Contact us at: sooddram@gmail.com

 

தனிநாட்டுக் கோரிக்கையை உலகம் இனிமேல் ஏற்காதென்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்

சமரசத்துக்கு உடன்படாத புலிகள் இயக்கமே அத்தனை அழிவுகளுக்கும் காரணம்

* கேள்வி : இன்று அரசாங்கத்துடன் இணக்கமாகப் போகும் நீங்கள், ஆரம்பத்தில் ஏன் ஆயுதம் ஏந்தினீர்கள்?

பதில் : தமிழ் இளைஞர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய 1980 காலகட்டத்தில் அதற்கான தேவை உண்மையிலேயே இருந்தது. எங்களிடம் இளமையும், வேகமும் இருந்தது. அதனால்தான் நாங்கள் ஆயுதம் தூக்கினோம். அப்போது இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி எங்களுக்கு முழு ஆதரவு தந்தார். உண்மையிலேயே இந்திரா காந்தியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

* கேள்வி : பின்னர் ஏன் விலகினீர்கள்?

பதில் : இந்திய அரசும், தமிழக அரசும் அப்போது எங்களுக்குப் பெரிதும் ஆதரவாக இருந்தன. ஆனால், விடுதலைப் புலிகள் அதற்குரிய பதில் மரியாதையைச் செலுத்தத் தவறிவிட்டனர். ராஜீவ் காந்தி இலங்கை, இந்திய ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தபோது, அதைப் புலிகள் இயக்கம் ஏற்றிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. மாறாக இந்திய இராணுவம் இலங்கை வந்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டோம். மற்ற எல்லா தமிழ்ப் போராளிகள் இயக்கங்களும் இந்திய அரசின் ஆலோசனையை ஏற்று வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை அமைப்புக்குச் சம்மதித்து, இந்திய இராணுவத்தின் பக்கம் இருந்தன.

தனிநாடு வேண்டாம்; தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் பெற்றுத் தருகிறோம் என்ற இந்தியாவின் அருமையான திட்டத்தை அன்று நாங்கள் மட்டும் எதிர்த்து இந்திய இராணுவத்துடனேயே போரிட்டோம். இதனால் வட கிழக்கு இணைந்த மாகாண சபை என்ற அரிய வாய்ப்பு கைநழுவிப் போயிற்று. அந்தத் தவறு போதாது என்று புலிகள், பழிவாங்கும் நடவடிக்கையாக ராஜீவ் காந்தியைக் கொலை செய்தனர். அந்த நிமிடம் முதல் இந்திய அரசு, இலங்கை விவகாரத்தைப் பொறுத்து பின்வாங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் பிறகு ஸ்கண்டிநேவியன் நாடுகளின் பேச்சுவாத்தையில் சமஷ்டி முறைத் தீர்வுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஒஸ்லோவின் (நோர்வேயின் தலைநகரம்) வைத்து ஒரு உடன்பாடும் கையெழுத்தானது. அந்தப் பேச்சுவார்த்தைக் குழுவில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன்.

அப்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். மேற்கத்திய நாடுகளின் வெவ்வேறு நகரங்களில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. சமஷ்டி முறை தீர்வுக்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டது. அந்த முறையை எப்படி அமுல் செய்வது என்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று முடிவானது. ஒஸ்லோவில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் அன்டன் பாலசிங்கமும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர். ஆனால், பிரபாகரன் இதை ஏற்கவில்லை. ‘யாரைக் கேட்டுக் கையெழுத்துப் போட்டீர்கள்’ என்று எங்களைக் கடிந்து கொண்டார். அங்குதான் எனக்கும், பிரபாகரனுக்கும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த கருத்து வேறுபாடு பெரிதாக வெடித்தது.

அப்போதும் நான் அவருக்கு எடுத்துச் சொன்னேன். ‘இதுவரை போராடியது வேறு. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் உலக நாடுகள் எடுத்துள்ள முடிவு, நமக்கு இனிச் சாதகமாக இருக்காது. அந்தச் சம்பவத்தை ஒட்டி உலக நாடுகள் அத்தனையும் பயங்கரவாத தடுப்பில் ஒருமித்த முனைப்புக் காட்டத் துவங்கிவிட்டன. அதற்குப் புலிகள் இயக்கமும் விதிவிலக்கல்ல. 26 நாடுகள் ஏற்கெனவே இயக்கத்திற்குத் தடை விதித்துவிட்டன. சமரசத்தின் மூலம் சமஷ்டி அதி காரத்தைப் பெறுவதே நல்லது’ என்று வாதிட்டேன். ஆனால், பிரபாகரன் கேட்கவில்லை.

எங்களது ஒஸ்லோ பேச்சு வார்த்தையை இந்தியாவும் மேற் பார்வையிட்டது. நம்பியார் என்ற அதிகாரியை அதற்காக நியமித்திருந்தார்கள். இந்தியாவும் அந்தத் தீர்வை வரவேற்றது. ஆனால், பிரபாகரன் மட்டும் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் நான் வெளி யேறினேன். பிரபாகரனின் பிடிவாதத்தால் தொடர்ந்து அழிவுகளும், முள்ளி வாய்க்கால் சம்பவமும் நடந்து முடிந்துவிட்டன.

