவர் களை ஒரு பொது அணிக்குள் கொண்டுவர உங்கள் கட்சி ஏதும் முயற்சிகள் மேற்கொள்கின்றதா?

பதில்:- அஷ்ரப்பின் மறைவின் பின்னர் மு. கா. வுக்குள் பிரிவினைகள் மெல்லத் மெல்லத் தலைகாட்டத் தொடங்கின என்று பிரிவினைகள் தலைகாட்டத் தொடங்கியதோ அன்றிலிருந்து மு. காவின் இன்றைய தலைமைத்துவம் ஒரு ஒற்றுமை நோக்கிய செயல்திட்டத்தை முன்னெடுத்து வந்தது.

பகிரங்கமான வேண்டுதல்களும் உள்ளகக் கடிதத் தொடர்புகள் மூலமான கோரிக்கைகளும் மு. கா.வினால் விடுக்கப்பட்டிருக்கின்றன.

எனினும் காலவோட்டத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாகவும் தனிப்பட்ட அரசியல்வாதிகளின் நலன்கள் சார்ந்த வேறுபாடுகளாலும் (இரண்டு பக்கங்களிலும்) முன்னோக்கிய செயல்பாட்டு வடிவத்தைத் தோற்றுவிப்பதில் தடைக் கற்களாகவிருந்தன.

எனினும் ஒட்டுமொத்தமான ஒரு கூட்டு முன்னணியை அமைப்பது பற்றி எதிர்காலங்களில் சிந்திக்க முடியும். அதே நேரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியம் போன்றவற்றை உருவாக்குவதில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய பங்களிப்பை நல்கியுள்ளது.

கேள்வி:- மு. கா. எதிர்க்கட்சி அரசியலை நடத்தும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் உடன்பாடு கண்டதே. அந்த செயற்பாடுகள் எப்படி இருக்கின்றது.

பதில்:- இவ்விரண்டு கட்சிகளும் என்றும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு செயற்படவில்லை. ஆனால் இரண்டு தமிழ் பேசும் இனங்களுக்கிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்தி அரசியல் அரங்கத்தில் செயற்பாட்டை ஏற்படுத்த சில முயற்சிகள் இடம்பெற்றன.

இன்றும் அது தொடர்கின்றது. எனினும் சரியான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் பரஸ்பர விட்டுக்கொடுப்புகளும் புரிந்துணர்வுகளும் நிறையவே ஏற்பட்டுள்ளன. மு. கா. அரசுடன் இணைந்துவிட்டது என்பதற்காக தமிழ்ச் சமூகத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜனாதிபதியும் தமிழ் மக்களுக்குச் செய்கின்ற எல்லா உதவிகளையும் நலன்களையும் முறையாக மேற்கொள்ளத் தயாராகவே உள்ளார். அவ்வாறான செயல்பாடே நடக்கின்றது.

வடக்கு கிழக்கிலே ஓர் அரசியல் தீர்வு என்று வரும்போது தமிழர்களும் முஸ்லிம்களும் பேசிய பின்னர் அரசுடன் பேசுவதே ஒரு முறையான, வெற்றிகரமான தீர்வைத் தரும்.

கடந்த காலத்தில் இனப்பிரச்சினைத் தீர்வில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளுக்கு காரணம் தமிழர்களின் அரசியல் சக்திகளும் முஸ்லிம்களின் அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படாமையே.

கேள்வி:- மு- கா.வுக்கு கிழக்கிலிருந்து ஒரு தலைமைத்துவம் உருவாக வேண்டும். என்ற கோரிக்கை எழுப்பப்படுவது பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா?

பதில்:- இந்தக் கோரிக்கை தொடர்பாக ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையும் எனக்கு ஒரு கருத்து இருக்கின்றது. கட்சிக்குள்ளும் வெளியேயும் நான் இதனைக் கூறியுள்ளேன்.

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்துக்கான ஒரு பிராந்தியக் கட்சி அல்ல. இது ஒரு தேசியக் கட்சி. இருந்த போதும் தேசிய அடையாளங்களோடு கூடிய கட்சி.

இந்தக் கட்சிக்கு இந்தப் பிராந்தியத்திலிருந்ததான் தலைவர் வரவேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தையும் வடக்கு மாகாணத்தையும் கொண்டு வேரூன்றிய ஒரு கட்சி என்ற அடிப்படையில், வடகிழக்கு மாகாணத்தின் தன்மைகளையும் பிரச்சினைகளையும் புரிந்துகொண்ட ஒருவர் இலங்கையின் எந்த மூலையிலிருந்தும் வர முடியும்.

அதைப் புரிந்து கொள்ளாத வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்தும் வர முடியாது என்பதுதான் எனது நிலைப்பாடு. தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் விசேடமாக வடக்கு, கிழக்கு மக்களின் முஸ்லிம்களின் அபிலாஷைகளை நன்கு புரிந்து கொண்டவர்.

மர்ஹும் அஷ்ரப்புடன் இணைந்து செயற்பட்டவர். ரவூப் ஹக்கீம் அவருக்கு பின்னரான ஓர் அரசியல் சூழ்நிலையில் அது பற்றி ஆலோசிக்க வேண்டி வரும். ஏனெனில் ஹக்கீம் அளவுக்கு வடக்கு, கிழக்கு பிரச்சினையைத் தெரிந்த ஒருவர் அதற்கு வெளியே இல்லை என்பதே என் அபிப்பிராயம்.

