Contact us at: sooddram@gmail.com

 

உள்ளுர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சலுகைகளை வழங்க முடியும்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கடந்த 30ஆம் திகதியன்று வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரையின் தொகுப்பு.

நாம் அங்கத்துவம் வகிக்கும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய நிறுவனங்களிடம் இருந்து அங்கத்துவ நாடு என்ற வகையில் எமக்குள்ள உரிமையானது அவற்றில் இருந்து தேவையான நிதி உதவி அல்லது நிதி வசதிகளை பெற்றுக்கொள்வதாகும். மஹிந்த சிந்தனையின் பிரகாரம் இலங்கையின் பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் முதற் தடவையாக 2.6 பில்லி யனை எமக்கு வழங்கியது.

எந்த அரச நிறுவனத்தையோ வேறு சொத்துக்க ளையோ தனியார்மயப்படுத்த மாட்டோம் என நாம் யிணிபி இற்கு தெளிவாக கூறினோம். சம்பளம் குறைக்கவோ நிவாரணத்தை நிறுத்தவோ குறைக் கவோ மாட்டோம் எனவும் நாம் நிபந்தனை விதித்தோம். கல்வி, சுகாதார, போக்குவரத்து மற்றும் நடவடிக்கைகளை நிறுத்துவதில்லை எனவும் யிணிபி இற்கு கூறினோம்.

ரவி கருணாநாயக்க எம்.பி கூறியது போல வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை மேலும் குறைக்க வேண்டும். இதில் மறைப்பதற்கு எதுவு மில்லை. துண்டு விழும் தொகையை நாம் 5 வீதமாக குறைப்போம்.

ஆனால் நாம் முன்னெடுத்து வரும் துரித அபிவிருத்தி காரணமாக தற்பொழுது துண்டு விழும் தொகையை 8 வீதமாக வைத்திருக்க வேண்டியுள்ளது.

கடந்த வருடம் துண்டு விழும் தொகை 9.9 வீதம் ஆகும். சர்வதேச நாணய நிதியத்திடமோ உலக வங்கியிடமோ மட்டுமன்றி நாம் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கூட கடன் பெறுவோம்.

ஆனால் எமக்கு ஏற்க முடியாத நிபந்தனைகள் இருந்தால் அதனை ஏற்க மாட்டோம். அவர்களுக்கு மேலும் நிபந்தனை களை விதிக்க தேவையாக இருந்தது. ஜி. எஸ். பி. பிளஸ் சலுகை பெற ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சென்றோம்.

அவர்களின் நிபந்தனைகளுக்காக எமது நாட்டின் இறைமையையோ ஆள்புல ஒருமைப்பாட்டையோ விட்டுக்கொடுக்க முடியாது.

இலங்கையில் முதல் முறையாக தேர்தல் விஞ்ஞாபனமொன்றை முன்வைத்து அதனை வாக்குறுதிப் பத்திரமாக்காமல் அரசாங்கத்தின் எதிர்கால பார்வை என்ற வகையில் அரசாங்கத்தின் வேலைத் திட்டமாக தொடர்ந்து நடைமுறைப்படுத்திய ஒரே அரசாங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமாகும்.

சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக இலங்கை ஒரே நாடு என்ற வகையில் எமது தேசிய கொடி அனைத்து இடங்களிலும் பறக்கக்கூடிய நிலைக்கு நாம் இந்த நாட்டை கொண்டு வந்துள்ளோம்.

அது மட்டுமல்ல, தமது பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மனைவி, கணவன், தாய் தந்தையர் ஆகியோ ரைப் பற்றிய எந்தவித பயமும் இல்லாமல் வசிக்கும் நிலை இப்போது உள்ளது.

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கவும், பொது மக்களை பாதுகாக்கவும் தேசிய பாதுகாப்புக்கும் நாம் முதலிடத்தை வழங்கியுள்ளோம். எமது எதிர்பார்ப்பு ஒழுக்கம் மிகுந்த, சட்டத்தை மதிக்கும் மற்றும் கட்டுப்பாடு மிகுந்த சமூகத்தை கட்டியெழுப்புவதாகும்.

