Contact us at: sooddram@gmail.com

 

கனடாவில் இடம்பெற்ற வீரமக்கள் தினம்!

கனடா ரொறன்ரோவில் 21வது வீரமக்கள் நேற்றையதினம் சனிக்கிழம(17.07.2010) மாலை நினைவு கூரப்பட்டது. செங்கிளேயர் வீதியில் அமைந்துள்ள சென்ற் கொலம்பியா மண்டபத்தில் இடம்பெற்ற வீரமக்கள் தின கூட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலை அமைப்புகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டும், மரணித்த போராளிகளின் படங்களை திரையிலேயே காண்பித்தவண்ணம் மலரஞ்சலியுடன் வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமாகியது. புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் மையூரனின் வரவேற்புரையுடன் அவரது தலைமையில் வீரமக்கள் தின கூட்டம் ஆரம்பமாகியது.

இங்கு உரையாற்றிய மையூரன் அவர்கள், கடந்த கால கசப்பான அனுபங்களில் பாடங்களை கற்றுக்கொண்டு இனியாவது அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், அமிர்தலிங்கம் அவர்கள் மற்றும் உமாமகேஸ்வரன் அவர்களின் ஆழுமையான அரசியல் தீர்க்கதரிசனங்களை முன்னெடுக்க கூடிய தலைவர்கள் இன்று எம்மத்தியில் இல்லை என்றும் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து உரையாற்றிய ஸ்காபுரோ றோச்றிவர் தொகுதியின் கவுண்சிலர் வேட்பாளர் நமு பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றுகையில், நமக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும், தாயகத்தில் உள்ள ஒற்றுமையை அங்குள் கட்சிகள் பார்த்து கொள்ளட்டும், முதலில் இங்கே கனேடிய மண்ணில் நாம் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்று உரையாற்றினார்.

பின்னர் உரையாற்றிய தோழர் மணியம், போராட்ட வரலாற்றையும், தமிழ் தலைவர்கள் அழிகப்பட்டதையும், போராட்டம் சிதைவடைக்கப்பட்டதையும், சுட்டிக்காட்டி போராட்டம் தோல்வியை தழுவியமைக்கான காரணிகளையும் சுட்டிக்காட்டி பேசியதுடன், அவரும் ஒற்றுமையின் அவசியத்தை சுட்டிக்காண்பித்து உரையாற்றினார்.

இங்கு உரையாற்றிய ஊடகவியலாளர் மனோ ரஞ்சன், ஊடகத்துறையை பற்றியும் ஊடகங்கள் தவறுகளை விட்டுள்ளன, சம்பவத்தை ஒருபக்க சார்பாக கூறும் ஊடகங்களாகவே செயற்பட்டு வருகின்றன. தமக்கு உயிர் அச்சுறுத்தல் என்று கூறி ஊடக தர்மத்தை அவர்கள் கைவிட்டு பிழைப்புக்காக ஊடகம் நடாத்தும் நிலைக்கு மாறிவிட்டன. இவைகள் மக்களிற்கு செய்தி கூறும் ஊடகங்களாகவும் மக்களை நல்வழி படுத்தும் சக்தியாகவும் இருப்பதை விடுத்து மக்களை தூண்டி வன்முறைக்குள் தள்ளும் ஊடகங்களாகவே இன்று பல ஊடகங்கள் மாறியுள்ளதுடன். தனி நபர்களை விமர்சிப்பதும் அவர்களைப்பற்றி  ிகவும் கேவலமான முறையில் எழுதுவதுமாகவே ஊடகங்கள் செயற்படுகின்றன என்பதையும், தனக்கு புளொட் அமைப்பு மீது உள்ள பரிவையும், பாசத்தையும் சுட்டிகாட்டியதுடன், புளொட் அமைப்பு குறித்த விமர்சனங்களும் ஒருபுறம் உள்ளதாகவும் தெரிவித்தார். அவ்வாறான விமர்சனங்களில் ஒன்றாக வவுனியாவில் நிலைகொண்டிருந்த 'மாணிக்கதாசனின் பெயரை கேட்டால் கருவில் உள்ள சிசுவும் கலங்கும்' என்ற தலையங்கத்தில் அமுது சஞ்சிகையில் விமர்சித்து இருந்ததையும், பின்னரும் கூட புளொட் அமைப்புடனான உறவு நீடித்து அவர்களது செவ்விகள், பேட்டிகள் கண்டதையும் குறிப்பிட்டதுடன், தலைவர் சித்தார்த்தனுடன் இன்றுவரை தனது உறவு தொடர்வதாகவும் தெரிவித்தார். பல ஊடகவியலாளர்களை புளொட் அமைப்பு உருவாக்கியது என்றும் அவர்களின் தராக்கி என்ற பெயரில் ஆங்கிலத்தில் யுத்த ஆய்வுகளை எழுதிவந்த சிவராம் என்பவர் கூட புளொட் அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒர் ஊடகவியலாளர் என்பதையும் சுட்டிக்காட்டியதுடன். இவர் போன்ற பல ஊடகவியலாளர்களை புளொட் அமைப்பு உருவாக்கியுள்ளது என்றும் சுட்டிக்காட்டி ஊடக துறையின் தர்மம் காக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசியிருந்தார்.

