Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு முதலமைச்சர் பணியாற்றுவதற்கு கூட்டமைப்பு தடையாக இருக்கக்கூடாது - கலாநிதி கே. விக்னேஸ்வரன்

வடக்கு - கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் வரத ராஜப் பெருமாளின் நிர்வாகத்தில் மாகாண சபையின் பிரதம செயலாளராகவும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) ஆலோசகராகவும் பணி புரிந்தவர் கலாநிதி கே. விக்னேஸ்வரன். மாகாணசபை நிர்வாக நடவடிக்கையில் நன்கு பரிச்சயப்பட்ட கலாநிதி விக்னேஸ்வரன், தற்போதைய அரசியல் நிலவரம், வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் வழங்கிய செவ்வியை இங்கே தொகுத்து தருகின்றோம். வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அதிகாரங்களைப் பிரயோகித்து மக்களுக்கு சேவையாற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழிவிட வேண்டுமெனவும் தங்களது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அவரை தமது பொம்மையாக வைத்து ஆட்டுவிக்கக் கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.

இதை ஒரு தனிப்பட்ட விவகாரமாகக் கருத முடியாது. தேங்கிக்கிடக்கும் அத்தனை விடயங்களையும் செயற்படுத்துவது மாகாண சபையின் பொறுப்பாகும். முன்னாள் இரா ணுவ அதிகாரியொருவரை வடக்கு ஆளுநராக நியமித்தமையை எதிர்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் முன்னாள் கடற்படைத் தளபதி ஒருவர் கிழக்கில் ஆளுநராக இருப்பதை பொருட்படுத்தாதது ஏன்? சி.வி.விக்னேஸ்வரன் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராவதை நான் விரும்பியவன். ஏனென்றால் அவர் மூலமாவது ஏதாவது மாற்றம் ஒன்று ஏற்படும் என நினைத்தேன். அத்துடன் வடபுலத்துக்கு அவர் நிறையவே செய்வாரென நம்பினேன். ஆனால் வட மாகாண சபை அமைக்கப்பட்ட பின் என் எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகின.

வடக்கும் கிழக்கும் யுத்தத்தினால் பெருமள வில் பாதிக்கப்பட்ட மாகாணங்கள். ஏனைய மாகாணங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை விட இந்த மாகாணங்களில் வாழும் மக்க ளின் பிரச்சினைகள் சற்று வேறுபட்டவை. ஒரே மாதிரியானவையல்ல. இந்தப் பிரச் சினைகளைக் கையாள முதலமைச்சர் நிறைய கருமமாற்ற வேண்டியிருக்கின்றது.

குறிப்பாக இந்த மாகாணங்களிலே நான் நான்கு பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளேன். யுத்த விதவைகள் விவகாரம், இளைஞர் வேலைவாய்ப்பின்மை, வீட்டு வசதி, கல்வி ஆகியனவே அவை. வடக்கு மாகா ணத்தில் யுத்தச் சூழலால் விதவைகளாக்கப் பட்டவர்கள் அநேகர். எனினும் அவர்களின் சரியான எண்ணிக்கை எனக்கு தெரியாது.

க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் சித்தி பெற்ற ஆயிரக்கணக்கானோர் தற்போது தொழி லின்றி அவதியுறுகின்றனர். தொழில் உரு வாக்கம், வேலைவாய்ப்பு வசதிகள் மாகாண சபையின் கடமைகளில் ஒன்றாகும். இந்தப் பிரச்சினை ஏனைய மாகாணங்களில் இருந்த போதும் ஒப்பீட்டளவில் குறைவே. அவுஸ் திரேலியா மற்றும் ஏனைய நாடுகளுக்கு இளைஞர்கள் சட்டவிரோதமாகச் செல்வதாக நாம் கேள்விப்படுகின்றோம். மிகச் சிலரே பாதுகாப்புக் கருதி இந்நாடுகளுக்கு செல்கின்றனர். அநேகமானோர் தமது குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது, குடும்ப வறுமையைப் போக்கவே தொழில் தேடிச் செல்கின்றனர்.

குடியிருப்பதற்கான வீட்டுப்பிரச்சினை மற்றையது,

பயங்கரவாத யுத்தம் காரணமாக அநேகமான வீடுகள் சேதமாக்கப்பட்டன. அழிக்கப்பட்டன. இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கு உத விகள் நல்கிய போதும் பாதிக்கப் பட்டவர்கள் குடியிருக்க இன்னும் ஏராளமான வீடுகள் தேவைப்படுகின்றன. அடுத்து, பயங்கரவாதத்தின் அடுத்த விளை வாக தமிழர்களின் கல்வி மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை கட்டடங்கள் அழிக்கப்பட்டதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பாரிய கடப்பாடு மாகாண சபைக்கும் அவற்றின் முதலமைச்சருக்கும் உரித்தானது.

இப்போது ஆளுநரை மாற்றும் விவகாரம் பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது. இந்த விடயத்தை இன்னொரு விதமாகவே மாகாணசபை கையாள வேண்டும். ஊடகங்களின் வாயிலாக இல்லாமல் கலந்துரையாடல் மூலம் இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியும். வெறுமனே ஆர்ப்பரித்துக் கொண்டிராமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தி இவ்வாறான மூலோபாயம் எவரையும் புண்படுத்தாது நல்ல தீர்வு காணமுடியும் பலன்களைத் தருமென்றே நான் நம்புகின்றேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இவ்வாறான விடயங்களை நுட்பமாகக் கையாளுவதே சிறந்தது. முதலமைச்சருக்கும் ஆளுநருக்குமிடையிலான புரிந்துணர்வும் இணங்கிப் போகும் தன்மையும் மாகாணசபையை சீராக வழிநடத்த உதவும்.

குடியிருப்பு வசதிகள் போன்ற விவகாரத்தை கையாளுவதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்பில் மாகாணசபைகள் சட்டம் மற்றும் 13வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே மாகாணசபைகள் இவைகள் தொடர்பில் சட்டமியற்ற முடியும். இதற்கு ஆளுநர் ஒத்துழைப்பு நல்காவிடின் குற்றஞ்சாட்ட முடியும். முயற்சிகள் எதையும் எடுக்காது ஆளுநர் ஒத்துழைப்பு நல்க மறுக்கின்றார் என கூறுவது எந்த வகையில் நியாயம் என்று நான் கேட்கின்றேன். இது அபத்தமானதும் கூட.

(சுஐப் எம். காசிம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com