Contact us at: sooddram@gmail.com

 

ஆசிரிய உதவியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த கோரி மக்கள் ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் உதவியாளர் நியமனம் பெற்றவர்களும் மற்றும் பெற இருப்பவர்களும் இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு – 03 – தரம் IIற்கு தகுதியானவர்கள் என்பதனால் அவர்களை ஆசிரிய உதவியாளர்காக நிதியமித்த திகதியில் இருந்து ஆசிரியர் சேவைக்குள் இணைத்து கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க உரிய அதிகாரிகளை பரிந்துரைக்கும்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டை 23.07.2015ஆம் திகதி மக்கள் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜினால் பொதுநல அக்கறை விடயமாக குறிப்பிட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் முறைப்பாட்டு இலக்கமாக HRC/2638/15 வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் ஆசிரியர் சேவையின் பிரமாணக் குறிப்பின்படி ஆசிரியர் சேவை வகுப்பு 03- தரம் IIற்கான கல்வி தகைமையையும் ஏனைய தகைமைகளையும் கொண்டவர்கள் ஆசிரியர் சேவை வகுப்பு 03 தரம் IIற்கு ஆட்சேர்ப்பிற்கு பின்பற்றவேண்டிய நடவடிக்கை முறைகளை பின்பற்றி, ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பில் இல்லாத் நியாயமற்ற, சட்டரீதியற்ற, பொது நியமங்களை மீறிய நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டு நிரந்தரமற்ற 'ஆசிரிய உதவியாளர்' என்ற பதவிப் பெயரில் ஆட்சேர்த்தமையினூடாக அரசியலமைப்பில் அடிப்படை உரிமை அத்தியாயத்தில் 12(1), 14(1)(g) உறுப்புரைகளின் கீழ் உறுதிப்படுத்தியுள்ள ஆசிரிய உதவியாளர்களாக சேர்க்கப்பட்ட பிரஜைகளின் அடிப்படை உரிமையை மீறியுள்ளமையை முறைப்பாட்டில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதாவது சமத்துவம் மற்றும் சமமாக நடத்தப்படுவதற்கான சுதந்திரம் மற்றும் தொழில் செய்வதற்கான சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமையை முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய, ஊவா, சபரகமுவ, மேல், தென், வட மேல் ஆகிய மாகாணங்களின் கல்வி அமைச்சின் செயலாளர்கள் குறித்த முறைப்பாட்டில் பிரதிவாதிளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும், ஆசிரிய சேவை வகுப்பு 03 -தரம் IIற்கு சேர்க்கப்பட வேண்டியவர்கள் ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதனால் நிர்வாக ஒழுங்குவிதிகளுக்கும் பொதுவான நியமங்களுக்கும் புறம்பாக, நியாயமற்ற, அநீதியான பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை முறைப்பாட்டில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

1. மாதத்திற்கு அனைத்து கொடுப்பனவுகள் உள்ளடங்களாக ரூபா 6000/=வை மட்டும் கொடுப்பனவாக பெற்று தமது பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளமை.

2. 05 வருட காலத்தில் நியமிக்கப்பட்ட பாடத்தில் பயிற்சியை அல்லது பட்டம் பெறாவிட்டால் ஆசிரிய உதவியாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட ஏற்பாடு இருக்கின்றமை.

3. 05 வருட காலத்திற்கான லீவு எந்த அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பது அறிவிக்கப்படாமை, அதற்கான ஏற்பாடுகள் நியமனக்கடிதத்தில் இன்மை.

4. பயிற்சி அல்லது பட்டம் பெற்ற பின்னர் நியமனத் திகதியில் இருந்து ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படுவார்கள் என்றோ, நியமனத் திகதியை அடிப்படையாக கொண்டே பதவி மூப்பு மற்றும் ஓய்வூதியம் என்பன தீரமானிக்கப்படும் என்றோ, உத்தியோகபூர்வ உத்தரவாதம் எவையும் வழங்கப்படாமை.

