Contact us at: sooddram@gmail.com

 

ஈ.பி.டி.பிக்கும் எனக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க இராஜhங்க திணைக்களம் வீண் குற்றச்சாட்டு!

திரு. ஜோன் எப். ஹரி ராஜாங்க செயலாளர், ஐக்கிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம்,ஐக்கிய அமெரிக்கா.ஐயா, 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைச் செயற்பாடுகள் பற்றிய நாட்டு அறிக்கை - ஸ்ரீலங்கா

இலங்கையின் பாராளுமன்ற உறுப் பினரும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆகிய நான் 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை பற்றிய செயற்பாடு களுக்கான நாட்டறிக்கை, ஸ்ரீலங்கா என்ற தலைப்பில் ஐக்கிய அமெரிக்கா, காங்கிரஸின் ராஜாங்கத் திணைக்களம் இந்த வருடம் ஏப்ரல், மாதம் அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பி வைத்த ஆவ ணத்தில் உள்ள விடயங்கள் தொடர்பாக பின்வருவனவற்றினை எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

நான் EPDP என பலராலும் அறி யப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட் சியின் செயலாளர் நாயகம் ஆவேன். இக்கட்சியானது இலங்கையின் தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் கட்சியாகும். எனது நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளை வென் றெடுப்பதற்காக 1970 மற்றும் 1980களில் நடத்தப்பட்ட போராட்டங்களில் முன் னணி வகித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கின்றேன்.

1987ம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப் பந்தமானது அரசியல் யாப்பில் 13வது திருத்தப் பிரேரணைக்கு வழியமைத்ததோடு, அதன் ஊடாக மாகாணங்களுக்கு அதி காரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாட்டினை கொண்டிருந்ததனால், நான் அதனைப் பூரணமாக ஏற்றுக் கொண்டதோடு, ஏனைய தமிழ் அமைப்புகளோடு சேர்ந்து ஸ்ரீலங்காவின் ஜனநாயக நீரோட்ட அரசியலில் இணைந்து கொண்டேன்.

நான் 1994 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களினால் தொடர்ச்சியாக பாரா ளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய் யப்பட்டிருக்கின்றேன். அத்தோடு கடந்த 13 வருடங்களாக வெவ்வேறு அரச தலைவர்களின் கீழ் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்து வரு கின்றேன். நான் இன்று அமைச்சரவையில் நீண்டகாலமாகவிருக்கும் அமைச்சர் தரத்தில் இருக்கின்றேன். 2010 ஏப்ரலில் கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்த லில் நான் ஸ்ரீலங்காவின் வடக்கு கிழ க்கு மாகாணங்களில் இருந்து பாராளு மன்றத்திற்குத் தேர்வான சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிக கூடிய விருப்பு வாக்குகளினையும் பெற்றுள்ளேன்.

குறிப்பிட்ட அறிக்கையில் உள்ளடக்கப் பட்ட பின்வரும் விடயங்கள் எனக்கு சஞ்சலத்தினையும், வேதனையையும் தருகின்றது.சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையின் கீழ் வழிநடாத்தப்படும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி. டி.பி) அச்சுறுத்தல், பலாத்காரமாகப் பணம் பறித்தல், இலஞ்சம் பெறுதல் மற்றும் யாழ். பொதுமக்கள் மீது வன் முறையினை மேற்கொள்ளல் போன்ற வற்றில் ஈடுபடுவதாக நம்பகத்தரமான அறிக்கைகளில் இருந்து தெரியவருகின்றது.

உதாரணத்திற்கு மார்ச் 4ஆம் திகதி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர் 13 வயது ஜேசுதாஸன் லக் சினியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்துள்ளார். ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் மார்ச் 16ஆம் திகதி ஜெகதீஸ்வரனை யாழ். சிறை ச்சாலையில் விளக்கமறிலில் வைத்துள்ளது

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி. டி.பி) போன்ற, அரசசார்பான துணைப் படைகளுக்கும், அரச பாதுகாப்பு படையினருக்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பகமான அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இக்குழுக்கள் போர்கால சூழலில் அரச படையினருடன் இணைந்து பாது காப்பு நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்தன. போர் ஒழிந்த சூழலில் அவர் கள் படிப்படியாக தங்களது வருமான வரம்புகளையும், எல்லைகளையும் திடப்படுத்திக் கொண்டதுடன், ஓர் வன்முறைக் கும்பலின் இயல்புகளை அதிகம் கொண்டிருந்தன.’

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்களைப் பயமுறுத்தி தொந்தரவு செய்வதாக தொடர்ச்சியான அறிக்கைகள் வந்துள்ளன’ (இவைகளே அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வையாகும்) நீங்கள் செனட் சபையின் வெளிவிவகார குழுவில் பணியாற்றிய போது உங்கள் சகபாடிகளும், நீங்களும், உலகெங்குமுள்ள மனித உரிமைகள் நிலவரங்களை துல் லியமாக மதிப்பீடு செய்வதென்பது இந்த அறிக்கையிலேயே தங்கியுள்ளதாக இவ்வறிக்கையின் முன்னுரையில் தெரி வித்துள்Zர்கள்.

