Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 9வது மற்றும் 10வது நாள் நிகழ்வுகள்!

23-01-2011 ஞாயிறு மதியத்தோடு நடைபயணத்தை நிறுத்தி ஓய்வெடுத்த நடைபயண வீரர்கள் 24-01-2011 காலை 06:30 மணிக்கு ஓங்கோல் தேசிய நெடுஞ்சாலையில் நடைபயணத்தைத் தொடர்ந்தார்கள். செரிசைல்லா, ராஜூபாலம் என்ற இடங்களை கடந்து வருகையில் 09:00 மணியளவில் காலை உணவிற்காக இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

உணவு இடைவேளை முடிந்தவுடன் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. ஆந்திர பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிறுவனங்களும் தினமும் நடைபயண வீரர்களைச் சந்தித்து தொடர்ந்து செய்திகளை பிரசுரித்து வருகின்றனர். இவை நடைபயண வீரர்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

பத்திரிகையானர்கள் சந்திப்பு முடிந்தவுடன் புறப்பட்ட நடைபயணம் கரீட் என்ற கிராமத்தைத் தாண்டியபோது பொதுமக்கள் மிகுந்த வரவேற்புக் கொடுத்தார்கள். நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக்கூறினார்கள்.

பத்துநிமிட இளைவேளைக்குப் பிறகு புறப்பட்ட நடைபயணம் செங்கரயாகொன்டா என்ற இடத்தைக் கடந்து வருகின்ற வேளை மதியம் 12:00 மணியளவில் வீரர்களுக்கு குளிர்பானம் கொடுக்கப்பட்டது. இடைவேளையை தொடர்ந்து தொடர்ந்த நடைபயணம் 12:30 மணியளவில் கலிகிவயி என்ற இடத்தில் மதிய உணவிற்காக இடைநிறுத்தப்பட்டது.

நேற்ற(23-01-2011) மதியத்துடன் நடைபயண வீரர்கள் முகாமிட்டதால் 22 கிலோ மீற்றர் தூரத்தையே அன்று கடந்திருந்தனர். அதனால் இன்று (24) நேற்றைய தூரத்தையும் கடக்க வேண்டும் என்று வேகமாக நடந்தனர். குழுத் தலைவர் மெதுவாக செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் வீரர்கள் வேகமாக நடந்தனர்.

மதிய உணவு மற்றும் ஓய்வை எடுத்துக் கொண்ட நடைபயண வீரர்கள் மாலை 03:45 மணிக்கு மீண்டும் நடக்கத் தொடங்கினர். பித்ரிகுண்டா, தங்குதூர் சோதனை நிலையம், ஓங்கோல் சோதனை நிலையம், நாயுடு பாலம், சுரரெட்டிபாலம் வழியாக இரவு 08:30 மணியளவில் ஓங்கோல் தேசிய நெடுஞ்சாலையில் இரவு ஓய்வுக்காக முகாம் அமைத்தனர்.

 

இன்று நெடுந்தூர நடைபயண வீரர்கள் சரியாக 44 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர். மொத்தமாக 24-01-2001 திங்கள் இரவு வரை 323 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர்.

பத்தாவது நாளான நேற்று (25-01-2011, செவ்வாய்) ஓங்கோல் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டிருந்த நடைபயண வீரர்கள் தேனீர் அருந்திவிட்டு காலை 07:00 மணியளவில் நடக்க ஆரம்பித்தனர்.

நடைபயண வீரர்களுக்கு மிகவும் சிறப்பான உணவு வகைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை, நடைபயண தலைமைக் குழுவினருக்கு பொருளாதாரப் பிரச்சினை காரணமாக அவர்களுக்கு தகுதியான அளவுதான் உணவாக தருகிறார்கள். நல்ல உணவு கொடுக்க முடியவில்லையே என்று நடைபயண தலைமைக்குழுவில் உள்ளவர்கள் மிகவும் கவலையடைகிறார்கள்.

ஆயினும் வீரர்கள் சாப்பாட்டை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. எங்களுக்கு நடக்கும் போது தேனீரும் பாணும் கொடுத்தாலே போதும், எப்படியாவது நடைபயணம் வெற்றிபெற வேண்டும், நாங்கள் முகாமில் சிறப்பான உணவு வகைகள் எதுவும் சாப்பிட்டதில்லை. அதனால் எங்களுக்கு எந்த உணவையும் சாப்பிட்டுப் பழக்கம்தான் ஆகையால் நீங்கள் யோசிக்க வேண்டாம், நடைபயணம் வெற்றிபெரும், நாங்கள் இன்னும் 5000 கிலோ மீற்றர் துரத்தையும் நடந்து செல்வோம் என்று தங்களது மன உறுதியை நடைபயண குழுத் தலைவரிடம் வெளிப்படுத்தினர்.

