Contact us at: sooddram@gmail.com

 

அதிகாரப் பரவலாக்கலுக்கு ஆணைக்குழு புனர்வாழ்வு, புனரமைப்புக்கு நிபுணர்குழுவடக்கு - கிழக்கு முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள்

அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தைச் சரியான முறையில் செயற்படுத்துவதற்கு உடனடியாகத் தேவைப்படுவது ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவாகும். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள், விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக் கூடிய திறமையாக நிர்வகிக்கக் கூடிய நிர்வாகத் திறன் மிக்க நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கள் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்று இணைந்த வட கிழக்கு மாகாண சபைகளின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கேசரி வார இதழுக்குத் தெரிவித்தார்.

அத்துடன் போரின் காரணமாக அகதிகளாகப் போன 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மறுவாழ்வு, அழிந்து போய்க கிடக்கின்ற வடக்கு கிழக்கை மீள் கட்டி எழுப்புதல் போன்ற விடயங்களை அரசாங்கம் வெறுமனே நடைமுறையில் இருக்கின்ற அரசு இயந்திரத்தில் மாத்திரம் தங்கியிருப்பதில் பலனில்லை. எனவே புனர்வாழ்வு, மீள் கட்டுமாணப் பணிகளுக்கான ஆற்றல் வாய்ந்தவர்களைக் கொண்ட நிபுணர் குழுவினை அமைக்க வேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கூறியதாவது,.

அதிகாரப் பரவலாக்கள் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துவதற்கு உடனடியாக தேவைப்படுவது ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்கும் பட்சத்தில் அதில் அரசியல் யாப்பு சம்பந்தப்பட்ட நிபுணர்கள் விடயங்களை திறமையாக நிர்வகிக்கக் கூடிய நிர்வாகத் திறனுடைய நிபுணர்கள், மேலும் சில அரசியல் தலைவர்களை உள்ளடக்கி அந்த ஆணைக்குழுவை உருவாக்குவதன் மூலம் இப்பொழுது அரசியல் யாப்பின் தாகமாக இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை எப்படி சிறந்த முறையில் அதை நிறைவேற்றலாம் என்பது பற்றி தீர்மானித்து அந்த தீர்மானிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுகின்ற பொழுது முதற்கட்டமாக/ முதற்படியாக 13 ஆவது திருத்தத்தை அதிகாரப் பகிர்வு சம்பந்தமான விடயத்தின் ஒரு செயன்முறைக்கு உயிராக மாற்றலாம். ஏனென்றால் இந்த அதிகாரப் பகிர்வு சம்பந்தப்பட்ட விடயத்தைப் பற்றி பேசி, பேசி அல்லது அதைப் பற்றிய நாடாளுமன்ற குழு அல்லது அரசியல் கட்சிகளுக்கிடையிலான குழு என்ற கடந்த 20 வருடங்களாக இவ்வாறு மங்கள முனசிங்க கமிட்டி தொடக்கம், பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான நாடாளுமன்ற கமிட்டி என காலம்போய் விட்டது..

இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக அந்த 13 ஆவது திருத்தத்தை சிறந்த முறையில் எப்படி நிறைவேற்றுவதென்று அதை தீர்மானித்து நிறைவேற்ற வேண்டும். அதற்கு அடுத்த கட்டமாக இந்த 13 ஆவது திருத்தத்தையே எப்படி திருத்துவது 13 ஆவது திருத்தத்திற்கு மேலான, அதிகார பரவலாக்க வேலையை எப்படி வழங்குவது என்றவிடயங்களை அரசியல் கட்சிகள்தீர்மானித்துக் கொள்ளலாம். அதை எதிர்காலத்தில் நடைமுறைக் கொள்ளலாம்..

இரண்டாவதாக இப்பொழுது தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினை, 5 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களில் அகதிளாகி போனவர்களின் மறுவாழ்வு, புனர்வாழ்வு இந்த 30 வருட யுத்தத்தினால் அழிந்து போய் கிடக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுடைய புனரமைப்பு, அதாவது அதனுடைய உட்கட்டமைப்புகள் அவற்றினுடைய வர்த்தகம், அதனுடைய பொருளாதாரம் ஆகியவற்றினுடைய தனிப்பட்டவர்களின் வீடுகள், ஏனைய கட்டுமானங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் வெறுமனே அரசாங்க நிர்வாக இயந்திரத்தில் மட்டும் தங்கியிருக்காமல் அதற்கு உரிய வகையில் இருப்பதாகவோ அல்லது செயற்படக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாகவோ காணப்படவில்லை. ஆகவே அரசாங்கம் உடனடியாக புனரமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென ஒரு திறமை வய்ந்த அல்லது ஆற்றல் வாய்ந்தவர்களைக் கொண்டு ஒரு கமிட்டியை நியமித்து அவர்கள் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தங்கி நேரடியாகவே அந்த பிரதேசங்களைப் பார்வையிட்டு அபிவிருத்திகளை திட்டமிட்டு அந்த அபிவிருத்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும்..

ஏனென்றால் இவ்வாறான சேவை மக்களோடு அந்த பிரதேசத்தோடு இருந்து செயற்படுகின்ற நிபுணர் குழு இல்லாமல் அரசாங்கம், கொழும்பிலிருந்து சில விடயங்களை தீர்மானிப்பதும் பாரம்பரிய அரசாங்க கட்டமைப்பினூடாக செயற்படுவதன் மூலம் அது செயலில் கூடியதாக இல்லை என்பதை நாங்கள் நடைமுறையில் காண்கிறோம். எத்தனையோ விதமான தடைகள் அந்த அமைப்பிலே காணப்படுகின்றன. மேலும் இந்த நிர்வாகங்கள் விடுதலைப் புலிகள் இருந்த கால கட்டத்தில் ஒரு பிழையான போக்குகளுக்கு அவை செயற்படுத்தப்பட்டதனால் அந்த போக்குகள் இன்றைக்கும் தொடருகின்றன. நிலைமைகளே அந்த நிர்வாக அமைப்பில் காணப்படுகின்றது. ஆகையால் இந்த நிர்வாக அமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை இருக்கின்ற அதேவேளை அந்த வொரு நிர்வாக அமைப்பில் தங்கியிருக்காமல் ஒரு விரைவுபடுத்தப்பட்ட புனரமைப்பு அபிவிருத்தி திட்டத்தை மேற்கெள்வதற்கென ஒரு நிபுணர்கள் குழு ஒன்றை அரசாங்கம் உடனடியாக நியமித்து செயற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும். என்னுடைய
ஆலோசனையாகும் என்றும்கூட அதனை கொள்ளலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com