Contact us at: sooddram@gmail.com

 

வெளிநாடு வாழ் ஸ்ரீலங்கா தமிழர் அமைப்பு – NRTSL

எம்மைப் பற்றி

வெளிநாடு வாழ் ஸ்ரீலங்கா தமிழர் அமைப்பு (NRTSL), ஸ்ரீலங்காவைத் தமது பிறப்பிடமாகவும், பூர்வீகமாகவும் கொண்டவர்களும், இப்பொழுது பிரித்தானியாவில் வதிப்பவர்களுமான, வௌ;வேறு அரசியல் சார்புகளையும், பல்வேறு தொழில்களையும் கொண்டவர்களால், 2014ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் உருவாக்கப்பட்டது. ஏறத்தாழ மூன்று இலட்சம் இலங்கைத் தமிழர்கள் தற்போது பிரித்தானியாவில் வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. எமது பார்வையில், அத்தனை பிரித்தானியத் தமிழர்களையும் ஒரே அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துதல் என்பது யாதார்த்தபூர்வமானதாக இருக்க முடியாது.

தாம் பிறந்த, தமது பூர்வீகமான, நாடான இலங்கையுடன், இன்னமும் இறுக்கமான பிணைப்பையும் தொடர்புகளையும் கொண்டிருக்கும் பிரித்தானியா வாழ் ஸ்ரீலங்காத் தமிழர்கள் பலர், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒரு பல்லின தேசத்தைக் கட்டியெழுப்புதல், இனங்களுக்கிடையையான புரிந்துணர்வை ஏற்படுத்தி. நட்புறவுகளைப் பலப்படுத்துதல், நாட்டின் பொருளாதாரத்தையும் வளங்களையும் மேம்படுத்துதல் ஆகியன சம்பந்தமான செயற்பாடுகளிலும், பணிகளிலும், தாமும் ஈடுபட்டுப் பங்களிக்க வேண்டும் என்ற விருப்பினதும் அக்கறையினதும் வெளிப்பாடும், விளைவுமே. இந்த அமைப்பின் உருவாக்கத்திற்கான காரணியாகும்.

எமது நோக்கங்கள்

ஸ்ரீலங்கா வாழ் தமிழர்கள் அனைவரும், பொருளாதாரம், மதம், சமூகம், கலாச்சாரம் ஆகிய சகல துறைகளிலும் எதுவித இனப்பாகுபாடுகளுமற்ற சமனான வாய்ப்புக்களுக்கு உரித்துள்ளவர்களாக வாழவும், இலங்கையில் சமனான பிரஜைகளாக, கௌரவத்துடனும், பயமற்றதும், பாதுகாப்பானதுமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டிய உத்தரவாதங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் அமைப்பினூடான தீர்வும், அதற்கான சட்டவாக்கங்களும், ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பெரும்பான்மையான வெளிநாடு வாழ் தமிழர்களின் ஆழ்ந்த வேட்கையும், அபிலாஷையும் ஆகும். நாம் அவற்றை ஏற்றுக்கொள்வதோடு, அவர்களுடைய இந்த உணர்வுகளில் பங்கும் கொள்கிறோம்.

இந்த மேன்மையான இலக்கை எய்துவதற்கு, நேர்மையுடனும், வினைத்திறனுடனும் செயலாற்றும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகிய சகல தரப்பினருடம் தொடர்புகளைப் பேணி, அவர்கள் இவை சம்பந்தமாக மேற்கொள்ளும் பணிகளில் ஒத்துழைப்புகளை நல்குவதோடு, நாமும் அவற்றில் ஈடுபடுவோம்.

