Contact us at: sooddram@gmail.com

 

ஜனவரி 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இலங்கை இந்து மஹா சபையின் அறிக்கை.

அன்புக்குரிய இந்து மக்களே,

நாட்டின் வரலாற்றில் முக்கியமான காலப்பகுதியில் இலங்கையில் உள்ள இந்து சமய மக்கள் உள்ளனர். எங்களது கலாச்சாரமும் அதன் ஆதாரமான நிலங்களும் பொருளாதாரமும் தனித்துவ அடையாளமும் கடந்த காலத்தில் திட்டமிட்டு சீரளிக்கபட்டது. திரும்ப இவைகளை மீளக் கட்டமைக்க முடியுமா என்று நினைக்கவே முடியாதா காலமாகவே கடந்த காலங்கள் இருந்தன.

இந்து சமய மக்களின் பரிதாபகரமான நிலைமைகளை ஒரு பத்திரிகைகளும் வெளியில் கொண்டு வரவில்லை. தமிழ் அரசியல் வாதிகளும் அவர்களின் கௌரவத்தையும் தனித்துவத்தையும் காபாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவர்கள் மீது அப்படியான கட்டுப்பாடுகள் வேற்று மதத்தினரால் போடப்பட்டு உள்ளது. தமிழ் பத்திரிகைகளும் அரசியல் வாதிகளும் அந்த மதத்தினருக்கு சேவகம் செய்யும் ஆட்களாக இருக்கிறார்கள்.

இந்து மக்கள் போரினாலோ இயற்கயினலோ பாதிக்கப்பட்ட போதெல்லாம் தங்களின் அரசியல் மத நலன்களை முன் வைத்து சிலர் பிழைப்பு நடத்தினர். மத மாற்றங்கள் தங்கு தடையின்றி பாரிய அளவில் நடந்தன. எத்தனை எத்தனை மேற்கு உலக நாட்டு பிரதி நிதிகள் எத்தனை வருடமாக வந்து போனார்கள். யாருமே இந்து சமய மக்களின் பிரச்சனைகளை ஒரு சம்பிரதாயத்திற்கு ஆவது பேச வில்லை. அப்படி ஒரு மக்கள் வட கிழக்கில் இருப்பதாக அவர்களும் ஏனைய மதங்களும் தமிழ் அரசியல் வாதிகளும் தமிழ் பத்திரிகைகளும் காட்டி கொள்ளவில்லை.

இந்து சமய குருமார்கள் பிழையாக வழி நடத்தப் பட்ட இளஞ்ஞர்களால் அழிக்கப் பட்ட போதெல்லாம் ஏனைய மதத்தவர்களும் தமிழ் அரசியல் வாதிகளும் தமிழ் பத்திரிகைகளும் அதை கண்டிகாமல் ஏற்றுக்கொண்டன. ஒரு இந்து சமய பிரச்சங்கி கூட வட கிழக்கில் இருக்க முடியாத நிலைமை தான் இருந்தன. இந்து சமய கோவில்கள் 20 வருடங்களாக பூசைகள் இன்றி பராமரிப்பு இருந்தன. யாருமே இதை ஒரு பிரதானமான பிரச்சனையாக எடுக்க வில்லை.

தமிழ் மக்களும் இந்து கலாச்சாரமும் ஒன்றோடு ஒன்று கலந்த இந்து சமயம் தான் இலங்கையில் பல யுகங்களாக இருந்து வருகின்றன. அனால் கடந்த இருபது வருடங்களாக இந்து சமயம் தமிழ் மக்களிடம் இருந்து திட்டமிட்டு அகற்றப் பட்டு வருகிறது. இந்து சமய மக்கள் இந்து சமய குருமார்கள் எல்லா இடங்களிலும் புறந் தள்ளப் படுகிறார்கள். ஏனைய மதத்து குருமார்களுக்கு அல்லது ஏனைய மதத்து மாணவர்களுக்கு இளஞ்ஞர்களுக்கு பட்டதாரிகளுக்கு உத்தியோததர்களுக்கு கொடுக்கப் படும் வாய்ப்புக்கள் இந்து சமயத்தை சார்ந்தவர்களுக்கு கொடுக்கப் படுவது இல்லை.

இந்து சமய பெரியார்களின் சேவைகள் நன்கு திட்டமிட்டு மறைக்கப் படுகின்றன. இந்து சமய பெரியார்களின் சிலைகள் அகற்றப் படுகின்றன. இந்து சமய பெரியார்கள் நிறுவிய ஸ்தாபனங்கள் இயங்காமல் மூடப் படுகின்றன அல்லது அவைகளின் முக்கியத்துவம் முற்றாக குறைக்கப் பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக பத்து வருடங்களுக்கு முன்பு தென் பகுதியில் இருந்த அரசியல் தலைமைகள் இப்போது இல்லை.