மேற்குறித்த நிபந்தனைகள் காரணமாக ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் பணியை வினைத்திறனாகவும் இதயசுத்தியோடும் மேற்கொள்வது கடினமானதும் சவாலானதுமான விடயம் என்பதையும் பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு ஆசிரிய உதவியாளர்களாக குறித்த நியாயமற்ற நிபந்தனைகளின் அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்டுள்ளமையினால் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு எவ்வகையிலும் அதன் நோக்கத்தை வினைத்திறனாக அடைய முடியாது போயுள்ளதுடன் ஆட்சேர்ப்பு நோக்கத்திற்கு புறம்பாகவும் உள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு ஆசிரிய உதவியாளர்கள் ரூபா 6000/= வருமானமாக பெற்று 05 வருட காலத்தில் நியமனம் பெற்ற பாடத்தில் ஆசிரிய பயிற்சியை அல்லது பட்டம் பெறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமான விடயமன்று என்பதையும் ஆசிரிய உதவியாளர்கள் கல்வி அமைச்சின் கீழுள்ள கலாசாலைகள் ஊடாக பயற்சியை பெறுவதற்கான பிரத்தியேக ஏற்பாடுகள் எதுவும் கல்வி அமைச்சினால் செய்யப்படாத நிலையில் ஆசிரியர் பயிற்சியை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் ஆசிரிய கலாசாலைகளினூடாக 05 வருட காலத்தினுள் ஆசிரிய பயிற்சியை பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றமையையும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு தோட்டப் பாடசாலைக்கு ஆசிரியர் சேவை வகுப்பு 3- தரம் IIற்கு நியமனம் பெற்றவர்களும் தற்போது ஆசிரிய உதவியாளர்களாக ஆட்சேர்க்கப்பட்டவர்களுக்கும் இடையில் கல்வி தகைமை மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளில் மாற்றம் இல்லை. அத்தோடு குறித்த நியமனத்திற்கான வர்த்தமானிப் பத்திரத்தில் ஆசிரிய பயிற்சிகள் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்ததுடன் நியமன் பெற்ற ஆசிரியர்கள் உரிய காலத்தில் ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்யக்கூடியதாக இருந்தது. எனினும் ஆசிரிய உதவியாளர்கள் நியமனத்தில் அவ்வாறான ஏற்பாடு எதுவும் இன்மையும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பையும் தாபன விதிக் கோவையையும் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் நடவடிக்கை முறை விதிகளையும் மீறி ஆசிரியர் சேவை வகுப்பு 3- தரம் IIற்கு தகுதியானவர்களை ஆசிரிய உதவியாளர்கள் என்ற நிரந்தரமற்ற பதவிக்கு நியாயமற்ற, சட்டரீதியற்ற, பொது நியமங்களை மீறிய நிபந்தனைகளை ஏற்படுத்தி ஆட்சேர்த்திருக்கின்றமையினூடாக எதிராளிகள் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் உறுப்புரை 12(1) மற்றும் 14(1)(g)இன் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களாக ஆட்சேர்க்கப்பட்ட பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை பிரதிவாதிகள் மீறியுள்ளனர் என பிரகடனம் செய்யவும்; அதனடிப்படையில் ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்கள் நியாயமான எதிர்பார்ப்பை கொண்டிருப்பதனாலும் அவர்கள் ஆசிரிய சேவையின் வகுப்பு 03- தரம் IIற்கு ஏற்புடைய தகுதியை கொண்டிருப்பதனாலும் அவர்களை ஆசிரிய சேவையின் வகுப்பு 03- தரம் IIற்கு ஆட்சேர்க்க பின்பற்ற வேண்டிய நடவடிக்கை முறை பின்பற்றப்பட்டிருப்பதனாலும், ஆட்சேர்க்க பின்பற்றப்பட்ட நடைமுறையை இரத்தோ அல்லது மாற்றங்களை செய்ய தேவை எழாமையினால் ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களை ஆசிரிய சேவை வகுப்பு 03- தரம் IIற்கு உள்ளீர்ப்பதற்கு பிரதிவாதிகளுக்கு பரிந்துரைக்கவும்; ஆசிரியர் சேவை வகுப்பு 03- தரம் IIற்கு இணைக்கப்பட்டப் பின்னர் ஆசிரியர் பயிற்சியை பெற்றுக் கொள்வதற்கான பிரத்தியேக ஏற்பாடுகளை செய்யும்படி பிரதிவாதிகளுக்கு பரிந்துரைக்கவும்; ஆணைக்குழு ஏற்புடையது என கருதும் ஏனைய நிவாரணங்களை வழங்கும்படியும்;; குறித்த முறைப்பாட்டில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ், ஆசிரிய உதவியாளர் நியமனத்தில் இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டிருக்கும் நிலையில் அநீதிக்கு எதிராக முழு ஆசிரியர் சமூகமும் குரல் கொடுக்க வேண்டும். நியமனம் வழங்கும் நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஊவா மாகாணத்தில் 02வது குழுவாக தெரிவு செய்யபட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு 04 நாட்கள் திசைமுகப்படுத்தல் பயிற்சி வழங்கப்பட்டுள்ள போதும் அவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்படவில்லை. எனினும் 03 குழுவாக சேர்க்கப்பட்டவர்களுக்கு திசைமுகப்படுத்தல் பயிற்சி இல்லாமலேயே நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத நடைமுறையாகும். இவ்வாறான நடவடிக்கைகள் அரசியில்வாதிகள் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான பின்னணியிலேயே ஊவா மாகாண கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்கள் ஊவா மாகாணத்தில் உள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு ரூபா. 23,500/=மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தேர்தல் மேடை பேச்சுக்களை ஆசிரிய உதவியாளர்கள் நம்பவேண்டியதில்லை. எவ்வாறாயினும் ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் சேவை வகுப்பு 03-தரம் IIற்கு தகுதியுடையவர்களாக இருக்கின்றமையினால் அவர்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்க அரசியல்வாதிகள் நடவடிக்கைகளை எடுக்க முடியும். எனினும் அதற்காக எந்த மலையக அரசியல் தலைமையும் இதுவரை குரல் கொடுக்கவில்லை. ஆசிரியர் சேவை வகுப்பு 03-தரம் IIற்கு ஆசிரிய உதவியாளர்கள் சேர்க்கப்படுவார்களாயின் சம்பளம் உட்பட ஏனைய தொழில்சார் பிரச்சினைகள் எழப்போவதில்லை. அதன் அதனடிப்படையிலேயே நாம் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். ஆசிரிய உதவியாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை 071- 6070644 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு எமக்கு தெரிவிக்கமுடியும். அவற்றை வெளிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் நாம் தயாராக உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com