அவ்வாறான சமூகத்தில் இன, மத, ஜாதி அல்லது பிரதேச அல்லது வர்க்க பேதங்கள் இன்றி, எந்த இடத்திலும், எந்தவொரு வரும் வசிக்க முடிந்த நாட்டை உரு வாக்குவதே ஜனாதிபதி உள்ளிட்ட எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

நாட்டின் பொருளாதாரம் பல்வேறு விதமாக கணிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம் சரியான வழியில் செல்கிறதா என அளவிடும் சர்வதேச மட்ட அளவீடு உள்ளது.

அதில் முதலாவது பொருளாதார வளர்ச்சி வீதமாகும். உலக பொருளாதார நெருக்கடியின் போது வேறு நாடுகளின் பொருளாதார வேகம்–8 வீதமாக இருந்தது. அபிவிருத்தி அடைந்த நாடுகளின் வளர்ச்சி வீதம்–2.5 ஆக இருந்தது.

ஐரோப்பிய வலயம்–3.7 ஆகவும் அமெரிக்காவின் வளர்ச்சி வீதம்–4.8 ஆகும். இத்தகைய நிலையில் இலங்கை தொடர்ந்து 3 வருடங்களாக 7 வீதத் திற்கு நெருக்கமான வளர்ச்சி வீதத்தை பேணி வந்தது.

உலக பொருளாதார நெருக்கடியின் போது கூட இலங்கை 3.5 வீத வளர்ச்சி கண்டது. 2009 முதல் காலாண்டில் 2.6 வீதமாக இருந்த எமது பொருளாதார வளர்ச்சி வீதத்தை 2010 முதல் காலாண்டில் 7.1 வீதமாக உயர்த்த எம்மால் முடிந்தது. ஒரு துறையில் மட்டுமன்றி சகல துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் 3.6 வீதமாக இருந்த விவசாயத் துறை வளர்ச்சி வீதம் 2010இல் 9 வீதமாக அதிகரித்துள்ளது. கைத்தொழிற் துறை 1.9 வீதமாக இருந்தது. 6.9 வீதமாக உயர்ந்துள்ளது. ஒரு வீதமாக இருந்த சேவைத் துறை இன்று 6.7 வீதமாக உள்ளது.

கடந்த வருடம் பணவீக்கம் 25 வீதமாக இருந்தது. 1978 முதல் 2008 வரை 11.7 வீதமாக பணவீக்கம் காணப்பட்டது. ஆனால் தற்பொழுது 4.6 வீதமாக குறைந்துள்ளது. இதனை 7 வீதமாக வைத்திருக்க திட்டமிட்டுள் ளோம். 10 வருடங்களின் பின்னரே பண வீக்கம் தனி இலக்கமாக குறைந்துள்ளது.

வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர் கள் குறித்து எதிர்க்கட்சி தவறான புள்ளி விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. 1995, 1996 களில் 24.3 வீதமாக இருந்த வறியோர் வீதம் 2006, 2007 ஆகும் போது 12.6 வீதமாக குறைந்தது. 1995, 96 களில் ஹம்பாந்தோட்டையில் 26.2 வீதமாக இருந்த வறியோர் வீதம் இன்று 10.5 வீதமாகக் குறைந்துள்ளது.

சமுர்த்தி நிவாரணம் பெறுவோர் அன்று 19 இலட்சம் பேர் இருந்தனர். 2009 இல் 16 இலட்சமாக குறைந்தது. நாம் சமுர்த்தி நிவாரணம் பெறுவோரை வளம்பெறச் செய்தோம். இதனால் அவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

அதற்கேற்ப நாம் நிவாரணத் தொகையை அதிகரித்தோம். அது மட்டுமன்றி அவ்வாறான நிவாரணம் பெறும் குடும்பங்களை நாம் ஊக்குவித்தோம். அவர்களை பலப்படுத்தினோம். வளம் பெறச் செய்தோம்.

2004ல் 8.3 சதவீதமாக இருந்த வேலையில்லா பிரச்சினை 2008இல் 5.4 சதவீதமாக குறைந்தது. இப்போது 5.8 சதவீதமாக உள்ளது. இதன்படி வேலையில்லா பிரச்சினையை 5 வரை குறைப்பதற்கு சில நேரம் அதைவிடக் குறைப்பதற்கு எமக்கு வாய்ப்பு உண்டு.