வௌ;வேறு சமூகங்களுக்கிடையில் வெறுப்பையும் வன்முறைகளையும் தூண்டி, அவர்களைப் பிளவுபடுத்தவும், அவர்களுக்கிடையே வேற்றுமைகளையும், முரண்பாடுகளையும் வளர்க்கும் பிரச்சாரங்கள் மற்றும் செயற்பாடுகளினால், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்க முயற்சிப்பவர்கள், தீர்மானமாகவும், காத்திரமாகவும் எதிர்கொள்ளப்பட வேண்டும் என எண்ணுகிறோம். அப்படியானோரைத் தகுந்த முறைகளில் தடுப்பதற்கும், தண்டிப்பதற்கும், சட்டபூர்வமாகவும் அமைப்புகள் ரீதியாகவும் வேண்டிய மாற்றங்களையும், அதற்காக பாதுகாப்பு, நீதி சம்பந்தமாக ஆக்கபூர்வமான பொறிமுறைகளை ஏற்படுத்துவதற்காகச் செயற்படுவோர்களுடன் நாமும் இணைந்து செயற்படுவோம்.

இவ்வமைப்பு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது என்ற வகையில், பிரித்தானிய மக்களுக்கும், பிரித்தானியா வாழ் ஸ்ரீலங்காத் தமிழர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வையும், நட்புறவையும் பலப்படுத்துவதோடு, ஸ்ரீலங்கா அரசிற்கும், பிரித்தானிய அரசிற்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை வளர்ப்பதற்குமான கடப்பாட்டையும் கொண்டுள்ளது.

வேண்டாம் தீவிரவாதச் செயற்பாடுகள்

வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு, பிரச்சாரங்கள், செயற்பாடுகள் மூலமாகவோ, அல்லது வேறு எந்த வகையிலுமோ, மீண்டும் ஸ்ரீலங்காவில் தீவிரவாதத்தையும், வன்முறையையும் வளர்க்கவோ, தூண்டவோ தூபம் போடுபவர்கள், ஒரு அரசியல் தீர்வை எய்துவதற்குத் தடைகளை ஏற்படுத்துபவர்கள் ஆகியோரின் முயற்சிகளை நாம் ஒறுத்து, அவற்றிற்கு எதிராகச் செயற்படுவோம்.

ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ்மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடியவர்கள், அம்மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும், அம்மக்களால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் சமூகத்தின் தலைவர்களும்தான் என்பதே எமது நம்பிக்கையாகும். வெளிநாடுகளில் வதியும் நாங்கள் அவர்களுக்கு ஆலோசனைகள், உதவிகள் என்பவற்றை நல்கி அவர்களுக்குத் துணையாகவே செயற்பட முடியும், செயற்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

எமது பாதை

பல்வேறு நாடுகளில் பரந்து வாழ்கின்ற பல இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் வளங்களையும் ஆற்றல்களையும் நாட்டிற்கு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வழிவகுப்பதற்கான வகையில் ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்படுதல்.
இதனைச் செயல்வலுவாக்குவதற்கு, வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கான ஒரு தனியான அமைச்சு அல்லது பிரதம அமைச்சரின் கீழோ, வெளிவிவகார அமைச்சரின் கீழோ செயற்படும் இலாகா ஒன்றினை ஸ்ரீலங்கா அரசாங்கம் உருவாக்குவதற்கு அரசுடன் தொடர்பு கொண்டு மேற்கொள்வது.

எமது அமைப்பின் நோக்கங்களுக்கு ஒத்திசைவாகவும், அத்தகைய நோக்கங்களை முன்னெடுத்தும் செயற்படுகிற சிங்கள, முஸ்லிம் அமைப்புகள் உட்பட வெளிநாடுகளில் இயங்கும் இதர அமைப்புகளுடன் நெருக்கமான உறவைப் பேணுதல்.
ஸ்ரீலங்காவில் முதலீடுகள் செய்ய விழையும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு, தொழில்நுட்ப ரீதியான உதவிகள் அளித்தல், அனுபவங்களைப் பகிர்தல் ஆகியவற்றின் மூலமாக, அங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களில் பங்களித்தல்.
எமது அமைப்பின் நோக்கங்களை முன்னெடுத்தும், வெளிநாடுகள் வாழ் இலங்கையர்களின் பிரத்தியேகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், ஸ்ரீலங்காவில் செயற்படும் அனைத்துச் செயற்பாட்டாளர்களுடனும் நட்புறவைப் பேணி, அவர்களின் செயல்வடிவங்களில் நாமும் ஈடுபட்டு, தேசத்தின் நிர்மாணம், அபிவிருத்தி சம்பந்தமான திட்டங்கள், வழிமுறைகள், பணிகள் ஆகியவற்றில் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை மேற்கொள்ளுதல்.

