Contact us at: sooddram@gmail.com

 

அன்றிலிருந்து.....
இலங்கையின் விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றப்பட வேண்டிய வரலாற்று தருணம்


1982 இல் ஒரு சர்வசன வாக்கெடுப்பு.
1982 இல் நடக்கவேணடியிருந்த பாராளுமனறத் தேர்தலை நடத்ததாமல் அதன் ஆட்சிக்காலத்தை அடுத்த 6 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக நடத்தப்பட்டது
இது 1978 அரசியல் யாப்பை இந்த நாட்டில் அறிமுகப்படுத்திய ஜேஆரின் உபயம்.
நீட்டிப்பதை ஆதரிப்பவர்கள் விழக்கு சின்னத்திற்கும் நிராகரிப்பவர்கள் பானைச் சின்னத்திற்கும் வாக்களிப்பதென்று.
விழக்கா பானையா என்று தான் தேர்தல் நடைபெற்றது.
ஈபிஆர்எல்எப் இன் மாணவர் அமைப்பான ஈழமாணவர் பொதுமன்றம் தமிழ் தலைமைகளின் வழமையான பகிஸ்கரிப்பு கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. பானைக்கு வாக்களிக்கவேண்டும் என்று அதாவது தேர்தல் இல்லாமல் பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலத்தை நீட்டிப்பதை எதிர்த்து வாக்களிக்குமாறு 'றோணியோ'செய்யப்பட்ட பிரசுரங்களை மக்கள் மத்தியில் வினியோகித்து சுவரொட்டி பிரச்சாரத்தையும் மேற்கொண்டது.
1989 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் படுகொலைசெய்யப்பட்ட விஜயகுமாரண துங்காவினால் ஆரம்பிக்கபட்ட ஸ்ரீலங்கா மக்கள் கட்சி மற்றும் இடது முற்போக்கு அணயின் வேட்பாளர் ஓசி அபயகுணசேகராவை ஆதரித்தது.
1994 இல் 17 வருட ஐக்கிய தேசிய கட்சின் ஆட்சிக் கெதிராக பேரலையாக எழுந்த சந்திரகா அவர்களின தலைமையிலான கூட்டணியை ஆதரித்தது.
வௌ;வேறு கால கட்டங்களில் இடதுசாரிகள் விஜயகுமாரணதுங்க மற்றும் சந்திரிகா இவர்களுடன் இணைந்து ஈபிஆர்எல்எப் சமூக அரசியல் செயற்பாடுகளை மேற் கொண்டு வந்திருக்கிறது.
சந்திரிகா அவர்களின் காலப்பகுதியில் இலங்கையில் இனங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக சமஸ்டி முறையிலான தீர்வு முன்வைக்கப்பட்டது.
2005 தேர்தல்களில் அக்காலத்தில் தொழிற்சங்க மற்றும் மனித உரிமைகளில் அக்கறை செலுத்திய மகிந்தாவை ஆதரித்தோம்.
தமிழ் மக்கள் மத்தியில் பாசிசம் கோலோச்சிய காலத்தில் ஐக்கிய சுதந்திர கூட்டமைபில் வலதுசாரி மற்றும் இனவாத சக்திகளும் இடதுசாரி முற்போக்கு சக்திகளும் தான் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்தன.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மகிந்த ராஜபக்ஸவா அல்லது சரத் பொன்சேகாவா என்று வந்த போது நாம் மகிந்தவை ஆதரித்தோம்.
ஆனால் யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்தும் சமூகங்களிடையே மீளிணைவதற்கான சந்தர்ப்பம் துரதிஸ்டவசமாக தவறவிடப்பட்டது. சமூகத்தின் மிதான கண்காணிப்பு தீவிரப்படுத்தபட்டது
அதிகார அகங்காரம் தலைக்கேறியது.
குடும்பம், உற்றசுற்றம், நட்பு என இறுகியது.
ஜனநாயக சக்திகள் செவி மடுக்கப்படவில்லை.
2 தசாப்தங்கள் கடந்தும் அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்ற பேராவல் குடிகொண்டது.
