Contact us at: sooddram@gmail.com

 

யாழ் உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் வழங்கிய பேட்டி (பகுதி 4)

கேள்வி :  போர் முடிந்த பின்னர் தொடர்ச்சியாக பல தேர்தல்களை தமிழ் மக்கள் சந்திக்க நேர்ந்திருக்கிறது இது பற்றி?

பதில : ஜனநாயக ரீதியில் மீண்டும் மீண்டும் தேர்தல்கள் வருவது நன்மையான ஒன்றுதான் 1982 ஆம் ஆண்டு இடம்பெற வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நடத்தியிருந்தால் 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் நடந்திருக்க மாட்டாது. அந்த தேர்தல் நடைபெற்றிருப்பின் பலமானதொரு எதிர்க்கட்சி அமைந்திருக்கும். அத்தகைய சூழலில் ஜே.ஆர்.ஜெயவர்தனா இவ்வாறானதொரு தலைதெறித்த போக்கை செய்திருக்க முடியாது. அதைப்போல் இங்கும் கடந்த மாநகரசபை தேர்தலின் போது குறைந்தளவு மக்கள் வாக்களித்திருந்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அதற்குச் சற்று அதிகமானோர் வாக்களித்திருந்தனர். இனிவரும் பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் மாகாணசபைக்கான தேர்தலில் முன்னரைவிட அதிகம் பேர் வாக்களிப்பார்கள். மக்கள் வாக்குகளின் வாக்குகள் மூலமே மக்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான  ாங்கள்தான் தனிப்பிரதிநிதிகள் என்னும் ஜனநாயக விரோத கருத்துக்களுக்கு இடமிருக்காது. பல கருத்துக்களின் மோதலில் புதிய சரியா  கருத்துக்களின் வளர்ச்சி, பரந்துபட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் ஆட்சி என்பன ஜனநாயகத்தின் பண்புகளாகும் இதுவே அரசியல் நாகரீக வளர்ச்சியின் முன்னேறிய ஒரு கட்டமாகும்.

கேள்வி : மாகாண சபையில் உங்கள் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக தமிழ் தேசிய ராணுவத்திற்குப் பலாத்காரமாக தமிழ் இளைஞர்களைச் சேர்த்து அவர்களை ஆயுத கலாச்சாரத்துக்குள் தள்ளியதாக உங்கள் மீதுள்ள குற்றிச்சாட்டு பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில : அத்தகைய அன்றைய நடவடிக்கை ஒரு பெரும் தவறுதான். இதுபற்றி நான் ஏற்கனவே பல தடவைகள் ஒப்புக்கொண்டிருக்கிறேன். இதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த நடவடிக்கையை மாகாணசபை என்ற அமைப்பின் மூலம் மேற்கொள்ளவில்லை. பிரேமதாசாவும் பிரபாகரனும் எமது மாகாண ஆட்சி மீது பழிபோடும் வகையாக மேற்கொண்ட ஒரு சதிப்பிரச்சாரமே அது.. இளைஞர்களைத் திரட்டி ஜனநாயகரீதியான கட்சிகளின் பாதுகாப்பையும் பலத்தையும் அதிகரிக்கும் நோக்கில் கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவே தமிழ் தேசிய இராணுவம். இளைஞர்களை விரைவாக இணைப்பதில் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட போட்டியானது இளைஞர்களைக் கட்டாயமாகப் பிடித்து பயிற்சி அளித்து ஒரு இராணுவமாக்குதல் என மாறியது. அவ்வாறான முடிவை எடுத்ததிலோ அதை நடைமுறைப்படுத்தியலோ எனக்கு நேரடியான பங்கு எதுவுமில்லை. எனினும் நான் அவ்வாறாக செயற்பட்ட கட்சிகளில் ஒன்றின் ஒரு முக்கியஸ்தன் என்ற வகையில் அக்கட்சி விட்டிருக்கும் தவறுக்கு நானும் பொறுப்பேற்றே ஆகவேண்டும். எமது கட்சி ஒரு தற்பாதுகாப்பு நோக்குடனேயே அவ்வாறானதொரு தமிழர் இராணுவ விரிவாக்கத்தை உருவாக்க முனைந்தது. இன்றைக்கும் அதைப்பற்றிப் பேசுபவர்கள் கடந்த இருபது ஆண்டுகளில் புலிகளால் வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு கொலைக்களங்களுக்கு அனுப்பப்பட்டு பலியிடப்பட்  ிறுவர்களின் எண்ணிக்கை இருபதாயிரத்தையும் தாண்டும். அந்தச் சந்தர்ப்பங்களில் எங்களது பத்திஜீவிகள் அவ்வாறான தவறுகளுக்கெல்லாம் தெரிந்தே வக்காலாத்து வாங்கினார்கள் வாழ்த்துக்களும் தெரிவித்தார்கள். புலிகள் பிள்ளைகளைப் பிடித்துப் போனதால் எத்தனை பெற்றோர்கள் மனநோயாளிகளாகிப் போனார்கள், தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதைப்பற்றி எமது புத்திஜீவிகளோ பத்திரிகையாளர்களோ எந்தவேளையிலும் அசை போட்டுப் பார்ப்பதில்லை என்பது ஒருபுறம் வேடிக்கையாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருக்கிறது.

கேள்வி : நீங்கள் தேர்தல் காலங்களிலேயே இலங்கைக்கு வருவதாகவும் - இப்போது கூட வட மாகாண சபை தேர்தலைக் மனதில் கொண்டே வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஒரு தேர்தல் காலப் பறவை போல நீங்கள் கருதப்படும் நிலை பற்றி...?