அது மட்டுமல்ல பட்டதாரிகள் பிரச்சினைக்கு நாம் பதில் அளித்ததைப் போல் கிராமப்புற பட்டதாரிகளுக்கு கிராமங்களிலேயே செயற்படும் வகையில் வாய்ப்பளித்து அவர்களை ஜன சபா செயலாளர்களா கக் கூடிய வகையில் நியமனம் வழங்கவுள்ளோம்.

நாட்டின் பொருளாதாரத்தை முறையாக கொண்டு செல்ல அந்நிய செலாவணி விகிதம் நிலையாக வைத்திருக்கப்பட வேண்டும்.

கடந்த வருடம் முழுவதும் நாம் அந்நிய செலாவணி விகிதத்தை நிலையாக வைத்திருந்தோம். வேறு வருடங்களில் வருடாந்தம் சுமார் 8 சத வீதத்தில் அந்நிய செலாவணி அதிகரித்திருந்தது.

எமது ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் நாம் இந்த விகிதத்தை கூடியவரை நிலையாக வைத்திருக்கிறோம். அதே போன்று எமது வெளிநாட்டு சேமிப்பு வரவர அதிகரித்துச் செல்கிறது.

இன்று அது 5000 பில்லியனை தாண்டி 5500 பில்லியனையும் தாண்டியுள்ளது இன்னும் 5.8 மாதங்கள் மீதி உள்ளன. இவ்வாறு அந்நிய செலாவணி விகித த்தை பலப்படுத்துவதன் மூலம் அதனை நாம் மேலும் நிலையாக வைத்திருக்க வும் முடியும்.

கடந்த செப்டம்பரில் வட்டி விகிதம் 25 முதல் 30க்கு இடையில் இருந்தது. இது சிறிய கைத்தொழில் செய்வோ ருக்கும், எமது வியாபாரிகளுக்கும் பெரிய பிரச்சினையாக இருந்தது. அவர்களது வர்த்தகத்தை நடத்திச் செல்லவும் வர்த்தகத்தை விரிவுபடுத் தும் போதும் சிரமங்களுக்கு முகங் கொடுக்க வேண்டியிருந்தது.

இன்று அது 14 முதல் 16 வரையிலான மட்டத்தில் உள்ளது. இவ்வாறு பண வீக்கம் குறைந்ததினால் வட்டி விகிதத் தையும் குறைக்க எம்மால் முடிந்தது. அதன்மூலம் கைத்தொழில்களுக்கு பெறக்கூடிய கடனை அதிகரிக்கவும் எம்மால் முடிந்தது.

தனிநபர் வருமானம் அதிகரித்துள் ளது. பண வீக்கம் குறைந்துள்ளது. வேலையில்லா பிரச்சினை குறைந்துள் ளது. பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு சேமிப்பு அதிகரித்துள்ளது.

வட்டி விகிதம் குறைந்துள்ளது, அந்நிய செலாவணி நிலையாக உள்ளது. உள்ளூர் மொத்த உற்பத்தி விகிதம் 2002 இல் 105.6 சதவீதமாக இருந்தது. அரசாங்க கடன் இன்று 80 சத வீதமாக குறைந்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன.

நாட்டின் உற்பத்தித் துறையையும் உணவுப் பாதுகாப்பையும் சமமாக பேணும் மஹிந்த சிந்தனை கொள்கையை நாம் முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக இந்த நாட்டு விவசாயிகள், மீனவர்கள், கைத்தொழிலாளர்களை பாதுகாப்பது எமது பிரதான நோக்கமாகும். ஏனென்றால் ‘உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமே பாவனை யாளர்களுக்கு ஏதும் சலுகை வழங்க முடியும்.’

கடந்த 4 வருட காலத்தில் இந்தக் கொள்கையை செயற்படுத்தியதாலேயே எம்மால் சிறந்த பெறுபேற்றை பெற முடிந்தது. அதனால் இன்று உற்பத்தி அதிகரித்துள்ளது.