வி.பி.பொன்னம்பலம் அவர்களின் புதல்வரும் புளொட் அமைப்பின் முன்னைநாள் உறுப்பினருமான மகாவலி ராஜன் அவர்கள் மிகவும் சுவார்ஸயமான விடயங்களை சுட்டிக்காண்பித்து ஒற்றுமைபாட்டின் அவசியத்தை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இங்கே நினைகூரப்படும் போராளிகள், பொதுமக்கள், தலைவர்களுகான அஞ்சலியை தெரிவித்து கொண்டு உரையாற்றிய மகாவலிராஜன் இங்கே தலைவர்கள் அனைவரையும் வைத்துள்ளார்கள் தன்னை புளொட் அமைப்பிற்குள் உள்வாங்கிய சந்ததியாரை மறந்துவிட்டார்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது அதனையும் ஏற்பாட்டாளர்கள் எதிர்காலத்தில் செய்வார்கள் என்று கருதுகின்றேன். அமிர்தலிங்கம், பத்மநாதா,ஸ்ரீசபாரத்தினம் என்று அனைரையும் வைத்து ஒர் நினைவுதினம் இங்கே நினைவுகூரப்படுவது வரவேற்கதக்கது. கடந்த காலங்களில் இங்கே இவ்வாறான கூட்டங்களை நடாத்தவோ, பேசவோ முடியாத நிலையில் தற்போது இவ்வாறான தலைவர்கள், போராளிகளையும் நினைவு கூரும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கனடாவில் தனிமனிதர்களாக சென்று கனேடிய அரசியல்வாதிகளை சந்திப்பதில் அர்த்தமில்லை. அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கியை தான் கருத்தில் கொள்வார்கள் ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து ஓரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தனதுரையில் தெரிவித்தார்.

இவர்களின் உரையை தொடர்ந்து சிறய இடைவேளையின் பின்னர் ஈ.பி.டி.பி. அமைப்பின் உறுப்பினர் தோழர் மகேஸ்வரராஜா அவர்கள் உரையாற்றினார். இளைஞர் பருவத்தில் இருந்தே போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட தான் ஆரம்பத்தில் தமிழ் தேசியவாதியாகவே இருந்து பின்னர் சண்முகதாசனுடன் தான் இணைந்து பணியாற்றியதையும், நடைபெற்று முடிவடைந்துள்ள ஆயுத போராட்டத்திற்குள் இளைஞர்களை தள்ளியது த.வி.கூ தலைமையிலான அரசியல்வாதிகளே என்றும் தனதுரையில் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அவ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சார்பாக ராஜா யோகராஜா அவர்கள் உரையாற்றியதுடன், அவரும் ஒற்றுமையின் தேவையையும், அவசியத்தையும் சுட்டிக்காட்டியதுடன். மகிந்த அரசின் தமிழின விரோதத்தையும், யுத்த வெற்றி விழா என்ற போர்வையில் தமிழர்களை வெற்றி கொண்டுவிட்டதாக எண்ணி வெற்றி விழா கொண்டாட்டத்தினை கொண்டாடுகின்றார் என்றும் அரசின் மீதான தவறுகளையும் சுட்டிக்காட்டி பேசினார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் சார்பாக தோழர் ஜேம்ஸ் அவர்கள் உரையாற்றுகையில், ஜனநாயகத்தையும், மனித உரிமையையும் நிலைநாட்டுவதற்காக மரணித்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் போராளிகளுக்கு எனது அஞ்சலியை தெரிவித்து கொள்வதுடன், பலஸ்தீனம் மற்றும் பிலிப்பைன்ஸில் இன்றுவரை இடம்பெறும் போராட்டங்களையும், வெற்றிபெற்ற நிக்கரகுவா போராட்டத்தினையும் நினைவூட்டி எமது போராட்டம் மட்டும் தோல்வியை தழுவி கொண்டதற்கான காரணிகளையும், ஊடகவியலாளர்கள் காலத்திற்கு காலம் முகமூடிகளை மாற்றி தவறான செய்திகளையும் வெளியிட்டு மக்களை தவறான பாதைக்கு இட்டு சென்றதுமே எமது போராட்டம் தோல்வியடைய காரணமாகியது என்றும் ஜேம்ஸ் தனதுரையில் தெரிவித்தார்.

