Contact us at: sooddram@gmail.com

 

புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள் சேர்க்கப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களிடம் மறைத்து விட்டது

உண்மையில் இந்த தேசிய கூட்டமைப்பானது 2001 ஆம் ஆண்டு எனது தலை மையில் ஆரம்பிக்கப்பட்டது என் பதை அநேகர் மறந்து விட்டனர். இப்போது ‘உண்மை’ வெளிப்பட்டு விட்டது. 06 ஆண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் தமது கடமைகளை செய்யாத படியினால் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தை புகட்டவென காத்திருந்த மக்கள் பெரும் ஏமாற்ற மடைந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுதும் மக்களுக்கு வேண்டிய கடமைகளை செய்ய தலைமையின் அனுசரணை யின்மையால் பெருமளவு உறவி னர்களையும், பல கோடி பெறுமதிமிக்க சொத்துக்களையும் இழக்க நேர்ந்தது என்பதை உணர்கின்றனர். செல் வாக்குமிக்க தமிழ் தேசிய கூட்ட மைப்பின் பெயரை உபயோகித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வழி காட்டியவர்களே இப் பேரழிவுகளுக்கும், அவர்களின் இழப்புக்களுக்கும் பொறுப்பாளி யாவார்கள். இழந்த உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெற்றுத்தர வேண்டிய நட்டஈட்டை பெற்றுத் தருவதில் தவறிவிட்டனர்.

அப்பாவி மக்களை புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தக்கூடா தெனவும் அவர்களை விடுவிக்கும் படியும் சர்வதேசமே வேண்டிநின்ற போதும் அம் மக்களை பிரதிநிதித் துவப்படுத்தும், அவர்கள்மீது மிக மிக அக்கறை காட்ட வேண்டிய இவர்கள் மெளனம் சாதித்தனர். அன்று பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு புது உறுப்பினர்தான் அதை செய்ததாக உண்மைக்குப் புறம்பான ஒரு புதுக்கதை கூறுகிறார். இந்தப் பாவத்தில் எனக்கு பங்கில்லை.

ஆறு ஆண்டுகள் வன்னியில் இடம்பெற்ற அத்தனை மர ணங்கள், யுத்தத்துக்கு ஆட் சேர்த்தல், பிள்ளைகளை பறிகொடுத்த அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல் போன்ற அனைத்துக்கும் இவர்களே பொறுப் பேற்க வேண்டும். சம்பந்தன் அவர்கள் தமிழரசுக் கட்சி தலைவராகவோ, அன்றேன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்தும் வட கிழக்கு மாகாண தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தார்மீக தன்மையை இழந்துவிட்டார். கடைசி நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கும்படி தவறாக வழி காட்டியவர்கள் தமது செயற்பாட்டை நியாயப்படுத்துவார்களா? சம்பந்தன் அவர்கள் கூட தமிழ் தேசிய கூட்ட மைப்பை சில ஆசனங்களை வெற்றி பெற வைத்தமைக்காக ஊடகங்களு க்கு நன்றி தெரிவித்தார். ஆனால் இவர்கள் அனைவரினதும் ஒன்றிணை ந்த முயற்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்தில் 65119 வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

சம்பந்தன் அவர்கள் கூறியதுபோல் தாம் சரத் பொன்சேகாவிற்கு பெற் றுக்கொடுத்த 113873 வாக்குகளோடு ஒப்பிடுகையில் சில உண்மைகள் தெரியவருகின்றன. கடும் வேதனைக் குரிய விடயம் என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பொறுப்பற்ற முறையில் பிரசாரம் செய்தவர்கள் நடந்துகொண்ட முறையே. புத்திஜீவிகள் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் எஎனவும், சுதந்திர ஊடகவியலாளர்கள் எனவும் கூறிக் கொண்டவர்கள் சில ஊடக வியலாளர்களுடன் இணைந்து யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் திரைமறைவில் நடந்த எத்தனையோ நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப் படுத்தாது மறைந்துவிட்டனர். புலி களின் மரணங்கள் இறுதிக்கட்டப் போரின் போதும் சிறுவர்களைப் பேராளிகளாக பலவந்தமாக சேர்க் கப்பட்டமையையும் முற்றுமுழுதாக மக்களுக்கு மறைத்து விட்டனர். முல்லைத்தீவில் குடியிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கவ னத்திற்கு இவ்விடயங்கள் கொண்டு வரப்பட்ட போதும் யுத்த காலத்தில் இவ்வாறான இழப்புக்கள் தவிர்க்க முடியாததென்று கூறியுள்ளார். இறுதியாக வன்னியில் அவர் நீர் இறைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்கினார் என அறியப்படுகிறது.

