Contact us at: sooddram@gmail.com

 

வன்முறைப் போராட்ட முறை எங்களுக்குப் பொருத்தமானது அல்ல

யாழ் உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் வழங்கிய பேட்டி (பகுதி 1)

கேள்வி : தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் போது தோற்றம் பெற்ற இயக்கமொன்றின் தலைமைத்துவப் பதவியில் இருந்த நீங்கள் விடுதலைப் போராட்டம் தொடர்பான ஈர்ப்பு எவ்வாறு உங்களுக்கு ஏற்பட்டது?

பதில்.: என்னைச் சூழ நான் கண்ட நான் கேட்ட நான் வாசித்த புற விடயங்கள் கருத்துக்கள் சிறு வயதில் இருந்தே எனக்குள் ஒரு சமூக அரசியல் உணர்வுகளை வளர்த்து விட்டதன் விளைவு என்றே கருதுகின்றேன். சிறு வயதிலேயே எனது அயலில் நடைபெற்ற அரசியற் கூட்டங்களில் பேச்சுக்களையெல்லாம் ஆர்வமாகச் சென்று கேட்பேன். எனது ஏழு வயதிலிருந்தே எம்ஜிஆரின் படங்களை முதல்நாளிலேயே நான் தனியாகச் சென்று பார்ப்பவனாக இருந்திருக்கிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே எனது மாமனார் தமிழ்ப் பண்ணை புத்தகசாலையிலிருந்து வாங்கி வரும் தமிழக தினந்தந்தி, தினமணிப் பத்திரிகைகளை வாசிப்பவனாக இருந்திருக்கிறேன் அந்த வகையில் அண்ணா கலைஞர் போன்றவர்கள் மீதான ஈர்ப்பும் என்னிடத்தில் சிறுவயதிலேயே ஏற்பட்டது. நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியின் தமிழரசுக் கட்சித் தலைவரான சீவரத்தினம் அவர்களுடன் எனது பத்து வயதிலிருந்தே நெருக்கமாகப் பழகும் சூழல் இருந்தது. எனது பள்ளிக்கூட வாத்தியார்கள் ஒருவரான புதுமைலோலன் அவர்கள் தமிழரசுக் கட்சியின் பிரதம மேடைப்பேச்சாளர்களில் ஒருவராவார். 1965ம் ஆண்ட  12 வயதாக நான் இருந்த போது எனது சட்டையில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை தைத்து, ‘தந்தை செல்வா வாழ்க!’ என்று நானே தைத்துப் போட்டிருந்தவன்தான். வீட்டுப் படலையில் எம்ஜிஆர் வாழ்க என்று எழுதி வைத்திருந்தவன் நான். அவருடைய படங்களைப் பார்த்து அவரை ஒரு லட்சிய புருஷராகக் கொண்டேன். இவ்வாறாக ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி மற்றும் திமுக வளர்த்த தமிழ் இன அரசியல்; சமூக உணர்வுகளே எனது அரசியற் கருத்துக்களின் ஆரம்பமாகும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் தேர்தற் காலங்களில் நடாத்திய மோதல் அரசிலைக் கண்டிருக்கிறேன்.. 1970ம் ஆண்டு மதிமுகராசா என்பவருடன் எனக்கேற்பட்ட நட்பு தமிழரசுக் கட்சியில் என்னை உறுப்பினனாக்கியது. 1970ம் ஆண்டு மாணவர் பேரவையின் போராட்டங்களின் போது நான் ஒரு பார்வையாளன் மட்டுமே. 1972ம் ஆண்டிலிருந்துதான் எனது அரசியல் ஈடுபாடு ஆரம்பமானது.

கேள்வி : நீங்கள் அரசியல் போராட்டங்களின் போது சிறைக்குச் சென்றதாக அறிகிறோம். எதற்காக அச்சம்பவம் நிகழ்ந்தது?

பதில : 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக்கப்பட்ட போது தமிழருக்கான உரிமைகள் எல்லாம் அதன் புதிய அரசியல் யாப்பில் பறிக்கப்படுகின்றன என்ற விடயத்தை முன்வைத்து சகல இடங்களிலும் தமிழர் ஐக்கிய கூட்டணி சார்பாக சுவர்களில் எதிர்ப்புக் கோசங்களை எழுதுதல், கறுப்புக் கொடி ஏற்றுதல், ஹர்த்தால் அனுஸ்டித்தல் என எதிர்ப்பைக் காட்டும் போராட்டங்கள் நிகழ்ந்தன. இதில் நானும் கலந்துகொண்டபோது கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டி ஏற்பட்டது. பின்னர் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவற்றில் இருந்த எனது தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக 1975ல் கைது செய்யப்பட்டு இருபத்திரண்டு மாதங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டேன். பின்னர் 1983ம் ஆண்டு கார்ல் மார்க்ஸின் 100வது நினைவையொட்டிய கூட்டமொன்றில் மட்டக்களப்பில் பங்குபற்றிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டு கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் நான்கு மாதங்களும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சுமார் இரண்டு மாதங்களும் வைக்கப்பட்டேன்.

