Contact us at: sooddram@gmail.com

 

வடக்கில் புதிய கட்சி அங்குரார்ப்பணம்

ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி வடக்கில் புதிய கட்சியொன்று இன்று வியாழக்கிழமை (5) உருப்பெற்றுள்ளது. ந.தேவகிருஸ்ணனை செயலாளர் நாயகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'தொழிலாளர், விவசாயிகள் வாழ்வுரிமைக் கட்சி' இன்று வவுனியாவில் வைத்து அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மிகவும் பதற்றத்துடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நிறைவேறியது. அதாவது 'ஒப்பரேஷன் மஹிந்த|' வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதிகாரத்தின் சுவையை அனுபவித்து தனக்கு நிகர் தானே என்ற அகந்தையுடன் இருந்த மக்கள் விரோத மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டார்.

இதன்மூலம் அவரது எல்லையற்ற குடும்ப அதிகாரம் முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்கள் ஆண்ட காலத்தில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், திட்டங்கள், ஆக்கிரமிப்புக்கள் எவையும் முடிவுக்கு வரவோ அல்லது அகற்றப்படவோ இல்லை.

சர்வாதிகாரப் போக்கில் இராணுவ காட்டாட்சியில் நிலங்கள், இயற்கை வளங்கள், மனித உழைப்புகள் என்பவற்றை சுரண்டி பல்தேசிய கம்பனிகளுக்கு தாரைவார்த்து கொள்ளை இலாபங்களைப் பெற்ற மக்கள் விரோத மகிந்த அரசின் செயற்பாடுகள் தற்போதும் புதிய அரசாங்கம் என்ற வேறு முகமூடியுடன் உலாவத்தொடங்கி விட்டன. (உதாரணம்: அண்மையில் மைத்திரி - மோடி அணுப்பரம்பல் ஒப்பந்தம்) உலக மயமாக்கள் என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைத்தனத்தை நோக்கி பயணிக்கின்றது.

மக்களுக்கு வாழ்வதற்கான உரிமை உண்டு, ஆரோக்கியமான நல்லதொரு போஷாக்கு நிறைந்த உணவை பெற்றுக்கொள்வதற்கான உரிமை உண்டு என்ற வகையில் நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதி விற்பனை மற்றும் நுகர்வு சம்பந்தமான விடயங்கள் நாட்டு மக்களின் மேற்குறிப்பிட்ட உரிமைகளை பாதுகாக்கும்படி இருத்தல் வேண்டும்.

இயன்றளவு இறக்குமதி செய்யப்பட்ட உணப்பொருட்களில் தங்கியிராமல் நாட்டுக்கு தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கிலும் கல்வி வளர்ச்சியிலும் சுகாதாரத்தைப் பேணுவதிலும் அக்கறையுள்ள பொருளாதாரக் கொள்கைகள் திட்டமிடப்படல் வேண்டும். ஆனால் இன்று எமக்கு என்ன நடக்கிறது?

உணவுக்கு பதிலாக எமக்கு உட்கொள்ள கிடைப்பது நச்சுப்பொருட்களே. நாம் உட்கொள்ளும் உணவே நோய்களை நோக்கி எம்மை இட்டுச் செல்கிறது. நாட்டு மக்கள் நோயாளிகளாவே மாறி வருகிறார்கள். நாளுக்கு நாள் விலையுயர்ந்து வரும் உணவுப் பொருட்கள் மூலம் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் மக்கள் ஒருபுறம், அவ்வுணவுப் பொருட்களை விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் கம்பனிகள் மறுபுறம் என மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இதைவிடக் கொடுமை என்னவெனில், நாட்டு மக்களுக்கு போசாக்கின்மை, நீரிழிவு, இருதயநோய், இரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள் போன்ற கொடிய நோய்களுக்கு இரசாயனங்களைப் பயன்படுத்தி விளைவிக்கும் உணவுகளே காரணமாக அமைகின்றன.

ஒரு காலத்தில் பேரபிமானத்துடன் வாழ்ந்து வந்த விவசாயிகள் இன்று சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டு வருகின்றனர். (நாட்டில் ஒரு நாளுக்கு சாராசரியாக 13 பேர் சிறுநீரக நோயால் மரணிக்கின்றார்கள். 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மரணப் பிடியில் சிக்கியுள்ளார்கள்.) இவ்வாறான சூழ்நிலையில் வாழ்வுரிமையைக் கேட்டு வீதிக்கு இறங்கும் தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்களுக்கு திருப்பிக் கிடைப்பது துப்பாக்கி வேட்டுக்களும் சிறைத் தண்டனைகளுமே ஆகும்.