இது தவிர போதி யளவு பொருட்கள் சந்தையில் காணப் படுகின்றன. பொருட்களின் விலை களும் குறைந்து வருகிறது. இதுதான் மஹிந்த சிந்தனை கொள்கையாகும். அதனாலே மக்கள் எமது கொள்கை களை ஏற்றுள்ளனர். இன்று விவசாயி களின் வருமானம் அதிகரித்துள்ளது.

அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவோம். ‘உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய சகலவற்றையும் இங்கு உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக சமுர்த்தி பெறுவோர், பெண்கள் ஆகியோரை கூடுதலாக ஈடுபடுத்த உள்ளோம். உற்பத்திகளை அதிகரிப்பதற்குத் தேவையான சகலவித நிவாரணங்கள், ஊக்குவிப்பு என்பவற்றையும் வழங்குவோம்.’

பால் பண்ணையாளர்களுக்கு கடந்த வாரம் வரை 32 ரூபாவே வழங்கப் பட்டது. ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் இது 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பால் பண்ணையாளர்களை ஊக்கு விப்பதை விடுத்து நியூஸிலாந்திலோ அவுஸ்திரேலியாவிலோ உள்ள பால் பண்ணையாளர்களுக்கு எம்மால் நிவாரணம் வழங்க முடியாது.

எமது கிராமங்களில் உள்ள பால் பண்ணையாளர்களுக்கே இந்த வாய்ப்பை வழங்க வேண்டும். இதேபோல பாவனையாளர்களை பாதுகாக்கவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

உலகச் சந்தையில் பால்மா விலை அதிகரித்த போது நாம் அறவிடும் வரியை படிப்படியாக குறைத்தோம். ஐ. தே. க. ஆட்சிக் காலத்தில் நூறு ரூபாவுக்கு மேல் இருந்த வரி இன்று 5 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உலக சந்தையில் பால்மா விலை குறையும் போது அந்த நன்மையில் ஒரு பகுதியை பாவனையாளர்களுக்கு வழங்கவும் உள்நாட்டு பால் உற்பத்தி யாளர்களை பாதுகாப்பதற்காக வரி அறவிடவும் நடவடிக்கை எடுக்கப் படுகிறது.

அரிசி விலை குறைந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். கடந்த தேர்தலின் போது சில சக்திகள் சந்தையில் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கினர். அந்த சமயம் சந்தைக்கு அரிசி கொண்டுவரக்கூடிய வழிவகைகள் இருக்காததால் அரிசி விலை அதிகரித் தது. அரிசித் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

இதன் போது நாட்டு மக்களை பாது காப்பதற்காக சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்தது. விருப்பமின்றி யேனும் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக் கப்பட்டது. சிலர் இதனைப் பயன்படுத்தி அதிகளவில் அரிசி இறக்குமதி செய்தனர்.

ஜனவரி மாதத்தில் மாத்திரம் 80,306 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. பெப்ரவரி, மார்ச் மாதங்களிலும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டது. இதனுடன் தொடர்புபட்டதாக மா விலையும் காணப்படுகிறது.

மஹிந்த சிந்தனையின் கீழ் 4 வரு டங்களாக மா பாவனையை படிப்படி யாக குறைத்து 50 வீதமாக மட்டுப் படுத்தியுள்ளோம். அரிசி விலைக்கு மாற்aடாக மாவிற்காக இறக்குமதி வரி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டது. நாம் இவ்வாறு நிவாரணம் வழங்க வில்லை. மாவுக்கான வரியை குறைத்து பால்மாவினதும் பாணினதும் விலைகளைக் குறைத்தோம்.

நெல் சந்தைப்படுத்தும் சபையிடம் தற்பொழுது 40,000 மெற்றிக் தொன் நெல் கையிருப்பில் உள்ளது. விவசாயிகளிடம் நெல் இருக்கிறது. ‘நாம் பயிரிடுவோம் நாட்டை காப்போம்’ திட்டத்தின் கீழ், கைவிடப் பட்ட வயல் நிலங்களில் பயிரிடப் படுகிறது.

வடக்கு, கிழக்கில் புதிதாக பயிரிடப்படுகிறது. இந்தப் போகத்தின் போதும் அடுத்த பெரும் போகத்தின் போதும் கூடுதலாக பயிர்ச் செய்கை செய்ய விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இந்த நாட்டிலுள்ள அனைவரினதும் அரிசிப் பாவனை இதேபோன்று தொடர்ந்தால் 4,49,113 மெற்றிக்தொன் அரிசி டிசம்பர் மாத மாகும் போது மேலதிகமாக கையிருப் பில் இருக்கும்.

