Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 6 வது, 7வது மற்றும் 8வது நாள் நிகழ்வுகள்!

20-01-2011 வியாழன் அன்று நாயுடு பேட்டை தாண்டி 15 கிலோ மீற்றர் தூரத்தில் இரவு தங்கிய நடைபயண வீரர்கள் 21-01-2011 வெள்ளிக்கிழமை காலை 07:15 மணிக்கு நெல்லூர் நோக்கிப் புறப்பட்டனர். வெங்கையாசாமி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து பயணித்த நடைபயண வீரர்கள் 07:53 மணிக்கு சேருகுண்டா என்ற கிராமத்தை கடந்தனர். அந்த கிராமத்து மக்கள் நடைபயண வீரர்களுக்கு கையசைத்து வாழ்த்துச் சொல்லி அனுப்பினர்.

சரியாக காலை 08:30 மணிக்கு நடைபயண வீரர்கள் நெல்லூரை அடைந்தனர். நெல்லூரில் காலை உணவு பரிமாரப்பட்டது. தொடர்ந்து பயணித்த நடைபயண வீரர்கள் வேடயாபாலம் என்ற இடத்தை கடந்து 11:30 மணியளவில் நெல்லூர் மாநகரம் வந்தடைந்தனர். அங்கே தமிழகத்துத் தமிழர்களும் மற்றும்சிறிமா-சாஸ்திரிஒப்பந்தத்தின் மூலம் இலங்கையிலிருந்து இந்தியா வந்த தமிழர்களும் மற்றும் நெல்லூர் மக்களும் நடைபயண வீரர்களுக்கு உற்சாக வரவேற்பைக் கொடுத்தனர். நடைபயண தலைமைக் குழுவினர் ஆறுபேருக்கும  ொன்னாடைப் போர்த்தி நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக் கூறினர். அன்பு மழையில் திணறவைத்துவிட்டனர்.

மீண்டும் மதியம் 12:00 மணிக்கு தொடர்ந்த பயணம் நெல்லூர் தொடர்வண்டி நிலையத்தின் வழியாக சென்று 12:20 மணிக்கு நெல்லூர் பாலத்தை கடந்தது. அங்கு நடைபயண வீரர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 12:45 மணிக்குப் புறப்பட்ட நடைபயணம் 01:10 மணிக்கு படுகுபாடு-வெங்டேஸ்வரபுரம் கோயில் அருகில் மதிய உணவுக்காக இடைநிறுத்தப்பட்டது.

வெங்கடேஸ்வரபுரம் கோவிலில் இருந்து மாலை 03:50 மணிக்கு நடைபயண வீரர்கள் சந்திரசேகரபுரம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். அவர்கள் 04:30 மணிக்கு கோவுர் என்ற இடத்தைக் கடந்து மாலை 06:10 மணிக்கு கோவுர்மண்டூர் வந்தனர். அங்கே அவர்களுக்கு தேனீர் வழங்கப்பட்டது. தேனீர் இடைவேளையை முடித்துவிட்டு புறப்பட்ட நடைபயணம் இரவு 07:35 மணிக்கு சந்திரசேகரபுரம் வந்தடைந்தது. இன்று இதுவரை நடைபயண வீரர்கள் 37 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்துள்ளதாலும் சந்திரசேகரபுரத்தில் தங்குவதற்கான வசதிகள் இருந்ததாலும் அங்கேயே இரவு உணவையும் இரவு ஓய்வையும் நடைபயண வீரர்கள் எடுத்துக்கொண்டனர்.

 

22-01-2011 சனிக்கிழமை காலை 07:00 மணிக்கு சந்திரசேகரபுரத்தில் இருந்து புறப்பட்ட ஈழத் தமிழர் விடுதலைக்கான நடைபயணம் ரெகடி செலிகா என்ற இடத்தைக் கடந்து ராச்சலாபாத் வழியாக காவாலி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தது. காவாலி தேசிய நெடுஞ்சாலையிலேயே காலை 09:00 மணிக்கு நடைபயண வீரர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

காலை உணவை முடித்து புறப்பட்ட நடைபயணம் செங்கரயாகோண்ட சோதனை நிலையம் ஊடாக லயன் நகர் காப்பர்லதிப்பா என்ற இடங்களைக் கடந்து மதியம் 12:30 மணிக்கு மதிய உணவிற்காக செங்கம் என்ற கிராமத்தில் இடைநிறுத்தப்பட்டது. மீண்டும் 03:30 மணிக்குப் புறப்பட்ட நடைபயணம் கடநுட்லா கௌரவம் என்ற இடங்களைக் கடந்து காவாலி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தது. மாலை 05;40 மணிக்கு தேனீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து பயணித்த நடைபயண வீரர்கள் இரவு 08:10 மணியளவில் காவாலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வயல்வெளியில  இரவ ஓய்வுக்காக முகாம் அமைத்தனர். இன்று (22) அவர்கள் 35.5 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்தனர்.

23-01-2011 ஞாயிறு அன்று காலை 06:40 மணிக்கு தேனீர் அருந்திவிட்டு நடக்க ஆரம்பித்த நடைபயண வீரர்கள் மட்டுராபாடு என்ற இடத்தைக் கடந்து ஓங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தனர். 09:00 மணிக்கு ஓங்கல் தேசிய நெடுஞ்சாலையில் காலை உணவை முடித்துவிட்டு புறப்பட்ட நெடும்பயணம் குகடாபல்லி என்ற இடத்தைக் கடந்து கூட்லூரு என்ற இடத்தில் தேனீர் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது.

தேனீர் இடைவேளை முடிந்து நடக்க ஆரம்பித்த நடைபயண வீரர்கள் ஓங்கல் தேசிய நெடுஞ்சாலையில் மதிய உணவை முடித்துவிட்டு அங்கேயே முகாம் அமைத்தனர். அன்று மதியத்தோடு நடைபயண வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்காகவும், வீரர்களது உடுப்புகளை கழுவி எடுப்பதற்காகவும் ஓய்வு கொடுக்கப்பட்டது. இன்று மட்டும் விரர்கள் 23 மீற்றர் தொலைவை மடடுமே கடந்தனர். 23-01-2011 ஞாயிறு மதியம் வரை ஈழத் தமிழர் விடுதலைக்கான நடைபயண வீரர்கள் மொத்தமாக 279 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்துள்ளனர்.

ஈழ தேசிய ஜனநாய விடுதலை முன்னணி

(ஈ.என்.டி.எல்.எப்.)

24-01-2011

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com