பாதுகாப்பு வலயங்கள், உல்லாசப் பிரயாண வலயங்கள் மற்றும் பாரிய தொழிற்சாலை வலயங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் காணிகள், மீனவர்களின் கடற்கரைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகின்றது. தனியார் மயப்படுத்தல் என்ற பெயரில் விதை உரிமை, நீர்வள உரிமை, இயற்கை வள உரிமைகள் கம்பனிகளுக்கு விற்கப்பட்டுள்ளன, விற்பதற்கு திட்டமிடப்பட்டும் வருகின்றன.

பரம்பரை பரம்பரையாக வியர்வை சிந்தி உழைத்த மலையக தோட்டத் தொழிலாளிகள் தாம் பிறந்த இந்த நாட்டில் வாழ்வுரிமைகள் அற்ற அந்நிய மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில் மாறிமாறி வரும் அரசாங்கங்கள் மக்களை அடிமைத் தொழிலாளி ஆக்குவதிலும் நாட்டை விற்பனை செய்வதிலும் பல்தேசிய கம்பனிகளுக்கு தரகர்களாகவே செயற்பட்டு வருகிறார்கள்.

நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சாதகமானதாகக் காட்டிக் கொண்டு இறுதியில் உலகமயமாக்கல் என்ற பெயரில் சுரண்டலுக்கு வழிசமைப்பதற்காவே வடிவமைக்கப்படுகின்றது. காலம் காலமாக நிகழும் இக் கொடுமையில் சிக்குண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர்கள் தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்களே ஆகும்.

கடந்த காலங்களில் நாம் வாழ்வுரிமைக்காக உதிரிகளாக பல போராட்டங்களை நடாத்தி வந்தோம். அவற்றில் சில வெற்றியடைந்தன, பல தோல்வியடைந்தன. அதற்கு காரணம் எமது போராட்டம் அடையாளப்படுத்தப்பட்ட மக்கள் பேரியக்கமாக இல்லாமையே ஆகும். எனவே நாம் அடையாளப்படுத்தப்பட்ட அமைப்பு ரீதியாக செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்.

இன்றும் கிராமப்புற மக்களுக்கு அடிப்படைக் கல்வி உரிமை, போக்குவரத்து உரிமை, சுகாதார உரிமை, வளப் பங்கீட்டு உரிமை என முற்றாக மறுக்கப்பட்டே வருகிறது. கிராமப்புற சமூக கட்டமைப்புக்கள் சிதைவுக்கு உள்ளாகியுள்ளன. முதலாளித்துவ நிதி நிறுவனங்களின் கடுமையான சுரண்டல்களுக்கு ஆளாகி நிற்கதியான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு ஒரு நவீன கொத்தடிமைத்தனத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

எனவே இந்த அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து மக்களின் வாழ்வுரிமையை மீட்பதற்கு

01. உணவு பொருளாதார தன்னாதீக்கத்தை ஏற்படுத்தல்.

02. விதைகளுக்கான ஏகபோக உரிமையை விவசாயிக்கே உரித்தாகச் செய்தல்.

03. மக்களின் வாழ்வாதாரத்திற்கான காட்டு வளத்தை பாதுகாத்தல்.

04. தண்ணீரை விற்பனை பண்டமாக்காமல் தடுத்து நிறுத்தல்.

05. நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தல்.

என்ற விடயங்களை முன்நிறுத்தி மக்களை விழிப்புறச் செய்து மக்கள் பேரியக்கத்தை உருவாக்கும் நோக்கில் தொழிலாளர், விவசாயிகள் வாழ்வுரிமைக் கட்சியை நாம் ஆரம்பித்துள்ளோம்.

கடந்த காலங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து நாம் செயற்பட்டது போன்று ஒன்றிணைந்து கட்சி ரீதியாக வீரியமான செயற்பாடுகளை முன்னெடுத்து தொழிலாளர், விவசாயிகளின் வாழ்வுரிமையை உறுதி செய்ய தொடர்ந்து போராடுவோம்' என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com