Contact us at: sooddram@gmail.com

 

ஈழப் பிரச்சினையில் இந்தியாவை ஓரம்கட்ட முயற்சிக்கும் ரி.என்.ஏ!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கான தேர்வில் திரு. சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுடைய தெரிவு பலருக்கும் தகுதியுடையதாகத் தெரியலாம். அவர் படித்தவர், சட்டத்தரணி, நீதிபதி என்று பல தகுதிகளையும் உடையவர். அரசாங்கத்துடனும், பிறநாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தகுதியானவர் என்று பல வெளிநாட்டுத் தமிழர்களும், கொழும்பை மையமாகக் கொண்டவர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இவை அனைத்தும் உண்மைதான். எங்களுடைய பிரச்சினை எங்கள் இனத்தோடும், மொழியோடும், நிலத்தோடும், கலாச்சாரத்தோடும், உயிர் வாழ்வோடும் தொடர்புடையதாகும். எங்கள் இனத்தைத் தலைமை தாங்கி நடத்திச் செல்பவர் எங்கள் இனத்தோடு ஒன்றரக் கலந்தவராக இருத்தல் கட்டாயமாகும். எங்கள் இனம்பட்ட துயரங்களில் தானும் பங்கெடுத்தவராக இருத்தல் வேண்டும்.

தமிழ் இனத்துக்கு சட்டத்தரணிகள் பெற்றுக்கொடுத்தது என்ன?

கடந்த காலங்களில் எங்கள் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் சட்டத்தரணிகளாகத்தான் இருந்தார்கள். இந்தச் சட்டத்தரணிகளால் எதனைப் பெற்றுத்தர முடிந்தது? திரு.ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்கள் சிறந்த சட்டத்தரணிதான். அவரால் எங்கள் இனத்துக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடிந்ததா? பொன். இராமநாதன் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள், திரு. செல்வநாயகம் அவர்கள் மற்றும் அனைததுச் சட்டததரணிகளையும் எடுத்க்கொள்ளுங்கள்? இவர்களில் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு போராளியாகத் திகழ்ந்தார்கள்.

சட்த்தரணிகள் என்பதால் எங்களுக்கு ஏதாவது உரிமைகள் பெற்றுக்கொடுக்க முடிந்ததா? சிங்களத் தலைவர்களை விட சிறந்த வக்கீல்களாகத் திகழ்ந்தவர்களால் எந்த உரிமையையும் இதுவரை பெற்றுத் தர முடிந்ததில்லை. விக்னேஸ்வரன் அவர்களை இழுத்து வந்தவர்கள் கூறும் விளக்கம் என்னவென்றால்,'சிங்கள அரசாங்கத்துடன் பேசுவதற்கும், பிறநாடுகளுடன் பேசுவதற்கும்' என்று சொல்லப்படுகிறது! சிங்களத் தலைவர்கள் 'உரிமைகளைத் தருகிறோம் நன்கு சட்டம் தெரிந்தவர்களை அழைத்து வாருங்கள்' என்றா கூறினர்? கொள்கையே இல்லாத ஒருவர் தேவைப்படுகிறது சிங்கள அரசுக்கு, அவரைத்தான் தெரிந்துள்ளனர் தமிழ் இனத்தின் இன்றைய ஏகப்பிரதிநிதிகள்.

திரு. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழருக்கு செய்த உதவிகள்:

ஓய்வு பெறும் வரை அரசாங்கத்தின் உயர் பணியில் இருந்துள்ளார் திரு. விக்னேஸ்வரன்! இவர் வகித்த உயர் பதவியை ஓர் தமிழன் அடைவதென்றால் சிங்கள அரசின் செயல்களுக்கெல்லாம் தலைவணங்கும் ஒருவருக்குத்தான் அப்பதவி கிடைக்கும். ஈழத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்படும் போது அமைதியாக தனது வாழ்வைக் கொழும்பில் வைத்திருந்தவர் நமது விக்னேஸ்வரன் அவர்கள். இவர் பதவியில் இருக்கும் போது வெலிக்கடை, மகசீன், பூசா, கண்டி போன்ற சிறைகளிலிருந்த அப்பாவித் தமிழ் இளைஞர்கள் தலைமை நீதிபதி என்ற நம்பிக்கையில் தமக்கு நடந்திருக்கும் அநீதி தொடர்பாக பல முறையீடுகளை இவருக்கு அனுப்பிவைத்தனர். அவை அனைத்தையும் திரு.விக்னேஸ்வரன் குப்பையில் போட்டுவிட்டார். ஓர் நாட்டின் தலைமை நீதிபதியிடம் அந்நாட்டின் குடிமகன் ஒருவர் தனக்கு அநீதி நடந்துள்ளது என்று ஓர் கடிதம் எழுதினால் அக்கடிதத்தை ஓர் முறையீடாக எடுத்து விசாரணைக்கு உட்படுத்தி அந்த நபருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும், ஆனால் இவருக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களும், முறையீடுகளும் யாருக்கும் தெரியாமல் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டன. தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் இனத்துக்கு அநீதி இழைத்தவர் என்றால் அது மிகையல்ல!