பதில : தமிழர் மத்தியில் இப்போது அரசியல் செய்யும் பெரும்பாலானோர் தேர்தல் காலப் பறவைகள் தான். கடந்த காலத்தின் சூழ்நிலைகள் அப்படித்தான் இருந்தன. நான் கடந்த சில தடவைகள் தேர்தல்களின் இங்கு வந்தேன் என்றாலும் நான் தேர்தல் போட்டிகளில் நிற்பதற்காக வரவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தற் காலங்களில் பலர் மக்கள் மத்தியில் வருவதற்கு அச்சந்தர்ப்பங்களின் போதுதான் அரசியற் தலைவர்கள் மக்களிடையே சென்று பிரச்சாரம் செய்வதற்கு போதிய பாதுகாப்பை அரசபடைகள் வழங்கத் தயாராக இருந்தமையும் காரணமாக இருக்கலாம். எவ்வாறாயினும் நான் இப்போது இங்கே வந்திருப்பதோ மக்களைச் சந்தித்து வருவதோ தேர்தல் தொடர்பான எந்த நோக்கங்களையும் கொண்டதல்ல என்பதோடு இப்போது இங்கு நிலவுவது தேர்தற் காலம் அல்ல என்பதுவும் உங்களுக்குத் தெரியும்.

கேள்வி : தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி இப்போது அதிகமாகப் பேசப்படுகிறது. இதுதொடர்பாக சில செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கிறன.  இந்த ஒன்றிணைப்பு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில : தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக பொது உடன்பாடுகளை ஏற்படுத்திக்  கொள்வது இன்றைய அவசியமாகும். வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையான ஆசனங்களை மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கியுள்ளனர். எனவே அவர்கள் தமிழர் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையாக மிக அவசியமான பொதுவிடயங்களில் உடன்பாடுகளை உருவாக்கி தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை ஒன்றுபட்ட குரலாக ஆக்குவதற்கு அவர்களுக்கு ஓர் ஆணையை வழங்கியுள்ளார்கள் என்றும் கூறலாம். குறிப்பிட்ட அடிப்டையான ஒரு சில விடயங்களை நோக்கியாவது தமிழ்க் கட்சிகள் ஒருமுகப்பட வேண்டும். வேறுபாடுகளின் மத்தியில் ஒற்றமையைக் கண்டு தமிழக்கட்சிகள் அனைத்துக்குமிடையில் உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும்.

அந்தவகையில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அவ்வாறானதொரு கடமையைச் செய்வதற்கான ஆணையை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் எனலாம். திரு.சம்பந்தர் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய இருவரும் தமிழ்க்கட்சிகளுக்கிடையில் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு முயற்சித்தால் அதுவே முழுப்பலனை அளிப்பதாக இருக்கும். அதில்லாதபட்சத்தில் திரு. டக்ளஸ் மேற்கொண்டுள்ள முயற்சியாவது அவ்வாறான பலனை அளிக்க வேண்டும் என்று விருப்புகிறேன். என்னைப் பொறுத்த வரையிலும் எனது கட்சியினரைப் பொறுத்தவரையிலும் நாங்கள் அவ்வாறான முயற்சிகளை யார் செய்தாலும் எங்களால் முடிந்த அளவு ஒத்துழைப்பு வழங்குவோம். பல கட்சிகளுடனும் நட்புடன் பேசி ஒற்றுமை ஏற்பட எம்மாலான முயற்சிகளையும் மேற்கொள்வோம். எமது ஈழத் தமிழ் மக்களின் இன்றைய நிலையைக் கருத்திற் கொண்டு இந்த உடன்பாடு ஒற்றுமை எட்டப்பட வேண்டும். குறிப்பாக வன்னி மக்களின் வாழ்வில் உடனடி முன்னேற்றங்களைக் கொண்டுவர தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் உள்ளது.

கேள்வி : ஆரம்ப காலகட்டங்களில் இருந்த ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா?

பதில : நாங்கள் இளையவர்களாக இருந்த போது பெரியவர்களாக இருந்தவர்கள் தமிழர் போராட்ட இயக்கங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தத் தவறி விட்டனர். 1984ல் நாம் எடுத்த முயற்சியால் ஈழத் தேசிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டது. அதுவே திம்புப் பேச்சுவார்த்தையின் போது ஒரு பலமாக இருந்தது. ஆனால் புலிகள் அதனை நீடிக்க விடாது செய்துவிட்டனர். அந்தத் தவறு தொடரக் கூடாது. புலிகள்தான் தமிழர்களிடையே ஒற்றுமை ஏற்படுவதற்குத் தடையாக இருந்தார்கள் இப்போது புலிகள் இல்லாதபடியினால் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று திரு சம்பந்தர் அவர்கள் பகிரங்கமாக அறிவித்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். எனவே கடந்தகாலத் தவறுகளைத் தொடராமல் தமிழ் மக்களுக்கான அடிப்படை விடயங்களிலாயினும் ஒற்றுமைப்பட முயற்சி செய்வோம். அவ்வாறு முயற்சி செய்யாவிட்டால் அடுத்த தலைமுறை எம்மை நிச்சயம் குற்றஞ்சாட்டும். மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை இல்லாது போகும். இந்த ஒற்றுமைக்காக ஊடகங்களும் பாடுபட வேண்டும். ஒற்றுமைக்கு எதிரான போக்குகளை ஊடகவியலாளர்கள் வளர்த்து விடக்கூடாது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com