Contact us at: sooddram@gmail.com

 

புஸ்பராசா அவர்கள் மறைந்து 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவர் தனது 55 வது வயதில் இவ் உலகைவிட்டுப் பிரிந்தார் - சிறிதரன் (ஈ.பி.ஆர்.எல்.எப் - பத்மநாபா)

தோழர் புஸ்பராசா அவர்கள் மறைந்து 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவர் தனது 55 வது வயதில் 10-03-2006 இவ் உலகைவிட்டுப் பிரிந்தார். தனது மரணத்தின் நாள் முன் கூட்டியே சிலநாட்களுக்கு முன் அவருக்கு தெரிந்திருந்தது. வெடி மருந்து வீச்சமில்லாத தாயகத்தின் தெருவில் தனது பிள்ளைகள் உலாவும் காலம் வரவேண்டும்என்று அவர் கனவு கண்டார். மாணவர் -இளைஞர்பேரவைளினூடாக தமிழ் தேசிய அரசியலில் பிரவேசித்த புஸ்பராசாவும் அவர் சகோதரி புஸ்பராணியும் 1970களின் முற்பகுதியில் வதைமுகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்தவர்கள .

இலங்கைத் தமிழர் வரலாற்றில் அரசியல் காரணங்களுக்காக சித்திரவதைசெய்தல் கொலைசெய்தல் ஆரம்பமான காலம் இது. சிங்கள இளைஞர்கள் மீது சமகாலத்திலேயே சித்திரவதைகள் ஆரம்பித்திருந்தன. ஆரம்பத்தில் அஹிம்சை சத்தியாக்கிரக இயக்கங்களில் பங்கு பற்றிய, முன்நின்று நடத்திய புஸ்பராசா அன்றை ஈழத்தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

பின்னர் 1970களின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலை இயக்கத்தை உருவாக்கியவர்களில் (தற்போதைய ரெலோ அல்ல) புஸபராசாவும் ஒருவர். தோழர் வரதராஜப்பெருமாள் போன்றவர்கள் இவரின் சகபாடிகளாக இருந்தனர்.

1974 தமிழாராய்ச்சி படுகொலைகளின் பின்னர் தீவிர செயற்பாட்டாளராக மாறியிருந்தார்.

அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் அன்றைய தமிழ் அரசியலின் போதாமை அவருக்கு விரக்தியை ஏற்படுத்தியிருந்தது

1980களின் முற்பகுதியில் அவர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்து சென்றார்.

அதே காலப்பகுதியல் பிரான்சுக்குப் போவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புஸ்பராசாவும் நானும் குன்சியும் ஒருமத்தியானம் கீரிமலையிலிருந்து புறப்பட்டு மாலை வேதாரணியம் கரையில் இறங்கினோம்.

இரவு வேதாரணியம் சவுக்கந்தோப்பொன்றில் தங்கிவிட்டு மறுநாள் காலை தஞ்சாவூரில் தோழர் புஸ்பராசாவிற்கு அறிமுகமான தந்தை பெரியாரின் கொள்கைகளில் தீவிர் ஈடுபாடு கொண்ட குடும்பம் ஒன்றுடன் தங்கிவிட்டு சென்னை சூளைமேடு வகாப்தெருவிற்கு வந்துசேர்ந்தோம்.

இலங்கை அரச பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்தியா வந்திருந்த சில இளைஞர்களும் அங்கிருந்தார்கள்.

தோழர் பத்மநபா எவிடன்ஸ் (evidence) பத்திரிகைக்களித்த பேட்டியில் புஸ்பராசா புஸ்பராணி ஆகியோரின் பங்களிப்பு பற்றிய பந்திகளை காண்பித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் அவர் பிரான்சிற்குச் சென்று விட்டார்.

நீண்டகாலம் அவரை ஒரு தேசியவாதியாக அறிந்திருக்கிறேன்.

1980களின் முற்பகுதியில் அவர் ஈபிஆர்எல்எப் உடன் நெருங்கிச் செயற்பட்டார். பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி வந்த பலருக்கு அவர் உதவியிருக்கிறார்.

காலஞ்சென்ற தோழர் உமாகாந்தன் ,ுலிகளால் படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் போன்றவர்களுடன் அவர் நெருக்கமாகச்செயற்பட்டிருக்கிறார்.

1980 களில் அவர் பிரதானமாக தேசியவிடுதலையுடன், தீண்டாமை பெண் அடிமைத்தனம் -விழிம்புநிலை மக்கள் தொடர்பான அக்கறைகளும் அவரின் நிகழ்ச்சி நிரலில் சேர்ந்துகொண்டன.

கட்டுரை,சிறுகதை, கவிதை என அவர் பல ஆக்கங்களை எமுதியிருப்பதாக அறிகிறேன். ஒரு சிலவற்றை அவ்வப்போது வாசித்துமிருக்கிறேன்.

அவரது குடும்ப சூழலில் அவரது மனைவியார் மீரா, சசோதரி புஸ்பராணி ஆகியோரின் பங்களிப்பும்- உறுதுணையும-; அனுபவமும் முக்கியமானவை என அறிகிறேன்.

கடந்த 2தசாப்தங்களுக்கு மேலாக ஐரோப்பி ,வடஅமெரிக்க புலம்பெயர் தளத்தில் நிகழ்ந்து வந்த இலக்கியச் சந்திப்பு ,பெண்கள் சந்திப்பு எழுத்துக்கள் பரிமாறல்கள் அவர் மேல் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

தவிர தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் அடிக்கடி சென்று சமூக இலக்கியப்பிரஞை உள்ள மனிதர்களுடன் அவர் தன்னைப் பரிச்சயப்படுத்தியிருக்கிறார்.

அவர் வெடிமருந்து வீச்சமில்லாத தெருக்களை வேண்டினார். ஆனால் அவர் நேசித்திருக்கக் கூடிய அவரது ஊர் மைலிட்டி இன்னும் உயர்பாதுகாப்பு வலயமே. சொந்த கிராமம் -அதன் வாழ்வும் ,வளமும் அழிக்கப்பட்டு விட்டது என்ற வலி இருக்கிறதே அது பயங்கரமானது.

எமது சமூகத்தில் பலரது அனுபவம் போலவே அவரும் உற்ற, சுற்றம,; உறவுகளை இழந்திருக்கிறார்.

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம’; என்ற அவரது அனுபவத்தொகுப்பு ஈழத்திலும,; தமிழகத்திலும், புலம்பெயர்தளத்திலும் நன்கு அறியப்பட்டது.

இப்போது அவரது ஆக்கங்கள் சிலவற்றை பிரசுரிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக அறியப்படுகிறது.

தமிழ் தேசிய சமூக இயக்க வரலாற்றில் தோழர் புஸ்பராசா அவர்களுக்கும் குறிப்பிடத்தகுந்த இடமுண்டு. அவரின்
கனவான வன்முறை ஒழிந்த சுதந்திரமுழ் சமத்துவமும் சமாதானமும் நிலவும் வாழ்வு மெய்ப்படவேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com