தமிழரது நிலம் பறிக்கப்படுகிறது, மொழி அழிக்கப்படுகிறது, சுதந்திரம் நசுக்கப்படுகிறது, கல்வி தடுக்கப்படுகிறது, தொழில் முடக்கப்படுகிறது, மொத்தத்தில் உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலையில் தமிழ் மக்கள் வடக்குக் கிழக்கில் வாழ்கிறார்கள். இவ்வித ஆபத்தெல்லாம் யாரால் ஏற்படுகிறதென்றால் சிங்கள இனத்தவரால். அப்படிப்பட்ட சிங்கள இனத்தவருக்கு சம்மந்தியான திரு. விக்னேஸ்வரன் அவர்கள் அந்த இனத்தவருடன் மோதி எப்படி எங்கள் இனத்துக்கு உரிமைகள் பெற்றுக் கொடுப்பார்?

பாதிச் சிங்களவரான விக்னேஸ்வரன்:

வாழ்நாள் முழுவதும் சிங்கள இனத்தவருடன் வாழ்ந்து, தனது இரண்டு மகன்களையும் சிங்கள இனத்தவருக்குத் திருமணம் செய்து கொடுத்தவர் தமிழ் இனத்தின் உணர்வுகளை எப்படி புரிந்துகொள்வார்? இவர் முதலமைச்சரானால் இவரை யாராவது ஒரு தமிழ் மகன் சென்று பார்க்க முடியுமா? சாதாரண தமிழனையல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூட இவரைச் சந்திக்க முடியாது. ஏனெனில் இவரை அவர்களுக்குக் கூடத் தெரியாது!

இவர் முதலமைச்சரானால், இவர் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியவரல்ல. ஜனாதிபதிக்கும் கவர்னருக்கும் மட்டுமே பதில் சொல்வார். தொண்டருக்கோ, கட்சிக்கோ, கட்சியின் முக்கியஸ்தருக்கோ இவர் பதில் சொல்லவேண்டியதில்லை.

தமிழருடன் தொடர்பில்லாத ஒருவர் தமிழருக்கு ஏன் பதில் கூறவேண்டும். சிங்கள அரசாங்கத்தின் உயர் பதவியை ஒருவர் அடைய வேண்டும் என்றால் அந்த அரசாங்கம் செய்யும் அனைத்து அநீதிகளுக்கும் துணைநின்றால்தான் அவர் உயர் பதவியை அடைய முடியும். தமிழ் இனத்துக்கு இவரது பதவி காலங்களில் எத்தனையோ ஆயிரக்கணக்கான அநீதிகள் இழைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் இவர் ஆதரித்தபடியால்தான் இவர் உயர்ந்த நீதிபதிப் பதவியை அடைய முடிந்தது. ஓய்வு பெறும் வரை பதவியை அனுபவித்துவிட்டு ஓய்வுக்குப் பின்னர் அதே பதவி ஆசை மீண்டும் தொற்றிக் கொண்டுள்ளது விக்னேஸ்வரன் அவர்களுக்கு.

ஒருவர் நீதிபதி ஆகிவிட்டால் அவர் பொதுமக்களிடமிருந்து அன்னியப்பட்டுவிடுவார். அதிலும் இவர் தமிழராயிருந்து உயர் நீதிபதிப் பதவியை அடைந்தவர். தமிழரைக் கண்டாலே வெறுப்படைந்திருப்பார். அப்படி வெறுப்பைக் காட்டியபடியால்தான் இவர் உச்ச நீதிமன்ற தலைமைப் பதவியை அடைய முடிந்தது.

