Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 69வது நாள் சிறப்புக் கூட்டம்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 69வது நாளான (25-03-2011, வெள்ளி) நேற்று ராஜ்கோட் முகாமில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்புக் கூட்டம் வீரநடை போட்டு வெற்றிகரமாக நடைபயணத்தை முடித்த நடைபயண வீரர்களுக்குப் பாராட்டுக் கூட்டமாகவும், விருது வழங்கும் விழாவாகவும், ஈழத் தமிழர் விடுதலைக்கான அடுத்தக்கட்ட நகர்வுக்கானக் கூட்டமுமாக நடைபெற்றது. இந்த சிறப்புக் கூட்டத்தின் ஆரம்பத்தில் ஈழ தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர், ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூரப் பயணத்தின் போது மரணத்தை தழுவிக் கொண்ட நடைபயண வீரர் திரு. சுதர்சன் அவர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியபின் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் நிகழ்வுகளை நடைபயண தலைமைக் குழுவில் உள்ள திரு. சீ.தயாபரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்தக் கூட்டத்திற்கு பேராசிரியர். திரு. ஜோசப் சேவியர் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திரு.இராம்ராஜ் (லண்டன்), திரு. கண்ணன் (பிரான்ஸ்), திருமதி. ஜென்னி (பிரான்ஸ்), திரு. மங்களராஜா (நடைபயண குழுத  தலைவர்) மற்றும் திரு. கஜன(கனடா) ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களின் இன்றைய காலகட்டத்தின் நட்சத்திர நாயகனும் வீரமும், விவேகமும், மதியுகமும் ஒருங்கே இணைந்தவரும், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் இயக்குனரும், ஈழ விடுதலை ஆயுதப் போராட்டத்தின் தலைவர்களுள் எஞ்சியிருக்கும் ஒரே தலைவருமான மாண்புமிகு. ஞா.ஞானசேகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தனது கொள்கையிலும், கோட்பாட்டிலும் உறுதியாகவும், நேர்மையாகவும் தலைநிமிர்ந்து வாழும் ஞா.ஞானசேகரன் அவர்கள் நடைபயண வீரர்களின் மன உறுதிக்கு முன்னாள் தலைவணங்கினார். நடைபயண வீரர்கள் அனைவருக்கும் தனது கையாலேயே நினைவுப் பதக்கத்தை வழங்கினார். தலைவர் அவர்களின் கையினால் நினைவுப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டதை நடைபயண வீரர்கள் மிகப் பெரிய நினைவுச் சின்னமாக பெருமையாக ஏற்றுக்கொண்டனர்.

நடைபயண வீரர்களுக்கு எந்த நிமிடத்திலும் எந்தவிதக் குறைவும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொண்ட திரு. தம்பி தோழர் தலைமையிலான சமையல் குழுவினருக்கும், பாலைவனத்தில் கூ  நடைபயண வீரர்களுக்கு தண்ணீர் கொடுத்த திரு. ஞா.ஞானேந்திரன் (ஜீவா) அவர்களின் தலைமையிலான குழுவினருக்கும், எட்டு மாநிலங்களிலும் எட்டு மொழிகள் பேசும் மக்களுடன் தனக்குத் தெரிந்த ஒரே மொழியான ஊமை மொழியில் விற்பனையாளர்களிடம் பேசி பொருட்களைப் பெற்றுக் கொடுத்த (கொள்வனவு) திரு. கரன் அவர்களுக்கும் சிறப்புக் கௌரவம் அளிக்கப்படடு விருது வழங்கப்பட்டது.

மேலும், ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி எந்தவிதத் தெளிவும் இல்லாமல் கல்வி ஒன்றையே தனது குறிக்கோளாக் கொண்டிருந்தவரும், முன்ளிவாய்க்கால் பேரிழப்பிற்குப் பிறகு ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவருமான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் அவர்களின் புதல்வர் திரு. சுபேசன் அவர்களை நடைபயண வீரர்களும், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர்களும், உறுப்பினர்களும் அவரின் கடின உழைப்பை மிகவும் பாராட்டினார்கள். அவரும் தனது தந்தையின் கையால் நினைவுப் பதக்கத்துடன் பாராட்டையும் பெற்றார்.

