Contact us at: sooddram@gmail.com

 

தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ் அவர்களுடனான நேர்காணல்

நேர்காணல் கண்டவ - ஸ்ரனிஸ்

 

தற்போது இலங்கையின் வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள்ள சாதாரன நிலைமை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஏரிமலை வெடித்து நெருப்பு குழம்பு ஆறாக ஓடி அனைத்தையும் அழித்து பின் குளிர்ந்த பிறகு ஏற்படும் சாதாரன நிலை போன்ற ஒரு சாதாரன நிலைதான் வடக்கு-கிழக்கில் தற்போது ஏற்பட்டிருக்கிறது.எரிமலை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடித்து சிதறலாம்.அதேபோல் இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுதியிலும் எப்போது வேண்டுமானாலும் ஒரு இனக்கலவரம் வெடிக்கலாம்.தற்பொழுதிருக்கும் சாதாரன நிலை கூட உலக நாடுகளின் கண்டனங்களுக்கு ராஜபக்சே பயத்தினால் ஏற்பட்டதே ஒழிய,மற்றப்பபடி வேறு எதனாலும் ஏற்படவில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.உலக நாடுகளின் கண்டனத்தால் சிங்களவர்களுக்கு எற்பட்ட அசாதாரனநிலை மாறிய பிறகு மீண்டும் ஒரு அனப்படுகொலையை ராஜபக்சே தூண்டிவிடலாம்,ஏனென்றர் ராஜபக்சேவின் நோக்கம் விடுதலைப்புலிகளை அமிழப்பதல்ல,ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதுதான்.அதனால்தான் 2007 இல் நடந்த இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவித்து அதில் அப்பாவி தமிழ் இன பொதுமக்களை ஒன்று  கூடச் செய்து நாலாபுறமுமும் ராணுவத்தை ஏவி தரைமார்க்கமாகவும்,ஆகாய மார்க்கமாகவும் தாக்குதலை நடத்தி 45000 அப்பாவி மக்களை கொலை செய்தனர் என்பதை இலங்கை வாழ் தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான அனைத்து போராளிக் குழுக்கள் மட்டுமல்லாமல் அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கின்ற அனைத்து தமிழன விடுதலை இயக்கங்களும் உணர வேண்டும்.எப்படி ஒருமுறை எரிமலை வெடித்ததனால் ஏற்பட்ட பேரிழப்பினால் பாதிக்கபட்ட பொதுமக்கள்,மறுமுறை அந்த எரிமலை வெடிக்கும்போது எந்தவொரு பாதிப்பும் தங்களுக்கு ஏற்படாதிருக்க முன்னெச்சரிக்கையுடன் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்கின்றார்களோ அதேபோல் இலங்கை வடக்கு-கிழக்கு பகுதியில் மீண்டும் ஒரு இனக்கலவரம் வெடித்தால் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இப்nபொழுதிருந்தே திட்டமிட்டு மேற்கொள்ளவேண்டும்.இயற்கையினால் ஏற்படும் எந்தவொரு இயற்கை சீற்றத்தையும் மனிதனால் தடுக்க முடியாது.ஆனால் சக மனிதனால் ஏற்படுத்த நினைக்கும் எந்தவொரு பேரழிவையும் தடுத்து நிறுத்த முடியும்.எனவே இலங்கையயில் மீண்டும் ஒரு இனக்கலவரம் நடக்காதிருக்க வேண்டிய நடவடிக்கையை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்.அனைத்து போராளி குழுக்களும்,அகிம்சை வழி தமிழின விடுதலை இயக்கங்களும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு என்ன லாபம் என்று பார்க்காமல் மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பொதுவானதொரு செயல்பாட்டை வகுத்து அதன்படி செயல்பட வேண்டும்.எதை செய்தால் மக்கள் அமைதியான,பாதுகாப்பான,சுதந்திரமான வாழ்க்கையை வாழமுடியுமோ அதை அனைவரும் ஒன்றுபட்டு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

இனி ஈழமே இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வாக நான் கருதுகிறேன்.எனென்றால் மக்களுக்கான ஜனநாக ஆட்சி இலங்கையில் நடைபெற்றால் பரவாயில்லை,ஆனால் ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகார ஆட்சி அல்லவா நடைபெறுகிறது.ரத்த வெறிகொண்ட இனவெறி ஆட்சியல்லவா நடைபெறுகிறது.தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் அல்லது இலங்கையை விட்டே விரட்டியடிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்ட ஒரு ஆட்சியல்லவா நடக்கிறது.இப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சி நடக்கும் நாட்டில் தமிழர்கள் எப்படி அதன் குடிமக்களாக வாழமுடியும்.