இந்து சமய மக்கள் தங்கள் அன்றாட கடைமைகளை தங்கள் சொந்தக் காலில் நின்று செய்கிறார்கள். இந்து ஆலயங்களை தங்கள் சொந்தப் பணத்தில் கட்டி எழுப்பிறார்கள். இந்து ஆலையங்களில் பூசைகள் ஒழுங்காக நடக்கிறது. மத மாற்றம் பெரிய அளவில் நடை பெறாமல் போயுள்ளன. இந்து சமய மக்கள் இலங்கை முழுவதும் தல யாத்திரை பிரச்சனைகள் ஏதுமின்றி செய்து வருகிறார்கள். இப்போது தான் இந்து சமய தமிழ் மக்கள் ஒரு நிம்மதியான நிலைமைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் இன்னும் செய்ய வேண்டிய ஏராளமான கடைமைகள் அவர்களுக்கு உண்டு. மீட்கப் பட வேண்டிய இந்து ஆலையங்கள் கிழக்கு இலங்கையில் ஏராளம் உண்டு. திருகோணமலை கன்னியா புனிதப் பிரதேசம் இந்து மக்களிடம் சேர வேண்டி உள்ளது. இயங்காமல் முடக்கப் பட்ட அல்லது குக்கியத்துவம் குறைக்கப்பட்ட இந்து சமய ஸ்தாபனங்கள் மீள இயங்க வைக்க வேண்டிய மிகப் பெரிய கடமைகள் உண்டு. கிழக்கு இலங்கையில் கைவிடப்பட்ட இந்துக் கிராமங்களில் அதே மக்களை குடியமர்த்த வேண்டிய அவசியம் உள்ளது.

இவைகளை தொடர்ந்து செய்ய வேண்டுமென்றால் இலங்கையில் அமைதி நிலவ வேண்டும். இனங்களுக்கிடையில் ஒற்றுமை நிலவவேண்டும். மதங்களுக்கிடையில் நல்லிணக்கம் இருக்க இருக்க வேண்டும். நல்ல பொருளாதார நிலைமை வேண்டும். ஆரோக்கிய சுகாதாரம் எங்கும் இருக்க வேண்டும். நல்ல பாதைகள் போக்குவரத்துகள் இருக்க வேண்டும். நிரந்தர சமூகப் பாதுகாப்பு வேண்டும். சட்டம் ஒழுக்கு நன்றாக இருக்க வேண்டும். நல்ல உறுதியான ஆட்சியாளர்கள் வேண்டும்.

மேற் கூறியவைகள் அனைத்தும் இலங்கையில் தற்போது உள்ளன. அதற்கு காரண கர்த்தாவாக இருந்த எல்லாம் வல்ல எல்லா மதங்களுக்கும் ஒன்றாக உள்ள கடவுளுக்கு நன்றி சொல்வோம் போற்றுவோம். மேற் கூறிய அனைத்தையும் சாத்தியமாக்கிய தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அவர்களையும் அவர் சார்ந்த அவரது நெருங்கிய குழுவினருக்கும் எங்கள் நன்றியை தமிழ் இந்து சமயத்தவர்கள் சார்பில் தெரிவிக்கிறோம்.
தற்போது உள்ள இந்த ஆரோக்கியமான சுழல் எப்போதும் இருக்க கடவுளை பிரார்த்தனை செய்கின்றோம். கன்றுக் குட்டியில் இருந்து தேறமுடியாவர்கள் எல்லாம் இந்து சமய தமிழ் மக்களுக்கு கட்டளைகள் இட்டம் காலமும் வேண்டாம் களமும் வேண்டாம். தமிழ் இளஞ்ஞர்கள் போராட வேண்டிய சூழலும் வேண்டாம்.

ஆனால் தற்போது உள்ள கிடைத்தற் அரிய நிலைமைகளை எல்லாம் முற்று முழுக்க மாற்றி அமைத்து ஆறு வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமைக்கு கொண்டு செல்லும் பாரிய முயற்சிகள் நடக்கின்றன. அதற்காக பணம் கோடி கோடி யாக செலவழிக்கப்படுகிறது. இந்த மாபெரும் சதியை முறியடிக்க தற்போதுள்ள அரசுக்கு வாக்கு அளி க்க வேண்டிய காலத்தின் கடமை இருக்கிறது. தற்போதைய அரசின் குறைபாடுகள் எப்பொழுதாவது தீர்க்கலாம். அனால் தற்போதைய உறுதியான அரசியல் தலைமையை மாற்றி அமைத்தால் அதன் விளைவால் வரக்கூடிய நிலைமைகளை ஒரு போதும் தீர்க்க முடியாத நிலைமை இருக்கும்.