இந்த விருது வழங்கும் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களும், தலைமை தாங்கிய பேராசியரும் எழுச்சிமிகு உரையாற்றினார்கள். நடைபயண வீரர்களை தலைமைத் தாங்கி நடத்தியவர்கள் நடைபயணத்தில் ஏற்பட்ட கஸ்ரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணின் தலைவர் அவர்கள் பேசும் போது, விடுதலைப் போராட்டத்தில் ஆயுதக் குழுக்கள் ஒருவொருவரும் தங்களை முன்னிலைப் படுத்தியதால்தான் எங்களது போராட்டம் பின் தங்கியது. ஆனால் இன்று அனைத்து ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஈழ விடுதலைக்காக ஒருங்கிணைந்திருப்பது இன்று மிகப் பெரிய வெற்றியாகவும் நம்பிக்கையையும  ொடுக்கிறது என்றார்.

இன்றைய காலக்கட்டத்தில் ஈழத்தில் வாழும் தமிழர்களும் அரசியல் கட்சிகளும் எந்தவிதப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாமல் சிங்கள அரசினால் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளார்கள். ஆகையால் புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள்தான் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுக்கவேண்டும் குறிப்பாக ஈழத்திற்கு அருகில் உள்ள இந்தியாவில் வாழும் நாங்கள்தான் கையில் எடுக்க வேண்டும் என்றார்.

இதுவரை எங்களது போராட்டம் ஆயுதத்தை மட்டுமே நம்பி இருந்ததினால்தான் எங்ளது விடுதலை பிற்போடப்பட்டது. இனிமேல் அப்படி நடக்கக்கூடாது. முதலில் மக்களை வென்றெடுக்க வேண்டும், எமது போராட்டம் மக்கள் போராட்டமாகத்தான் நடக்க வேண்டும், அப்பொழுதுதான் எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க முடியும், எமது பிரதேசத்தைக் காப்பாற்ற முடியும் என்றார்.

ஈழ விடுதலை என்பது இந்தியாவுடன் பிணைந்துள்ளது பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பின்னர் பெரியவர்களினால் விவாதிக்கப்பட்ட, போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி தெளிவாக விவரித்தார். நடைபயண வீரர்களின் மனஉறுதிக்கு முன்னாள் தலைவணங்கி வாழ்த்துதல் தெரிவித்து தனது உரையை முடித்துக்கொண்டார்.

இறுதியாக நடைபயண தலைமைக் குழுவில் உள்ள திரு. வசீகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். மேலும் நடைபயண வீரர்கள் திரும்பும் போது எவரும் கஸ்ரப்படக் கூடாது என்றும் அவர்களுக்கு படுக்கையினால் கூடிய வசதியுள்ள புகையிரத அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஈ.என்.டி.எல்.எப். தலைவர் அவர்கள் கட்டளையிட்டதால், அதற்கான பொறுப்பை திரு. மங்களராஜா அவர்கள் திரு. வசீகரன் அவர்களிடம் கொடுத்திருந்தார். அவர் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மொத்தமாக அனைவரும் பயணிக்கும் முறையில் அனுமதிச் சீட்டைப் பெற்றுவந்தார். அதற்காக நடைபயண வீரர்கள் அவருக்கு நன்றியை தெரிவித்தனர்.

இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சிறப்பு விருது விழங்கும் விழா இனிதே முடித்துவைக்கப்பட்டது.

திரு. வசீகரன் அவர்களின் முயற்சியினால் நடைபயண வீரர்கள் அனைவரும் மொத்தமாக திட்டமிட்டபடி இன்று (26-03-2011,சனி) சென்னை, பெங்களுர் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு திரும்புகிறார்கள்.

இந்த சிறப்புக் கூட்டத்தின் நிகழ்வுகள் அனைத்தும் www.liberationmarch.com என்ற இணையதளத்தில் காணலாம்.

நன்றி!

இவ்வண்ணம்,

ஞா.ஞானராஜா

நடைபயண தலைமைக்குழு

26-03-2011

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com