Contact us at: sooddram@gmail.com

 

யாழ் உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் வழங்கிய பேட்டி (பகுதி 2)

நியாயமான தீர்வெதையும் இந்தியாவும் தரவில்லை, இலங்கையும் தரவில்லை

கேள்வி : ஆயுதப் போராட்டம் தவறு என்றால் வேறு எவ்வகையான போராட்டம் எமக்குச் சாத்தியமான  வழிமுறையாக இருக்கலாம்?

பதில : யாருக்கும் இம்சைகள் செய்யாத, யாரையும் நோகப் பண்ணாத யாருக்கும் விரோதத்தையோ வெறுப்பையோ ஏற்படுத்தாத தன்னை ஒறுத்த தனது உண்மைகளையும் நியாயங்களையும் வெளிப்படுத்தி மற்றவர்களின் மனச்சாட்சிகளின் கண்களைத் திறக்கும் அகிம்சை வழி முறைப் போராட்டங்களே நாம் கைக்கொண்டிருக்க வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால் இதுவரையும் நாங்கள் அகிம்சைப் போராட்ட முறைகளைச் சரியாகவோ முறையாகவே கடைப்பிடிக்கவில்லை. அதற்கான பயிற்சியும் துணிச்சலும் எம்மிடம் இருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்தை நாம் சுருக்கமான குறுக்கு வழியாகவே கருதினோம். அகிம்சை முறையில் இரகசியங்கள் இல்லை, அந்த முறையானது நேர்வழிகள் கொண்டது, அது பரந்துபட்ட மக்களின் மனச்சாட்சிகளோடும் தியாக உணர்வுகளோடும் சம்பந்தப்பட்டது. அது போராடுபவர்களுக்கு பக்குவத்தையும் முதிர்ச்சியையும் தருகின்ற ஒன்று. அறிவும் நேர்மையும் கொண்ட தலைவர்களை முன்னணிக்குக் கொண்டு வரும். அது பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் பல்வேறுபட்ட கருத்துக்களுக்கும் இடமளிக்கும். அஹிம்சைவழியானது யாரையும் துரோகியென்றோ காட்டிக் கொடுபவன் என்றோ முத்திரை குத்தாது. யாரைக்கண்டும் அது சந்தேகம் கொள்ளாது யாருக்கும் அது அச்சம் கொள்ளாது. அது சமூகத்தை ஒன்றிணைக்கும் சக்தியாகும், சமூகத்தை அகதிகளாகவோ புலம் பெயர்ந்தவர்களாகவோ சீரழிக்காது. அகிம்சை வழியைக் கடைப்பிடிக்கும்; தலைவர்களுக்கு மக்களை மாயையில் வைத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது அவர்கள் தங்கள் தங்கள் சொந்தந் திரவியங்களையும் உழைப்பையும் தியாகம் செய்பவர்களாக இருப்பார்கள். மக்களை அவர்கள் அன்பாலும் உண்மையாலும் வெல்லும் தலைவர்களாக இருப்பார்கள். எமது அனுபவத்தில் ஆயுதங்களை மட்டும் நம்பிய குழுக்களும் தலைவர்களும் மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றிற்கும் எதிர்மாறானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். உண்மையில் மேலே குறிப்பிடப்பட்டவற்றிற்கு எதிர்மாறான போக்குகள் ஆயுதக் கலாச்சாரத்தின் அடிப்படைகளாக அமைகின்றன என்றே நாம் காணமுடிகின்றது.

எமது போராட்ட வரலாற்றில் அகிம்சைசத்தியாக்கிரக போராட்டமுறைகளை 1970 வரை கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறுவது தவறாகும். கச்சேரியை மறித்து தமிழ்த் தலைவர்கள் மக்களைத் திரட்டி 1961ம் ஆண்டு ஒரு தடைவை சத்தியாக்கிரகம் செய்தது உண்மைதான். ஆனால் அப்போது தமிழரசுக் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு சில மாதங்கள் சிறை சென்று வந்த பின்னர் அத்தகைய அகிம்சை முறைப் போராட்டங்களை அவர்கள் தொடரவில்லை. ஆனால் காந்தியோ, நேருவே அவ்வாறில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் அகிம்சைப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். அவர்கள் தமது சுயதியாகத்தாலும் மக்கள் சக்தியை வெளிப்படுத்தியும் காலனித்துவ வெள்ளைக்காரர்களை தம் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஒத்துக் கொள்ள வைத்தார்கள் அவர்களுடைய போராட்டத்துக்குச் செவிசாய்த்த வெள்ளைக்காரர்களை விட எங்கள் சிங்களச் சகோதரர்கள் நல்லவர்கள் கூடுதலாகவே மனச்சாட்சி உடையவர்கள். எமக்கு முந்தைய தலைமுறை தமிழ்த் தலைவர்கள் விடாத  ொடர்ந்து அகிம்சை வழியைக் கடைப்பிடித்து தொடர்ந்து மக்களைத் திரட்டிப் போராடியிருந்தால் எப்போதோ இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கலாம். இலங்கையில் தமிழினம் இவ்வளவு இழப்புகளையும் சீரழிவுகளையும் அனுபவிப்பதிலிருந்து தவிர்த்திருக்கலாம்.

 கேள்வி : ஆனால் 1990ஆம் ஆண்டளவில் சிங்கள இனத்துக்கெதிராகக் கடுமையான கருத்துக்ளை நீங்கள் முன்வைத்தீர்களே?