இப்பொழுதுள்ள நிலையில் இலங்கையில் இருக்கும் ஒரு சில தமிழழன தலைவர்கள் அடுத்து வரும் தேர்தலில் ராஜபக்சே தோற்று வெறொருவர் வந்தால் தமிர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பகிறார்கள்,அப்படி நடந்தால் நல்லது.ஆனால் அப்படி நடக்க வாய்ப்பேயில்லை என்றுதான் கருதுகிறேன்.ஏனென்றால் இலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகள்,ஏறக்குறைய அனைவருமே சிங்களளவர் மத்தியில் தமிழின விரோத அரசியலை மையமாக வைத்தே அரசியல் செயய்வதால் மாற்றம் வரும் என்று நினைக்கும் தமிழழன தலைவர்கள் எண்ணம் ஈடேராது என்றே கருதுகிறேன்,அதுமட்டுமல்லாமல் இலங்கையயின் சர்வாதிகாரியாக ராஜபக்சே உருமாறியுள்ளார்.இனிமேல் அங்கு நடக்கப்போகும் அனைத்து தேர்தல்களும் கண்துடைப்பான ஒரு தேர்தலாகத்தான் இருக்கும்,எனவே மாற்றம் நிகழ்வதற்கான வாயப்பு மிகமிக குறைவு என்பதை இந்த தமிழின தலைவர்கள் உணர வேண்டும்.மாற்றம் வரும் என்று நிகை;கும் இந்த தமிழின தலைவர்கள் இலங்ஐ கசுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை நடந்த தமிழருக்கு எதிரான வரலாற்றை ஒரு கணம் திரும்பி பார்த்தால் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் அண்மையில் எழ தொடங்கியுள்ளது இது தொடர்பாக என்ன நினைக்கிறீர்;கள?

இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது இந்தியாவின் மாபெரும்  தலைவர்,தமிழர்களின் நல்வாழ்வின்மீது உன்மையான அக்கறை கொண்ட தலைவர்,தமிழ் நாட்டில் எனக்கெதற்கு பாதுகாப்பு,இது என்வீடு,தமிழர்கள்ள என் உடன்பிறந்த சகோதரர்கள் என்று தமிழர்கள் மீது அளப்பறிய நம்பிக்கைகொண்டு பாதுகாப்பை துறந்ததன் விளைவாக தமிழினத் துரோகிகளால்,கயவர்களால் படகொலை செய்யப்ட்ட உலகப்பெரும் தலைவர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழர்களளின் நல்வாழ்விற்கான மிகப்பெரும் வரப்பிரசாதமாகும்.தமிழர்கள் கௌரவமாகவும்,சுதந்திரமாகவும்,வாழவதற்கு வழிசெய்த அந்த ஒப்பந்தத்தை பிரபாகரன் என்கிற சண்டாளனின் சுயநலத்தினாலும் சர்வாதிகாரபோக்கினாலும் அவனுக்கு துணைபோன தமிழ்நாட்லுள்ள தமிழ் இனத்தை சேராத பெரிய கட்சிகளின் தலைவர்கள் தங்களளின் சுயநலத்தாலும் செயல் இழக்கச்செய்தனர். அதன் விளைவு,ஈழத்தமிழர்கள் வாழ்விழந்தார்கள்,பச்pளம்குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை கொன்று குவிக்கப்ட்டார்கள் அந்த ஒப்பந்தத்திற்கு தடையாய் இருந்த பாசிச சக்தி ஒழிந்ததால் இன்றுள்ள ஈழத்தலைவர்கள்,உத்தம தலைவர்கள் ராஜீவ்காந்தியால் கொண்டுவரப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அமுல் படுத்த கோரிக்கை வைக்கிறார்கள்.இந்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டால் நல்லது,ஆனால் அதற்கு ராஜபக்சே வேட்டு வைத்தக் கொண்டிருக்கிறார் என்றபோது அது எப்படி நடைமுறை சாத்தியமாகும்.ராஜபக்சேவை நிர்ப்பந்தித்து இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவுதற்குரிய ஒர வலிமை மிகுந்த தலைவர் தமிழர்கள் நலன்மீது அக்கறை கொண்;ட தலைவர் இன்று இந்தியாவில் இல்லை என்பது மிக வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

தமிழகத்தில் இலங்கை தொடர்பான எழுச்சி தற்போத  ுறைந்துள்ளதாக தெரிகிறது ஏன்?

