Contact us at: sooddram@gmail.com

 

யாழ் உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் வழங்கிய பேட்டி (பகுதி 3)

கேள்வி : இனி எவ்வாறானதொரு அரசியல் மாற்றம் தமிழர்கள் தொடர்பாக நிகழும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில : உலகில் முன்னர் இல்லாத நாடுகள் பல இப்போது தோற்றம் பெற்றிருக்கின்றன. பூமிப் பந்தில் நாடுகளின் அரசியல் அமைப்புக்கள் மாறிக்கொண்டே வருகின்றன. அரசியல் எல்லைகளும் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கின்றன. நாடுகள் ஒவ்வொன்றிலும் அவற்றின் உள்ளாட்சி உறவுகளிலும் மாற்றங்கள் காலத்துக்குக் காலம் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களிலும் சிங்களத் தலைவர்கள் அவ்வப்போது தமிழர்களின் நியாங்களை ஓரளவாயினும் ஏற்று அரசியற் தீhவுகளுக்கு முன்வந்ததை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் நிலைமைகளும் நாளை மாறும் என்று நம்புவோம். சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று செயற்படும் நாள் விரைவில் வரும் என எதிர்பார்த்து நாம் செயற்பட இங்கு வாய்ப்புகள் நிறையவே உண்டு. மாற்றம் ஒன்று தான் உலகில் மாற்றமில்லாத ஒன்று. 30 வருடங்களாக ஓர் உள்நாட்டு யுத்தப் போரழிவுகளையும் சொல்லொணா இழப்புகளையும் இந்த நாடு சந்தித்து இருந்தாலும் இலங்கை இன்னமும் ஜனநாயக அடிப்படைகளை இழந்துவிடாத ஒரு நாடு. இந்த நாடு இராணுவ ஆட்சிமுறையைக் கொண்ட சர்வாதிகார நாடு அல்ல. எனவே நிச்சயமாக இந்த நாட்டின் அரசியல் ஒரு சுமுகமான அரசியற் தீர்வினை நோக்கி நகரும் என்ற நம்பிக்கையோடு முன்னேறுவோம்.

கேள்வி : வடக்கு கிழக்கு மாகாணங்களின் முதலாவது முதலமைச்சராகப் பதவி வகித்தவர்கள் நீங்கள். இந்த மாகாணங்களில் முதலமைச்சரின் அதிகார எல்லை வரம்பு பற்றிக் கூறமுடியுமா?

பதில : நான் அதிகாரப் பகிர்வுக்காக போராடுகின்ற ஒரு முதலமைச்சராக இருந்தேனே தவிர அதிகாரங்களைக் கொண்ட ஒரு முதலமைச்சராக இருக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 13வது திருத்தச் சட்டமானது ஒரு பிழையான சட்ட அமைப்பு. அது சரியான வகையில் அமைக்கப்படாத ஒரு சட்டம். அதற்குள்ளேயே ஒன்றுக்கொன்று எதிரான முரணாண இணக்கம் காணப்பட முடியாத சரத்துக்கள் பல காணப்படுகின்றன. இச் சட்டத்தினை நல்ல விதமாகத் திருத்தி அமைத்தால் நல்ல விடயங்கனைச் செய்ய முடியும்.  இதே வேளை தவறான வகையில் கையாளக்கூடிய ஓட்டைகள் அதில் நிறைந்து காணப்படுகின்றன. அவ்வாறானவற்றை மாற்றியமைக்க வேண்டும். இப்போது அதனைப் பயனுடையதாக செயற்படுத்த வேண்டுமாயின் தவறான வகையில் இட்டுச்செல்லக் கூடிய விடயங்கள் தொடர்பாக தெளிவான வரையறைகளை விளக்கங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். இச்சட்டத்தினை அடிப்படையாகப் பார்த்தால் ஏறத்தாழ இந்தியாவின் அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளவற்றை ஒத்ததாக இருக்கும். மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இங்கு இந்தியாவின் அரசியலமைப்பைப் போலவே அதிகாரப்பகிர்வு வழங்கப்பட்டிருக்கின்றது என்ற தோற்றமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மை நிலைமை அதுவல்ல. உதாரணமாக நில அதிகாரத்தை எடுத்துக்கொண்டால் அது பின்னிணைப்புக்கு உட்பட்டது என்றே கூறப்பட்டிருக்கும். பின் இணைப்பை எடுத்துப் பார்த்தால் முன்ணிணைப்பில் கூறப்பட்ட விடயங்கள் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கும்.  இந்த 13வது திருத்தச் சட்டம் 1985ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு டிசம்பர் வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்றே இந்திய இலங்கை சமாதான உடன்பாடு கூறுகிறது. ஆனால் 13வது திருத்தம் அவ்வாறு ஆக்கப்படவில்லை.

சாதாரண சட்டங்கள் வழியாகவும் மற்றும் நிர்வாக ஆணைகள் மூலமாகவும். தற்போதைக்கு குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் 13வது திருத்தச் சட்டத்தை உடனடிப் பயனுடைய வலுவுள்ள ஒன்றாக அதனை நிறைவேற்ற முடியும். ஆனால் தென் மாகாணங்களில் கடந்த இருபது ஆண்டுகளாகவும், கிழக்கு மாகாணத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் அதை நடைமுறைப்படுத்துவது போலவேதான் தொடர்ந்தும் செய்வது என்றால் அது பயனற்றதாகும். அப்படி நிறைவேற்றுவதை விட அதை இல்லாமலே செய்து விடலாம். அரசாங்கம் 13வதை விட மேலும் அதிக அதிகாரங்களுக்காக ஆலோசனைக் கமிட்டிகளைக் கூட்டுகிறது. ஆனால் கையில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை நல்ல மனதோடும், பரந்த மனதோடும் நிறைவேற்றாமல் இருப்பது விசனத்துக்குரிய ஒன்றாகும்

கேள்வி : 13வது திருத்தச் சட்டம் நடைமுறையின் போது எவ்வாறு இருந்தது?