* கேள்வி : ஆக, இனி இலங்கையில் தனிநாடு என்பது சாத்தியமில்லையா?

பதில்: சிறந்த மாகாண சபை ஆட்சி முறையைக் கொண்டு, இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடாக உலகில் வாழ்ந்து காட்டுகிறது. அதை ஏன் இலங்கையிலும் செய்து காட்ட முடியாது? தனி நாடு என்ற கோரிக் கையை இனி உலகம் ஏற்காது. அதற்கு எந்த நாடும் ஆதரவும் தெரிவிக்காது. இதைத் தமிழக மக்களும், இளைஞர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களது ஆதரவு மற்றும் எழுச்சியை தனிப்பட்ட முறையில் நான் வர வேற்கிறேன். இங்குள்ள தமிழர் களுக்காக அவர்கள் குரல் கொடுப்பது நல்ல விஷயம்தான். அதைச் சரியான முறையில் செய்து நல்ல ஒரு அதி காரப் பகிர்வைத் தமிழர்கள் பெறுவதற்கும், நல்ல அபிவிருத்திப் பணிகளை பெறுவதற்குமான முயற்சியாக மாற்றினால், தமிழ கத்தில் ஒரு மாகாண சபையின் கீழ் எப்படி தமிழர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களோ, அதேபோல் இங்குள்ள தமிழர்களும் வாழ முடியும்.

* கேள்வி : இலங்கை அரசு மீது வைக்கப்படும் போர்க் குற்றங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : இலங்கை அரசை மட்டும் குறை சொல்லிக் கொண்டே இருப்பதில் பயனில்லை. எந்த நாட்டு அரசாங்கமாக இருந்தாலும், தனது நாட்டில் நடக்கும் ஒரு சச்ச ரவை இராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்கும் அதிகாரமும், கடமையும், உரிமையும் அந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது- இந்தியா உட்பட எந்த நாடாக இருந்தாலும் தனி நாடு கேட்கும் இயக்கங்களை ஒழிக்கவே முயற்சி எடுக்கும். இலங்கையில், அவ்வாறு ஒழிக்கும் முன்பு பல சமரசத் திட்டங்களுக்கு வாய்ப்பு தந்தார்கள். ஆனால், புலிகள் எதற்கும் உடன்படவில்லை. எனவே எந்தச் சமரசத்திற்கும் தயாராக இல்லாத புலிகள் இயக்கம்தான் அழிவுகளுக்குப் பொறுப்பாக முடியும்.

நீங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கெல்லாம் போய் வந்ததாகச் சொன்னீர்கள். நீங்களே நேரடியாகப் பார்த்திருப்பீர்கள். மக்கள் இப்போதுதான் உயிர் பயம் நீங்கி நிம்மதியாக வாழத் துவங் கியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் ஏறக்குறைய பழைய நிலை வந்து விடடது. வடக்கு மாகாணத்தில் மீள்கட்டுமானப் பணிகளும், மீள் குடியமர்த்தும் பணிகளும் நடந்து வருகின்றன. 30 ஆண்டுகால அழிவை இரண்டு, மூன்று வருடங்களில் சரி செய்துவிட முடியாது. கண்ணிவெடிகள் உள்ளிட்ட ஆயுதக் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியே இன்னும் முடிவடையவில்லை. ஆனாலும், எனது மீள்குடியேற்ற அமைச்சகம் மிகத் துரிதமாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நல்லிணக்க ஆணைக் குழு (எல். எல். ஆர். சி.) போர் அழிவுகளைப் பற்றி எல்லாப் பகுதிகளுக்கும் சென்று விசாரித்து ஆராய்ந்து ஒருவெளிப்படையான அறிக்கையைத் தந்திருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் பட்டியல், காணாமல் போனவர்கள் பட்டியல், அழிவுகளின் மதிப்பீடு, போர்க்குற்றங்கள் என எல்லாத் தளங்களிலும் ஆய்வு மேற்கொண்ட அந்தக் குழு தனது கண்டுபிடிப் புகளையும், பரிந்துரைகளையும் தந்துள்ளது. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் இப்போது திட்டமிட்டு வருகிறோம். தற்போது போர் முடிந்துவிட்டது. பிடிபட்ட புலிகள் கூட மன்னிக்கப்பட்டு அல்லது குறைந்த தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய எல்லோரும் விடுவிக்கப் பட்டுவிட்டனர். சண்டைக்குச் சண்டை, பழிக்குப் பழி என்று கிளம்பினால் குரோதம்தான் அதிகமாகும். இதை இலங்கை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இங்குள்ள மக்களும் கோபத்தை மறந்து இராணுவத்திடம் நெருங்கி, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத் துவங்கிவிட்டனர்.