‘எமது பிள்ளைகளுக்கு பால்மா வழங்குவதற்குப் பதிலாக தாய்ப்பாலை யும் உள்நாட்டு பசும் பாலையும் கொடுப்பதோடு, இந்த நாட்டு மக்களு க்கு மூன்று வேளையும் சோறு சாப் பிடக்கூடிய சூழலை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.’

2008–2009 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அரிசி விலை பெரும ளவு குறைந்துள்ளது. 2009ல் சம்பா விலை 76.57 ரூபாவாக இருந்தது. இன்று 58 ரூபாவாக குறைவடைந்துள்ளது. 2009ல் 63.64 ரூபாவாக இருந்த சிவப்பரிசி விலை 48 ரூபாவாக குறைந்துள்ளது. 65.44 ரூபாவாக இருந்த நாட்டரிசி 48 ரூபாவாகவுள்ளது.

இந்த விலைகள் மேலும் குறைந்தால் விவசாயிகளுக்கு விவசாயத் துறையை கைவிட நேரிடும். உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கவும் உள்நாட்டு உற்பத்தியை காக்கவும் அரிசி விலையை ஒரே மட்டத்தில் வைத்திருக்க வேண்டியுள்ளது.

நெல் சந்தைப்படுத்தும் சபையை மீள ஆரம்பித்து கூட்டுறவுத் துறை மற்றும் தனியார் துறைக்கான ஒத்துழைப்பை வழங்கி விவசாயியை பாதுகாக்கவும் பாவனையாளர்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சோள உற்பத்தியிலும் நாம் தன்னிறைவு அடையும் நிலையை எட்டியுள்ளோம். அடுத்தபோகத்தின் போது நமது விவசாயிகள் சோள உற்பத்தியில் தன்னிறைவை அடைவர் என்று நம்புகிறேன்.

கால்நடை வளர்ப்பிலும் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில காரணங்களினால் உள்நாட்டு கோழி உற்பத்தி குறைந்துள்ளது. மாதாந்தம் 11 ஆயிரம் மெற்றிக் தொன் கோழி தேவைப்படுகிறது. ஆனால் 8,000 மெற்றிக் தொன்னே உற்பத்தி செய்யப்படுகிறது.

3,000 மெற்றிக் தொன் தட்டுப்பாடு காணப்படுகிறது. நமது நாட்டின் கோழி இறைச்சிக் கைத்தொழில் முன்மாதிரியாக இருப்பதாக உலக வங்கி அறிக்கைகள் கூறுகின்றன. கோழி உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கு தெளிவான வழிமுறை களை முன்மாதிரியாக பெறவேண்டும்.

கோழி இறைச்சி விலை அதிகரித்து ள்ளதால் அரச நிறுவனமொன்றினூடாக ஒரு தடவை மாத்திரம் கோழி இறைச்சி இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சருக்கு சந்தர்ப்பம் வழங்கப் பட்டுள்ளது.

தற்பொழுது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாதவாறு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரிசி இறக்குமதி செய்தபோது, ஏற்பட்டது போன்ற நிலைமை கோழி இறைச்சித் தொழிலுக்கு ஏற்பட இடமளிக்க மாட்டோம்.

கடந்த வருடத்தில் கடல் நீர் மீன் உற்பத்தி 6.8 வீதத்தினாலும் நன்னீர் மீன் உற்பத்தி 4.7 வீதத்தினாலும் அதிகரித்துள்ளது.

நகரத்தில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல, கிராமத்தில் உள்ள மக்களுக்கும் அந்த வசதிகளை பெற்றுத் தர வேண்டியுள்ளது. எமது நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் கிராமங்களிலும் தோட்டப் புறங்களி லுமே வசிக்கின்றனர். அது 80 சத வீதமாகும்.

அனைவருக்கும் நகரில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் மின்சாரம் குடிப்பதற்கு நல்ல நீர், தொலைபேசி, பாதைகள், மற்றும் உட்புகும் வீதிகளை வழங்குவதற்கு ‘கம நெகும’ வேலைத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசதிகளை ஏற்படுத்தினார்.