மலையக மக்கள் சார்பாக தோழர் சந்திரசேகரன் அவர்கள் உரையாற்றியிருந்தார். அவர் நினைவுகூரல் ஏற்பாட்டினை பாராட்டியதுடன். போராட்டத்தில் ஈடுபாடில்லாத தான் இந்தியாவில் இருந்த நினைவுகளையும், தான் யாழ் பரியோவன் கல்லூரியில் கல்வி பயின்றபோது யாழ் இளைஞர்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதையும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுத அமைப்புகளுடன் அகிம்சை வழியில் போராடிய அமிர்தலிங்கம் அவர்களின் புகைப்படமும் வைக்கப்பட்டு அஞ்சலி தெரிவிக்கப்படுவது மகிழ்வினை தருவதாகவும். இவ்வாறு ஸ்ரீசாபரத்தினம், பத்மநாபா போன்ற தலைவர்களின் படங்களும் வைக்கப்பட்டு அனைவருக்குமான அஞ்சலியாக இது காணப்படுகின்றது. அத்துடன் புளொட் அமைப்பு தாம் தாயகத்தில் மேற்கொள்ளும் மக்கள் பணிகள் குறித்த படங்களையும், வீடியோ காட்சியாக காண்பித்து கொண்டுள்ளனர் இவைகள் நல்லவிடயம்கள், சிறப்பாண பணிகளை அங்கே ஆற்றிகொண்டுள்ளதை மகிழ்வை தருகின்றது. அதற்கு பக்கதுணையாக வெளிநாடுகளில் இருந்து அவ் அமைப்பின் தோழர்கள் செயற்பட்டு வருவதையும்,

மக்களிடம் சேகரிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொருட்களையும் காணமுடிந்தது. இவர்கள் போன்று அனைவரும் ஒன்றுபட்டு அந்த பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவவேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் தான் தங்கியிருந்தபோது திருச்சியில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உமாமகேஸ்வரன் உரையாற்றும்போதுதான் அவரை காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டதாகும், அப்போது உமாமகேஸ்வரன் பற்றிய சிறப்பினை துக்ளக் சோ வெளியிட்டிருந்தார் என்றும், சோ விரைவில் ஒருவரை பற்றிய புகழை வெளிக்காட்ட மாட்டார் என்றும், அப்படியான துக்ளக் சோ உமாமகேஸ்வரனை பற்றி குறிப்பிட்டு அவரது அரசியல், போராட்ட வடிவங்களையும் தெளிவுபடுத்தியவர் அப்போதுதான் தனக்கு உமாமகேஸ்வரன் மீது பற்று ஏற்பட்டதாகவும் சந்திரசேகரன் குறிப்பிட்டிருந்தார்.

புளொட் அமைப்பு வன்னியில் மேற்கொண்டுவந்த புனர்வாழ்வு, புனரமைப்பு, மக்கள் பணிகள், உதவிகள் குறித்த புகைப்படங்கள் திரையில் காண்பிக்கப்பட்டதுடன், வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட உதவி பொருட்கள், மேடையில் வைக்கப்படாமல் இருந்த 100கணக்கான போராளிகளின் படங்கள் எல்லாம் நிகழ்ச்சி தொடங்கி முடியும்வரை பாரிய திரை மூலம் காண்பிக்கப்பட்டிருந்தது. வன்னியிலே புளொட் அமைப்பு அன்று தொடக்கம் இன்றுவரை ஆற்றிவரும் மக்கள் பணிகள் குறித்த படங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து கொண்டது. வன்னி இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்தவர்களிற்கு உதவியும், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு உதவுதல் என்று புளொட் அமைப்பினால் தொடரும் உதவி திட்டங்கள் குறித்த வீடியோ திரையிலே காண்பிக்கப்பட்டு கொண்டிருந்ததை பலரும் பாராட்டி சென்றதையும் காணமுடிந்தது.

இறுதியாக புளொட் அமைப்பின் சார்பாக செல்வம் அவர்கள் தமது அமைப்பின் அழைப்பையேற்று வந்திருந்த பேச்சாளர்கள், விளம்பரம் செய்து உதவிய கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுதாபனம், இணையதளங்கள், சகல விதத்திலும் உதவிய அனைவருக்கும் நண்றியை தெரிவித்து கொண்டதுடன் அஞ்சலி நிகழ்வு, நினைவுதின கூட்டமும் நிறைவுபெற்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com