தமிழகத்தில் எப்nபுhழுது உண்மையான உன்மையான எழுச்சி ஏற்பட்டது இப்பொழுது குறைந்துவிட்டது என்று சொல்வதற்கு, தமிழ்நாட்டில் ஜாதி பாகுபாடின்றி கட்சியை நடத்தபவர்கள் யாரும் தமிழர்கள் அல்ல ஆனால் துரதிருஷ்டவசமாக தமிழர்கள் அல்லாத இவர்களுடைய கட்சிகள்தான் தமிழகத்தில் பெரிய கட்சிகளாக இருக்கிறது.அரசியல் அதிகாரத்தையும் இவர்களதான் கைப்பற்றுகிறார்கள் தமிழர்கள் கட்சி ஆரம்பித்தால் ஜாதி கட்சிமட்டும்தான் ஆரம்பிக்கிறார்கள்.

ஜாதி கட்சிகளால் தமிழர்க்ள ஒற்றுமையின்றி,தமிழின உணர்வின்றி, சாதிகளால் பிரிந்து கிடப்பதால் 46 ஆண்டுகளாய் தமிழனை தமிழன் ஆளமுடியாமல்,மற்ற இனத்தியருக்கு அடிமையாய் இருக்கிறார்கள்.இதில் மிகப்பெரிய துரதிருஷ்டம் என்னவென்றால் தான் அடிமையாய் இருப்பதையே தமிழன் உணராமல் இருக்கிறான் என்பதுதான்.ஈழப்பிரச்சினையை தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் ஈழத்தமிழர்களின் பிரச்சினையாக பார்க்காகமல் விடுதலைப்புலிகளின் பிரச்சினையாக மட்டும் பார்த்தார்கள்.அதுமட்டுல்லாமல் இந்த பிரச்சினையை தேர்தலில் வாக்கு அரசியலுக்காகத்தான்,இதைப்பற்றி பேசியானர்களே ஒழிய  தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க எநதவித நடவடிக்கையும் இவர்கள் செய்யவில்லை இன்னொரு நாட்டில் நடக்கும் இனப்படுகொலைக்கு,தமிழ்நாட்டில் அங்கொரு 50பேர்,இங்கொரு 100பேர்.வேறொரு இடத்தில் 500பேர்,1000பேர் மற்றொரு இடத்தில் 5000பேர் அல்லது 10000பேர் உண்ணாவிரதம் இருப்பதும்,ஆர்பாட்டம் நடத்துவதும் கண்டனப் பேரணி செல்வதும்,கருப்புச்சட்டை போட்ட எதிர்ப்பு தெரிவிப்பதும்,மனிதசங்கிலி நடத்துவதால் இன்படுகொலை நிறுத்தப்பட்டுவிடுமா,இப்படி செயய்யும் போதெல்லாம் இன்றுள்ள மத்திய அரசு கிண்டலும்,கேலியுமாக பார்க்கிறது.பாராளுமன்றத்தில் ஈழ பிரச்சினைபற்றி விவாதம் நடந்தபோது வெளியுவுதுறை அமைச்சர் சல்மான் குத்ஷித் கிண்டலாக சிரிக்கிறார்.அந்த சிரிப்புக்கு அர்த்தம் என்னவென்றால், ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு குரல்கொடுப்பதா என்றுதான் அர்த்தம்,46 ஆண்டுகாளல் மற்ற இனத்தவருக்கு அடிமையாhய் இருக்கும் தமிழன் இன்னொரு நாட்டில் உள்ள தமிழர்களின் விடுதலைக்கு குரல் கொடுத்தால் எப்படி மதிப்பார்கள்.அதனால்தான் இன்றுள்ள மத்திய அரசு ஈழப்பிரச்சினையில் தமிழர்களின் உணர்வை மதிக்காமல் இருக்ககிறது. துமிழநாட்டிலுள்ள தலைவர்களுக்கு ஈப்பிரச்சினை தீரவேண்டும் என்ற எண்ணமோ,அக்கரையோ துளியும் கிடையாது அதை ஒரு சீசன்(ளநயளழn) அரசிலாகத்தான் கையாண்டர்களே ஒழிய,அதுவும் உலக நாடுகளில் ஏதாவது ஒரு நாடு ஈழப்பேரில் நடந்த கொடுமையயை வெளியுலகத்திற்கு அமபலப்படுத்தும்போதுமட்டும்தான் பேசினாhர்களே ஒழிய,போராட்டம் நடத்தினார்களே ஒழிய ஈழப்பிரச்சினைக்கு,ஈழத்தமிழர்களுக்கு வேண்டிய எந்த ஒரு தீர்வையோ, நன்மையையோ இவர்கள் செய்ததில்லை