பதில : அது தவறு! சிங்கள இனத்தவர்களுக்கு எதிரான கருத்துக்கள் எதனையும் நானோ என்னைச் சேர்ந்தவர்களோ எந்த வேளையிலும் கொண்டிருந்ததோ அல்லத  பரப்பியதோ கிடையாது. சிங்கள இனவாதத் தலைவர்களை நாம் விமர்சித்து வந்திருக்கிறோம். அதையே நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன்.

கேள்வி : எதற்காக நீங்கள் ஈழப் பிரகடனம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது?

பதில : உண்மையாக அது ஈழப்பிரகடனம் அல்ல. 19 அம்ச கோரிக்கைளைக் கொண்ட ஒரு பிரகடனம் தான். அன்றைய சூழலில் தமிழர்கள் மத்தியில் தனிஈழம் என்ற புலிகளின் பிரச்சாரம் தான் செல்வாக்கு செலுத்தியது. நாங்கள் மாகாணசபை மூலமான ஒரு தீர்வினை பரிசோதனையாக முயற்சித்தோம். எங்களால் அதனை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை எங்களின் நியாயமான கோரிக்கைகளை மற்றைய சிங்களத் தலைவர்களும் காது கொடுத்துக் கேட்கவில்லை. இந்தியாவில் 1989ம் ஆண்டு தேர்தலில் பிரதமரான வி.பி.சிங் இந்திய இராணுவத்தை மீள எடுப்பதிலேயே அக்;கற காட்டினார். மாகாணசபையைக் கலைக்குமாறு தூது விட்டார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களும் புலிகளுக்கு ஆதரவாக இருந்து மாகாண சபையைக் கலைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். புலிகள் தமிழர்களைக் காப்பாற்றுவார்கள் தமிழர்களின் உரிமைகளை வெல்வார்கள் என்றார். மொத்தத்தில் அன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான வட்டத்திற்குள் ஒரு தீர்வு எந்தக் கோணத்திலிருந்தும் கிடைக்கவில்லை. நியாயமான நடைமுறைச் சாத்தியமான தீர்வுக்காக உழைத்த எங்களுக்குத் துணையாக ஒரு அரசியற் சக்தியும் அன்று இருக்கவில்லை. அதைவிட எம்மை எதிர்த்தவர்களும் எம்மை அழிக்க முனைந்தவர்களுமே மிக அதிகமாக இருந்தனர். நாம், ஈழப்போராட்டத்துக்குப் பதிலாக இந்தியா ஒரு நீதியான தீர்வை ஏற்படுத்தித் தரும் என்பதற்காகவே மாகாண சபை முறைக்கு ஒத்துக்கொண்டோம். ஆனால் நியாயமான தீர்வெதையும் இந்தியாவும் தரவில்லை, இலங்கையும் தரவில்லை. இலங்கை அரசாங்கமோ புலிகளின் உதவியுடன் எல்லாவற்றையும் மோசமாக சீரழிப்பதிலேயே கடுமையாக இருந்தது. எனவேதான் வேறு வழியின்றி நாங்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போகிறோம் என்பதைச் சொல்ல வேண்டியாயிற்று. அந்த ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாம் அன்று முன்வைத்த பத்தொன்பது அம்சங்களில் பெரும்பாலானவை இன்றைக்கும் பொருத்தமானவை நீங்கள் இப்போதாயினும் படித்துப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள். 

1986 ஆண்டிலேயே ஈழவிடுதலைப் போராட்டம். தொடர்ந்து சரியான பாதையில் பயணிக்க முடியாத ஒரு கட்டத்தை அடைந்து விட்டது. ஆனால் நாம் மீண்டும் ஈழப்பிரிவினையை வலியுறுத்தியாவது எமக்கான நியாயத்தை நிலைநாட்டுவோம் என முயற்சித்தோம்.

1985ஆம் ஆண்டில் நாம் ஒற்றுமையாக இருந்தபோது இந்தியாவின் உதவியோடு மெதுமெதுவாக எமது ஈழவிடுதலை என்னும் இலக்கை நோக்கிச் சென்று விடலாம் என்று நம்பினோம். எப்போது விடுதலைப் புலிகள், ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தார்களோ அன்றைக்கே எமது ஈழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே ஈழ விடுதலைப் போராட்டத்தை உண்மையில் தோற்கடித்தவர்கள் புலிகள்தான். அவர்கள் யுத்த மோதல்களைத் தொடர்ந்து பல  ஆண்டுகளுக்கு மேற்கொண்டாலும் அவர்கள் 1986ம் ஆண்டே இலங்கை அரசை ஈழ விடுதலைக்கான யுத்தத்தில் வெற்றிபெற வைத்துவிட்டார்கள்.. புலிகள் சக இயக்கங்கள் மீது தாக்கத்தொடங்கிய போதே தமிழர்களின் தனிஈழக் கோரிக்கையின் தோல்வி நிச்சயமாகிவிட்டது. அதற்குப் பிந்திய 24 ஆண்டுகால யுத்தமும் அழிவுகளுக்கும் இழப்புக்களுக்குமென நடத்தப்பட்ட யுத்தவெறியர்களின் சண்டைகளே தவிர வேறொன்றுமில்லை.

(தொடரும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com