Contact us at: sooddram@gmail.com

 

மொழிக்கொள்கை முறையாக நடைமுறைப்படுத்தப்படின் பிரச்சினைகள் சுமுகமாக தீரும்

நமது நாட்டை ஒருமைப்பாட்டிக்குள் கொண்டு வரும் போது முகங்கொடுக்கும் சவால்கள், அவற்றை வெற்றி கொள்ளும் அணுகுமுறைகள் என்பவற்றில் மொழி தொடர்பான முக்கியத்துவம், எதிர்கால திட்டங்கள் பற்றியும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களுடன் நடாத்திய நேர்காணல்.

கேள்வி:- நாடு பெற்றுக் கொண்ட வெற்றியோடு அநேக சவால்களுக்கு முகங்கொடுத்தது. உங்கள் கருத்துப்படி நாம் வெற்றி கொள்ள வேண்டிய அடுத்த சவால் என்ன?

பதில்:- நாம் இந்த நாட்டை ஒருமைப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். ஒரே நிர்வாக அதிகாரத்துக்குள் இலங்கையைக் கொண்டு வந்தோம். இப்போது ஒற்றுமைப்படுத்த வேண்டும். அதாவது பல்லின மக்களுக்கிடையே பொதுவான முறையில் ஒரே இலங்கை என்ற உணர்வை ஏற்படுத்துவது தான் இப்போது எமக்குள்ள ஒரே சவாலாகும்.

கேள்வி:- இந்த சவால்களை வெற்றி கொள்ளக் கூடிய அணுகுமுறைகள் என்ன?

பதில்:- சமத்துவம், பல்லின மக்களிடையே அந்நியோன்ய ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்துக்கும் மக்களுக்குமிடையே மக்களுக்கும் மக்களுக்குமிடையே, தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக சகல மக்களும் இரு மொழி களையும் தெரிந்திருக்க வேண் டும். அந்தந்த மக்கள் குழுக் களுக்குரிய விடயங்களில் அந் தந்த சந்தர்ப்பத்துக்கேற்ப செயல்பட்டு அவர்களின் தனித்துவத்தை பாதுகாக்க இந்நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் செயற்பட வேண்டும்.

கேள்வி:- நீங்கள் கூறுகிற படி இனக்குழுக்களாக பிரித்தால் நாம் இலங்கையர் என்ற இடத்துக்கு வருவதில் சிக்கலொன்று இருக்கின்றதல்லவா?

பதில்:- ஆம். அப்படியான ஒரு சிக்கலொன்றுண்டு. ஆனால் இவ்விடத்தில் இருப்பது வேறு பட்டவர்களின் கூட்டாகும். அதாவது நாம் இருப்பது போலவே பல்லினத்தன்மையை புரிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு மைப்பாட்டை ஏற்படுத்தக்கூ டிய ஒரு சூழலை ஏற்படுத்து வோம். அப்போது ஒரு வானவில் லைப் போல ஒரு புதுமை ஏற்படும். பல வர்ணங்களுண்டு. ஆனால் அவற்றின் ஒன்றிணைப்பால் புதுமை அதிகரிக்கின்றது.

நீங்கள் குறிப்பிடுவது மொழியை மாத்திரமே. ஆனால் பல்லின மக் களுக்குரிய தனிப்பட்ட கலாசாரம் ஒன்றுள்ளது. அவற்றுக்கென்று வேறு படுத்தப்பட்ட பிரதேசங்களுண்டு. அவர்களின் நம்பிக்கைகள், அனுஷ் டானங்களில் வேறுபாடுகளுண்டு?