இதுவரை அனைத்து வரவு செலவுத் திட்டத்தின் மூலமும் பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. அமைச்சுக்கு அல்லது திணைக்களத்துக்கே 2008 ஆம் வருட வரவு செலவுத் திட்டத்தில் முதல் முறையாக ஜனாதிபதி அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்கினார்.

அதனால்தான் இன்று இலங்கையில் 36 ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. 14 ஆயிரம் கிராமசேவகர் பிரிவுகள் இருக்கின்றன. இந்த 36 ஆயிரம் கிராமங்களிலும் 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் ஒரு பாதைக்காவது கொன்கிaட் போடப்பட்டுள்ளது.

மின்சாரத்தின் பக்கம் பார்த்தால் அன்று 2005 இல் 33 இலட்சத்து 96 ஆயிரத்து 47 பாவனையாளர்கள் இருந்தனர். அது 76 சதவீதமாகும். 2010 ஏப்ரல் மாதமளவில் பாவனையாளர் எண் ணிக்கை 43 இலட்சத்து 37 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளது. இது 87 சதவீதமாக வளர்ச்சி அடைந் துள்ளது.

மின் திட்டங்களுக்காக 2006 இல் 2051 மில்லியன் ரூபாவும் 2007 இல் 2737 மில்லியன் ரூபாவும் 2008 இல் 4020 மில்லியன் ரூபாவும் 2009 இல் 4515.2 மில்லியன் ரூபாவும் 2010 இல் 6468 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப் பட்டுள்ளதை நாம் இந்த சந்தர்ப்பத் தில் இங்கு குறிப்பிடுகின்றோம்.

இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது கிராம மின் திட்டங்களுக்கு மட்டுமேயாகும். நுரைச்சோலை, மேல் கொத்மலை, கெரவலப்பிட்டிய, உமா ஓயா போன்ற பாரிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கணக்கில் எடுக்காமல் கிராமப்புறங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு மட்டுமே மேற்படி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகம், குடிநீர், மின்சாரம், வீடு, என்ற அனைத்து பிரிவுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் எமது எதிர்கால திட்டங்களின் எதிர்பார்ப்பு கிராமம், மற்றும் தனி நபரை பலம் பெறச் செய்து குடும்பத்தை கட்டியெழுப்பி கிராமத்தை மேம்படச் செய்வதாகும்.

பிரதேச சபை, உள்ளூராட்சி நிறுவனங்கள் போன்று அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அமைக்கப்பட்டுள்ள பிரதேச அபிவி ருத்தி கமிட்டிகளை வலுப்படுத்தி அதன் மூலம் அப்பிரதேசத்தில் உள்ள கிராமங்களுக்கிடையிலான வேலைத் திட்டங்களை வலுப்படுத்தி ஒரு கிராமத்துக்கு மட்டும் என கட்டுப்படுத்தப்படாது இரண்டு, மூன்று கிராமங்கள் அல்லது நான்கு, ஐந்து கிராமங்கள் சம்பந்தப்படும் வகையிலான அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நீர்ப்பாசன அல்லது வேறு வீதித் திட்டங்கள், சந்தைகள் பஸ் நிலையங்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக அப்பிரதேச அபிவிருத்தி கமிட்டிகளை வலுப்பெறச் செய்ய நாம் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

அது மட்டுமல்ல, ‘மஹிந்த சிந்தனை - எதிர்கால நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளவாறு ‘வடக்கு வசந்தம் மற்றும் ‘கிழக்கின் விடியல்’ மூலம் கிடைத்த அனுபவங்களால் பயனைப் பெற்று மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இப்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 7500 மில்லி யன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் ‘ரஜரட்ட நவோதய’, ‘வயம்ப புபுதுவ’, ‘புபுதமு வெல்லஸ்ஸ’, ‘கந்துரட்ட உதானய’, ‘சபரகமு அருணாலோகய’ மற்றும் ‘ரண் அருண’ வேலைத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டு அந்த மாகாணங்களை மேம்படுத்துவதன் மூலம் அந்த பிரதேசங்களின் அபிவிருத்தியை நாம் வலுப்படுத்துவோம்.