அபிவிருத்தித் திட்டங்கள் கைவிடப் படும். அரச நிறுவனங்கள் மக்களின் சொத்துக்கள் பணம் சூறையாடும் தனியார்களிடம் போய்விடும். கலாச்சார பண்பாடுகள் மதிப்பு குறைந்து போய்விடும். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள குற்ற வாளிகள் தமிழ் தலைவர்கள் ஆவார்கள். மறு படியும் இந்து சமய தமிழ் மக்கள் கை கட்டி வாய் பொத்தி நிற்க வேண்டிவரும். யார் யாரோ தமிழ் மக்கள் நிலைமைகள் பற்றி பேசி பணம் திரட்டுவார்கள். அநியாயங்கள் எல்லாம் நியாயங்கள் என்று போற்றப்படும். ஏனைய மதத் தலைவர்களும் மேற்குலக பிரதி நிதிகளும் தமிழ் மக்களிடமுள்ள குற்ற வாளிகளுடன் கை குலுக்கி திரிவார்கள். முட்டாள் தனமான செயல்கள் எல்லாம் அதியுயர் புத்தி சாதுரியமான செயல்கள் என தமிழ் பத்திரிகைகள் போற்றும். மத மாற்றங்கள் தங்கு தடை இன்றி பெரிய அளவில் இந்து சமய தமிழ் மக்கள் அவமான பட வைத்து நடக்கும். தற்போதைய தமிழ் தலைமை வழமை போல அந்த மதத்தவர்களின் செயல்களை கண்டு கொள்ளாமல் இருக்கும். இந்து தமிழ் மக்கள் வலது சாரி தென் பகுதி அரசியல் தலைமையால் பல் வேறு நெருக்கடிகளுக்கு உள்ளார்வர்கள். ஒரு வித முன்னேறமும் இந்து தமிழ் மக்கள் அடைய முடியாதபடி மீண்டும் அரசியல் சகதிக்குள் சிக்கி விடுவார்கள்.

இப்படியான நிலைமை மீண்டும் வராமல் இருக்க தற்போதைய ஜனாதிபதியை மீண்டும் ஜனாதிபதி ஆக தெரிவு செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இந்து சமய தமிழ் மக்கள் உள்ளனர் என்பதை அன்புடன் இந்து சமய தமிழ் மக்களுக்கு தெரிவிக்கிறோம்.
உலகம் முழுவதும் இலத்திரன்விய மயமாகிக் கொண்டிருகிறது. மக்கள் தொகை பெருகிக் கொண்டிருக்கிறது. இலங்கையும் இலத்திரன்விய மாக்களில் பின் நிற்க முடியாது உலகத்துடன் இணைந்து போக வேண்டியுள்ளது. இலத்திரன் மயமாக்கலில் உள்ள மிகவும் ஆபத்தான போக்குகளை சரியான பார்வையுடன் கட்டுப் படுத்த வேண்டிய தேவையும் அரசுக்கு உண்டு. பல்வேறு எதிர்கால கடைமைகளை செய்ய வேண்டிய நிலைமையில் இந்த அரசு உள்ளது.


அரசியல் ஷ்திரமின்மையில் சிக்கி செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் போகும் ஒரு நிலைமைக்கு இந்து சமய தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டாம்.
தமிழ் கலாச்சாரத்தை அழிக்க யாழ் நூலகத்தை எரித்தவர்களை,
அடுத்த தடுத்து தமிழர்களுக்கு எதிராக கலவரங்களை ஏற்படுத்தியவர்களை,
தமிழ் கிராமங்கள் பலவற்றை கிழக்கு மாகாணத்தில் அழித்தவர்களை,
தமிழ் இளஞ்ஞர்கள் போராட வேண்டிய சூழலை ஏற்படுத்தியவர்களை, இலங்கைத் தமிழ் மக்களையும் இந்திய அரசையும் பிரித்து வைத்தவர்களை,
தகுதியில்லதவர்களை கொண்டு தமிழ் மக்களின் தலைவிதியை பந்தாட வைத்தவர்களை,
ஆட்சிக்கு மீண்டும் கொண்டு வர வேண்டாம் என்று பணிவாக இந்து சமய தமிழ் மக்களை கேட்டுக் கொள்கிறோம்.


இலங்கைத் தென் பகுதியில் ஒரு உறுதியான அரசும், உள்ளூர் கலாச்சார பண்பாடுகளை ஒழுங்காக மதித்து நடக்கிற அரசியல் தலைமையும், மகிழ்ச்சியான சமூகமும், நல்ல அரச கட்டுமானமும், சட்ட ஒழுங்கும் தமிழ் மக்களின் நலன்களே என்பதை பிரகடனப் படுத்துகிறோம்.
நன்றி.
ப. ராஜன்ராம்.
போதுச்செயாளர் ,
இலங்கை இந்து மஹா சபை. யாழ்ப்பாணம்.
20/12/101

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com