கலாசாரத்தின் முக்கிய ஒரு இயல்பு தான் மொழி. இந்த இரு மொழிகளையும் பேசும் மக்களிடையே அவர்களின் தனிப்பட்ட கலாசாரத் தைப் பாதுகாத்துக்கொண்டு ஒரே நாட்டின் மக்களாக வாழக்கூடிய பின்னணியை நாம் ஏற்படுத்த வேண்டும். எனவே மிக முக்கிய விடயம் என்னவெனில் இந்த இரு மொழிக்கொள்கையை நடைமுறைப் படுத்துவதாகும். அதாவது எமது தமிழ் மக்களின் 30 வீதம் சிங்கள மொழியைப் பேசுகிறார்கள். சிங்கள மக்களில் 10 வீதம் தமிழ் மொழியைப் பேசுகிறார்கள். இவ்வீதம் கூடினால் அதன் கருத்து எமது கலாசாரங்க ளின் பல்லினத்தன்மையும் பரிமாறிக் கொள்ள ஆரம்பமாகின்றது என்பதாகும். பழக்கவழக்கங்கள், சடங்கு முறைகள், நடைமுறைகள் உணவுப்பழக்க வழக்கங்கள் என்பன தொடர்பாக எம்மிடையே பங்கிட்டுக் கொள்ள முடிகின்றது. அதில் மொழி தான் முக்கியமானது. மொழியை நாம் அனைவரும் பரிமாறிக் கொண்டால் அவரவர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு சமூகம் தானாகவே உருவாகும். அதனால் மொழியை தான் நாம் பரிமாறிக் கொள்ளுமிடத்துக்குக் கொண்டு வர வேண்டும்.

கேள்வி:- இது தொடர்பாக வழிமுறைகள் ஏதாவது திட்டமிட்டிருக்கிaர்களா?

பதில்:- இப்போது இதை நாம் செய்து கொண்டு இருக்கிறோம். நாட்டின் அனைவரும் இரு மொழிகளையும் பேசும் இடத்துக்குக் கொண்டு வருவதுதான் எமது அரசாங்கத்தின் நோக்கம். இப்போது அரசாங்கப் பாடசாலைகளில் இரு மொழிகளில் கற்பிக்கப் படுகின்றது.

மொழிச் சங்கங்களை ஏற்படுத்திக்கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்து அதனூடாக அரச உத்தியோகத்தர் களுக்கு இரு மொழிகளும் கற்பிக் கப்பட்டு வருகின்றது. இவ்வாறாக படிப்படியாக இந்நிலை விருத்தியடையும் போது எம்மால் இந்நாட்டில் வாழும் பல்லின மக்களோடு மிக இலகுவாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள லாம். அத்தோடு அவர்களின் குண இயல்புகளுக்கு காலாசாரத்துக்கு மதிப்பளிக்கும் மக்கள் தொடர்புகளைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கலாம். இதற்குத் தான் சமூக ஒருமைப்பாடு என்று கூறுகிறோம். இவ்வாறு செய்வது தான் எனது அமைச்சின் கடமைப்பாடு. அது ஆரம்பத்திலிருந்தே முறையாக கட்டியெழுப்பப் பட வேண்டும்.

கேள்வி:- இனப்பிரச்சினை க்குத் தீர்வாக 13 வது அரசியல் திட்ட திருத்தம் மற்றும் ஆணைக்குழு பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அது சர்வதேசத்தை அமைதிப்படுத்த கொண்டு வந்த பிரேரணைகளாக இருக்கக் கூடாது. அது எமது மனசாட்சியை அமைதிப்படுத்தவே கொண்டு வரப்பட்டுள்ளது. அது சர்வதேசத்துக்கு தெரிய வேண்டும். அரசியல் திட்டத்தின் திருத்தங்கள், பொது மக்கள் பிரதிநிதிகள் தமது மக்களுக்கு செய்யும் சேவைகளைப் போலவே நாம் முன்னெடுத்துச் செல்லும் இந்த வேலைத்திட்டங்கள் இந்த நாட்டின் ஜனநாயக ரீதியிலான கடமைகளாகும். மனச்சாட்சிக்கு இணங்க, எமது அறிவுக்கேற்ப, புரிந்துணர்வுக்கேற்ப நாம் இதை செய்து கொண்டு போகிறோம். அதனூடாக எமது நாட்டினுள் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொண்டு போகிறோம். நாம் பெரும் துரதிஷ்டமான காலமொன்றை கடத்தி விட்டோம். யுத்தம் முடிந்து இப்போது 3 வருடங்கள் முடிந்து விட்டது. நாட்டின்அமைதிக்காக நாம் பாடுபட வேண்டும் சும்மா இருந்தால் ஒன்றும் நடக்காது.

