Contact us at: sooddram@gmail.com

 

மட்டக்களப்பில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் குறைபாடுகள் குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம்-(பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)

மீளக்குடியமர்ந்த மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரல் எனும் தலைப்பில் மட்டக்களப்பில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் குறைபாடுகள் குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம்,-(பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.அக் கடிதத்திகன் முழுவடிவம் பின்வருமாறு:

தமிழ் மக்கள் யுத்தத்தால் பாதிப்படைந்து சொல்லமுடியாத துன்பத்தை அனுபவிக்கும் வேளையில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு நீங்கள் மீள்குடியேற்ற அமைச்சராக நியமனம் பெற்றதையிட்டு தமிழ் மக்களாகிய நாங்கள் சந்தோசமும் மகிழ்ச்சியும் அடைந்தோம். நல்ல பல பணிகள் தொடரும் என எண்ணினோம். நீங்களும் விடாமுயற்சியுடன் செயல்பட முனைந்தீர்கள். ஆனால், எமது மக்களின் பாதிப்புக்கு ஏற்றவாறு மீள்குடியேற்றப் பணி அமையவில்லை என்பதே எம் மக்களின் கருத்தாகும். கிழக்கு மாகாணசபையிலும் மீள்குடியேற்ற அமைச்சு உள்ளது இதற்கு 2011ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் எந்த நிதியும் மத்திய அரசால் ஒதுக்கப்படவில்லை. மேலும் அந்த அமைச்சிற்கு மீள்குடியேற்றம் தொடர்பான அதிகாரங்கள் இல்லை. இருந்திருந்தால் சம்பூர் மக்களின் பிரச்சினை தீர்ந்திருக்கும். இருந்தும் கீழ் குறிப்பிடப்படும் விடயங்களை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

(1) 1986 ஆம் ஆண்டு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கச்சைக்கொடி கிராம சேவையாளர் பிரிவில் கெவிளியாமடு கிராமத்தில் அண்ணளவாக 104 தமிழ் குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. அவைகளில் 30 குடும்பங்கள் மீளக் குடியமர்ந்துள்ளன. இப்பகுதியில் 30 விவசாயிகள் தங்களது வேளாண்மை செய்கையை ஆரம்பித்துள்ளனர். ஏனையவர்களின் வயல் நிலங்கள் வேறு ஒரு சிலரால் செய்கை பண்ணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இங்கு மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கான தற்காலிக வீடு, நிரந்தர வீடு, தொழிலுக்கான உதவி, வயல்காணிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் துரிதமாக செயல்படுத்தப்படவேண்டும .

(2) 1989 ஆம் ஆண்டு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வலையறவு பாலத்தடி அருகில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டதால் அங்கிருந்த 30 குடும்பங்கள் இடம் பெயர்ந்து அருகாமையிலுள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வாழ்ந்து வருகின்றன. அக்குடும்பத்தவர்கள் மீளக்குடியமர்வதற்கு தயாராக உள்ளனர். அவர்களுக்கான வீட்டுத்திட்டம் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும .

(3) செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஏறாவூர் தமிழ் பகுதியில் 1990 அம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக 90 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்து ஏறாவூரிலும், அயற் கிராமங்களிலும், வெளிமாவட்டங்களிலும் உள்ள நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளன. அவைகளில் 55 குடும்பங்கள் ஏறாவூர் கிராமத்தில் மீண்டும் குடியேற தயாராக உள்ளன. இக்குடும்பத்தவர்களின் சொத்துக்கள் யாவும் அழிந்து போயுள்ளன. இவர்களுக்கான நிவாரணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

(4) இத்தோடு பாதிப்புக்குள்ளான விதவைகள், இளைஞர், யுவதிகள்; அங்கவீனமடைந்தோர் போன்றோருக்கான திட்டங்கள் சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.

(5) 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையும் தமிழ், முஸ்லிம், சிங்கள, சமூகத்தவர்கள் தமது அசையும் அசையா சொத்துக்களை பரஸ்பரம் வாங்கியும் விற்றும் உள்ளனர். அப்படி விற்றவர்கள் அரசியல் அதிகாரத்தின் துணைகொண்டு தாம் விற்ற சொத்துக்களை மீண்டும் பெற முயற்சிப்பது பாரிய குளறுபடிகளை ஏற்படுத்தும். இது இனக்குரோதத்தையும் வளர்க்கும் செயல்பாடாகவும் உள்ளது. உதாரணமாக வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாவற்கொடிச்சேனை போன்ற கிராமங்களில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன இப்படிப்பட்ட விடயங்களுக்கு ஒருசில தரப்பினர் அச்சுறுத்தல் விடுக்கின்றனர ? இது முளையிலே கிள்ளி எறியப்படவேண்டும்.

(6) இம் மாவட்டத்திற்கு வளத்தை நல்கிய தொழில் பேட்டைகள், உற்பத்திச் சாதனங்கள் மற்றும் சொத்துக்கள், ஆகியவற்றின் விபரங்களை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன .

(1) வாழைச்சேனை கடதாசி ஆலை
(2) அரசாங்க அச்சகம்
(3) அரிசி ஆலைகள்
(4) நெற்களஞ்சியங்கள்
(5) ஓட்டுத்தொழிற்சாலைகள்
(6) சீனிக்கூட்டுத்தாபனம், கரும்பு செய்கையும்
(7) அரச மரக்கூட்டுத்தாபனம்
(8) கரடியனாறு பண்ணை
(9) இயற்கை வளம் நிறைந்த வனங்கள்
(10) நீர்பாசனத்துக்குரிய சிறியகுளம்கள்
(11) பல்வேறு குடிசைக் கைதொழில்கள்
(12) ஐஸ் தொழிற்சாலைகள்

போன்றவையும் இன்னும் பல வளங்களும் அழிவடைந்தும் சிதைவடைந்தும் போய் உள்ளன. இவைகள் யுத்தப் பாதிப்புக்கள் இல்லையா?

பல இடங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள் தொடர்பாக, இம் மாவட்டத்திலிருந்து இம் மாவட்டத்திற்குள் இடம் பெயர்ந்தவர்களினதும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் இலங்கை வந்து மீளக்குடியமர்ந்தவர்களினதும், இம் மாவட்டத்திலிருந்து வன்னிக்குச் சென்று மீண்டும் இங்கு வந்து மீளக்குடியமர்ந்தவர்களினதும் தேவைகளின் விபரங்கள் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் பலகாலமாக தேங்கிக் கிடப்பதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

கிழக்கு மாகாணசபையில் மீள்குடியேற்ற அமைச்சு ஒன்றை எவ்வித செயற்பாடுகளும் இல்லாமல் வெறும் பெயருக்கு மாத்திரம் வைத்திருப்பதன் காரணமென்ன என்று கேள்வி கேட்குமளவிற்கு தமிழ் சமூகம் இப்போது விழிப்படைந்துள்ளது என்பதை யாவரும் உணர்தல் வேண்டும .

எனவே நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனிமேலாவது முதலமைச்சர் மாகாண, மத்திய அமைச்சர்கள், மீள்குடியேற்ற அமைச்சர்கள் போன்றோர்கள் இவைகளை கவனத்தில் எடுத்து மீள்குடியோருக்கான தேவைகளை தீர்த்து வைக்க முன் வர வேண்டும். உன தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின்
பிரதி கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com