கேள்வி:- சிறுபான்மை மக்கள் தொடர்பாக ஜனாதிபதி மேற்கொள்ளும் செயற்பாடுகளின் திருப்தி காண்கிaர்களா?

பதில்:- அரசியலில் பாரிய யுத்தத்துக்கு பிற்பட்ட ஒரு காலமிது. யுத்தத்தில் வெற்றியடைந்த அரசியல் தலைவர் என்ற வகையிலும் இந்த நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்ற அவரின் முனைப்பான செயற்பாடுகளின் அடிப்படையிலும் மிகவும் நேர்த்தியான தலைவராகவே நாம் அவரை அடையாளப்படுத்துகின்றோம். இந்த நாட்டில் சிங்களவர்களுக்கென்று ஒரு கொள்கை தமிழர்களுக்கு வேறொரு கொள்கை என்று அவர் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. இலங்கைக்கான கொள்கையொன்றை அவர் வரையறுத்துள்ளார். இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை அடைய வேண்டுமெனப் பகிரங்கமாகக் கூறி வருகின்றார். அந்த அடிப்படையில் அவரை வேற்றுக் கண்ணோட்டத்தில் நோக்குவது இன்றைய அரசியலுக்குப் பொருத்தமானதல்ல.

கேள்வி:- அரசுடன் மு. கா. இணைவதற்கான சூத்திரதாரி நீங்கள் தான் என்று சிலாகிக்கப்படுகின்றதே?

பதில்:- அப்படியல்ல. முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைய வேண்டும் என்ற கருத்தைச் சொல்லியவர்களில் நானும் ஒருவன். அரசுடன் இணைய வேண்டும் என்ற கருத்சூதுடையவர்களும் இணையக் கூடாது என்ற கருத்துடையவர்களும் மு.கா.வுக்குள் இருந்தனர். அந்த இரண்டு தரப்பையும் ஒன்றாக இணைந்து அரசுடன் இணைய வைப்பதில் நான் ஒரு பங்காற்றினேன்.

கேள்வி:- கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவி உங்கள் கட்சியிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டதே?

பதில்:- கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சியிலே ஆகக் கூடுதலான உறுப்புரிமையைப் பெற்ற கட்சி முஸ்லிம் காங்கிரஸ். மு. கா.வுக்கு தான் எதிர்க்கட்சித்தலைமை வேண்டும். பாராளுமன்றத்திலே இருக்கும் பல்வேறு எதிர்க்கட்சிகளில் ஆகக் கூடுதலான ஆசனங்களைக் கொண்ட கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே அங்கு எதிர்க்கட்சித்தலைவர். ஐ.தே.கவுக்கு பாராளுமன்றதில் ஒரு கொள்கையும் கிழக்கு மாகாணத்தில் வேறொரு கொள்கையும் இருக்க முடியாது என்பதில்தான் ஐ. தே.காவுக்கும் எமக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு. எனினும் அந்த முரண்பாடுதான் அரசுடன் இணைவதற்கு காரணமல்ல.

கேள்வி தமிழ்க் கூட்டமைப்பின் தற்போதைய போக்கு பற்றி?

பதில்:- தமிழ்க்கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள புதிய தீர்மானங்கள் ஒரு முக்கியமான, திருப்பமான நிலைப்பாடே; அதனை வரவேற்கின்றேன். தமிழர்களின் அரசியலில் மிக நீண்ட காலமாக அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை அல்லது பங்களிப்பைப் பெற்றுக் கொண்டு செயற்பட்டமை அரிதான விடயம்.

முன்னர் செனட் உறுப்பினராக இருந்து அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்ட தி. திருச்செல்லம் அமைச்சராகவிருந்தார். தமிழர்களின் அரசியலில் அரசுடன் இணைந்து செயல்பட்டமை அரசுடன் எதிர்த்து செயல்பட்ட பல்வேறு வரலாறுகள் உண்டு. தற்போது தமிழத்தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு என்பது தமிழ்த்தேசிய அரசியலில் நெகிழ்வுத்தன்மை கொண்ட முடிவு என நான் நினைக்கின்றேன். அந்த முடிவுக்கேற்ற வகையில் அரசும் தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றே கருதுகின்றேன். இது ஒரு இரட்டை வழிப்பாதையாக இருக்க வேண்டும். அதே போன்று அரசாங்கத்துக்கு ஒரு தகவலையும் விழிப்பையும் ஏற்படுத்தும் வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓர் இடைவெளி ஏற்பட்டுவிடும்.

கேள்வி:- மு.காவின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நூர்தீன் மசூரின் இழப்பு கட்சியை எந்தளவு பாதித்துள்ளது?

பதில்:- கட்சியின் வடமாகாண நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது. எனினும் அவருக்கு பதிலாக வந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர் பாரூக் மு.காவுடன் இணைந்து செயற்பட எடுத்த முடிவு எமக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் வடமாகாணத்தில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் எமது போராளிகள் பலமாக உள்ளனர். இந்த அடிப்படையிலேயே நாம் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்நோக்குகின்றோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com