Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையில் மக்கள் அமைதியாக வாழ்வதை எவரும் இடையூறு செய்யக் கூடாது !

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் துக்ளக் இதழுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி

இயக்கத்தில் சேரும்போது என் எண்ணம் என்னவாக இருந்தது என்றால், ‘ஒரு நான்கைந்து ஆண்டுகள் போராடினால் தமிbழம் கிடைத்துவிடும். அதன் பிறகு படிப்பு, வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளலாம்என்பதுதான். ஆனால் 25 ஆண்டுகள் போராடியும் தீர்வோ, வெற்றியோ கிடைக்கவில்லை என்ற போது சலிப்புத்தான் வந்தது. மக்களும் புலிகளுக்கு எதிராக மாறத் துவங்கினார்கள். உலக நாடுகளும் புலிகளுக்கு எதிராக மாறின. இந்தியாவும் புலிகள் ஆதரவை விலக்கிக் கொண்டது. முதல் சந்ததி முடிந்து இரண்டாவது சந்ததி உயிர்களை இழக்கத் துவங்கியாகிவிட்டது. புலிகள் மூன்றாவது சந்ததியையும் அழிக்காமல் விட மாட்டார்கள் என்று தோன்றியது. தனிநாடு சாத்தியமில்லை என்பதைப் புரிந்து தனது வெற்றிகளை அரசியல் வெற்றியாக மாற்ற புலிகள் உடன்படாததால்தான் நான்வெளியேறினேன்.

கொஞ்சம் விமர்சித்தாலும் அவரைத் துரோகி என்று முத்திரை குத்துவதோடு, அவரைக் கொலை செய்யவும் புலிகள் தயங்கவில்லை. ஏராளமான தமிழ்த் தலைவர்களை அந்த இயக்கம் கொன்று போட்டது. திம்பு பேச்சுவார்த்தையில் இந்திய அரசு, ‘எல்லா தமிழ்த் தலைவர்களும் இணைந்து செயல்படுங்கள். பெரிய வெற்றி கிடைக்கும்என்று அறிவுரை கூறியது.

ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத புலிகள், அத்தனை சக இயக்கத்தினரையும் கொன்று குவித்தனர். சகோதரப் போராளிகளைக் கொன்று குவிப்பதை, புலிகளின் தளபதிகள் பலரே ஏற்கவில்லை. மக்கள் மத்தியிலும் அது புலிகளின் பெயரைக் கெடுத்தது.

பிரபாகரனுக்குக் கிடைத்த குறுகிய கால வெற்றிகள் அவரை மதி மயக்கிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். நான் யதார்த்த நிலையை உணர்ந்து வெளியேறினேன். இன்று சிங்கள மக்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்களோ அதே சுதந்திரத்துடன் தமிழர்களும் வாழ வேண்டும் என்பது மட்டும்தான் எனது இலக்காக உள்ளது. தனிநாடு என்று பேச ஆரம்பித்தால் அது இங்குள்ள மக்களுக்கு நலன் பயக்காது.

கேள்வி : இலங்கை இராணுவம் தமிழர் நிலங்களைக் கைப்பற்றி வைத்துக் கொண்டதாக ஒரு பெரிய குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

பதில : இலங்கை காணிச் சட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலங்களின் விபரம் அரச அதிபரிடம் உள்ளது. அதை மீறி ஒரு துண்டு நிலத்தைக்கூட யாரும் யாருக்கும் கொடுத்துவிட முடியாது. அப்படிப் பிடுங்கிக் கொடுத்தாலும்கூட அவர் நீதிமன்றத்திற்குச் சென்று ஜெயித்து விட முடியும். எனவே, நிலங்கள் பறிபோவதாகச் சொல்வது பொய்.

கண்ணி வெடிகள் இருக்கும் பகுதி இன்னமும் இராணுவக் கட்டுப்பாட் டில்தான் இருக்கிறது. அங்கு பணிகள் முடிந்த பிறகுதான், நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியும். அதேபோல் இராணுவ முகாம்கள், தொழிற்திட்டங்கள், புதிய சாலை வசதிகள், மின் திட்டங்கள் போன்ற அபிவிருத்தி மற்றும் நாட்டு நலத் திட்டங்களுக்காக ஒரு அரசாங்கம், மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முடியும்.