இந்த நிலையில் இந்திய மக்கள் புதிய போராட்டங்களைத் துவக்கி, குழப்பங்களை உருவாக்குவது நல்லதல்ல. அது இங்குள்ள மக்களைத் தான் மேலும் பாதிக்கும். போரில் அழிந்தது தமிழர்கள் மட்டுமில்லை. முஸ்லிம்களும் புலிகளால் அழிக்கப் பட்டுள்ளனர். இராணுவ இலக்கு அல்லாத எத்தனையோ பொது இடங்களில் புலிகள் வெடிக்க வைத்த குண்டுகள் மூலம், எவ்வளவோ அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். தமிழர்களின் இறப்பு களுக்கு நியாயம் கேட்கப் போனால், சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தங்கள் அழிவுகளுக்குப் பதில் கேட் பார்கள்.

தமிழ் மக்களுக்கு பழையபடி வீடு கள் கட்டிக் கொடுத்து, அவர்களுக்குப் பொருளாதார வழிவகைகள் செய்து தங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் கொண்டு செலுத்தவும், அடுத்த தலைமுறையைச் சிறந்த முறையில் உருவாக்கவும் உதவுவதுதான் இன்றைய அவசரத் தேவை. இலங்கை அரசாங்கம் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வட பகுதிக்கு ஒதுக்கி உள்ளது. இதில் 10 சதவிகிதம் கூட சிங்கள மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படவில்லை. விரைவில் வட மாகாண சபைத் தேர்தலும் வரவிருக்கிறது. எனவே தற்போது நிலவும் அமைதி தொடர்வதற்கும், தமிழர் சம உரிமையும், அதிகாரமும் பெற உதவுவது மட்டுமே இன்றைய தேவை என்பதை இந்திய மக்களும், புலம் பெயர்ந்த தமிழர் களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

* கேள்வி : புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் இன்னமும் தமிbழ கோரிக்கையைக் கைவிடவில்லையே?

பதில் : புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்தே பழைய நினைப்பில் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. இங்கு வந்து பார்க்க வேண்டும். போருக்குப் பிறகு, பல புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்கு திரும்பி வந்துள் ளனர். அவர்கள் இங்கேயே தொழில் செய்யவும் துவங்கியுள்ளனர். இதை நான் வரவேற்கிறேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் மிக நுட்பமான அறிவு பலத்துடன், ஏராளமான பண பலத்துடன் வெளி நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் இங்கு திரும்பி வரவேண்டும். இங்கு தொழில் செய்து, இங்குள்ள தமி ழர்களின் பொருளாதார முன்னேற் றத்திற்கு உதவ வேண்டும்.

வசதியோடு இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள், ஆளுக்கு ஒரு வீடுகட்டித் தர முன்வந்தாலே, இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவ வேண்டிய தேவையே இராது. அவ்வளவு பேர் வசதியாக வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் இங்குள்ள தமிழர்களுக்கு உதவ நினைத்தால், பொருளாதார ரீதியில் உதவ வேண்டும். அவர்கள் வசிக்கும் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவதால், ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக, இங்குள்ள மக்கள் மீது குரோதம்தான் வளரும்.

* கேள்வி: போர் முடிந்து நான்காண்டுகள் ஆகியும் இன்னும் இராணுவ நெருக்கடி தொடர்ந்து இருப்பதற்கான குற்றச்சாட்டு பற்றி?

பதில் : தேசியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் வட, கிழக்குப் பகுதிகளில் மட்டுமில்லாமல், இலங்கையின் பல பகுதிகளிலும் இராணுவம் இருக்கிறது. இந்தியாவில் தமிழகத்தில் கூட சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் இராணுவம் இருக்கிறது. நாகப்பட்டினத்தில் கப்பல் படைத் தளம் இருக்கிறது. இது மக்களின் உரிமையைப் பறிப்பதாகாது. இங்கு படிப்படியாக இராணுவம் விலக்கப்படும். இந்த நான்கு வருடத்தில் எவ்வளவோ விலக்கப்பட்டிருக்கிறது. பல முகாம்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்திலும், புலம் பெயர்ந்த தமிழர்களிடத்திலும் மீண்டும் ‘ஈழ’ கோஷம் எழுவதால், எந்த அரசாங்கத்துக்கும் சந்தேகம் எழவே செய்யும். மீண்டும் புலிகள் வந்து விடுவார்களோ, ஆயுதப் போராட்டம் உருவாகி விடுமோ என்ற ஐயப்பாடு கிளம்பவே செய்யும். எனவேதான் மீண்டும் ‘தமிbழம்’, ‘பதிலடி’ என்றெல்லாம் குரல் எழுப்ப வேண்டாமென்று தமிழக மக்களையும், புலம் பெயர்ந்த தமிழர்களையும் கேட்டுக்கொள்கிறேன். அதனால் இங்குள்ள தமிழர்களின் சுதந்திரம் தான் பாதிக்கப்படும். (தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com