இவரது சம்மந்திகள் சிங்கள இனத்தின் சாதாரணகுடிமக்கள் அல்ல! மூத்த மகன் திருமணம் செய்தது திரு. வாசுதேவ நாணயக்காராவின் மகளை, இளைய மகன் திருமணம் செய்தது, ராஜபக்ச கட்சியின் தெகிவள கவுண்சிலர் கேசவலால் குணசேகராவின் அண்ணனின் மகளை! இரண்டு சம்மந்திகளுமே சிங்கள அரசியலில் முக்கிய புள்ளிகள். உறவுகள் இப்படியிருக்க தமிழ் இனத்தின் உரிமைக்காக இவரால் எப்படி போராட முடியும்? தமிழ் மக்கள் இவர் வருகைபற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

யாராவது சட்டம் தெரிந்தவரை அழைத்து வாருங்கள் உங்களுக்கு உரிமைகள் தருகிறோம் என்று ராஜபக்ச கூறவில்லை! சிங்கள இனத்துக்கு வேண்டிய ஒருவர்தான் வடக்கின் முதலமைச்சராக வேண்டும் என்றுதான் ராஜபக்ச கருதினார்.

ராஜபக்ச–சம்பந்தர் சந்திப்பின் ரகசியம்:

கடந்த 12-07-2013 அன்று காலையில் திரு. சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதி ராஜபக்சேயைச் சந்தித்தார். இவர் தனியாகவே சென்று சந்தித்தார். இரண்டு மணிநேரங்கள் அவருடன் பேசியப்பின்னர் ரி.என்.ஏ.யின் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றும் போது ஜனாதிபதியை சந்தித்துப் பேசியது தொடர்பாக விளக்கினார். பின்னர் திரு. விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் பதவிக்குத் தெரிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் ஜனாதிபதியுடன் கதைத்த போது அவருடன் யார் யார் இருந்தார்கள் என்று திரு. சம்பந்தன் அவர்கள் ரி.என்.ஏ. உறுப்பினர்களிடம் கூடத் தெரிவிக்கவில்லை!

உண்மையில் ஜனாதிபதியுடன் திரு. விக்னேஸ்வரன் அவர்களின் சம்மந்தியான திரு. வாசதேவ நாணயக்கராவும் இருந்துள்ளார்! திரு. சம்பந்தன் அவர்கள் ஏன் அதனை மறைத்தார் என்பது சந்தேகத்துக்குரியது!

ராஜபக்சேயின் குடும்பத்தாரைப் பொறுத்தவரை இந்தியா ஓர் தலைவலியாக இருப்பதாகவே கருதுகின்றனர். ஜெயவர்த்தனா இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம்தான் இன்று அவர்களுக்குத் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. விடுதலைப் புலிகளை மொத்தமாக அழித்துவிட்ட பின்னரும் தமிழருக்கான உரிமை என்று கூறி இந்தியா மிரட்டுகிறது. அப்படி மிரட்டும் உரிமை எதனால் ஏற்பட்டது என்றால் இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினால்தான். எனவே இந்த ஒப்பந்தத்தினை கிழித்து வீச வேண்டும்! ஆனால் அதனைச் செய்ய முடியாது. அப்படி செய்தால் இந்தியா நேரடியாக களத்தில் இறங்கிவிடும், எனவேதான் ராஜபக்ச குடும்பம் ஒன்று கூடி 'இந்திய-இலங்கை' ஒப்பந்தத்தினை இல்லாமல் செய்யும் உபாயத்தைக் கண்டுபிடித்தனர்.

வேறு ஒரு ஒப்பந்தத்தைத் தமிழ் தலைவருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் ஏற்படுத்தினால் 'இந்திய-இலங்கை' ஒப்பந்தம் தானாகச் செயிலிழந்துவிடும். அதன் பின்னர் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட முடியாது. இவ்விதம் ஒப்பந்தம் ஏற்படுத்த நியமிக்கப்பட்டவர்தான் திரு. வாசுதேவ நாணயக்காரா அவர்கள்!

தென்னாப்ரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஒப்பந்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் இனத்துக்கு என்றும் துணை நிற்கும் இந்தியாவை ஓரம் கட்டலாம் என்று கணித்துத்தான் இம்முயற்சியினை கோத்தபாய ராஜபக்சவும், வாசுதேவ நாணயக்கராவும் முன்னெடுக்கின்றனர். நாணயக்கராவின் சம்மந்தி திரு. விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் இது மிகவும் சுலபமாகிவிடும்.