இனப்பிரச்சினை தீர்விற்கு இந்திய அரசியல் முறைக்கொத்த ஒரு தீர்வை முதன்முதலாக முன்மொழிந்ததும், முன்வைத்ததும் நானே. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் குறிப்பாக மிக முக்கியமான இரு வேட்பாளர்களிடம் தேர்தல் பிரசாரத்தின் போது இனப்பிரச் சினையை முன்வைக்காது தேர்தல் முடிந்தபின்னர் எல்லா வேட் பாளர்களும் இணைந்து இனப் பிரச்சினை தீர்விற்கு முடிவெ டுக்கலாமென ஆலோசனை வழங்கியிருந்தேன். பலராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதான இந்திய அரசியல் முறைமையை நான் முன்வைத்தேன். இது சம்பந்தமாக மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிதமராக இருந்தபோதும், ஜனாதிபதியாக தெரிவு செய்யப் பட்ட பின்னரும் இதுபற்றி பேசியுள்ளேன். அது மட்டுமன்றி பல மட்டங்களிலும் உள்ள பலருடனும் இதுபற்றி பேசினேன். நான் தொடர்பு கொண்டவர்களுள் பிரதம மந்திரி, அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், எதிர்க் கட்சி தலைவர்கள், சமயப் பெரியார்கள். வணக்கத்துக்குரிய ஆண்டகைகள், மகாநாயக்கர்கள் பல்வேறு இனப் பிரமுகர்கள் போன்ற பலரும் அடங்குவர். என் ஆலோ சனைக்கு எவ்வித எதிர்ப்பும் நான் எதிர்கொள்ளவில்லை.

இந்திய அரசின் முறைமையை நான் முன்வைத்தமைக்கு முதலாவது காரணம், 'சமஷ்டி', 'ஒற்றையாட்சி' போன்ற சொற்பிரயோகங்களை விரும்பாதவர்களை திருப்திப்படுத்தும். இரண்டாவதாக பாக்கு நீரிணைக் கப்பால் உள்ள எட்டு கோடி தமி ழர்களை அமைதிப்படுத்தும். இன்னும் பலவற்றில் மூன்றாவதாக அன்று இந்தியாவில் அமைந்திருந்த இந்த அமைப்பு முறையாகும்.

பெரும்பான்மை இந்துக்களை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அயல் நாடுகளான இஸ்லாமிய நாடுகளுடன் முரண்பாடுகள் இருந்தபோதும் மிகவும் மதிக்கப்படுகின்ற ஓர் இஸ் லாமிய ஜனாதிபதியாக விளங்கினார். இந்தியாவின் மக்கள் தொகையில் சீக்கிய மக்கள் இரண்டு வீதமாக இருந்தும் சீக்கியர்களின் சிலர் காலிஸ்தான் நாட்டுப் பிரிவினையை கோரியிருந்தும் இன்று பிரதமராக இருப்பவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஓர் சீக்கியராவார். தவிரவும் தமிழர், இஸ்லாமியர், சிங்களவர் எமது மதங்களான பெளத்தமும், இந்து மதமும் எமது கலாசாரம், பண்பாடு அத்தனையும் இந்தியாவிலிருந்து இங்கு வந்தவையே. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டுப் பிரிவினையை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது.

இன்னுமொரு முக்கியமான விட யம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பிரிவினை கோரிய தமிழ்நாட்டில் அக்கோஷம் நிறுத்தப்பட்டு இன்று பிரிவினை பற்றி பேசுவதை ஒட்டு மொத்தமாக எல்லோரும் நிறுத்தி விட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டின் சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்களோடு இந்திய முறையிலான அரசியலமைப்பை பல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயிருந்தது. ஆனால், இலங்கை தமிழரசுக் கட்சி மட்டும் பொறுப்பேற்று புலிகளுடன் பேசியோ அல்லது அவர்களை இண ங்கவோ வைத்திருந்தால் அந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ளக்கூடிய பொன் னான வாய்ப்பு கிட்டியிருக்கும். இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் புலிகளின் முகவர்களாக செயற்பட்டும் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. பல சந்தர்ப்பங்களை இழந்தபின் மக்கள் கொல்லப்பட்டும், கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்ட பின் இந்திய அமைப்புமுறை பற்றி பேசுகிறார் சம்பந்தன் அவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு எனது ஆலோசனையை ஏற்றிருந்தால் எமது மக்களின் பல்வேறு இழப்புகளை தவிர்த்திருக்கலாம்.

இதுவரை காலமாக மெளனமாக இருந்துவிட்டு 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி கல் முனையில் சரத் பொன்சேகாவை ஜனா திபதித் தேர்தலில் ஆதரிக்கும் கூட் டத்தில் இந்த ஆலோசனை முதற் தடவையாக முன்வைத்தது. இத்திட்டம் என்னாலேயே முன்வைக்கப்பட்ட தென்றோ அல்லது இத்திட்டத்திற்கு எனது ஆதரவும் உண்டென்றோ பத்திரிகையோ அல்லது சம்பந்தனோ வெளிப்படுத்தவில்லை.