தனிநபர்கள் என்ற ரீதியிலும் உத்தியோகத்தர்கள் என்ற ரீதியிலும் அதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியில் தான் எமது வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

கேள்வி:- 13வது அரசியல் திட்டதிருத்தம் மற்றும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக நீங்கள் இணங்குகிaர்கள். அப்படியிருந்தும் ஏன் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருக்கின்றது?

பதில்:- அவற்றுக்கு திட்டங்கள் இருக்க வேண்டும். வளங்களை தேடிக்கொள்ள வேண்டும். தேவையான நிறுவனங்கள் இருக்க வேண்டும். ஆனால் இவற்றை விட முறையான ஒரு திட்டத்துக்கமைய இவற்றை அமுல் படுத்த அவசியமான நடவடிக்கை எடுத்தால் நல்லது.

விஷேடமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தும் வலையமைப்பை ஏற்படுத்தும் போது சிறிய, எளிதான பிரச்சினைகள் தொடர்பாக செயற்பட விஷேடமான ஒரு பிரிவொன்றை ஏற்படுத்தினால் அது மிகப் பொருத்தமாக இருக்கும். பலவிதமான சிறிய பிரச்சினைகள், தனிநபர் பிரச்சினைகள், சிறிய குழுக்களின் பிரச்சினைகள், இவை போன்றவற்றால் எழுவது முழு சமூகத்தையும் பாதிக்கும் பிரச்சினைகளாகும். அவை தொடர்பாக உடனடியாகச் செயற்படும் ஒரு அமைப்பு இருப்பது மிக நல்லது. அதில் மின ஆழமான பிரச்சினைகள் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளால் எவ்வித தடையும் ஏற்படாது. எனவே சிறிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு மேலதிமாக இது இருக்க வேண்டும்.

கேள்வி:- உங்கள் அமைச்சின் கடமைப்பாடுகள் பற்றி விளக்குவீர்களா?

பதில்:- எனது அமைச்சின் முக்கிய தொழிற்பாடு தான் தேசிய மொழிக் கொள்கையை உருவாக்குவது மற்றும் சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதும். கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மனிதர்களை சமூக மட்டத்துக்கு கொண்டுவரல், அடையாள அட்டை ஒன்று கூட இல்லாத பிறப்புச் சான்றிதழ் கூட இல்லாத மக்களுக்கு அவர்களை இந்நாட்டு பிரஜைகளாக உருவாக்குதல் இனக்குழுக்களிடையே செயற்பாட்டு தொடர்புகளை விருத்தி செய்தல் என்பனவாகும். அது தொடர்பாக எமது நிறுவகம் பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கின்றது. அகாரதிக்கேற்ப செய்திகளை வெளியிடுகின்றது. ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கின்றது. பேசும் மொழி தொடர்பாக பாடவிதானங்களை உருவாக்குகின்றது. கற்பிக்கப்படுகின்றது. 3ஆம் வகுப்பும் மற்றும் 1ஆம் தர அரச உத்தியோகத்தர்களும் சேர்ந்து பரீட்சைகள் தொடர்பாக அவற்றின் தரத்தை மேம்படுத்த அப்பாட விதானங்கள் புதுப்பிக்கப்படுகின்றது.

அப்பரீட்சைகளில் சித்தியடைந்து மீண்டும் அரச சேவைக்குப் போகும் உத்தியோகத்தர்கள் மேற்பார்வை செய்யப்படுவார்கள். அவர்கள் கற்றவற்றை செயற்படுத்துகிறார்களா என்றும் அவதானிக்கப்படுகின்றது. இவ்வாறு சமூகத்திலிருந்து பின்தள்ளப்பட்டிருந்த யுத்தத்தினால் அனாதைகளாக்கப்பட்ட பின்னடைந்த மனநிலையோடு இருக்கும் மனிதக் குழுக்கள் சமூகத்துக்கு முன்கொண்டு வரப்படுகிறார்கள். அடுத்த யுத்தத்தால் தமது பெற்றோர்களை இழந்த நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப தேவையான வசதிகளை ஐக்கிய நாடுகள் ஸ்தாப னத்தினால் பெற்றுக்கொடுக்கிறோம்.