ஏறக்குறை 400 கிலோ மீற்றர் தூங்களைக் கடந்துள்ளதால் சென்னையிலிருந்து பார்வையாளர்கள் வந்து பார்த்துவிட்டுப் போவதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். எங்களது பொருளாதாரப் பிரச்சினை எங்கள் நடைபயண வீரர்களுக்கு நன்கு தெரியும். நடைபயண வீரர்கள் பெரும்பான்மையினர் நாங்கள் 2 மாதங்கள் நடக்க வேண்டும் என்று முன்பே தீர்மானம் எடுத்து, எங்களது நிலைமையை தெரிந்துகொண்டு, முன்பே அதிக நேரம் கடினமாக உழைத்து வீட்டிற்குத் தேவையானதை ஓரளவுக்குக் கொடுத்துவிட்டுத்தான் நடந்து வருகின்றனர்.

பல வீரர்கள் குடும்பத்தில் கஸ்டங்கள்தான். எதையும் பொருட்படுத்தாமல்தான் நாங்கள் குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் சென்று வாருங்கள் என்று தெரிவித்துதான் தங்கள் குடும்பத்தின் தலைவரை பெண்கள் இந்த நடைபயணத்தில் சென்று வர அனுப்பிவைத்துள்ளனர்.

 

முகாம்களிலிருந்து போட்டிப்போட்டுக்கொண்டு வருவதற்கு இளைஞர்கள், மற்றும் மாணவர்கள் தயாராகத்தான் இருந்தார்கள் என்றாலும் நடைபயணக்குழுவின் பொருளாதாப்பிரச்சினை காரணமாக குழுத் தலைவர் அவர்கள் அத்தனைபேரையும் நிராகரித்துவிட்டார். அவர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்து அனுப்பி வைத்தார்.

நடைபயண வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பப் பிரச்சினைகளின் மத்தியில்தான் மனஉறுதியுடன் இந்த நடைபயணத்தை மேற்கொள்கின்றனர். நடைபயண வீரர்களின் குடும்பத்தினர் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு எங்களைப்பற்றி பற்றி கவலைகொள்ள தேவையில்லை நாங்கள் நன்றாக இருக்கிறோம், பிள்ளைகள் கொம்யூட்டரில் நீங்கள் நடக்கிறதைப் பார்த்துஅப்பா சுதந்திரப் போராட்ட வீரர்என்று சொல்லி பெருமைப்படுகிறார்கள் என்று நடைபயண வீரர்களுக்கு தெரிவித்து உற்சாகப்படுத்துகின்றனர்.

காலையிலிருந்து ஒவ்வொரு வீரர்களுக்கும் குடும்பத்தினர் தொலைபேசியில் தொடர்புகொண்டு புறப்பட்டுவிட்டீர்களா? எவ்வளவு தூரம் சென்றிருக்கிறீர்கள்? உணவை குறைத்துச் சாப்பிடுங்கள், இரவு நேரம் அதிக தூரம் நடவுங்கள் என்று ஆலோசனையும் சொல்லி வீரர்களுக்கு மனஉறுதியை கொடுத்து வருகின்றனர். உண்மையில் அவர்கள்தான் வீரர்கள்!

நாங்கள் காலை 08:40 மணியளவில் ஓங்கோல் நகரத்தை சென்றடைந்தோம். பின் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து 09:30மணிக்கு காலை உணவையும், வெங்ட்ராயபுரம், பெத்தகோத்தப்பள்ளி வழியாக சீதாராம்புரம் என்ற இடத்தில் மதிய உணவிற்காக நடைபயணம் இடைநிறுத்தப்பட்டது.

மாலை 04:20 மணிக்கு மீண்டும் புறப்பட்ட எங்களது நடைபயணம் மடிப்பாடு, மண்டம்பள்ளி, மெடராமெட்லா என்ற இடங்களைக் கடந்து அடங்கி என்ற இடத்தில் இரவு 08:00 மணிக்கு இரவு ஓய்வுக்காக முகாம் அமைத்தோம்.

இன்று இரவு எட்டுமணி வரை 34 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்தோம். 25-01-2011 செவ்வாய் இரவு 8மணி வரை மொத்தமாக 356கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்துள்ளோம்.

நன்றி!

சி.தயாபரன் (டேவிட்)

நிதி பொறுப்பு

நடைபயணம் தலைமைக் குழு

கைபேசி எண்: 00919490826037

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com