சம்பந்தன் அவர்களின் இத்தகைய விபரீதப் போக்கே தமிழ் மக்கள் இந் நிலைமைக்கு தள்ளப்பட்டமைக்கு காரணமாகும். இது என்னுடைய திட் டமென முழு உலகமும் அறிந்திருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு சிறந்த வழியென கூறியவர்கள் தமது கூற்றை வாபஸ்பெற வேண்டும். சிறந்ததோர் தீர்வையடைவதற்குப் பதிலாக இத்தகைய சம்பவங்கள் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2006 மே 25 ஆம் திகதி வெளியாகிய ஆங்கில தினசரியில் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படடிருந்தது.

'இந்நாட்டில் இன்றுள்ள மிக சிறியளவிலுள்ள ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அவர்களும் ஒருவராவார். ஏனையோர் கொல்லப் பட்டும், விலைக்கு வாங்கப்பட்டு புலிகளால் மெளனிகளாக்கப் பட்டுள்ளனர். வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள் மக்களை கொல்வதில்லை. எவருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. எவரையும் கொலை செய்யவோ, வெறுப்படையவோ தூண்டுவதில்லை. அவர் பிள்ளைகளைக் கடத்தி ஆயுததாரிகளாக ஆக்குவதில்லை. தம்மக்கள் மீது வரி வசூலிப்பது மில்லை. அவர் இன்று ஈடுபட்டுள்ள பணி ஜனநாயக முறையில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சிரமப்பட்டு உழைப்பதே. அவரின் கனவெல்லாம் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுடனும் கிராமவாசிகளுடனும் சுதந்திரமாக நடந்து திரிவதே ஆகும்.

யாராவது பல்கலைக்கழக மாண வர்களை அல்லது புத்திஜீவிகளை அல்லது அரசியல் ஆய்வாளர் களை அல்லது சுதந்திரமாக எழுதுவோரை, பத்திரிகையாளர்களை எவரையேனும் புண்படுத்தியுள் ளேனா என்று பார்ப்பதற்காக இத் தலையங்கத்தை பல தடவைகள் படித்துப் பார்த்தேன். இவர்கள் தமது எழுத்து மூலமும், பேச்சு மூலமும், பிரசார மூலமும் 56 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட என்னைத் தோற்கடிக்க வடக்கு, கிழக்கே உள்ள தமிழ் மக்களை ஏன் ஈடுபடுத் தினார்கள்?

இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களைக் காப்பாற்ற தவ றியனவே அன்றி நானல்ல. அப் படியானால் இந்த புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும், சுதந்திரமாக எழுதுவோரும், தமிழ்ப் பத்திரிகையின் ஒரு பகுதியினரும் தமிழ்மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்க ளிப்பதே ஒரேவழியென எந்த அடிப்படையில் மக்களை வழி நடத்தினர்?

நாட்டின் நிலை தெரியாமல் பிற நாட்டிலிருந்து தமிழ் தேசிய கூட்ட மைப்பு கட்சிக்கு வாக்களிக்க வேண்டு மென தப்பாக மக்களை வழிநடத்திய இரு பிரபல ஊடகவியலாளர்கள் இன்றாவது தமது தவறை உணர்ந்து பரிகாரம் தேடவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சா ளர் போல செயற்படுகின்ற ஒருவரின் சிந்தனையற்ற பேச்சினையே இன்று பல்கலைக்கழக மாணவர்களும், வேறு பல அப்பாவிகளும் கைதுசெய் யப்படுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேரால் பல கோடி ரூபாய் பிறநாட்டில் சேகரித்து எந்த வகையில் செலவு செய்யப்பட்டது என்பது தெரியாத நிலை.

அத்தகைய முன்சிந்தனையற்ற கூற்றுக்களால் ஏற்படும் குற்றம் குறைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி எத்தனை காலம் பங்கேற்க முடியும்? இது எமது கட்சிக்காரர் தினமும் கேட்கும் கேள்வியாகும். தமிழரசுக் கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து பங்கேற்க முடியாது. நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தொடங்கி இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை நடந்தேறிய பல பேச்சுவார்த்தைகளில் ஒன்றிலாவது எம்முடன் ஆலோசனை நடத்தாத பட்சத்தில் தொடர்ந்து அவர்களுக்கு பல்லக்கு தூக்குவதா என்பதை அவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யுங்கள் என மக்களை வற்புறுத்தியவர்கள்தான் பதில் கூற வேண்டும்.

எல்லா நேரமும் மக்களை ஏமாற்ற முடியாது. விரைவில் ஒருநாள் இந்த அனர்த்தங்களுக்கு பொறுப் பானவர்கள் தமது செயலுக்காக பெரும் இழப்புகளை சந்திக்க வேண் டிவரும்.

பெரும்பான்மை மக்களை முறை ப்படி உரிய உத்தரவாதங்களுடன் அணுகி அவர்களுக்கு ஏதும் ஐய மிருப்பின், அந்த ஐயத்தை போக் கக்கூடியதும் அவர்கள் ஏற்கக் கூடியதுமான தீர்வை முன்வைக்க உதவுமாறு சம்பந்தன் அவர்களுக்கு ஆலோசனை கூற விரும்புகின்றேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com