கேள்வி:- அமைச்சினூடாக மேம்படுத்த எதிர்பார்த்துள்ள எதிர்கால திட்டங்கள் என்ன?

பதில்:- 2012 ஆம் ஆண்டுக்கான நடத்திச் செல்லும் பல திட்டங்கள் உண்டு. இளைஞர் முகாம்கள், தேசிய விழாக்கள், விஷேடமாக இன ஒருமைப்பாட்டுடன் நடத்தப்படும் விழாக்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குகிறோம். மாவட்ட மட்டத்தில் இளைஞர் முகாம்களை நடத்துகி றோம். 2 அல்லது 3 வருடங்கள் இவ்வாறு இளைஞர் முகாம்களை மாவட்ட மட்டத்தில் நடத்துகிறோம். இருமொழிகளையும் உபயோகிக் கும் அரச உத்தியோகத்தர்களை அவர்கள் ஒன்றிணைந்து கருத் துப் பரிமாற்றங்களைச் செய்து கொள்ளும் திட்டமொன்றை ஒழுங் கமைத்திருக்கின்றோம்.

மும்மொழி தொடர்புகள் வார மொன்றை நடத்த சமூக ஒருமைப் பாட்டு தினத்தையொட்டி அலரி மாளிகையில் நடத்த ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. தயட கிருல என்ற தேசிய நிகழ்ச்சிகளில் எமது அமைச்சின் சகல பிரிவுகளும் பங்கெடுத்து அப்பிரிவுகளால் கொண்டு நடாத்தப்படும் தொழிற்பாடுகள் காட்சிப் படுத்தலினூ¡டாக மக்களை சேர்த்துக் கொள்வதும் மற்றும் அதன் முக்கியமான விடயம் என்னவெனில் இந்த இருமொழிக் கொள்கையை அமுல் படுத்துவது. அவ்வாறு நடைபெறாத இடங்களுக்கு சென்று கவனித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

கேள்வி:- இருமொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படக் கூடிய செயன்முறை சிக்கல்கள் என்ன?

பதில்:- பிரதான விடயம் தான் மொழிகளும் நடைமுறைப்படுத்தப்படாமை. ஒரு வங்கியில் கடனொன்றைக் கொடுக்கும் போது அதிலிருக்கும் நிபந்தனைகள் ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது அது இருப்பது ஆங்கில மொழியில். அதுபோல் இப்போது அது பற்றி நிறுவனங்கள் தோறும் ஆய்வொன்று நடத்தப்படுகின்றது. அதன் தகவல்களின் படி பிரதேச செயலாளர் காரியாலயங்கள், மாவட்ட செயலாளர் காரியாலயங்கள், போன்றவற்றில் இந்த இரு மொழிக் கொள்கை தொடர்பான பிரச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனால் விஷேடமாக இரு மொழிகள் காணப்படும் பிரதேசங்களில் மொழி தொடர்பாக உதவி செய்யும் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சேவை செய்யும் தாதிகளுக்கு பேசும் மொழிப்பயிற்சியைப் பெற்றுக் கொடுக்கவும் அங்கிருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு இருமொழி பயிற்சியைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கையெடுக்கப்படுகின்றது. பொலிஸ் பயிற்சி நிறுவனத்தில் தமிழ் மொழி ஒரு விஷேட மொழியாக கற்பிக்கப்படுகின்றது. அது நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்றும் அரசாங்க தொழிற்பாடுகளில் உபயோகப்படுத்தப்படுகின்றதா என்றும் அவதானிக்கப்படுகின்றது.

நிஷா ஆப்டீன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com