Contact us at: sooddram@gmail.com

 

இனப்பிரச்சினை தொடர்பாக ஆப்த நண்பனுடன் கருத்து பரிமாறத் தவறிய கருணாநிதி

தமிழ் நாட்டினதும், அதன் கட்சித் தலைவர்களினதும் விவேகமில்லாத தூர நோக்கற்ற ஆத்திரமூட்டும் செயற்பாடுகள் இலங்கைத் தமிழருக்கு சாதகத்திற்குப் பதிலாக பாதகமான விளைவுகளைத் தந்துவிடுமெனவும் எச்சரிக்கிறார் அரசியல் மேதாவி ஆனந்தசங்கரி அறுபது ஆண்டுகள் அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள, நான்கு தடவைகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி யுனெஸ்கோவின் சகிப்புத் தன்மையையும், அகிம்சையையும் முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்ட மதன்ஜித் சிங் விருது பெற்ற மூத்த அரசியல்வாதியின் அவசர நடவடிக்கையாக இவ் வேண்டுகோள் வருகிறது. இது இலங்கையின் இனப்பிரச்சினையை அமைதியாகவும் அவதானமாகவும் கையாளுமாறு தமிழ் நாட்டிற்கு விடப்படும் ஒரு செய்தியாகும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மாகாந்தி அவர்கள் இந்தியாவும், இலங்கையும் தமக்குள் சண்டையிட முடியாது எனக் கூறியுள்ளார். இலங்கையில் எல்லாம் நன்றாக இருப்பதாக நான் கூறவரவில்லை. இலங்கை தமிழர்களுக்கு பல ஆதங்கங்கள் உண்டு. உயர் மட்டத் தலையீடு தேவைப்படும் அளவுக்கு இவற்றில் சில கட்டுமீறி போகும் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. நாம் விரும்பியோ விரும்பாமலோ இவ்விரு அயல் நாடுகளுக்கிடையில் இருந்த உறவு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் மிக விரைவில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடுமாகையால் இரு நாடுகளும் இந்தப் போக்கை உடன் நிறுத்தி அவற்றின் நன்மையை மனதிற் கொண்டு தமக்குள் ஏற்பட்டுள்ள தப்பான அபிப்பிராயங்களை போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் நான் இந்திய தலைவர்களுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளேன். எனது வேண்டுகோள்களை எவரும் செவிமடுக்கவில்லை. முன்பு ஒருபோதும் இல்லாதவாறு இன்று இலங்கையில் தமிழ் மக்கள் நாடு முழுவதும் பரந்து வாழ்கின்றனர். அத்துடன் வடக்கிலும்,கிழக்கிலும் செறிந்து வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தள்ளது. ஏனெனில் அவர்கள் பெருமளவு தென் பகுதிக்கு இடம் பெயர்ந்ததும், அநேகர் வெளிநாடுகளில் உள்ள தமது பிள்ளைகள், உறவுகளிடமும் வேலைவாய்ப்புத் தேடியும் சென்றுள்ளனர்.

இவர்களில் கணிசமானவர்கள் தற்காலிகமாகவோ, அன்றி நிரந்தரமாகவோ சிங்கள கிராமங்களில் வாழ்கின்றனர். தமது பூர்வீக இடங்களில் வாழ விரும்பும் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போதியளவு முறையான கல்வி வசதி இல்லாமை போதிய உணவு கிடைக்காமை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். வடமாகாணசபை இயங்கினாலோ அன்றி குறைந்த பட்சம் ஓர் இடைக்கால நிர்வாகமேனும் அமைக்கப்பட்டாலோ அவர்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

தமிழ் நாட்டவர் எவருக்கும், இலங்கை வாழ் மக்கள் பலருக்கும், தமிழ் நாட்டுடன் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவு பற்றி தெரியாது, தமது வரலாற்றை மகாவம்சம் பதிந்து வைத்திருக்கின்றது. என முழுதாக நம்பும் சிங்கள மக்கள் தமது மூதாதையரும் சிங்கள சமூகத்தை உருவாக்கியவராக நம்பப்படும் விஜயன், பாண்டிய நாடாகிய மதுரையில் இருந்து பாண்டிய இளவரசியை மணம் முடித்ததாகவும், அவரின் எழுநூறு நண்பர்களும் அவ்வாறே மதுரை பெண்களை வரவழைத்து திருமணம் செய்ததாகவும் நம்புகின்றனர். அத்துடன் ஆயிரம் குடும்பங்களும் பல்வேறு தொழில்களில் அனுபவம் பெற்ற பல குடும்பங்களும் பல்வேறு பரிசுப் பொருட்களும் பாண்டிய மன்னரால் அனுப்பி வைக்கப்பட்டதாக சரித்திர குறிப்புகள் கூறுகின்றன. இக் கூற்றை கட்டுக்கதையென யாரும் கூற மாட்டார்கள்.