இலங்கையில் பின்தங்கிய மாகாணங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இனங்கண்டு கொண்டதனால்தான் ‘மஹிந்த சிந்தனை - எதிர்கால நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்ட மாகாணங்களின் அபிவிருத்திக்காக விசேட கவனம் அல்லது நிதி ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டது.

அதன் மூலம் எமது நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களும் சமமான வகையில் அபிவிருத்தி செய்யப்பட எமக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

அதேவேளை மீள் குடியமர்வு பற்றியும் நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த வேண்டும். தெற்கில் உள்ள சில தோல்வியடைந்த அமைப்புகள் வடக்குக்கு சென்று அங்கு கட்டியெழுப்பப்பட்டு வரும் சமாதானம், நட்புறவு ஆகியவற்றை சிதைக்க முயற்சிக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் நடவடிக்கை எடுத்து வருவதையிட்டு நான் சந்தோஷமடைகிறேன்.

கிழக்கைப் போன்று வடக்கிலும் பாரிய அளவில் மனித இடம்பெயர்வுகள் இடம்பெற்றன. இந்த இடம்பெயர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இது பல வருடங்களாக இருந்து வரும் இடம்பெயர்வாகும். சிலர் இடம்பெயர்ந்து 20, 30 வருடங்கள் ஆகியதும் உண்டு.

எமது அமைச்சர்களில் ஒருவரான ரிஸாட் கூட இடம்பெயர்ந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதேபோல் மேலும் பலர் அவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.

அந்த மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பமாவதோடு கிழக்கின் மூதூர் பகுதி முஸ்லிம் மக்கள் 40,000 பேர் இடம்பெயர்ந்து கந்தளாய் பகுதிக்கு வந்தனர். அன்று தொடக்கம் மக்கள் இடம்பெயர்வது ஆரம்பமானது. இதற்கு முன்னர் சேருநுவர, கெபதிகொல்லாவ, போன்ற பகுதி மக்கள் இடம்பெயர்ந்தனர்.

இதற்கு முன்பிருந்த அரசாங்கங்களின் கொள்கைகளை விட வேறுபட்ட கொள்கையை பின்பற்றி இடம்பெயர்ந்த மக்களை நாம் மிக விரைவாக மீள்குடியேற்றினோம். இதனால் மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த 40 ஆயிரம் முஸ்லிம்களை 44 நாட்களுக்குள் மீள்குடியேற்ற முடிந்தது.

அன்று தொடங்கி ஈச்சிலம்பற்று சாம்பூர், வெருகல், உப்பாறு, வாகரை ஆகிய சகல பிரதேசங்களிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்களை நாம் விரைவாக மீள் குடியேற்றினோம். இந்த மக்களோடு வட பகுதி மக்களுக்கும் இடம்பெயர நேரிட்டது. இடம்பெயர்ந்த எமது மக்களுக்கு துரிதமாக தங்குமிட வசதி அளிப்பது எமது பிரதான பிரச்சினையாக இருந்தது.

அவர்களுக்கு உணவு வழங்கவும் சுகாதார வசதி அளிக்கவும் நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் முப்படையினர் நடவடிக்கை எடுத்தனர். சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இடம்பெயர்ந்த மக்களை நாம் பாதுகாத்தோம். உலகில் எந்த நாடும் இவ்வாறு நடந்துகொள்ளவில்லை.

சர்வதேச அமைப்புக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஒருவரை கூட நாம் தொற்று நோயினால் மரணிக்க விடவில்லை. யாரையும் பட்டினி போடவில்லை.

இடம்பெயர்ந்த மக்களின் போஷாக்கு நிலை நாட்டின் ஏனைய மக்களின் அளவுக்கு பேணுவதற்கு நாட்டு மக்களாலும் அரசாங்கத்தினாலும் முடிந்தது.

இடம்பெயர்ந்த மக்களை இதே நிலையில் நீண்ட காலம் வைத்திருக்க நாம் தயாராக இல்லை. எவ்வாறு அவர்களை விரைவாகத் தமது சொந்த இடங்களுக்கு அனுப்புவது என்று நாம் ஆராய்ந்தோம். அப்பகுதிகளில் அங்குலம் அங்குலமாக மிதி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

இது தான் எமது பிரதான பிரச்சினையாக இருந்தது. எல்லா பாதைகள், பாலங்கள் என்பன அழிக்கப்பட்டிருந்தன. சகல பாடசாலைகளும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. ஆஸ்பத்திரிகள் யாவும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. அணைகள் உடைக்கப்பட்டிருந்தன.