அதற்குச் சட்டத்தில் இடம் உள்ளது. உதாரணத்திற்கு கிழக்கு மாகாணத்தில் சம்பூர் பகுதியில் இந்திய அரசாங்கம், இலங்கைக்காக நிலக்கரி அனல் மின் திட்டத்தைச் செய்து தரவுள்ளது. இதற்காக அங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத் தேவை பூர்த்தியாவதுடன், ஆயிரம் பேருக்கு வேலையும் கிடைக்கவுள்ளது. இதுபோன்ற அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் நிலத்தைக் கையகப்படுத்துவது உலகெங்கும் நடப்பதுதானே?

கேள்வி : வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசால் ஏற்கப்படும் வாய்ப்புள்ளதா?

பதில : இந்தியாவை போன்று மாகாண சபை அதிகாரம் என்று பேசும்போது, இங்கும் இந்தக் கோரிக்கை எழுகிறது. இந்தியா ஒரு பெரிய நாடு. அங்குள்ள மாகாண அமைப்பை இங்கு அப்படியே கொப்பி அடிக்க முடியாது.

இன்று சென்னையில் புறநகரையும் சேர்த்தால், இரண்டு கோடி அளவுக்கு மக்கள் தொகை இருக்கும் என்கிறார்கள். ஆனால், இலங்கையின் மொத்த மக்கள் தொகையே இரண்டு கோடிதான். இங்கே இந்தியாவைப் போல மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் தர இயலாது. அமெரிக்காவில் மேயரிடம் பொலிஸ் அதிகாரம் இருக்கிறது. தமிழகத்தில் அது போல் நகராட்சிகள் கேட்டால் பொலிஸ் அதிகாரத்தைத் தர முடியுமா? அதுபோன்ற நிலைதான் இங்கே.

இலங்கை சிறிய நாடு, குறைந்த மக்கள் தொகை, அதனால் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கிவிட முடியாது. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கொடுத்தால், இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் கொடுக்க வேண்டி வரும். அது நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடிய சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். எனவே, அது இங்கு சாத்தியப்படாது. அதற்கு என்ன செய்யலாம்? தமிழர்களை பொலிஸ் படையில் இணைப்பது, தமிழ் அதிகாரிகளை தமிழர் பகுதிகளில் பணி செய்ய அனுமதிப்பது போன்ற விஷயங்கள் ஒரு நல்ல தீர்வாக அமையும். அதைதான் இப்போது செய்து வருகிறோம். கிழக்கு மாகாணத்திற்கு சிரேஷ்ட டி. ஐ. ஜி. என்றால் சங்கர் என்ற தமிழர். மட்டக்களப்பு மாவட்டத் தில் டி. ஐ. ஜி. என்றால் இந்திரன். அவரும் தமிழர்.

தமிழர்கள் பொலிஸில் சேரும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி இயங்குகிறது. இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் அதில் சேர்ந்துள்ளனர். இராணுவத்திலும் தமிழர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாறுதல்களை நாம் வரவேற்று, அதைக் கூடுதலாக்க முயற்சித்து, இந்த தேசத்தில் எல்லோரும் சேர்ந்து அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ, உலகத் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும். அதற்கு இடையூறு செய்யக்கூடாது.

ஆரம்பத்தில் இராணுவத்தைப் பார்த்து மக்கள் பயந்தார்கள். இப்போது அந்தப் பயமில்லாமல் வாழ துவங்கி விட்டார்கள். இலங்கையில் ஒட்டு மொத்தமாகத் தமிழ் பேசும் மக்கள் என்று பார்த்தால் 28 சதவிகிதம் பேர் இருக்கலாம். மீதி 72 சதவீதம் பேர் சிங்கள மக்கள்தான் 72 சதவீத சிங்கள மக்களை மீறி சுமார் 28 சதவீத தமிழ் மக்களுக்கு எந்த அரசாங்கமும் விசேஷ சலுகைகளை அள்ளி வீசிவிடாது.