கடந்த காலத்தில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்ட போதெல்லாம் பல்வேறு உதவிப் பொருட்களுடன் இலங்கைக்கு முதல் முதலில் விரைந்து வந்ததும், வருவதும் தமிழ்நாடே. சுனாமி ஏற்பட்டபோது தமிழ் நாடு காட்டிய நல்லெண்ணத்தையும்,வழங்கிய உதவிப் பொருட்களையும் நம் நாட்டு மக்கள் அனுபவித்தவர்கள். எதிர்காலத்திலும் கூட இந்தியாவோடு தமிழ்நாடே முதல் முதலில் உதவ முன்வரும். ஆகவே எக்காரணம் கொண்டும் நாம் ஒருவருக்கொருவர் பகைமையை வளர்க்க முடியாது. இதையே மகாத்மாகாந்தியும் கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் பாக்குத்தொடுவாய்க்கு அப்பால் உள்ள பல்வேறு தேவைகளுடன் வாழும் தமது உறவுகளுக்கு உதவ வேண்டுமானால் தாராள மனப்பான்மையையும் அனுதாபமும் காட்டி பல்வேறு சமூகங்களுடன் சம உரிமையுடன் வாழ வேண்டுமென அங்கலாய்த்துக் கொண்டு வாழும் இலங்கை மக்களை பகைத்துக் கொண்டு ஒரு போதும் உதவ முடியாது. அதற்கு வேண்டியது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவே. இதையொட்டித்தான் தமிழ் நாடு இலங்கை வாழ் தமது சகோதரர்களுக்கு உதவ வேண்டுமானால் தமிழ்நாடு இலங்கையுடன் நட்புடன் செயற்பட வேண்டுமென சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

கடந்த முப்பது ஆண்டுகாலமாக பல விதங்களிலும் துன்பப்பட்ட தமிழ் மக்கள் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பல உயிர்களையும், மிகப் பெறுமதி வாய்ந்த சொத்துக்களையும் இழந்துள்ளனர். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலங்கையின் வட பகுதியில் உள்ள மிதவாத அரசியல்வாதிகளோடு கருத்துக்களை பரிமாறிக்கொள்வது அவசியமாகும். கடந்த சில ஆண்டுகளாக அரசியல்வாதிகளுக்கும், பிரதமர், முதலமைச்சர் போன்றோர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளேன். எனது ஆலோசனைகள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தால் இனப்பிரச்சினை தீர்விற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக கணிசமானதாக இருந்திருக்கும்.

இங்கு துர்ப்பாக்கியமான விடயம் என்னவென்னில் 1976ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை கலைக்கப்பட்டபோது அன்று முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி அவர்களின் சார்பாக வாதிடுவதற்கு மிகச் சிரமப்பட்டு பிரபல இராணி வழக்கறிஞர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களை வற்புறுத்தி நான் சென்னைக்கு கூட்டிக் சென்றிருந்தும், முப்பத்தாறு ஆண்டுகளுக்கு மேலாக ஒருவரை ஒருவர் அறிந்திருந்தும் அவர் ஒரு தடவையேனும் என்னுடன் கருத்து பரிமாறவும் இல்லை எனது ஆலோசனையை ஏற்கவும் இல்லை. சென்னையில் வழக்கை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சிங்கப்பூர் சென்ற ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் பூதவுடலே இலங்கைக்கு திரும்பி வந்தது.

ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்காது இந்திய அரசு நடுநிலை வகித்திருந்தாலும் அது எப்படியும் தானாக நிறைவேறியிருக்கும். இந்திய அரசு நடுநிலை வகித்திருப்பின் இலங்கையுடனான நல்லுறவை பயன்படுத்தி நிரந்தர தீர்வொன்றை காண உபயோகித்திருக்கலாம். இந்த நிலை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக தமிழ்நாடு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் மிகக் கவனமாக கலந்துரையாடப்பட்டும், பரிசீலிக்கப்பட்டும் செயற்படாவிட்டால் அவை எதிர்பார்க்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது தமிழர் பிரச்சினை தீர்வுக்கு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

வீ. ஆனந்தசங்கரி

செயலாளர்நாயகம்

தமிழர் விடுதலை கூட்டணி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com