தமிழ்நாட்டில் ஈழப்பிரச்சினையை சீசன்,சீனனுக்குதான் போசினாகள் ஒழிய மற்றப்படி இதை ஒரு தொடர்போராட்டமாக,ஒரு விடுதலைப்போராட்டமாக நடத்தவில்லை,தொடர்ந்து போராடி இப்பொழுது வீரியம் குறைந்திருந்தால் தாங்கள் சொல்வது பொருத்தமாக இருந்திருக்கும்,அப்படி இல்லாமல் சீசனுக்கு சீசன் மட்டும் போராடிவிட்டு நிறுத்திக்கொள்ளும் அரசியலை தமிழக அரசியல் கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. ஆப்படி இருக்க தற்பொழுது வீரியம் குறைந்திருக்கின்றது ஏன் என்று தாங்கள் கேட்கும் கேள்வி ஏற்புடையதல்ல

இலங்கைத் தமிழர் தொடர்பாக தங்களது கட்சி நிலைப்பாடு என்ன?

எங்களது தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு ஒருவருடம்தான் ஆகிறது.எங்கள் கட்சி ஒரு வளரும் கட்சி,இருந்தாலும் எந்தவித அரசியல் லாப நோக்கமின்றி ஈழத்தமிழர்களின் நலனுக்காக இந்த வருடத்தில் மட்டும் பல்வேறு போராட்டங்கள் மூலம் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றோம்.அதுமட்டுமல்லாமல் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் எந்த பெரிய கட்சியாலும் எவ்வளவு பெரிய தலைவரானாலும்,யாரும்; அஞ்சாமல் பகிரங்கமாக அவர்களை எதிர்க்கிறோம்.தொடாந்து எங்களது கருத்தக்களையும் எதிர்ப்புகளையும் பத்திரிகைகள் வழியாகவும் மீடியாக்கள் வழியாகவும் மக்கள் மன்றத்திலும் நாங்கள் பதிவு செய்துகொண்;டிருக்கின்றோம்.ஈழத்தமிழர்கள் அனைத்த சுதந்திரங்களுடனும்,பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய எந்த ஒரு தீர்வையும் ஏற்றுக்கொள்;ள எங்கள் கட்சி தயாராய் இருக்கிறது.எங்களுக்கு ஒரு தனிப்பட்ட இயக்கத்தின் நலனோ அல்லது தனிப்பட்ட தலைவர்களினது நலனோ முக்கியமல்ல மக்களின் நலன்தான் முக்கியம் மக்கள் நலனுக்காக நாங்கள் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கின்றோம்.இந்த சந்தர்ப்பந்தின் மூலமாக ஈழத்தமிழர்களுக்காக போரடிக்கொண்டிருக்கின்ற ஈழத்தலைவர்களுக்கு தமிழக முன்னேற்ற காங்கிரஸ் சார்பாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அனைத்து போராளி குழுக்களும், விடுதலை இயக்கங்களும் ஒன்றுபடவேண்டும். நீங்கள் ஒன்றுபடுவதற்கு இதைவிட ஒரு சந்தர்ப்பம் நிச்சயமாக கிடைக்காது.எனவே நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கமாக உருமாறி அடுத்து வரப்போகும் பொதுத்தேர்வில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் ஒட்டமொத்த அரசில் அதிகாரத்தையும் தேர்தல் மூலமாக அடைந்து இலங்கையை ஆளப்போகிற சிங்கள கட்சிக்கு உங்கள் ஆதரவில்லாமல் ஆட்சியை நடத்த முடியாது என்ற நிலையை,அதாவது எப்படி இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி மற்ற கூட்டணி கட்சிகளின் தயவில்லாமல் போனால் ஆட்சியை நடத்த முடியாதோ அப்டியொரு வலிமைமிக்க நிலையை உருவாக்கி இலங்கையில் கூட்டணி ஆட்சியை உருவாக்கி அதன்மூலம் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தருமாறு  உங்கள் அனைவரின் பாதங்களில் என் சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்ளிறேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com