இது போன்ற ஓர் முயற்சியினை தமிழர் தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்படுகிறது என்று அறிகிறோம். 'குளோபல் தமிழ் போரம்' என்ற அமைப்பின் மறைமுகத் தலைவர் என அழைக்கப்படும் நரேன் நரேந்திரன் என்பவரும் இம் முயற்சியில் நாணயக்கராவுடன் தென்னாப்ரிக்க துணை அமைச்சர் இப்ராகிம் இப்ராகிமுடன் இணைந்து செயற்பாடுவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்றைய தமிழ் தலைவர்களான, திரு. இராமநாதன், திரு. பொன்னம்பலம், திரு. செல்வநாயகம் அதன் பின்னர் இந்தியா என்று ஏமாற்றிவந்த பௌத்த சிங்கள அரசு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி தமிழருக்கு உரிமை வழங்கப்போகிறது என்று கூற இதனையும் நம்புவதற்கு நம்மில் பலர் இருக்கும் போது சிங்கள அரசு இதனையும் செய்யும் இதற்கு மேலும் செய்யும்.

ஈழத்தமிழ் இனத்துக்கு இன்று இருக்கும் பாதுகாப்பு:

எங்கள் இனத்துக்கு இன்று இருக்கும் பாதுகாப்பு 'இந்திய-இல்ங்கை' ஒப்பந்தமும், இந்தியாவும்தான். சிங்கள அரசின் ஏமாற்று வித்தைகளுக்கு எடுபட்டு தமிழ் இனத்தை பாதுகாப்பற்ற நிரந்தர அடிமை வாழ்வுக்கு தள்ளிச் செல்ல நாம் அனுமதிக்கக் கூடாது. 'இந்திய-இலங்கை' ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டு வேறு ஓர் ஒப்பந்தத்தைச் செய்வதற்கு தமிழர் யாரும் அனுமதிக்கக்கூடாது. பிறநாடுகளுடன் இணைந்து தனிநாடு ஒன்றினை உருவாக்கினால் நாம் அவற்றுக்குத் தடையாக இருக்கப்போவதில்லை. அதைவிடுத்து தமிழ் மக்களுக்கிருக்கும் ஒரே பாதுகாப்பு இந்திய-இலங்கை ஒப்பந்தமே. இதனை இல்லாமல் செய்யும் முயற்சியில் இறங்குபவர்கள் தமிழ் இனத்தின் துரோகிகள் ஆவார்கள். தமிழ் இனத்தின் மீது பற்றுக்கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்து இம் முயற்சியினைத் தடுக்க வேண்டும்.

கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு வரைதான் மௌனம் காக்கின்றனர் சிங்களத் தலைவர்கள். அது முடிந்ததும் தமிழ் இன ஒடுக்குதலுக்கு மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் தயாரிப்புப் பணிகளில்தான் திரு. விக்னேஸ்வரன் அவர்கள் இழுத்து வரப்பட்டிருக்கிறார். பாதிச் சிங்களவராகிய விக்னேஸ்வரன் அவர்கள் எந்தவிதத்திலும் தமிழ் இனத்தின் உணர்வுகளுக்கும் அபிலாசைகளுக்கும் தகுதியான தலைவராக முடியாது. ஆபத்தை நாமே வலிந்து அழைத்து வந்துள்ளோம். இவ்விடயத்தில் ரி.என்.ஏ. பாரிய துரோகத்தினை தமிழினத்துக்கு செய்துள்ளது என்றே நாங்கள் கருதுகிறோம். திரு. விக்னேஸ்வரனது  நியமனத்தை கண்டிப்பாகத் திரும்ப பெற வேண்டும்.

தமிழ் இனத்தைத் தலைமை தாங்க கறுப்புக் கோட்டுகள் அவசியமில்லை என்பதனைத் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தவறான முன்னுதாரணங்களை ஈழத் தமிழர்கள் மீது திணிக்கக்கூடாது இன்றைய தலைமை. தமிழ் இனத்தைத் தனிமைப் படுத்தி சிங்களமயமாக்கலை முன்னெடுக்க, இந்தியாவை ஓரம்கட்ட எடுக்கப்படும் முயற்சியை ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கக்கூடாது. தமிழ் இனத்தின் எதிர்காலத்தை சூனியமாக்கும் முயற்சி தடுக்கப்பட வேண்டும்.

அரசியல் பிரிவு

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

(ஈ.என்.டி.எல்.எப்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com