அமைப்பின் தேவைகள்

ஸ்ரீலங்காவில் பிறந்த வெளிநாடு வாழ் தமிழர்கள், ஸ்ரீலங்காவுடன் தங்களை அடையாளப்படுத்தவும், அதனை வலுப்படுத்தவும், அவர்கள் அங்கு பயணங்கள் மேற்கொள்ளும்போது பயண விசா பெறும் சிரமங்களின்றிப் பிரயாணம் செய்யவும், அவர்களுக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்படுதல்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுவது போன்று, வெளிநாடு வாழ் ஸ்ரீலங்காத் தமிழர்களின் இரண்டாம், மூன்றாம் தொடர் தலைமுறையினரும் சலுகைகளையும், அங்கீகாரங்களையும் பெறுதல்.

இலங்கையில் முதலீடுகள் செய்ய விரும்பும் வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு, அவர்களை ஊக்குவிக்கும் வகையான சட்டம், மற்றும் வரி விலக்கு விதிமுறைகளில் வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்தப்படுத்தப்படுவதோடு, அவற்றை வெளிப்படையானதாகவும், எளிமையானவையுமானதாகவும் ஆக்குதல்.

வெளிநாடு வாழ் ஸ்ரீலங்காத் தமிழர்கள், நிலங்கள், வீடுகள், ஓய்வுக்கால இருப்பிடங்கள், விடுமுறைக்கால இல்லங்கள் போன்றவற்றை வாங்குவதற்கும், நிர்மாணிப்பதற்கும், மரபுரிமைச் சொத்துக்களைப் பெறுவதற்கும் ஏற்ற வகையில் சட்டபூர்வமான ஒழுங்குகள்.

அவர்கள் ஸ்ரீலங்காவில் வாழும் தங்கள் வயதான பெற்றோர்கள், உறவினர்களைத் தடைகளின்றிச் சந்தித்து, அவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கான வசதிகளை அமைத்தல்.
அவர்கள் ஸ்ரீலங்காவில் தமது விடுமுறைக் காலம், சுற்றலாப் பயணம் ஆகிவற்றை மேற்கொள்வதற்கும் அவற்றை அதிகரித்தலுக்குமான ஊக்குவிப்புகள்.

அவர்கள் தமது ஊர்ப் பாடசாலைகள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், ஆலயங்கள், தேவாலாயங்கள், பள்ளிவாசல்கள் போன்ற வழிபாட்டு ஸ்தலங்கள் முதலானவற்றின் மேம்பாட்டில் பங்களிக்கவும், கலந்துகொள்வதற்கும் வாய்ப்புகளுக்கான ஒழுங்குகள்.

ஸ்ரீலங்காவிற்கும் இந்தியாவிற்குமான போக்குவரத்துக்களை இலகுவாக்கி, வர்த்தகம், சுற்றலா ஆகியவற்றை அதிகரிக்கும்படியாக, உள்ளூர் விமானம் மற்றும் கப்பல் தளங்களையும், சாதனங்களையும் சீராக்குதல்.

ஸ்ரீலங்காவிற்கு வெளிநாட்டுச் செலவாணியை அதிகரிக்கும் வகையாக, அதனை ஈர்க்கும்படியான வட்டிவிகிதங்களை ஏற்படுத்துவதோடு, செயல்திட்டமுள்ள வங்கி முறைமைகளும், வசதிகளும் ஏற்படுத்தப்படுதல்.

London: 28.05.2015. தொடர்புகளுக்கு: Email:nrtamilssl@hotmail.com

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com