இப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த மிதிவெடிகளை அகற்றும் பணியை நாம் முதலில் ஆரம்பித்தோம். இராணுவத்தினதும் மற்றும் அமைப்புகளினதும் உதவியுடன் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு என்பன குறித்தும் நாம் மறக்கவில்லை.

அவர்களிடையே 30 வருட பயங்கரவாத பிடியில் இருந்த மக்களும் யுத்த பயிற்சி பெற்ற குழுக்களும் இருந்தனர். இந்தக் காலப் பகுதியில் அங்கிருந்த ஒவ்வொரு பிரஜைக்கும் பலாத்காரமாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.

அதேபோல் முதலில் எந்தெந்த உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும் என்பதை நாம் இனம் கண்டோம். மக்களை குடியமர்த்தும் போது தேவைப்படும் அடிப்படை வசதிகள் என்னென்ன? அங்கும் இங்கும் நடமாடுவதற்கு பாதைகள், அவர்களது பிள்ளைகளுக்கு கல்வி பயில பாடசாலைகள், சுகவீனமுற்றால் மருந்து எடுக்க ஒரு வைத்தியசாலை பொருட்களை வாங்க நல்லவொரு கூட்டுறவு சங்கக் கடை ஆகியவை கட்டாயமாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதுடன் அந்த வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுத்தோம்.

நாம் அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கியிருந்தாலும் அதற்குப் பின்னர் அவர்கள் எவரிடமும் கையேந்தாமல் வாழ்க்கை நடத்தக்கூடிய சூழலை ஏற்படுத்துவதே எமக்கு தேவையாக இருந்தது. நாம் அவர்களுக்கு தற்காலிக வீடுகளை கட்டிக்கொடுத்தோம்.

எமது ஜனாதிபதி அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்ததையடுத்து அந்த மக்கள் அனைவருக்கும் நிரந்தர வீடுகளை கட்டித் தரும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது.

அப்பிரதேசங்களில் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அதற்காக உதவுவதற்கு அந்த கிராமங்களில் வேலை செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று எம்முடன் இணங்கியுள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம் அதற்காக அவர்களுக்கு விசேடமாக நன்றி தெரிவிக்கிறேன்.

இடம்பெயர்ந்தவர்களில் 80 சதவீதத்தினரை 180 நாட்களுக்குள் மீண்டும் குடியமர்த்த எம்மால் முடிந்துள்ளது. அது ஒரு உலக சாதனை என்பதை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

எதிர்காலத்தில் அப்பிரதேசத்தை நாம் ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக்குவதுடன் அங்கு ஜனநாயகத்தை ஏற்படுத்தி மக்கள் பிரதிநிதித்துவத்துக்கு வாய்ப்பளித்து மாகாண சபை, பிரதேச சபை தேர்தல்களை நடத்தி, அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் செய்து முடித்து கடைசியில் இறுதித் தீர்வையும் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

எதிர்வரும் காலத்தில் இன்னும் வேகமாக புதிய உத்வேகத்துடன் நாட்டை முன்னேற்றத் தேவையான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல பகுதிகளிலும் சட்டமும் ஒழுங்கும் ஒரே மாதிரி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சகல மக்களும் இன, மத, குல பேதமின்றி எத்தகைய பிரதேசத்திலும் வாழ்வதற்கும் எத்தகைய நடவடிக்கையில் ஈடுபடவும் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரமும் ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக சிறந்த அரசியல் தலைமைத்துவத்துடன் கூடிய ஸ்திரமான அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எம்மிடம் சிறந்த மனித வளம் உள்ளது.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத சிறந்த படிப்பறிவுள்ள செயற்திறனான குழுவினர் இந்த நாட்டில் உள்ளனர். இலங்கையின் பூகோள அமைவிடமும் மிக முக்கியமாகும். எதிர்வரும் காலத்தில் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்குவோம்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com