கேள்வி : 1970 களின் பிற்பகுதியில் பல இயக்கங்கள் தமிழினத்தின் விடுதலைக்காகத் தோற்றம் பெற்றன. அவை அனைத்தும் இன்று ஒரு வெற்றுப் புள்ளியிலேயே இயங்கவேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. ஆயுதப் போராட்டம் தோற்றுப் போன நிலையில் அரசியல் போராட்டத்தை மட்டும் நம்பியதாகவே தமிழர்களின் நிலை உள்ளது. இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில : எங்களுடைய இன அடிப்படையிலான போராட்டத்தின் அனுபவத்தில் மற்றும் என்னுடைய அனுபவங்கள் தொடர்பான எனது மீளாய்வின் அடிப்படையில் நான் கூறுவது எமது சமூகத்துக்கும் எமது தேசிய மற்றும் பிராந்திய சூழலுக்கும் எமது போராட்ட இலக்குகளுக்கும் ஆயுதங்கள் தாங்கிய போராட்டமுறைமை பொருத்தமானது அல்ல. சோவியத் புரட்சி, சீனப் புரட்சி, கியூபாப் புரட்சி மற்றும் வியட்னாம் புரட்சி என்பவற்றின் போது ஆயுதந் தாங்கிய போராட்டங்கள் வெற்றியளித்திருக்கின்றன. ஆனால் எங்களுடைய அரசியல் சமூக இலக்குகளுக்கு வன்முறை அரசியல் பொருத்தமானது அல்ல என்பதே எனது முடிவாகும்..

கேள்வி : ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்ட நாடுகளில் வெற்றியளித்த ஆயுதப் போராட்டம் எங்கள் சூழலில் ஏன் பொருத்தமற்றது?

பதில : அதைத்தான் நேரடி அனுபவமாக நாம் அனைவரும் கண்டு கொண்டோமே, முப்பது வருட போராட்டம் எவ்வாறு முடிவுற்றது, அது எவ்வாறான பாதகங்களையெல்லாம் எமது சமூகத்துக்கு விளைவித்திருக்கிறது என்பதை சரியாக மீளாய்வு செய்தால் நான் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியும். சோவியத் புரட்சி, சீனப் புரட்சி, வியட்நாம் புரட்சி போன்றன வர்க்கப் புரட்சிகள் அதனாலேயே அவை வெற்றிபெற்றன.

எமது போராட்டம் சில வேளைகளில் காலணித்துவத்துக்கு எதிரான ஒரு தீர்க்கமான தேசிய விடுதலைப் போராட்டமாக இருந்திருந்தால் கூட குறிப்பிட்ட அளவில் ஆயுதங்கள் தாங்கிய போராட்ட முறைமைக்கு கணிசமானதொரு பங்கு இருந்திருக்கும். ஆனால் இலங்கையில் நடந்தது ஒரு நாட்டுக்குள் எண்ணிக்கை ரீதியில் சிறுபான்மையான தேசிய இனத்தினுடைய போராட்டம். இதனுடைய கோஷங்கள், இதைக் கொண்டு நடத்தியவர்கள், இதன் பரிணாமம், இதற்கும் சமூக சக்திகளுக்கும் இடையிலான தொடர்பு ஆகியவற்றைப் பார்த்தால் வன்முறைப் போராட்ட முறை எங்களுக்குப் பொருத்தமானது அல்ல என்பது தெளிவாகவே புரியும்.

கேள்வி : 1989ஆம் ஆண்டுவரையும் நீங்களும் ஆயுதப் போராட்டத்தை நம்பியவர்தானே?

பதில : ஆமாம் ஒரு காலகட்டத்தில் ஆயுதந் தாங்கிய அரசியலின் மூலம்தான் எமது மக்களின் விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நானும் நினைத்திருக்கிறேன். ஆனால் அதை தவறு என உணர்கிறேன் .1990ல் வட இந்தியாவில் அதாவது இந்த மண்ணிலிருந்து இருந்து சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் போயிருக்க வேண்டிய கட்டாய நிலைமை எனக்கு ஏற்பட்டது. அது எமது போராட்டத்தின் கடந்த காலம் பற்றிய ஒரு ஆழமான மீளாய்வுக்கு எனக்கு வாய்ப்பளித்தது. அதில் நான் உணர்ந்துகொண்டவைகள் பல. ஒரு விடயத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கும் ஒருவன் அதிலிருந்து சற்று விடுபட்டு ஆற அமர தனது கடந்த காலம் பற்றி தன்னுணர்ச்சிகளுக்கும் பொய்களுக்கும் இடமளியாது புறநிலையாக ஆய்ந்து பார்த்தால் தன்னைப் பற்றி தனது கடந்த காலம் பற்றி பல தெளிவான சிந்தனைகளை அடைய முடியும். ஏன் ஓய்வாக இருக்கும் போது தான் அதைப்பற்றி உணர முடியும்.  போராட்டத்தின் போது நிகழ்ந்த பல விடயங்களில் எது சரி? எது தவறு ஒரு பொது உண்மையே. இது ஒரு சுய பரிசோதனை மூலமான புரிந்துணர்வே.

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com