பதில : நான் முதலமைச்சராக இருந்தபோது 13வது திருத்தத்தில் உள்ள குளறுபடிகள் தொடர்பான சிலவற்றிற்கு தெளிவுதரும்படி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றோம். எங்களுக்கு அன்று மாகாணசபையைக் கூட்டுவதற்கே இடமில்லை. அப்போது மாகாண அமைச்சின் செயலாளராக இருந்த திஸ்ஸ ஜெயக்கொடி என்பவர் ஏதாவது ஒரு பாடசாலையில் மாகாணசபை கூட்டங்களை நடத்துங்களேன் என்று கூறுமளவிற்கு மாகாணசபைக்கான அடிப்படைக் கட்டமைப்பு எதுவுமே இல்லாமல் இருந்தது. நாங்கள் திருகோணமலை நகரசபையை தற்காலிகமாக எடுத்து அதனை மாகாணசபைச் செயலகம் ஆக்கினோம். அங்கு சபைக்கூட்டங்களை நடத்தினோம். வடக்கு -கிழக்கின் ஆட்சி அமைப்புக்கான கட்டமைப்புக்களை உருவாக்கினோம். அரசாங்கம் மாகாண ஆட்சிக்கென ஒரு சிறிதளவு பணத்தொகையே ஒதுக்கியது. ஆனாலும் ஒரு விரிந்த அளவில் வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். அன்றைக்கு எமக்கு இந்தியாவும் இந்தியப்படைகளும் பின்பலமாக இருந்தன. இன்றைக்கு அந்த நிலைமை இல்லை. இங்குள்ள மாகாண சபை அமைப்பை பலப்படுத்துவதும் பாதுகாப்பதுவும் இலங்கை அரசாங்கத்தின் கடமையே. அந்த ஒத்துழைப்பு எனக்கு இருக்கவில்லை. மாறாக எதிராகவே அரசாங்கம் செயற்பட்டது. இப்போதும் மாகாண ஆட்சிமுறை அர்த்தமுடையதாக இருக்க வேண்டுமாயின் அது இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தையும் முயற்சியையும் பொறுத்தே அமையும்.

கேள்வி : நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில : அதை ஓர் ஏமாற்று போலி நாடகமாகவே பார்க்கிறேன். வெளிநாடுகளிலுள்ள புலியை வைத்து முன்னர் வசதிகளையும் சொத்து வளங்களையும் பெருக்கிக் கொண்டதோடு சண்டித்தனம் பண்ணிக்கொண்டு இருந்தவர்களுக்கு இப்போது புலி இல்லாததால் தமது பழைய பணம் திரட்டும் தொழிலுக்கு ஒரு புதிய வித்தை தேவைப்படுகிறது.  நாடுகளைக் கடந்த ஒரு நாடு அமைப்பை தென்னாபிரிக்கர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் உலக  ாடுகள் பல சேர்ந்துதான் ஏற்படுத்தினவே தவிர அவை அந்நதந்த நாடுகளைச் சேர்ந்த சிலரால் நடாத்தப்பட்ட வேடிக்கை நாடகமல்ல. நாடு கடந்த தமிழீழம் என்பது தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றி சிலர் பணம் திரட்டுவதற்குப் பயன்படுமே தவிர உலகநாடுகள் எதுவும் அந்தக் கருத்துக்கு இடமளிக்கவில்லை. அதுமட்டுமல்லாது இவ்வாறான புரளிகள் இலங்கை அரசாங்கம் இராணுவத்தின் கட்டுப்பாடடில் தொடர்ந்தும் வடக்கு கிழக்கு மாகாணத்தை வைத்திருப்பதற்கும் அரசாங்கம் தனது இராணுவ பலத்தை மேலும் அதிகரிப்பதற்குமான நியாயங்களை வலுப்படுத்தவே உதவும். அப்படிக் கூறுபவர்கள் வேறு எந்த நாட்டிலாவது கனடாவிலோ இங்கிலாந்திலோ அல்லது பிரான்ஸிலோ தமிழீழம் அமைப்பார்களாயிருந்தால் நாங்கள் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம். அப்படி அமைத்து விட்டு அவர்கள் எங்களையும் அங்கு அழைக்கட்டும் நாங்கள் விருந்தாளிகளாகப் போய்வருவோம். இப்படியான பயனற்ற விடயங்களில் புலம் பெயர் தமிழர்கள் ஈடுபடுவதை விடுத்து போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு பணத்தை அனுப்புங்கள். நீங்கள் இங்குள்ள உங்கள் உறவினர்களுக்கு பணத்தை அனுப்பி அவர்கள் மூலம் வன்னி மக்களுக்கு உதவி செய்யுங்கள். இதுநாள் வரையும் புலிகள் போரிடுவதற்காக அவர்களுக்கு பணத்தை வாரியிறைத்த புலம் பெயர் மக்கள் இப்போது வன்னி மக்களின் துயர் துடைக்கவும் பணத்தை அனுப்பலாம் தானே. அதைவிடுத்து வணங்கா முடிக்காரர்கள் நாடு கடந்த தமிழீழக்காரர்களுக்கு புலம் பெயர்ந்த மக்கள் தங்கள் பணங்களை வாரியிறைத்து வீணாக்கக் கூடாது இங்கே துன்பத்திலும் துயரத்திலும் வாழும் மக்களுக்கு மேலும் துன்பங்கள் அளிக்கும் வேலைகளுக்கு உதவக் கூடாது என்பதே எனது கருத்தாகும்.

(தொடரும்....) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com