அத்துடன் அது ராஜாங்கத் திணைக்களம் மற்றும் ஐக்கிய அமெ ரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையினை அமுல்படுத்திவரும் சமஷ்டி நிறுவனங்கள் மற்றும் காங்கிரஸ் சபையின் அங்கத்த வர்கள் ஆகியோருக்கும் பெறுமதிமிக்க ஒன்று எனவும் குறிப்பிட்டுள்Zர்கள். ஆனால் அப்படிப்பட்ட பெறுமதிமிக்க துல்லியமான அறிக்கையில் என்னை சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2010 ஏப்ரல் மாதத்தில் இருந்து நான் 'பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக இருந்து வருகின்றேன். இந்த எடுத்துக் காட்டானது தங்கள் உதவியாளர்கள் எவ்வாறான உண்மையான தகவல்க ளினை தங்களுக்கு வழங்கி வருகின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

என்னால் வழிநடத்தப்படும் ஈ. பி. டி. பி கட்சியானது யாழ்ப்பாணத்திலுள்ள பொது மக்களை அச்சுறுத்தல், கொள் ளையடித்தல், லஞ்சம் பெறுதல், மற்றும் துன்புறுத்தல் ஆகிய நடவடிக் கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்து அதனை உறுதிப்படுத்துவதற்கு அத் தாட்சியாக தாங்கள் காட்டியிருக்கும் சம்பவத்தினை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.மார்ச் 2012ஆம் திகதி நெடுந்தீவினைச் சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற நபரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 13 வயதுடைய சிறுமியை மேற்கோளாக காட்டியுள்Zர்கள். திட்டவட்டமாக அவர் ஈ. பி. டி. பி. உறுப்பினர் என வும் தங்கள் அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

நான் இலங்கையிலுள்ள தங்கள் ராஜாங்கத்தூதுவரிடம் இக்கடிதத்தின் பிரதி ஒன்றிணையும், ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் ஜேசுதாஸன் லக்ஷினியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தது தொடர்பாக நடக்கும் வழக்கு 112 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களின் உறுதி செய் யப்பட்ட பிரதியினையும் கையளிக் கின்றேன். இந்த ஆவணங்களில் பொலிசாரின் முறைப்பாடு, சாட்சியங்க ளின் வாக்குமூலங்கள், மற்றும் நீதிமன்ற குறிப்புகள் அடங்கிய ஆவணங்கள் என்பன அடங்கும்.

இதில் எந்தவொரு ஆவணங்களிலோ அல்லது பொலிஸ் அறிக்கையிலோ அல்லது பொலிஸா ரினால் முன்னிலைப்படுத்தப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களிலோ கந்தசாமி ஜெகதீஸ்வரன் ஈ. பி. டி. பி. உறுப்பினர் என்று குறிப்பிடப்பட் டிருக்கவில்லை. நீங்கள் அழுத்தம் திருத்தமாக அவரை ஈ. பி. டி. பி. உறுப்பினர் எனக் கூறியது மட்டுமன்றி இப்புனையப்பட்ட கதையினை எனது கட்சிக்கு எதிராக தங்களால் கூறப்பட் டிருக்கும் ஏனைய குற்றச்சாட்டுகளுக்கும் ஓர் உதாரணமாக காட்டியுள்Zர்கள்.

இந்த ஆதாரமானது தங்களது உதவியாளர்களினால் இந்த அறிக் கையினை தயாரிப்பதற்கு வழங்கிய தகவல்களின் உண்மைத்தன்மையை புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு ஓர் அளவுகோலாக அமையுமென நம்புகின்றேன். அத்துடன் தாங்கள் என் மேலும், என்னால் வழி நடத்தப்படும் ஈ. பி. டி. பி. கட்சியின் மீதும் எதிராக அவ்வறிக்கையில் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தங்களிடம் இருக்கும் ஆதாரங்களினை எனக்கு சமர்ப்பிக்கும்படி இத் தருணத்தில் தங்களை வேண்டிக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த அறிக்கையினை பிரசுரித்ததன் மூலம் ஊடகங்கள் எனது அந்தஸ்திற்கும், கெளரவத்திற்கும் மீZடு செய்ய முடியாத இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. நான் தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு வருவதோடு, இலங்கையின் ஓர் பொறுப்புள்ள அமைச்சராகவும் கடமையாற்றி வருகின்றேன். ஆயினும் கடந்த சில வருடங்களாக தங்கள் ராஜாங்கத் திணைக்களமும் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் வேறு ஸ்தாபனங்களும், எனக்கும் நான் சார்ந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ. பி. டி. பி)்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வண்ணம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.

இத் தவறான ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளினால் உங்கள் அதிகாரிகளும் மற்றும் இராஜதந்திரிகள் பலரும் ஈ. பி. டி. பி. மீதும் எனது அரசியல் நடவடிக்கைகள் மீதும் தவறான அபிப்பிராயத்தைக் கொள்வதற்கு வழிவகுத்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் ராஜதந்திரிகள் மற்றும் அரச பிரதிநிதிகள் எமது நட வடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட் டுக்கள் தொடர்பாக எமது கருத்தினையோ, அல்லது தெளிவுபடுத்தலையோ கோரவில்லை.

பதிலாக அவர்கள் என் அரசியல் நடவடிக்கை மீது சேறு பூசவிரும்பும் சுயலாப அரசியல் நோக்குடையவர்களின் கருத்தினை மட்டுமே அறிந்து கொள்கின்றனர் என்பதனை மனவருத்தத்துடன் குறிப்பிட விரும்புகிறேன். இவ்வறிக்கையில் என்னால் குறிப்பிடப்பட்ட உள்ளடக்கங்களை வெளியிட்டதன் மூலம் எனக்கு ஏற்பட்ட மீZடு செய்ய முடியாத இழப்பீட்டினை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மேற்கூறிய விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்துகின்றேன். இக்கடிதத்தின் பிரதிகளை அமெரிக்க காங்கிரஸின் வெளிவிவகார குழுக்களுக்கும், ஊட கத்திற்கும் அனுப்பி வைக்கின்றேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com