Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைப்பயணம் 11வது மற்றும்12 வது நாள் நிகழ்வுகள்!

25-01-2011 புதன் கிழமை காலை 06:45 மணிக்கு அடங்கி சாலையிலிருந்து புறப்பட்ட நெடுந்தூர நடைப்யயணம் 08:30 மணியளவில் அடங்கி நகரத்தை சென்றடைந்தது. ஒன்பது மணிக்கு காலை உணவை முடித்துக் கொண்ட நடைபயண வீரர்கள் குடிப்பாடு என்ற இடத்தை நோக்கி நகர்ந்தனர்.

25-01-2011 செவ்வாய் அன்று அடங்கி சாலையில் நடைபயண வீரர்கள் தங்கியிருக்கும் போது அருகில் உள்ள கிராமத்திலிருந்து ஒருவர் வந்தார். தன்னுடைய பெயர் சங்கர் என்றும் தான் மதுரை பக்கத்தில் உள்ளவர் என்றும் ஆந்திராவில் கடந்த 38 ஆண்டுகளாக முறுக்கு வியாபாரம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். ஆந்திரா தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் படித்து எங்களைப் பற்றி அறிந்துகொண்டதாகவும் தெரிவித்தார். மிகுந்த பாசத்துடன் பழகிய அவர் நடைபயண வீரர்கள் இரவு உணவு சாப்பிடுவதைப் பார்த்தார். உங்களுடைய கஸ்ரங்கள் எனக்குத் தெரிகிறது என்று பாசத்துடன் பேசிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் 2 மூடை அரிசியுடன் திரும்பவும் முகாமிற்கு வந்தார். நடைபயண தலைமைக் குழுவின் தலைவர் மங்களராஜா அவர்களிடம் கையளித்து, தங்களுடைய நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றுச் சென்றார்.

தொடர்ந்து குடிப்பாடி நோக்கி நகர்ந்த நடைபயண வீரர்களுக்கு 12:30 மதிய உணவு வழங்கப்பட்டது. மீண்டும் மாலை 04:00 மணிக்குப் புறப்பட்ட நடைபயண வீரர்கள் குடிப்பாடு என்ற இடத்தைக் கடந்து இரவு 07:30 மணிக்கு பாவநாசி சேருவா (ஏரி) என்ற இடத்தில் இரவு முகாம் அமைத்தனர்.

ஒவ்வொரு இடத்தையும் கடக்கும் போது ஆந்திர மக்கள் நடைபயண வீரர்களுக்கு மிகவும் ஆதரவு காட்டி வருகிறார்கள். நடைபயண வீரர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை ஆந்திர பத்திரிகைகள் மூலம் தெரிந்துகொண்டு, அவர்கள் தாங்களாகவே வந்து உதவிகள் செய்கின்றனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களுடைய பிரச்சினைக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற நாங்கள் நிச்சயம் ஆதரவு தருவோம் என்று தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது உதவிகளும் செய்கின்றனர். உயர்திரு. கோவர்த்தனா என்ற சிலுக்குவார் பேட்டை சேர்ந்த பெரியவர் ஒருவர் தாமாகவே முன்வந்து 50 மூடை அரிசியை வழங்கி தமிழர்கள் விடிவு பெற நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற இறைவனிடம் வேண்டுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பிடிகுருவா என்ற இடத்தில் உள்ள தலைமை ஆசிரியர் ஒருவர் தானும் 10 மூடை அரிசியை தங்கள் இடத்தைக் கடக்கும் போது பெற்றுக் கொள்ளுங்கள் என்று அவருடைய இடத்தைக் கடந்து செல்லும் முன்பே வந்து உறுதி வழங்கிவிட்டு வாழ்த்துச் சொன்னார். இவ்வாறு ஆந்திர மக்கள் அபரிதமான அன்பு காட்டுகிறார்கள் நடைபயண வீரர்கள் மீதும், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் மீதும்! அவர்கள் ஈழத் தமிழர்களின் வரலாற்றை அறிந்துகொள்வதற்காக தெலுங்கு மொழியில் அச்சு செய்யப்பட்ட பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன.

26-01-2011 புதன்கிழமை நடைபயண வீரர்கள் சரியாக 39 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்தனர். மொத்தமாக 395 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர்.

27-01-2011 வியாழன் அன்று காலை 06:45 மணியளவில் பாவநாசிசேருவு என்ற ஏரிக்கரையிலிருந்து புறப்பட்ட நடைபயண வீரர்கள், வென்முகபாலம் என்ற இடத்தில் காலை 09:00 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டனர். நடைபயணத்தின் போது அவ்வப்போது தேனீர், குளிர்பானம் மற்றும தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது.

காலை உணவை முடித்துக்கொண்டு புறப்பட்ட நடைபயண வீரர்கள் மதியம் 01:00 மணிக்க பிடிகுருலா என்ற இடத்தை சென்றடைந்தனர். அங்கே மதிய உணவை முடித்துக்கொண்டனர். அங்கிருந்த மாலை 04:10 மணிக்குப் புறப்பட்ட நடைபயண வீரர்கள் சாந்தக்குடிபாடு என்ற இடத்தைக் கடந்து இரவு 07:45 மணிக்கு நிகரிகாலு என்ற இடத்தில் இரவு முகாம் அமைத்தனர்.

இன்று நடைபயண வீரர்கள் 38 கிலோமீற்றர் தூரத்தையும் மொத்தமாக 433 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர்.

நடைபயண வீரர்கள் ஆந்திர மக்கள் கொடுக்கும் உற்சாக மிகுதியினால் களைப்புத் தெரியாமல் சராசரி தூரத்தை தினமும் கடந்து செல்கின்றனர். என்றாலும் ஒரு சில நடைபயண வீரர்களுக்கு கால் வலி ஏற்படுவதாக தெரிவித்தார்கள். அவர்களை ஒரு நாள் ஓய்வு கொடுக்கலாம் என்றதும் அந்த வீரர்கள் தேவையில்லை நாங்கள் நடப்போம் என்று தெரிவித்து நடந்து வருகின்றனர். இருந்தாலும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மீண்டும் செய்ய வேண்டும் என்று நடைபயண குழுத் தலைவர் திரு. மங்களராஜா அவர்கள் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

நடைபயணக் குழுவோடு மருத்துவக் குழுவும் சென்றுள்ளது. மருத்துவர் ஒருவரும் இருக்கிறார். என்றாலும் சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவர் இருவரை அனுப்பி வைப்பதாக ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சி.வசீகரன்

நடைபயண தலைமைக் குழு

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com