சுயாதீன ஆணைக்குழுக்களான நீதிச் சேவை, பொதுச்சேவை, பொலிஸ் சேவை மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கள் அமைப்பதற்கான 17 வது திருத்த சட்டமூலம் ரத்துச் செய்ப்பட்டு 18 வது திருத்த சட்ட மூலம் கொண்டு வரப்பட்டது.
நீதித்துறைச்சுதந்திரம் பாரதூரமாக சேதமாக்கப்பட்டது.
அதுவும் ஒரே ஒரு காரணத்திற்காக.
பாராளுமன்றத்திற்கு மாத்திரமல்லாமல் மாகாண சபைகளுக்கும் சட்டவாக்க அதிகாரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்ததற்காக.
உறவு நண்பர்கள் என்று அதிகாரம் கெட்டித்துப்பொனது.
எச்ச சொச்ச ஜனநாயக கூறுகள் சேதமடைந்தன.
இராணுவத்தின் முக்கியத்துவம் அரசியல் மற்றும் சமூகத்தில் அதிகரித்தது.
இவற்றுக்கெல்லாம் பிரதான காரணம் விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே!
இதனை நீக்குவதாக கடந்தகாலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அது காலாகாலத்திற்கு நிகழவில்லை.
இப்போது இந்த விடயம் 36 ஆண்டுகளின் பின்னர் ஒரு இயக்கமாக உருவெடுத்துள்ளது.
இதில் இடதிலிருந்து வலது வரை பலரும் இருக்கிறார்கள்.
இவர்களுடன் இணைந்து செயற்படுவது வரலாற்று அவசியமும் கூட.
வீதியிலிறங்கி ஒரு விடயத்தை சொல்வதற்கு சுயாதீனமாக மக்களை அணிதிரட்டும் பணிகளை மேற்கொள்வதற்கு வௌ;வேறு சமூகங்களைச்சேர்ந்த ஜனநாயக அரசியல் செயற்பாட்டாளர்கள் இணைந்து செயற்படுவதற்குமான இடைவெளி தேவைப்படுகிறது.
எனவே தற்போதைய அதிகார இறுக்கம் நெகிழ்வடைய வேண்டும். இந்த நிலை மாறவேண்டும். கால் நூற்றாண்டுவரை மன்னர்கள் போல் ஆழவேண்டும் என்ற போக்கை ஜனநாயக உணர்வு பகுத்தறிவும் கொண்ட வெகுஜனங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இலங்கையின் மக்கள் 1930களில் இருந்தே வாக்களிக்கும் உரிமையை பிரயோகித்து வருபவர்கள்.
எனவே இன்றைய நிலையில் ஏற்பட வேண்டிய மாற்றத்தில் மைத்திரிபால தலைமையிலான அணி வெற்றி பெறவேண்டிய தேவை இருக்கிறது. அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அரசியல் சக்திகள் எதிரும் புதிருமானவையாக இருப்பினும் இது நிகழவேண்டும். அரசுதரப்பிலும் அவ்வாறே. ஆனால் இங்கு எதிர்பார்க்கப்படுவது நீண்டகாலமாக மக்களை அவலத்திற்குள்ளாக்கிய விசேட அதிகாரம் கொண்ட முறைறை நீக்குவது பற்றியது.
சமூகமாற்றத்திற்கான இயக்கப்போக்கில் ஜனநாயகப்புரட்சி என்ற ஒரு அம்சம் இருக்கிறது. அதில் வௌ;வேறு வர்க்க சமூக சக்திகள் பங்கு பற்றும் என்பது விளங்கிக் கொள்ளப்படவேண்டும்.
நிலப்பிரபுத்துவத்துடன் நவதாராளவாத உலகில் பிரவேசித்திருக்கும் நாடு இலங்கை.
இன்று உலகில் தேசிய அரசு என்ற சொல் பரவலாக அர்த்தம் இழந்திருக்கிறது.
எனவே பல்வேறு கால கட்டங்களில் ஜனநாயக புரட்சி இயக்கங்கள் நிகழவேண்டியிருக்கிறது. அதில் பல்வேறு சமூக வர்க்க சக்திகள் பங்கு பற்றும் பங்கு பற்றவேண்டும் என்பதே யதார்த்தமாகும்.
யதார்த்தத்தில் பெருவாரியான மக்களுக்கு எது வித பயனும் அளிக்காத அதிதீவிர இடது மற்றும் குறுங்குழு வாத நடவடிக்கைகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இவை முதிரா மனங்களின் கோளாறாகும்.
சுகு-ஸ்ரீதரன்
பத்மநாபா ஈபிஆர்எல்எப்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com