இந்த யதார்த்த உண்மையை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். அதே நேரம், படிப்படியாக தமிழருக்கு உரிய உரிமையைப் பெற்று விடலாம். அதற்குச் சாத்தியச் கூறுகள் நிறைய உள்ளன. தமிழ் மக்களால் ஒரு தமிழ் ஜனாதிபதியைக் கொண்டு வர முடியாது. ஆனால், ஒரு ஜனாதிபதியைத் தீர்மானிப்பதில் தமிழர்கள் பங்கு வகிக்க முடியும். அவர்களை எந்தக் கட்சியாலும் உதாசீனம் செய்ய முடியாது. அந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

கேள்வி : இலங்கை அரசு மீது வைக்கப்படும் இன அழிப்புக் குற்றச்சாட்டு குறித்து?

பதில : இன அழிப்பு என்பது சுத்தப் பொய். சரணடைந்த 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை இராணுவம் அழித்து விடவில்லை. மீள்குடியேற்றம் செய்துள்ளது. 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்தனர்.

அவர்கள் சுட்டுக் கொல்லப்படவில்லை. வழக்குகளைச் சந்தித்துவிட்டு, சுதந்திரமாக வாழ்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்கள் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இன்று நன்றாக இருக்கிறார்கள்.

சூசையின் குடும்பத்தினர் நன்கு வாழ்கிறார்கள். 3 இலட்சம் மக்களை, முள்ளிவாய்க்கால் பகுதியில் 20 ஆயிரம் புலிகள் பிடித்து வைத்திருந்தார்கள். அரசாங்கம் மிக நிதானமாகத்தான் சண்டை பிடித்தது.

மூன்று இலட்சத்து இருபதாயிரம் பேரையும் கொன்றுவிடவில்லை. முடிந்தளவு மக்களை வெளியேற்றிய பிறகே, புலிகளை அழித்தார்கள். புலிகளிலும் 10 ஆயிரம் பேருக்கு மேல் சரணடைந்தனர்.

கடைசி நேரத்தில் கூட சரணடையுமாறு புலிகளிடம் வேண்டுகோள் வைத்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். ஆனால் அவர்கள் கேட்கவேயில்லை. மக்களின் தீர்வுக்காகத்தான் யுத்தம், மக்களையே தீர்த்துக்கட்டுவதற்காக யுத்தமல்ல என்பதைப் பிரபாகரன் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். தமிழனின் வீரத்தைச் சொல்வதற்காகதமிழன் வாளோடு பிறந்தவன் என்ற சொன்னதெல்லாம் போதும், இனி இங்கு பிறக்கும் தமிழன்வாழ்வோடு பிறக்கட்டும்.

கேள்வி : தமிழக மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில : நீங்கள் எனது கருத்துக்களையோ, அரசாங்கக் கருத்துக்களையோ அப்படியே நம்பத் தேவையில்லை. அதே நேரம் இணையத்தில் பார்ப்பதையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு சிலர் சொல்வதையும் நம்பாதீர்கள். இலங்கை நாடானது சுற்றுலாவுக்காக எல்லோருக்கும் திறந்து விடப்பட்டுள்ள நாடு. சுற்றுலாப் பயணியாக வாருங்கள்.

இலங்கை முழுக்கச் சுற்றுங்கள். உண்மை நிலையை நீங்களே கண்டறிந்து பின் ஒரு முடிவை எடுங்கள். மக்களாகட்டும், மாணவர்களாகட்டும், அரசியல் தலைவர்களாகட்டும் யாரும் இங்கு வரலாம்.

மக்களைச் சந்தித்துப் பேசலாம். ஒருமுறை வந்து பார்த்து விட்டுப் பிறகு விமர்சனம் செய்யுங்கள். குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா, எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்றோர் இங்கு வந்து இங்குள்ள தமிழ் மக்களையும், தமிழ்த் தலைவர்களையும் சந்திக்க வேண்டும் என்று அன்போடு அழைப்பு விடுக்கிறேன். இங்குள்ள மக்களும் சந்தோஷப்படுவார்கள். அங்குள்ள மக்களுக்கும் உண்மைநிலை தெரிய வரும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com